Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காலம் தந்த காவியங்கள் கரும்புலிகள்!

Featured Replies

மூவேந்தர் அரியணையில் முந்து தமிழ் கலையரங்கே

நாவேந்தர் மடி தவிழ்ந்த நானிலத்து திருமகளே

பாவேந்தர் குலமகளே பாரதியின் பைந்தமிழே

தாய் தவழ்ந்த மண்ணே என் சரித்திரத்தின் பொன்நாடே

தூயதமிழ் அனங்கின் துயர்துடைக்க காவியமாய் போய்விட்ட

மாவீரர் குருதிச் சுவட்டில் நாளை விடியலுக்காய்

நம் இளைஞர் வேள்விக்கணைத் தொடுப்பார்

இன்று ஈழத்தின் வரலாற்றில் மாதலைவன் வழியினிலே

திரண்டெழுந்து ஆக்கி வைப்போம் தமிழீழமே

தாய் கொதித்தாள் தமிழ் அழுதது தமிழர் நெஞ்சிலே உரம் பிறந்தது

பேய் சிரித்தது பிணம் விழுந்தது பிஞ்சு நெஞ்சிலே தீ எழுந்தது

வேர் அறுத்தொரு பகை முடித்திட வேள்விக்கணை தொடந்தது

பலகோடித் தமிழர்கள் உயிர் வாழினும் பாராள அவர்க்கு நாடில்லையே

இன் நிலை போக்க ஈழத்தில் புலியானார் நம் தலைவர்

கரும்புலி மில்லரை கருவாக்கினார் நம் காவியத்து திலிபனை உருவாக்கினார்

நிலம் மீட்டிட பலபேரை உரமாக்கினார் ஈழம் மலராமல் அவர் ஓயமாட்டார்

கரும்புலிகள் தியாகம் கதை வடிக்க முடியா காவியம்

தமிழரின தற்காற்பு கவசங்கள் இவர்கள்

தலைவரின் தடைநீக்கும் உயிராயுதங்கள்

காற்றோடு காற்றாக கலக்கும் கந்தகப் பூக்கள்

செந்தமிழ் தமிழ் வாழ சிறுதுகள் ஆனவர்கள்

வந்திடும் சிங்களத்தை செங்களத்தில் சிதைத்தவர்கள்

காட்டுச் சண்டைக்காய் களை தாகப் பசியுடனே

நாட்டு விடுதலைக்காய் நாளிரயவாய் பாடுபட்டு

வேட்டுக்கு இலக்காகி விழுப்புண்கள் பல பட்டும்

வாட்டம் சிறிதுமின்றி வலிமையோடு செயற்பட்டவர்கள்

வன்னி மண் நெடு நெஞ்சில் வந்தேறிக் குந்துவதோ

என்றவர்கள் சந்ததி வாழச் சரித்திரமானார்கள்

வல்வை தாண்டி வடமாராட்சி வந்தடைந்த இராணுவம்

நெல்லியடியிலே நிலையெடுத்து நின்றது

கல்விக் கூடம் என்ற போதும் கவலையற்றிருந்தது

பொறுமையிழந்த புலிமகன் கரும்புலி மில்லராய் காவியமானான்

எதற்கும் இணையாகா இரும்பு நெஞசன் முதற்கரியபுலி

என்ற முடியைச் சூடிக்கொண்டான் இவன் வழி தொடர்ந்த இளந்தலைமுறைகள்

எழுதின புதிய வரலாறு

அலைமீதில் கலம் ஓட்டி ஆழ்கடலில் மீன்பிடிக்க வலையோடு வருவோரை

வளைத்திருந்து வதம் செய்து கொலை செய்யும் கொடியவர்களுக்கு

வெடிமருந்து கொடுத்து வீரகாவியமானவர்கள்

சக்கை வண்டி படகிலே சரித்திரமானவர்கள்

பட்டாளம் பயணிக்கும் பாரிய கப்பல்களை

திட்டமிட்டு தீக்கணையை தீர்க்கின்ற டோறாவை

கட்டவீழ்ந்த கொடுமைகளுக்கு கடமைகளை ஏவி விடும்

கட்டளைக் கப்பல்களை கடல்நீரில் மூழ்கடிக்க நீரடியில் சென்று

நிர்மூலமாக்கும் நீரடி நீச்சலில் பேரிடியாய் கரும்புலிகள்

பலாலி விமானத் தளத்தின் ஓடுபாதையில் உள்நுழைந்து

உருக்குலைத்த வீரம் கூட்டுப்படை தலைமையகத்தை

கூண்டோடளித்து

கட்டுநாயக்காவை திட்டமிட்ட தாக்குதலால்

துட்டகைமுனுவின் பிள்ளைகளின் கொட்டமடக்கி

எட்டிபகையை எரித்து நிமிர்ந்தவர்கள்

ஆயுத அதிசயம் நிகழ்ந்த அனுராதபுர மண்ணில்

எள்ளாளன் நடவடிக்கையில் மூவேழு வீரர்களின்

சாவரலாற்றால்

நாவேழு வானூர்திகள் தீயோடு சங்கமிக்க

எள்ளாளன் மண்ணிலே இளம் தலைமுறைகள் எழுதிய வரலாறு

முகம் புரியவில்லை பெயர் தெரியவில்லை

யாரிவர்கள் என்ற முகவரி கூட இவருக்கில்லை

இனம் தெரியா இடம் மொழி தெரியா ஊர்

இவர்களுக்குச் சொந்தம்

தேசச்சுமைதாங்கும் தேசியத் தலைவரின்

தேசக் கடமையில் பங்கெடுத்து

தக்க நேரத்தில் சிங்களத்துக்கு தகுந்த அடி கொடுத்து

சிங்கள தேசத்தில் சிதறிய வேங்கைகள்

வாய்விட்டு அழமுடியாத அற்புத மனிதர்கள்

மறைமுக வாழ்க்கையில் மகத்தான சாதனை புரிந்தவர்கள்

வானேறி வந்தவனை வான்தளத்தில் சந்தித்து

ஓயாத புலிகளுக்கு உரமாகி நின்றவர்கள்

வளங்கள் சேவைகளை வழிமறித்து

எரிபொருள் குதங்களை எரியூட்டி

இலக்குகளை எதிர்த்தழித்த இரும் பு மனிதர்கள்

வானோசை முழங்க வான் கரும்புலிகள் ஆகியவர்கள்

தாய்தேசம் வாழ தம்முயிரைக் கொடுத்தவர்கள்

ஈகைப் போரால் இலக்கினை வென்று

இலட்சிய வாழ்வினை இலக்காக்கி

சாவினிலே சரித்திரம் படைத்த சாதனையாளர்கள்

துஞ்சுவதற்கு மனத்தினிலே துளியளவும பின்நிற்கா

நெஞசுரம் கொண்டவர்கள் நேர்கொண்டு காலனையும்

அஞ்சவைக்கும் ஆற்றல் மிகு கரும்புலி அணிகள்

அலையலையாகத் திரண்டு அவர் கனவை நனவாக்குவோம்.

நன்றி

ஈழத்திலிருந்து

அகத்தி.

111.jpg

http://thaaitamil.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0/

முகம் புரியவில்லை பெயர் தெரியவில்லை

யாரிவர்கள் என்ற முகவரி கூட இவருக்கில்லை

இனம் தெரியா இடம் மொழி தெரியா ஊர்

இவர்களுக்குச் சொந்தம்

தேசச்சுமைதாங்கும் தேசியத் தலைவரின்

தேசக் கடமையில் பங்கெடுத்து

தக்க நேரத்தில் சிங்களத்துக்கு தகுந்த அடி கொடுத்து

சிங்கள தேசத்தில் சிதறிய வேங்கைகள்

வாய்விட்டு அழமுடியாத அற்புத மனிதர்கள்

மறைமுக வாழ்க்கையில் மகத்தான சாதனை புரிந்தவர்கள்

[size=5]அழகான கவிதை சின்னவன்,[/size]

[size=5]குறிப்பாக இன்று வரை முகவரி மறைத்தவர்களின் நினைவும்,அவர்களின் வாழ்வும் இப்போது நினைத்தாலும் நெஞ்சை சுடுகிறது .[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.