Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அண்ணா ஹசாரே ஒரு தேசத் துரோகி என்றால்..? ஈழதேசம் பார்வையில்..!

Featured Replies

அண்ணா ஹசாரே ஒரு தேசத் துரோகி என்றால்..? ஈழதேசம் பார்வையில்..!

[size=3]

eeladhesam%20seythi%20aaivu.jpgஆளும் கட்சியின் ஊழல் குறித்து யார் பேசினாலும் அவர்கள் தேசத் துரோகிகள் தான் என்கிறது காங்கிரஸ் பெருச்சாளிகள் கும்பல். காங்கிரஸ் கட்சியின் புதிய கொளகைப்படி, ஊழலுக்கு எதிராக யார் குரல் கொடுக்கிறார்களோ, யார் பேசுகிறார்களோ, ஊழலுக்கு எதிராக யார் போராடுகிறார்களோ..? அவர்கள் எல்லாம் தேசத் துரோகிகள் என்கிறார்கள். கூடங்குளம் அணு உலையை எதிர்த்து போராடிய உதயகுமார் தலைமையில் ஆன போராட்டக் குழுவை மட்டுமின்றி கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் மீது இது போன்றே தேசத் துரோக வழக்குகளை போட்டார்கள் காங்கிரஸ் ஆட்சியாளர்கள். அரசுக்கு எதிராக முற்றுகை, அரசின் கொள்கையை எதிர்த்தல் என்றெல்லாம் நேரடியாகவே குற்றம் சுமத்துகிறது காங்கிரஸ் அரசு. அணு உலையை கட்டுவது என்பது அரசின் கொள்கை முடிவு. அரசின் கொள்கை முடிவு ஏதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையேல் தேசத் துரோகம் என்று கூறுகிறார் மன் மோகன் சிங் சோனியா ஆட்சியாளர்கள்.

அண்ணா ஹசாரே மீது நேற்று பிரதமர் அலுவலகம் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளது. அதாவது உதயகுமார் மீது எவ்வாறு குற்றம் சுமத்தினார்களோ..? எவ்வாறு வெளிநாட்டு சக்திகள் பின்னணியில் இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் சொன்னார்களோ..? அதே போன்று தற்பொழுது கூறி உள்ளது பிரதமர் அலுவலகம். அவர் நாட்டுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதாகவும், அண்ணாவுக்கு பின்னால் வெளிநாட்டு சக்திகள் இயங்கி வருவதாகவும் கூறி உள்ளது. எப்படி இருக்கிறது கதை..? நாடாளுமன்ற விவகார இணை அமைச்சர் வி.நாராயண சாமி சில நாட்களுக்கு முன் இவ்வாறு கூறினார். அண்ணா ஹசாரே குழு வெளிநாட்டு சக்திகளால் இயக்கப்படுகிறது. அந்தக்குழு தேசத் துரோக செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து நிதி உதவி கிடைக்கிறது என்றார். எங்களை வெளிநாட்டு சக்திகள் இயக்குவதாகப் புகார் கூறப்படும் நிலையில், அவர்கள் யார்..? என்பதை பிரதமர் மன்மோகன் சிங் தெரிவிக்க வேண்டும். என்னை தேசத் துரோகி என அரசு கூறுவது தவறு, நான் தவறு செய்திருந்தால் சிறையில் அடையுங்கள் என்று கூறியுள்ளார் தேசத் துரோகி ஹசாரே அவர்கள். வலுவான லோக்பால் மசோதா தொடர்பான மக்களின் கோரிக்கையை திசை திருப்புவதற்காகத் தான் எனது இயக்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் மீது பல்வேறு புகார்கள் கூறப்படுகின்றன என்றார்.

நமக்கு வரும் இயல்பான சந்தேகம் என்னவெனில், அதென்னங்கப்பா.... அணு உலை குறித்து போராடினால் வெளிநாட்டு சக்தி என்கிறீர்கள். ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து பேசினால் வெளிநாட்டு சக்திகள் என்கிறீர்கள். ராணுவத்தின் மெஹா ஊழல் குறித்து பேசினால் வெளிநாட்டு சக்தி என்கிறீர்கள். தற்போதைய அரசில் சுமார் 14 அமைச்சர்கள் மீது வெளிப்படையான ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. அதுகுறித்து பேசினால் வெளிநாட்டு சக்திகள் என்கிறீர்கள். யார் அந்த வெளிநாட்டு சக்தி..? அமெரிக்காவா...ரசியாவா..சீனாவா..? அல்லது இலங்கையும் கூட வெளிநாடு தானே..பாக் கூட வெளிநாடுதான், பர்மாவும் மாலத் தீவும் கூட வெளிநாடு தானே..? எந்த வெளிநாட்டு சக்திகள் பின்னணியில் இருக்கிறார்கள்..? மேற்கண்ட நாடுகளில் ராஜிய உறவை வைத்துள்ளதே காங்கிரஸ் அரசு. இவ்வளவு ஏன்... காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா அம்மையார் கூட வெளிநாட்டு சக்தி தானே..என்று கொள்ளலாமா..? அடுத்த தடவை இதுபோன்று வெளிநாட்டு சக்திகள் பின்னணியில் இருக்கின்றன என்றால் அது யார்..? என்ன முழு விபரம்..? என்று கேட்கப் போகிறார்கள் பத்திரிக்கையாளர்கள்.

மேகண்ட வெளிநாட்டு சக்திகள் ஏன் பின்னணியில் இருக்க வேண்டும்..? அப்படி ஏதும் வெளிநாட்டு சக்திகள் இருந்தால், அவர்களை 'கடக்' கென்று விழுங்கி விட மாட்டீர்களா.. என்ன..?.அப்படி இருக்கும் வெளிநாட்டு சக்திகளை விட மிக

மோசமான நபர்கள் தான் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் என்று மக்கள் கூறுகிறார்கள்.

மத்திய அரசுக்கு மிகப்பெரிய உளவுத்துறை கட்டமைப்பு உள்ள நிலையில், ஏன் இது குறித்து விசாரித்து அறிவிக்க முடியாது..? நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேட்டில் பிரதமருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக நான் நம்பவில்லை. ஆனால், நெருப்பில்லாமல் புகையாது. பிரதமர் மன் மோகன் சிங் அவர்கள் புகையைப் பார்த்தால், அங்கு நெருப்பு இருக்கும் என்பதை உணர வேண்டும் என்கிறார் ஹசாரே. பத்தாம் வகுப்பு படித்த அண்ணா ஹசாரே விளக்கம் கூறுகிறார். யாருக்கு..? மிகச் சிறந்த பொருளாதார மேதை என்று நேற்று வரை அறியப்பட்ட மன் மோகன் சிங் அவர்களைப் பார்த்து. ஏன் என்றால் மன் மோகன் சிங் அவ்வாறு உள்ளதால்.

நாட்டில் வீணாகும் உணவு தானியங்களை ஏழைகளுக்கு இலவசமாக வழங்குங்கள் என்று சுப்ரீம் கோர்ட் சொன்னவுடன் என்னமாய்... கோபம் வந்தது என்று அறிவீர்களா...? தனது மனைவியை ஒரு நாளைக்கு ஓசி கொடு என்று ஒருவன் கேட்டால் எவ்வாறு கோபம் வருமோ அதுபோல வந்ததே..? இந்திய ஏழை மக்களுக்கு ஓசியில் ஒன்றும் வழங்க முடியாது என்று தானே அர்த்தம் அந்த கோபத்திற்கு..? மன் மோகன் சிங், அப்துல் கலாம், மாண்டேக் சிங் அலுவாலியா மற்றும் அந்த விவாசாயப் புலி போன்றவர்கள் எல்லாம் பின்னணியில் இருக்கிறார்கள்..யாருக்கு..? நாட்டையே கொள்ளை அடித்துக் கொண்டு போய், கறுப்புப் பணமாக வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ளவர்களுக்கு...கோடி கோடியாய் கொள்ளை அடிப்பவர்களுக்கு, ஊழல் செய்பவர்களுக்கு பக்க பலமாக இருக்கிறார்கள். மிகப் பெரும் அதிகாரத்துடன் பின்னணியில் இருக்கிறார்கள். இவர்களுக்கு ஆபத்து எனில் இந்திய மக்களை கோடிக்கணக்கில் கொல்லவும் கொன்று குவிக்கவும் தயங்க மாட்டார்கள்.

முறையாக கணக்கு தாக்கல், எங்களது இயக்கத்தின் வரவு - செலவு கணக்குகளை முறையாக தணிக்கை செய்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளோம். காங்கிரஸ் கட்சிக்கு ஏராளமான நன்கொடைகள் வருகின்றன. ஆனால், அது தொடர்பான கணக்குகளை பகிரங்கமாக வெளியிடாதது ஏன்..? என்று ஒரு பெரிய ஆப்பை காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல, அணைத்து தேசிய கட்சிகளுக்கும், பிராந்திய கட்சிகளுக்கும் சேர்த்தே வைத்துள்ளார் அண்ணா ஹசாரே அவர்கள்.

எனவே, மனித உரிமை ஆர்வலர்கள், பொது நல உரிமைகளுக்கு குரல் கொடுப்பவர்கள், பொது நல வழக்கு தொடுப்பவர்கள், எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள் அனைவரும் குரல் எழுப்ப வேண்டும். காங்கிரஸ் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ். என்று தொடங்கி தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் என்று இந்தியாவில் செயல்படும் அணைத்து கட்சிகளின் அசையும் சொத்து, அசையா சொத்து, எவ்வளவு பணம் கையில் இருக்கிறது..? வங்கியில் எவ்வளவு..? கருப்பாக எவ்வளவு..? வெள்ளையாக எவ்வளவு..? என்ற தங்களின் கட்சியின் ஆண்டு கணக்கை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை அண்ணா ஹசாரே எழுப்பிவிட்டார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

மாயாண்டிக்கருப்பு

[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.