Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழினத் தலைவர் என்று எனக்கு நானே எங்கே தம்பட்டம் அடித்துக் கொண்டேன்? : கலைஞர்

Featured Replies

திமுக இன்று வெளியிட்ட கேள்வி – பதில் அறிக்கை : ’’இலங்கை விமானப்படை வீரர்களை திருப்பி அனுப்ப வேண்டும் என்று அறிக்கை விடுத்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தேவையில்லாமல் உங்களைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறாரே?”

’’முதலமைச்சர் கொடநாட்டிற்குச் சென்று ஓய்வெடுக்கின்ற நேரத்திலும், என்னைத் தாக்கி அறிக்கை விடாவிட்டால் எப்படித்தான் இருக்குமோ? ஜெயலலிதா தமிழகத்தின் முதல் அமைச்சர். இலங்கை விமானப் படை வீரர்களை திருப்பி அனுப்ப வேண்டியது மத்திய அரசு. எனவே தமிழக முதல் அமைச்சர் கேட்க வேண்டியது மத்திய அரசை! அதை விட்டுவிட்டு, “தமிழினத் தலைவர் என்று தனக்குத்தானே தம்பட்டம்

அடித்துக்கொண்டு, தமிழினத்தை இலங்கை அரசு அழிக்கக் காரணமாக இருந்த தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி” என்று தேவையில்லாமல் என்மீது தா க்குதல் கணை தொடுத்துள்ளார்.

ஜெயலலிதாவுடன் 24 மணி நேரமும் உடன் இருக்கிற உடன்பிறவாச் சகோதரியின் கணவர், ஜெயலலிதாவின் மீதும், அரசின் மீதும் கூறிய புகார்களுக்கு என்ன பதில் என்று கேட்டதற்குப் பதிலளிக்கத் தெம்பில்லாமல், திராணியில்லாமல் வீணாக என் மீது பாய்ந்து குதறுவானேன்? “தமிழினத் தலைவர்” என்று எனக்கு நானே எங்கே தம்பட்டம் அடித்துக் கொண்டேன்? “அம்மா”, “அம்மா” என்றும், “என் தலைமையிலான அரசு” என்றும், “நான் ஆணையிட்டேன்” என்றும், வார்த்தைக்கு வார்த்தை சொல்லிக் கொள்வது யார் என்பது நாட்டுக்குத் தெரியும்! இப்படி என்னைத் தாக்கி அறிக்கை விடுவதைத்தான் அன்றாட அரசுப் பணி என்று ஜெயலலிதா கருதுகிறார்போலும்!

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியிலே இருந்தபோது, இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த வான்படை வீரர்கள் சிலர் தாம்பரத்தில் உள்ள வான்படை பயிற்சிக்கூடத்திற்கு வந்த செய்தி கேள்விப்பட்டதும், நான் தலைமைச் செயலாளரை அழைத்து உடனடியாக மத்திய அரசின் பாதுகாப்புத் துறையிடம் தொடர்பு கொண்டு அவர்களைத் திருப்பியனுப்பிட கேட்டுக் கொள்ளுமாறு கூறினேன். அவரும் மத்திய அரசிடம் அவ்வாறே கேட்டுக் கொண்டவுடன் மத்திய அரசு இலங்கை ராணுவ வீரர்களை தமிழகத்திலிருந்து திருப்பி அனுப்ப உத்தரவிட்டதோடு, அந்தச் செய்தியை எனக்குத் தெரிவிக்கும்படி தலைமைச் செயலாளரிடம் கூறியது.

இந்தச் செய்தியை நான் கேள்வி-பதில் பகுதியில் எழுதியதோடு, அதற்கு முன்பே செய்தியாளர்கள் என்னிடம் இலங்கை விமானப் படையைச் சேர்ந்த சிலருக்கு தாம்பரத்தில் பயிற்சி அளிப்பதாகச் சொல்லப்படுகிறதே என்று கேட்டபோது, அந்தச் செய்தி உண்மையாக இருக்குமானால், அப்படி பயிற்சி அளிப்பது கண்டிக்கத்தக்கது.

பயிற்சிக்கு வந்தவர்களை உடனடியாக மத்திய அரசு திருப்பி அனுப்புவதே சரியாக இருக்கும் என்று பதில் அளித்து அதுவும் ஏடுகளில் வெளிவந்துள்ளது. நான் கேட்டுக் கொண்டதைப்போலவே தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சிகளும் அந்த வேண்டுகோளை மத்திய அரசுக்கு விடுத்தார்கள்.

அந்த நிலையில் தான் செய்தியாளர்கள் என்னிடம் “இலங்கை ராணுவத்திற்கு தமிழகத்திலே பயிற்சி அளிக்காமல், வேறு மாநிலங்களிலே பயிற்சி அளித்தால்?” என்று கேட்ட போதுகூட, “அப்படி பயிற்சி அளிக்க முன்வந்தால் அப்போது பார்ப்போம்” என்று சொன்னேன்.

அதன் பிறகுதான் தாம்பரத்தில் பயிற்சி அளிக்க வந்தவர்களை மத்திய அரசு கர்நாடகாவிற்கு அனுப்பியதாக செய்தி வந்தவுடன், தமிழக மக்களின் எதிர்ப்பை உடனடியாக கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமாக மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லச் செய்தேனே தவிர, ஜெயலலிதாவைப் போல அந்தத் தகவலை ஏடுகளிலே வெளிவரச் செய்யவில்லை.

பத்திரிகையாளர்களும் அதைப் பற்றி என்னிடம் கேட்காததால், அதனைச் சொல்லவில்லை. அதனால் எனக்கு தமிழ் உணர்வே இல்லையென்று, ஜெயலலிதா நேற்றைய அறிக்கையில் சொல்லியிருக்கிறார்.

எனக்கு தமிழ் உணர்வு இருக்கிறதா இல்லையா என்று முடிவு செய்திட இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு ஜெயலலிதாவின் சான்றிதழ் தேவையில்லை.

அதுபோலவே இலங்கைத் தமிழர்கள் மீது எனக்கு அன்பு உண்டா என்பதை 1956ஆம் ஆண்டில் இருந்து அவர்களுக்காக நான் கொடுத்து வரும் குரலை அறிந்த தமிழர்கள் அறிவார்கள். அதுமாத்திரமல்ல; இலங்கைத் தமிழர்களுக்காக உண்மையாக குரல் கொடுப்பது நானா? அல்லது “போர் என்றால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம்தான்” என்று கூறிய ஜெயாவா? தமிழகச் சட்டப் பேரவையிலே பிரபாகரனை கைது செய்து இந்தியாவிற்கு அழைத்து வர வேண்டுமென்று தீர்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்றியவர் யார்? என்பதையெல்லாம் உண்மையான தமிழர்கள் நன்றாகவே அறிவார்கள். மேலும் இலங்கைத் தமிழர்களுக்காக தி.மு.கழக ஆட்சி ஆதரவாக உள்ளது என்ற காரணத்தைக் காட்டித்தான் 1991ஆம் ஆண்டு மத்திய அரசு தமிழக தி.மு.கழக ஆட்சியையே கலைத்தது என்பதையும் அனைவரும் அறிவார்கள்.

இதையெல்லாம் உண்மையான தமிழ்மக்கள் மறந்திருப்பார்கள் என்று எண்ணித்தான் அம்மையார் ஜெயலலிதா இப்படி அடாவடித் தனமாக அறிக்கை விட்டிருக்கிறார். இனியாவது அவர் இலங்கை விடுதலைப் போராளிகள் மீது கடந்த காலத்தில் காட்டிய காழ்ப்பு, விரோதம், வெறுப்பு – இவற்றை மறந்துவிட்டு பண்பார்ந்த முறையில் பதிலும் விளக்கமும் அளித்திடக் கற்றுக் கொள்வாராக!’’

http://thaaitamil.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9/

அதுபோலவே இலங்கைத் தமிழர்கள் மீது எனக்கு அன்பு உண்டா என்பதை 1956ஆம் ஆண்டில் இருந்து அவர்களுக்காக நான் கொடுத்து வரும் குரலை அறிந்த தமிழர்கள் அறிவார்கள். அதுமாத்திரமல்ல; இலங்கைத் தமிழர்களுக்காக உண்மையாக குரல் கொடுப்பது நானா? அல்லது “போர் என்றால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம்தான்” என்று கூறிய ஜெயாவா? தமிழகச் சட்டப் பேரவையிலே பிரபாகரனை கைது செய்து இந்தியாவிற்கு அழைத்து வர வேண்டுமென்று தீர்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்றியவர் யார்? என்பதையெல்லாம் உண்மையான தமிழர்கள் நன்றாகவே அறிவார்கள். மேலும் இலங்கைத் தமிழர்களுக்காக தி.மு.கழக ஆட்சி ஆதரவாக உள்ளது என்ற காரணத்தைக் காட்டித்தான் 1991ஆம் ஆண்டு மத்திய அரசு தமிழக தி.மு.கழக ஆட்சியையே கலைத்தது என்பதையும் அனைவரும் அறிவார்கள்.

இதுதான் அரசியல் என்றால். இதை, கருணாநிதி ஐயா, ஜெயலலிதாவோடு கதைக்காமல் மத்தியோடு கதைக்க வேண்டும். சிதம்பரமும், மன்மோகன் சிங்கும், பிரனாப் முகர்யியும் தாம் தான் தமிழரை காப்பதாக கூறும் பொது மத்திய அரசு எப்படி சொல்லிச் சொல்லி தமிழரை அழித்தவர்கள் எனபதை சொல்லிக்காட்ட வேண்டும். மத்திய தேர்தல் வரும்பொது காங்கிரஸ் இரசாயனகுண்டு போட்ட கதையை சொல்லி அப்போது அதை எதிர்த்து நீங்கள் மரீனா கடற்கரையில் காற்றடிகளை போட்டு உண்ணும் விரதம் இருந்த கதையையும் சொல்ல வேண்டும்.

ஜெயாவோடு பாய்ந்து என்ன வரப்போகுது. தமிழ் நாட்டு அரசை கலைப்பது மத்திய அரசு. அவர்களோடுதான் காயவேண்டும்.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.