Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தேர்தலிலிருந்து ஒதுங்கிக் கொள்ள எத்தனை கோடி வேண்டுமென்றார்கள

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாவம்..தூயவனுக்கு..தமிழக அரசியல் கொன்ஞ்சம் அப்பிடி இப்பிடி தானே...

கருணாநிதி...இது வரை அவர் போட்டியிட்ட தொகுதிகளில் தோற்றதே இல்லை...

ம்ம் வைகோ பாவம் என்ன செய்வார் எல்லாம் அந்த 40 செய்த வேலை...

துண்ட காணம் துணிய காணம்..அம்மவோட நின்னு சங்க காணம்னு வைகோ பாடவேண்டியது தான்... :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் அரசியலில் அத்துப்படி என்று எமக்குத் தெரியாதா?? வானொலியில் ஒரு தடவை வைகோவிற்கு ஆதராவாக் கதைத்தனான். ஆனால் அவர் கட்சி மாறியது பிடிக்கவில்லை என்று கட்டையில் போறதுக்கு இப்போது வக்காளத்து வாங்குவது தெரியாதோ?? என்னவோ வைகோ சுண்டல் வீட்டுக்காக அரசியல் நடத்துவது போல நினைக்கின்றியள்!! இவர் ஆதரவு கதைத்ததற்காக வைகோ கருணா நிதியேர்டு நிற்கவேணுமாம். நல்ல நகைச்சுவை கண்ணா! :wink: :P

கருணாநிதி என்ன வெறும் சட்டமன்ற உறுப்பினராக இருந்து என்னத்துக்கு போதும்?? குடும்பச் சுமை தாங்குமா? அவர் ஆசைப் படுவது எல்லாம் கட்டையில் போற வரைக்கும் குடும்பத்தை கஸ்டப்படுத்தக் கூடாது என்பது தானே. வாழ்க குடும்ப அரசியல்!! :wink: :P :lol:

முதலில் கையெழுத்தது போடவாவது கையில் பலம் இருக்கோ என்று பாருமோய்!! :P :lol:

தமிழக சட்டசபைத் தேர்தலில் இதுவரை எந்த அணிக்கும் அனுதாப அலையோ எதிர்ப்பு அலையோ இருப்பதாக தெரியவில்லை

தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள இந்தத் தருணத்தில் தமிழக அரசியலின் முக்கிய கூட்டணிகளான தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தி.மு.க. கூட்டணியிலிருந்து கட்சிகள் வெளியேறுவதை வழக்கத்திற்கு மாறாக கடுமையாக தடுத்து நிறுத்த தி.மு.க. முயற்சித்ததும், அ.தி.மு.க.வும் கூட்டணிக்காக கதவை திறந்தே வைத்ததும் இந்தத் தேர்தலில் கூட்டணியின் முக்கியத்தை தெளிவுபடுத்துகின்றதும், ஆனால், தமிழக அரசியல் கூட்டணி பலம் தேர்தல் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதற்கு எத்தனை தூரம் சான்றுகள் தரமுடியுமோ அதே அளவிற்கு கூட்டணி பலத்திற்கும் தேர்தல் வெற்றி தோல்விக்கும் தொடர்பில்லை என்றும் சான்றுகள் தரமுடியும்.

பொதுவாக தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பவைகளாக கருதப்படுவது

1. அனுதாப அலை 2. எதிர்ப்பு அலை 3. கூட்டணி பலம் 4. ஆளும் கட்சியின் மீதான அதிருப்தி. இதுவுரை அனுதாப அலை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. மேலோட்டமாக பார்க்கும் போது எந்தக் கட்சிக்கும் எதிர்ப்பு அலை இருப்பதாகவும் தெரியவில்லை. எனவே, மற்றைய காரணிகள் அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன.

கூட்டணி பலம்

முக்கிய கூட்டணிகளாக வழக்கம் போல தி.மு.க., அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிகளே உள்ளன. விஜயகாந்தின் தே.மு.தி.க., பா.ஜ.க., பார்வர்ட்பிளாக் (கார்த்திக்) போன்றவர்கள் தி.மு.க., அ.தி.மு.க.விற்குப் பிறகே வருகின்றனர். தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி சமபலத்தில் இருப்பதாக ஒரு தோற்றம் இருந்த போதிலும் அ.தி.மு.க. கூட்டணியை விட தி.மு.க. கூட்டணி பலமாகவே உள்ளது.

வட மாவட்டங்களில் கட்சிகளின் செல்வாக்கு தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க., பா.ஜ.க. என்ற வரிசைப்படியே உள்ளது. புற சென்னை, செங்கல்பட்டு , கடலூர், விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், பெரம்பலூர், அரியலூர், வேலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை போன்ற வட மாவட்டங்களில் கட்சிகளின் வாக்கு விழுக்காடு சற்றேறக்குறைய கீழ்க் கண்டவாறே முந்தைய தேர்தல்களில் இருந்துள்ளது. தி.மு.க. - 30- 35% அ.தி.மு.க. - 25- 30% பா.ம.க. - 12- 15% காங்கிரஸ் - 10- 12% விடுதலை சிறுத்தைகள் - 5% ம.தி.மு.க. - 2% இரு கம்யூனிஸ்ட்கள் - 3% `தொகுதிக்கு தொகுதி இந்த புள்ளி விபரத்தில் சிறிய அளவில் மாறுபாடு இருக்கும்.

தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., காங்கிரஸ் இருப்பதால் வட மாவட்டங்களில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை வெற்றி கொள்ள இயலும். விடுதலைச் சிறுத்தைகளின் வாக்கு அ.தி.மு.க. கூட்டணிக்கு உதவினாலும் அ.தி.மு.க.வினால் விடுதலைச் சிறுத்தைகளின் பலத்தால் தி.மு.க.வை மட்டுமே சமன் செய்ய முடியும். அதனோடு பா.ம.க.வும், காங்கிரஸ் வாக்குகளும் சேரும் போது அ.தி.மு.க. கூட்டணி வட மாவட்டங்களில் பெருத்த சரிவை சந்திக்கும் நிலை உள்ளது. ம.தி.மு.க.வினால் வட மாவட்டங்களில் அ.தி.மு.க. கூட்டணிக்கு எந்த பலனும் இல்லை. வட மாவட்டங்களில் சில தொகுதிகளில் ம.தி.மு.க. பெற்ற கணிசமான வாக்குகள் ம.தி.மு.க.விற்காக அல்ல, ம.தி.மு.க.வின் வேட்பாளர்களின் சொந்த செல்வாக்குக்காக. இந்த வாக்குகள் அந்த வேட்பாளர் போட்டியிலிருந்தால் மட்டுமே விழும் வாக்குகள். இதற்கு உதாரணமாக கடலூர் மாவட்டத்தின் மற்றைய தொகுதிகள் 2,000 வாக்குகள் மட்டுமே பெற்ற ம.தி.மு.க. கடலூர் சட்டமன்ற தொகுதியில் 7,000 க்கும் கூடுதலான வாக்குகள் பெற்றது ம.தி.மு.க. வேட்பாளர் சௌ.பத்மனாபனால், இவர் 1989 இல் சுயேச்சையாக போட்டியிட்டு 5,000 க்கும் கூடுதலான வாக்குகள் பெற்றார். இதேபோன்றே நெல்லிக்குப்பம் தொகுதியில் கிருஷ்ணமூர்த்தி ம.தி.மு.க. சார்பாக நின்றபோது கிடைத்த கணிசமான வாக்குகள் 2001 சட்டமன்ற தேர்தலில் வெகுவாக குறைந்து 2,000 வாக்குகள் மட்டுமே ம.தி.மு.க.விற்கு கிடைத்தது. 2001 தேர்தலில் 10,000 வாக்குகளுக்கு மேல் பெற்ற 36 தொகுதிகளில் 8 தொகுதிகள். மட்டுமே வடமாவட்ட தொகுதிகள் அதிலும் சென்னை புறநகர் தொகுதிகள் 3 (பூந்தமல்லி, தாம்பரம், ஆலந்தூர்). மற்றவைகளும் வேட்பாளர்களின் தனிப்பட்ட செல்வாக்கினால் கணிசமான வாக்குகள் வாங்கியது. (செங்கல்பட்டு- மல்லை சத்யா, செஞ்சி- மாசிலாமணி, மேல் மலையனூர்- ஏ.கே.எம். என அழைக்கப்படும் ஏ.கே.மணி, ரிஷிவந்தியம்- மருதூர் துரை).

விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் முந்தைய முக்கிய தலைவர் திருவள்ளுவன் தே.மு.தி.க.விற்கு ஆதரவளிப்பது விடுதலைச் சிறுத்தைகள் வாக்கு வங்கியின் சில இடங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தவிர எல்லா கட்சிகளின் வாக்கு வங்கியிலும் தே.மு.தி.க. கைவைக்கின்றது. குறிப்பாக முதல்முறை வாக்களிக்கும் வாக்காளர்கள மத்தியிலும் கிராமங்களிலும் தே.மு.தி.க. விற்கு ஆதரவு இருப்பது போல தெரிகின்றது, இந்த தேர்தலின் முடிவில் தான் தே.மு.தி.க.வின் பலம் தெரியும் என்றாலும் இராமச்சந்திரனின் தனிப்பட்ட செல்வாக்கினால் பண்ருட்டி தொகுதியிலும் விஜயகாந்த் போட்டியிடும் தொகுதி தவிர்த்து தே.மு.தி.க. கருணாநிதி அவர்கள் கூற்றுப்படி ஹார்ம்லெஸ் என்ற நிலைதான் இது வரை. விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பிற்கு கடந்த சில ஆண்டுகளாக நல்ல முன்னேற்றம். குறிப்பாக பொது மக்கள் மத்தியில் இருந்த தவறான இமேஜ் மாறி தற்போது தலித் அல்லாத மக்களும் விடுதலை சிறுத்தைகளின் மீது கரிசனத்தோடு ( குறிப்பாக திருமாவின் மீது) இருக்கின்றனர். இதற்கு சான்றாக 2004 பாராளுமன்ற தேர்தலில் திருமா சிதம்பரம் தொகுதியில் பெற்ற வாக்குகள் , அதற்கு முந்தைய தேர்தலில் பெற்றதை விட 30,000 வாக்குகள் அதிகம். தலித் வாக்குகளையும் தாண்டி பிற சாதி மக்களின் வாக்கு வங்கியில் ஊடுருவியிருப்பது தெளிவாகின்றது. தலித்கள் மட்டுமல்லாமல் வன்னியர்களும் விடுதலை சிறுத்தை அமைப்புகளில் சேரத் தொடங்கியுள்ளனர். பாண்டிச்சேரி நாடாளுமன்ற வேட்பாளராக விடுதலை சிறுத்தை அமைப்பின் சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் ஒரு வன்னியர். ஆனாலும், கடலூர் , விழுப்புரம், தர்மபுரி மாவட்டங்கள் தவிர்த்து பிற இடங்களில் விடுதலை சிறுத்தைகள் அமைப்பினால் அ.தி.மு.க. கூட்டணிக்கு பயன் எதுவும் இல்லை.

ஏறக்குறைய 60 தொகுதிகளில் முடிவை நிர்ணயிக்கும் பா.ம.க. வட மாவட்டத்தின் அரசியலை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 1996 தேர்தலில் செல்வி ஜெயலலிதா எதிர்ப்பு அலையிலும் 60 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பத்தாயிரத்திற்கும் கூடுதலான வாக்குகள், 4 தொகுதிகளில் வெற்றி, 9 தொகுதிகளில் இரண்டாமிடம், 1991 தேர்தலில் ராஜீவ் காந்தி மரண அலையிலும் இதேபோல் பல தொகுதிகளில் 10,000 க்கும் மேற்பட்ட வாக்குகள். 1989 பாராளுமன்ற தேர்தலிலும் 5.5% வாக்குகள் ( இதை வட மாவட்டங்களில் மட்டும் என கணக்கிடும்போது ஏறக்குறைய 15%) பெற்றது. ஆனால், பா.ம.க.வின் வளர்ச்சி தற்போது தேக்க நிலைக்கு வந்துவிட்டது. இதற்கு மேல் பா.ம.க. வளர்வதும் கடினம். அதே போல் அதன் சரிவும் குறைவாகவே இருக்கும். solid Vote Bank என கூறப்படும் நிச்சய வாக்கு வங்கியே அதன் சரிவு மிகக்குறைவாக இருக்கக் காரணம். 1996 தேர்தல் தவிர்த்து பா.ம.க. கூட்டணியின்றி போட்டியிட்ட அத்தனை தேர்தல்களிலும் அதன் வாக்கு வங்கி ஒரே மாதிரியாகவே உள்ளது. தேர்தலுக்கு தேர்தல் பா.ம.க. பெற்றுள்ள சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை கூடியதால் பா.ம.க. வாக்கு வங்கி வளர்ந்துவிட்டதாக கூறமுடியாது . பா.ம.க. வாக்கு வங்கி அதன் நிறுவனர் ராமதாஸால் அரசியல் கணக்கோடு பயன்படுத்தப்பட்டதே அதன் சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைக்குக் காரணம்.விடுதலை சிறுத்தைகள் அமைப்போடு பா.ம.க. கைகோர்த்தது சாதி, கட்சி பாகுபாடின்றி வடமாவட்ட மக்கள் பலரை ஆசுவாசப்படுத்தியது. எதிர் முகாம்களில் தற்போது இருக்கும் போதும் எந்த விதமான அறிக்கை தாக்குதல்களிலும் ஈடுபடாமல் இன்று வரை நட்புமுறையில் இருவரும் இருப்பதும் தேர்தலுக்குப் பிறகு இணைந்து செயல்படுவோம் என்ற பேச்சுகளும் எதிர் எதிர் அணியில் தேர்தலை சந்தித்தாலும் கடந்த கால தேர்தல்களில் நடைபெற்றதைப் போன்ற வன்முறைகள் நடைபெறாது என்ற நம்பிக்கையுடன் உள்ளது வட மாவட்ட தேர்தல்களம்.

வட மாவட்டங்களில் கம்யூனிஸ்ட் தோழர்கள் பணம் காசு எதிர்பார்க்காமல் தேர்தல் வேலை செய்வார்கள் என்பதைத் தவிர்த்து தி.மு.க. கூட்டணிக்கு நெல்லிக்குப்பம், குறிஞ்சிப்பாடி தர்மபுரி மாவட்டத்தின் சில தொகுதிகள் தவிர வேறெந்த தொகுதிகளிலும் கம்யூனிஸ்ட்களால் பெரிய அளவில் இலாபமில்லை.

தி.மு.க.வின் கோட்டையாக வட மாவட்டங்கள் கருதப்பட்டாலும் இந்தத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்கள் தேர்வு மிக முக்கியமானதாக கருதப்படும். 2001 தேர்தலில் மிகப் பெரும் வெற்றி பெற்றதற்கான காரணங்களில் ஒன்று வேட்பாளர் தேர்வு. மிகப் பெரும்பாலானவர்கள் புதுமுகங்கள். ஏற்கனவே கெட்ட பெயர் எடுத்தவர்கள் முற்றிலும் ஒதுக்கி வைக்கப்பட்டனர். ஆனால், இது மாதிரி தி.மு.க.வில் செய்வது கடினம். ஒவ்வொரு தேர்தலின்போதும் தி.மு.க.வின் அதே குட்டி மன்னர்களையே வேட்பாளர்களாக பார்க்கின்றனர். புதுமுகங்கள் நிறுத்தப்பட்டால் குட்டி மன்னர்களே அவர்களுக்கு எதிராக வேலை செய்து கவிழ்த்துவிடுகின்றனர். பழைய வேட்பாளர்களையே பார்த்தால் மக்களுக்கு எரிச்சல். புது முகங்கள் போட்டியிட்டால் குட்டி மன்னர்களின் உள்ளடி வேலைகள் என தி.மு.க.விற்கு வேட்பாளர் தேர்வு இந்த முறையும் தலைவலி தான்.

பொதுவாகவே அ.தி.மு.க. சற்று பலம் குறைந்த வட மாவட்டங்களில் வெள்ள நிவாரணத்திற்கு குடும்பத்திற்கு ஆயிரம் ரூபா கொடுத்து கிடைத்த நல்லபெயரும் மகளிர் சுய உதவி குழுக்களின் செயற்பாடுகள் அதில் புழங்கும் பணம், தி.மு.க. வெற்றிபெற்றால் ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர் என்ற பிரசாரம், வழக்கமான வாக்கு வங்கி இவை தவிர்த்து அ.தி.மு.க.விற்கு சொல்லிக் கொள்ளும் படியான பலம் எதுவும் இல்லை. இதை கணித்தே அ.தி.மு.க.வும் முடிந்த அளவிற்கு வட மாவட்டங்களில் போட்டியிடுவதை தவிர்த்து ம.தி.மு.க., விசிகளுக்கு தொகுதிகளை இங்கு அளித்துள்ளது. ராசிபுரம், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், அரியலூர் போன்ற இடங்களில் சில தொகுதிகளை சொந்தமாகவும், விழுப்புரம், கடலூர் மாவட்டத்தின் சில தொகுதிகளை விடுதலை சிறுத்தைகளின் பலத்தினாலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

தி.மு.க.வின் கோட்டையாக கருதப்படும் வட மாவட்டங்களில் பலமிகுந்த பா.ம.க.வும் கணிசமான வாக்கு வங்கியுள்ள காங்கிரஸும் கூட்டணியில் இருப்பது வட மாவட்ட தொகுதிகளை தி.மு.க. கூட்டணி எளிதாக வெற்றி பெறும் நிலையிலிருந்தாலும் விடுதலை சிறுத்தைகள் அ.தி.மு.க. கூட்டணியில் இருப்பதால் சில தொகுதிகள் கைவிட்டும், சில தொகுதிகள் இழுபறி நிலைக்கும் சென்றுவிட்டது. சிறிய அளவிலான சேதாரத்துடன் தி.மு.க. கூட்டணி வட மாவட்ட தொகுதிகளை தக்கவைத்துக் கொள்ளும்.

தஞ்சாவூர் மாவட்டம் பொதுவாகவே தி.மு.க.விற்கு எந்த சூழலிலும் கை கொடுக்கும் மாவட்டம். தமிழகமெங்கும் தி.மு.க., த.ம.க. கூட்டணி 1998 பாராளுமன்ற தேர்தலில் தோல்வியுற்ற போதும் தஞ்சையில் சுனாபானா என செல்லமாக அழைக்கப்படும் சு.பழனிமாணிக்கம் வெற்றி பெற்றார். தஞ்சையின் தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி சொந்த பலத்தில் தான் மோதிக் கொள்ள வேண்டும். கூட்டணிக் கட்சிகளுக்கு செல்வாக்கில்லாத தொகுதிகளாதலால் இங்கும் தி.மு.க.வுக்கு சாதகமான நிலை.

நாகை மாவட்டம் கம்யூனிஸ்ட்களின் கோட்டை என்று கூறப்பட்டாலும் தி.மு.க. அல்லது அ.தி.மு.க. என ஏதேனும் ஒரு கூட்டணியில் இருந்தால் மட்டுமே எளிதாக வெற்றி பெறுவார்கள். தி.மு.க., அ.தி.மு.க., கம்யூனிஸ்ட்கள் என்ற வரிசையில் கட்சிகளின் பலம் இருந்தாலும் விடுதலை சிறுத்தைகள் சமீப காலமாக கம்யூனிஸ்ட்களின் வாக்கு வங்கியில் ஓட்டை ஏற்படுத்தியுள்ளனர். கம்யூனிஸ்ட்களின் பலத்தால் தி.மு.க. கூட்டணியின் கை ஓங்கினாலும் சீர்காழி, மயிலாடுதுறை போன்ற தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றிமுகம் காணலாம்.

திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை போன்ற மாவட்டங்களில் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் தம் சுயபலத்தில் மட்டுமே மோதிக் கொள்ள வேண்டும். வேறு எந்தக் கட்சிகளுக்கும் எந்த பலமுமில்லாததால் திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் வெற்றி தோல்வி முழுக்க முழுக்க தி.மு.க., அ.தி.மு.க.வை பொறுத்ததே, திருச்சி, சிவகங்கை மாவட்டங்களில் கணிசமாக தி.மு.க.வும் புதுக்கோட்டை மாவட்டத்தில் கணிசமாக அ.தி.மு.க.வும் வெற்றிபெறும்.

மதுரையும் அதைத் தாண்டிய தென் மாவட்டங்களில் அ.தி.மு.க.வின் வலுவான வாக்கு வங்கியும், சிவகாசி, கோவில்பட்டி, குளச்சல், பொள்ளாச்சி, சாத்தூர் போன்ற முப்பதிற்கும் மேற்பட்ட தென்மாவட்ட தொகுதிகளில் ம.தி.மு.க. பலமாக உள்ளது. (2001 தேர்தலில் 10,000 வாக்குகளுக்கு மேல் வாங்கிய 36 தொகுதிகளில் 28 தென்மாவட்டங்களைச் சேர்ந்தது - 5,000 வாக்குகளுக்கு மேல் வாங்கிய 33 தொகுதிகளில் பலவும் தென்மாவட்டங்களை சேர்ந்ததே) வெற்றிக்கான வாக்கு வித்தியாசம் 5,000 க்கும் குறைவாக இருக்குமாயின் ம.தி.மு.க.வின் கூட்டணி அ.தி.மு.க.விற்கு மிகப்பெரும் வெற்றியைத் தரும். ஆனால், பழைய புள்ளிவிபரங்கள் எத்தனை நெருக்கமான போட்டியிலும் 5,000 க்கும் குறைவான வெற்றி வாக்கு வித்தியாசம் மிக சில தொகுதிகளில் மட்டுமே. மதுரை மற்றும் தென் மாவட்ட தி.மு.க.வின் உட்கட்சி பூசல்கள் அ.தி.&#

-தினக்குரல்

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் தூயவன் என்ன தான் சொல் வித்தை காட்டினாலும்..வைகோ விற்க்கு தமிழ்மக்கள் தமிழகத்தில அளித்த ஆதரவு இப்பொ இல்லை என்றது கான் நிஜம் என்ன பன்ன வைகோ சென்ஞது பிழை தான் அதுக்காக எதிராகவா பேசமுடியும் என்று உங்களோட feelings புரிது தூயவன் அண்ணா... :lol::lol:

better luck next time vaiko ku... :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

வைகோட மகன் வையாபுரிமட்டும்..கட்சி வேலை பாக்க வில்லையாக்கும்..ம.தி.மு.க வில. வையாபுரி சொல்வது தானே நடக்கிது..அ.தி.மு.க வுடன் கூட்டனி சேரட்டுமான்னு தன் தாயாரை போய் கேட்டவர் தானே இந்த வைகோ..இங்கே தொண்டருக்காக தான் கட்சி நடத்தினாராக்கும்...இது குடும்ப அரசியல் இல்லையாக்கும்..ஏற்கனவே பொடாவில கைதாகி பெயில்ல திரிர அவருக்கு தன் மீதான வழக்குகழை வாபஸ் வாங்க வக்கில்லை இதுக்குள்..மற்ற கட்சிகள பற்றி விமர்சனம் வேற....

  • கருத்துக்கள உறவுகள்

இயக்குனர், நடிகர் விசுவும் அ.தி.மு.கவில் இணைந்துவிட்டார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த அரட்டை அரங்கம் இனிமேல் ஜெயா தொலைக்காட்சிக்குப் போகவுள்ளது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.