Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எல்லை மீறும் நில அபகரிப்பு! - கந்தரதன்

Featured Replies

பிரித்தானியாவில் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை இரண்டாவது தடவையாக மகிந்த பரிவாரங்கள் சந்தித்து மூக்கு உடைபட்டுக்கொண்டு திரும்பியுள்ள நிலையில், தமிழ் மக்களின் மீதான சிங்களத்தின் கெடுபிடிகள் தமிழர் தாயகம் உள்ளிட்ட பகுதிகளில் உச்சமடையலாம் என அவதானிகள் கருத்துவெளியிட்டுள்ள நிலையில், சிங்களத்தின் தமிழ் மக்கள் மீதான கோரத்தாண்டவம் தொடர்கின்றது.

இந்நிலையில் யாழ்.குடாவின் மாதகல் பகுதியில், சிறிலங்கா கடற்படையினரின் அடாவடிகள் தொடர்பாக இப்பகுதியில் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தோம். சிறிலங்கா கடற்படையினர் மேற்கொண்டுவரும் அராஜக நடவடிக்கைகளால் இந்தப் பகுதி மக்கள் மேலும் மேலும் பெரும் துன்பத்தை எதிர்நோக்கி வருகின்றனர். மாதகல் மேற்குப் பகுதியில் கடற்படையினர் யாத்திரிகர் விடுதி ஒன்றைத் தனியார் ஒருவருக்குச் சொந்தமான நிலத்தில் அமைத்து வருகின்றனர். இந்தப் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி ஜெயசீலன் என்பவரின் 72 பரப்புகளை உடைய மூன்றரை ஏக்கர் காணியில் சிங்களவர்கள் தங்குவதற்காக இவ்வாறு யாத்திரிகர் விடுதி அமைக்கப்பட்டுவருகின்றது.

இந்தச் செயற்பாட்டை யாரிடம் போய் முறையிடுவது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி வேதனை தெரிவித்துள்ளார். மாதகல் மேற்கு ஜேஃ152 கிராம அலுவலர் பிரிவிலுள்ள சம்பில் துறைப்பகுதியிலுள்ள தனியார் காணியில் யாத்திரிகர் மடம் அமைக்கப்பட்டு வருவது மிகவும் வேதனைதரும் விடயம். சம்பில் துறைமுகத்துக்கும் விகாரைக்கும் இடைப்பட்ட பகுதியில் யாத்திரிகர் விடுதி அமைக்கப்பட்டு

வரும் காணியைச் சுற்றி தற்போது கம்பி வேலி அடைக்கப்பட்டுள்ளது. சுமார் இருநூறு மீற்றர் தூரத்துக்கு இவ்வாறு கடற்படையினர் கம்பிவேலி அமைத்துள்ளனர்.

இதை நான் நேரில் சென்று பார்த்தபோது அது எனக்கு வேதனையளிப்பதாக இருந்தது. அராஜக அரசியல் நடக்கும் இந்த நாட்டில் இந்த விடயம் தொடர்பாக யாரிடம் போய் முறையிடுவது என்று தெரியவில்லை. 2001 ஆம் ஆண்டின் பின்னர் சம்பில் துறைப்பகுதியில் சுமார் ஐந்து பரப்புக்கும் மேற்பட்ட காணியில் பௌத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது. இப்போது யாத்திரிகர் மடம் அமைக்கப்பட்டு வருகின்றது.

மாதகல் மேற்கு கிராம அலுவலர் பிரிவின் மூன்றில் இரண்டு பகுதி மக்கள் மீளக்குடியமர்வுக்கு இதுவரை அனுமதிக்கப்படவில்லை. அந்தப் பகுதியிலேயே விகாரை மற்றும் யாத்திரிகர் விடுதி என்பன அமைக்கப்பட்டு வருகின்றன என்றார். இதேவேளை, மீள் குடியமர்விற்கு எம்மை உடன் அனுமதிக்காவிட்டாலும் எமது சொந்த இடங்களுக்கு சென்றுமீன்பிடிக்கவாவது அனுமதிக்க வேண்டும் என மயிலிட்டி இடம்பெயர்ந்தோர் மீனவ சங்க தலைவரும் வலிகாமம் வடக்கு கடற்றொழிலாளர் சமாச பிரமுகருமான வி.யோகராசா தெரிவித்துள்ளார்.

வடபகுதி கடற்றொழிலாளர்களுக்கு வழங்க்கப்பட்டு வந்த நிவாரணம் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தொழிலும் இன்றி நிவாரணமும் இன்றி தமது பகுதி கடற்

றொழிலாளர்கள் வாழ்வாதார உதவிகள் எதுவும் இன்றி இன்னல்களை அனுபவித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், நூற்றுக்கணக்கான மயிலிட்டி மீனவ குடும்பங்கள் இடம்பெயர்ந்த நிலையில் கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக வல்வெட்டித்துறை முதல் கற்கோவளம் வரையான வடமராட்சி கரையோரக்கிராமங்களில் வசித்து வருகின்றன.

இந்நிலையில் இடம்பெயர்ந்த இந்த கடற்றொழிலாளர்கள் தாம் தங்கியுள்ள இடங்களில் கடற்

தொழில்செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மீறி தொழில் செய்ய முற்படும்போது அப்பகுதி மீனவர்களுக்கும் இடம்பெயர்ந்த மீனவர்களிற்குமிடையே மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. வன்னிக்கு சென்ற மீனவர்கள் சொந்த இடம் திரும்பியுள்ளனர். இதனால் கடற்கரை பகுதிகள் நெரிசலை எதிர்கொண்டுள்ளன. இதனாலேயே மோதல் சூழல் தோன்றியுள்ளது.

எனினும் நாங்கள் சுமுகமாக செயற்படவே விரும்புகின்றோம். அரசு மீள் குடியமர்விற்கு எம்மை உடன் அனுமதிக்காவிட்டாலும் எமது சொந்த இடங்களுக்கு சென்றுமீன்பிடிக்கவாவது அனுமதிக்க வேண்டும் எனவும் வலிகாமம் வடக்கு மீனவ சமாச பிரமுகர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில், நாட்டில் உள்ள பௌத்த தலங்களை கட்டி எழுப்பும் நடவடிக்கைகளை எவரினாலும் தடுக்க முடியாது என சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் உள்ள விகாரை ஒன்றின் நிகழ்வில் கலந்துகொண்ட கோத்தபாய, கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களால் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் உள்ள கிராமங்களில் உள்ள அதிக அளவிலான பௌத்த விகாரைகளைத் தரிசிக்க முடியாத நிலை இருந்தது. அத்துடன் அவை சேதமடைந்த நிலையிலும் இருந்தது. இந்த நிலையில் படையினரின் முயற்சியினால் அது மாற்றப்பட்டுவருகிறது.

இந்த நிலையில் அவற்றை நாங்கள் மரபுரிமையுடன் பாதுகாக்கும் நடவடிக்கைகளை எவராலும் தடுக்க முடியாது என்றும் அதற்காக ஏற்படும் எந்தவிதமான சவால்களையும் ஒரு சவாலாக நாம் மேற்கொள்வோம். குறிப்பாக பௌத்தன் என்ற முறையில் அதனை நடைமுறைப்படுத்த சகல நடவடிக்கைகளும் எம்மால் மேற்கொள்ள முடியும் என்று கோத்தபாய மீண்டும் ஒரு தடவை கொக்கரித்துள்ளார். எது என்னவாகினும் சிங்களத்தின் அராஜகங்களைத் தடுத்து நிறுத்தவேண்டியது தமிழர்களாகிய நம் ஒவ்வொருவரது கைகளிலுமே தங்கியுள்ளது. இது சிந்திக்கும் நேரமல்ல செயற்படும் நேரம்!

(சூறையாடல்கள் தொடரும்)

www.Tamilkathir.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.