Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சங்கமித்திரை வந்திறங்கியதாக சொல்லப்படும் மாதகலும்-சிங்கள பௌத்தத்தின் மதப்பரப்பலும்!

Featured Replies

அசோகரின் மகள் வந்திறங்கியதாக கூறப்படும் மாதகல் பகுதியினை புனித பகுதியாக மாற்றி சிங்கள பௌத்த மதப்பரப்பலுடன் சிங்கள குடியேற்றத்தினை மேற்கொள்ளும் நடவடிக்கையில் சிறீலங்காப்படையினர்ஈடுபட்டுள்ளார்கள்.

யாழ்ப்பாண நகரத்தில் இருந்து 16 கிலோ மீற்றர் தூரத்தில் மாதகல் கிராமம் அமைந்துள்ளது.

மாதகல் கிராமத்திற்கு அருகாமையில் பண்டத்தரிப்பு சில்லாலை சேத்தன்குளம் ஆகிய கிராமங்கள் உள்ளன.

இயற்கை எழில்பெற்ற ஊராக மாதகல் விளங்குவதோடு கல்வித்துறையிலும் சிறந்து விளங்குகிறது. பசுமையான நெல் வயல்கள் வான்முட்டும் பனந்தோப்பு அழகிய தென்னை மரங்கள் என பசுமைத்தாயின் அரவணைப்பு மாத்திரம் அன்றி கடல் அன்னையின் அரவணைப்பும் இந்த கிராமத்திற்கு உண்டு. இந்த கிராமத்து மக்கள் இந்து மற்றும் கத்தோலிக்க மதங்களை பின்பற்றுபவர்களாக உள்ளதோடு விவசாயம் மற்றும் கடற்றொழில் என்பன அவர்களுடைய பிரதான தொழில்களாக விளங்குகின்றன.

இவ்வாறு விவசாயம் மற்றும் கடல்தொழிலினை கொண்ட மக்கள் சிங்களபடையினரின் ஆக்கிரமிப்பு காலத்தில் இருந்து சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு வாழ்ந்துவருகின்றார்கள்.

அசோன் மகள் சங்கமித்திரை வந்து இறங்கிய இடமாகவும் இந்தியாவில் இருந்து வெள்ளரசு கிழையினை மாதகல் ஊடாகத்தான் கொண்டுவந்ததாக மகாவம்சம் தெரிவிக்கின்றது.

அந்த வரலாற்றின் பிரகாரம் சங்கமித்தை வந்திறங்கிய இடமாக மாதகல் காணப்படுவதால் அதனை புனித பிரதேசமாக அறிவித்து அதில் சிங்கள பௌத்த மதத்தினை பரப்பும் நோக்கில் செயற்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் நூற்றிக்கம் அதிகமான ஏக்கர் நிலப்பரப்பினை மையப்படுத்தி காரைநகர் பகுதியில் அமைத்துள்ள சிறீலங்காப்படைத்தளத்திற்கு அண்மையாகவே மாதகல்காணப்படுகின்றது

காரைநகர் சிறீலங்கா கடற்படைதளத்தில் நிலைகொண்டுள்ள கடற்படையினரின் குடும்பங்களை குடியேற்றும் நோக்கில் பல ஏக்கர் காணிகளை அபகரித்து மாதகல் பகுதியினை புனித பிரதேசமாக அறிவித்துள்ளதுடன் அங்கு பௌத்த விகாரை அமைப்பு ஊடாக சிங்கள மக்களை குடியேற்றும் நோக்கில் சிறீலங்காபடையினர் செயற்பட்டுவருகின்றார்கள்.

அப்பகுதியைச் சேர்ந்த பல நூற்றிற்கு மேற்பட்ட குடும்பங்கள் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இடம்பெயர்ந்து அகதிகளாக வாழ்ந்து வரும் நிலையில் அவர்கள் மீண்டும் தங்களது சொந்த இடங்களுக்கு செல்லவதை அனுமதிக்க படையினர் மறுத்து வருவதாக தமிழ்தேசியகூட்டமைப்பு நாடாளமன்ற உறுப்பினர் சுரோஸ்பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

நாள்தோறும் பலஆயிரக்கணக்கான சிங்கள மக்கள் வந்து தங்கிநின்று செல்லும் சுற்றுலா தளமாக மாதகல் பகுதி மாறிக்கொண்டிருக்கின்றது. பௌத்த மத சின்னங்களும் படையினரின் நினைவு சின்னங்களும் கடற்படையினரின் படைத்தள விஸ்தரிப்பும் கொண்ட பகுதிகளாக மாறிக்கொண்டிருக்கின்றது.

தமிழ்மக்களுக்கு சொந்தமான பலஏக்கர் விவசாய நிலங்கள் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதுடன் கடல்தொழில் செய்யும் பெருமளவான கடற்கரைஓரமும் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

(சங்கதிக்கா சுபன்)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.