Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியா குறித்து அதிபர் ஒபாமாவின் கெஞ்சலும் - மிரட்டலும்..?! ஈழதேசம் பார்வையில்..!

Featured Replies

இந்தியா குறித்து அதிபர் ஒபாமாவின் கெஞ்சலும் - மிரட்டலும்..?! ஈழதேசம் பார்வையில்..!

இந்தியாவின் அந்நிய முதலீட்டு கொள்கை கவலை அளிக்கிறது. அந்நிய முதலீட்டில் இந்தியா பெரும் வீழ்ச்சி என்று பொருளாதார கொள்கையை விமர்சித்தார் ஒபாமா என்று இன்றைய செய்திகள் அனல் பறக்கின்றன. இந்த ஒபமாவின் இந்திய பொருளாதார கொள்கை பற்றிய கருத்துக்களுக்கு பாரதிய ஜனதா கட்சி மற்றும் இடது கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது கருத்துக்களை மிகவும் மென்மையாக மயிலிறகால் வருடியபடியே சொல்லி இருக்கின்றன. இடது கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்..? நிலாத் பால் பாசு கூறும் பொழுது, அமெரிக்கர்கள் நமது பொருளாதராத்தை, வர்த்தகத்தை அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நினைக்கிறார்கள், இதற்காகவே அவர்கள் இந்த நெருக்கடியை ஏற்படுத்துகிறார்கள். இப்போது உள்ள சூழ்நிலையில் இதனை யாரும் நம்ப மாட்டார்கள். இதனால் உலக அளவில் முதலீட்டு துறையில் கடல் அளவுக்கு மாற்றம் ஏதுவும் வந்து விடாது என்கிறார்.

பாரதிய ஜனதா கட்சியின் மேல் சபை எம்.பி. தரு விஜய் இந்த பராக் ஒபாமாவின் கருத்து நகைப்புக்குரியது. அமெரிக்கா பொருளாதார சிக்கலை சந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில், நமக்கு முதலீடு மற்றும் பொருளாதாரம் பற்றி சான்றிதழ் வழங்குகிறது. ஒபாமாவின் கருத்து நகைப்புக்குரியது. நமது நாட்டு நலன்களை நாமே நிறைவேற்றிக் கொள்வதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.அந்நிய நேரடி முதலீடு போன்ற பிரச்சனையில் அமெரிக்காவின் ஆசைகளுக்கு இந்தியா கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்து விடக்கூடாது. அந்நிய நேரடி முதலீட்டை புறக்கணிக்க நமக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. இது நமது நாட்டு நலன் பற்றிய கேள்விக் குறி என்று சொல்லி இருக்கிறார். மற்ற அணைத்து பிராந்திய, தேசிய மற்றும் லெட்டர் பேடு கட்சிகள் யோசனையில் உள்ளன. என்ன மாதிரியான கருத்துக்கள் சொல்லலாம் என்று. கம்பும் நோகாமல் பாம்பும் சாகாமல் கருத்துக் கூறுவது என்றால் என்ன லேசுப்பட்ட காரியமா..?

அப்படியென்ன அமெரிக்கா அதிபர் பராக் ஒபாமா இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்து அல்லது மாற்றங்கள் குறித்து பேசினார்..? என்பதை அனைவரும் அறிவோம். சுருங்கக் கூறின், இந்திய பொருளாதாரத்தில் அந்நிய முதலீடுகளில் பெரும் வீழ்ச்சி அடைந்துள்ளது என்கிறார். அதாவது அந்நிய நேரடி முதலீடுகளுக்கு பல தடைகளை போட்டு உள்ளது இந்திய அரசு என்கிறார். சில்லறை வர்த்தகம், உள்ளூர் வெளியூர் விமான போக்குவரத்து, காப்பீட்டு துறை, மற்றும் ஏனைய பொதுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் ஏகபோக கட்டுப்பாடுகளை கொண்டிருக்கின்றன இந்திய அரசு என்கிறார். மேலும் எங்களது அந்நிய நேரடி முதலீட்டால் அமெரிக்கா மற்றும் இந்தியாவில் வேலை வாய்ப்புகள் பெருகும்.இதனால் இரண்டு நாட்டு பொருளாதார மந்த நிலை மாறி விடும் என்று ஆசை வார்த்தை கூறியிருக்கிறார். கடந்த சில வருடங்களாக இந்திய பொருளாதாரம் பின்னோக்கிய வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன, இதனை சரிகட்ட அந்நிய நேரடி முதலீட்டை உடனடியாக அனுமதிக்க வேண்டும் என்று கெஞ்சி உள்ளார்

குறிப்பாக சரவதேச நிதி நெருக்கடியை சமாளிக்க ஒவ்வொரு நாடும் தங்களது நாட்டில் வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டியது அவசியம் என சமீபத்தில் மெக்ஸிகோவில் நடைபெற்ற G - 20 நாடுகள் மாநாட்டில் மன்மோகன் வலியுறுத்தினார். அதை நான் அமெரிக்காவல் செயல்படுத்தி வருகிறேன், எனவே இந்தியாவில் அந்நிய முதலீட்டுக் கொள்கை பெரும் கவலையளிக்கிறது என்று கூறியுள்ளார். மெக்ஸிகோவில் நடைபெற்ற ஜி இருபது மாநாட்டில் மன்மோகன் சிங் சுமார் 40,000 கோடி ரூபாயை ஐ.எம்.எப்.க்கு வழங்கியுள்ளார் என்பது குறிப்பான விசயம். என்றாலும் நமக்கு வரும் 'மைல்டான டவுட் அல்ல, ஸ்ட்ரோங் ஆன டவுட்' என்னவென்றால்,

ஒரு இரண்டு நாட்களுக்கு முன் உலகத்திலேயே மிகவும் பயங்கரமான தீவிரவாத அமைப்பு 'லக்சர் இ தொய்பா' என்ற அமைப்பு தான் என்று ஒபாமா அறிவித்தார். அதற்கு சில வாரங்களுக்கு முன் பாகிஸ்தான் என்ற நாடு பயங்கரவாதிகளின் சொர்க்க பூமியாகவே எப்பொழுதும் நிலவி வருகிறது என்றார். பாக் ஆப்கான் எல்லை வழியை திறந்து விடுவதற்காகத் தான் இவ்வாறு கூறினார் என்றால் உண்மை அதுவல்ல. நாம் முன்பே கூறியது போல, தெற்காசியாவில் மிக வலுவாக காலூன்றுவதற்கு முயற்சிகளை தொடங்கி விட்டன என்றோம். அதனுடைய தொடர்ச்சி தான், இந்த மேற்கண்ட அறிவிப்புகள் எல்லாம். பாகிஸ்தான், லக்சர், காஷ்மீர் போன்ற கருத்துக்களை அதாவது ஆர்.எஸ்.எஸ்.மற்றும் ஏனைய சங் பரிவார் கூட்ட கருத்துக்களை அப்படியே ஏன் வாந்தியெடுக்க வேண்டும் அதிபர் ஒபாமா..?

அப்பொழுதுதானே இந்திய அரசியலுக்குள் எளிதாக நுழைய முடியும்..! மேலும் அமெரிக்கா அரசு இந்திய அரசைப் போலவே என்னமாய் கூவுகிறது என்று இந்திய ஊடகங்கள் வேறு வழியே இல்லாமல் வெளிக்காட்டிக் கொள்ள முடியும். அதைவிட இந்திய அரசு அதிகார கூட்டத்தினர் சொல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் தங்களது சீனா ஆதரவு நிலையை கை விடவும், அமெரிக்கா ஆதரவு நிலையை பலமிக்கதாகவும் மடை மாற்றிக் கொள்ள முடியும்.

இதில் பெரிய காமடியே மன்மோகன் சிங் - ம், நானும் நல்ல நண்பர்கள் என்று வேறு செப்பியுள்ளார் பராக் ஒபாமா அவர்கள். இது அப்படியே நம்ம உலகத் தமிழனை கண்டுபிடித்த திருவாளர் மு.க.அவர்கள் சொன்னதைப் போலவே உள்ளது. சிங் - க்கு 90 வயது, ஒபாமாவுக்கு 40 வயது. எப்படி நல்ல நண்பர்களாக இருக்க முடியும்..? வெறும் வார்த்தைதானே சொல்லி வைப்போம் என்று இருக்குமோ..? கிடக்கட்டும் இவைகள்.

அந்நிய நேரடி முதலீட்டின் மூலம் மிக பலமுள்ள, அரசியல் அதிகாரத்தை தன்னுடைய கையில் எடுத்துக் கொள்ள அதிபர் பராக் ஒபாம முடிவு செய்து விட்டார் என்றே கருதலாம். மேலும் இந்திய அரசியல் கட்சிகளிலும், அவர்களுது வாரிசுகள் பெயரிலும் இருக்கும் ஏராளமான கருப்பு பணங்களை, கொள்ளையடித்து சுருட்டி வைத்திருக்கும் லட்சம் கோடிகளில் உள்ள பணத்தை கைப்பற்றும் முயற்சியாகக் கூட இருக்கலாம் இந்த அந்நிய நேரடி முதலீடுகள் மூலம். ஆக, எங்கு திரும்பினும் நிரம்பி வழியும் திராட்சை தோட்டத்தை கண்டுபிடித்து விட்டது அமெரிக்காவின் கார்ப்பரேட்கள் கூட்டம். பல வருடம் பட்டியினில் வாடிக் கொண்டிருக்கையில் இங்கு ஏராளமான திராட்சை தோட்டங்களா..? என்று பாய்ந்து வந்து கொண்டிருக்கிறது அமெரிக்கா கார்ப்பரேட்கள் என்றால் மிகையில்லை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

மாயாண்டிக்கருப்பு

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் ஐ.நா கனவு தொடர்ந்தும் கனவாகவே இருக்கும்.

இந்தியாவின் ஐ.நா கனவு தொடர்ந்தும் கனவாகவே இருக்கும்.

[size=5]போர்குற்றவாளிகளை, காட்டுமிராண்டிகளை ஐ.நா. பாதுகாப்பு சபையில் யார் அனுமதிப்பார்?[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.