Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கில் தமிழர்களின் வாக்குகளை அபகரிக்க மகிந்தபோடும் திட்டம்! - தாயகத்தில் இருந்து எழுவான்

Featured Replies

தமிழ் மக்களின் அரசியல்த் தீர்வுத் திட்டத்தைக் குழப்பும் நடவடிக்கைகளில் ஒன்றான கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றிவாகை சூடுவதற்காக கொழும்பு மகிந்த அரசாங்கம் பல்வேறு கைங்கரியங்களைக் கையாண்டுவருகின்றது. கிழக்கு மாகாணம் மூன்று மாவட்டங்களைக் கொண்ட பகுதி, ஒவ்வொரு மாவட்டத்திலுள்ள தமிழ் மக்களின் வாக்குகளை அபகரித்துக் கொள்வதற்காக பல்வேறு தந்திரோபாயங்களை அது மேற்கொண்டுவருகின்றது.

கடந்த கால மாகாண சபைத் தேர்தலில் ஆயுதக்குழுவுக்கு ஆதரவுகளை வழங்கிய இந்தியா இன்று, சர்வதேச நாடுகளை தன்வசப்படுத்திக் கொள்வதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பை நாடியுள்ளது. இந்தியா இன்று இத் திட்டத்தைக் கொண்டுவரவில்லை. இந்திய - சிறீலங்கா ஒப்பந்தத்தினுடாகவே தமிழர்களின் ஈழ சாம்ராஜ்யத்தை அழிக்க முற்பட்டது. இங்குதான் எமது தேசிய தலைவரின் தொலைநோக்கு வலுப்பெற்றது. தமிழர்களின் ஒருமித்த ஈழகோசத்திற்கு ஆணியடிக்கும் வகையில்தான் 1989 ஆம் ஆண்டு இணைந்த வடகிழக்க மாகாணத்திற்கான தேர்தல் நடாத்தப்பட்டது.

மாகாண சபைத் தேர்தலில் அன்றும் சரி இன்றும் சரி ஆயுதக்குழுக்களையே பயன்படுத்த இந்திய மற்றும் சிறீலங்கா அரசாங்கத்திற்கு முடிந்ததே தவிர, உண்மையாக ஜனநாயகத்தை விரும்பும் மக்களின் ஆதரவு கிட்டவில்லை என்றே கூறவேண்டும். ஆயுதக் குழுக்களைப் பயன்படுத்தி வெற்றி பெற மேற்கொள்ளும் தேர்தலுக்காக இன்று பல சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அதில் ஒரு கட்டம்தான், நியமனம் வழங்கல். மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்கி அதனுடாக அவர்களின் வாக்குகளைப் பெற்றக்கொள்ள முயற்சி மேற்கொள்ளும் அதேசமயத்தில், அம்பாறை மாவட்டத்தில் ஆயுதமுனையில் மக்களையும், வேட்பாளர்களையும் மிரட்டி அடிபணியவைத்து வாக்கு

வேட்டையில் ஈடுபட கொழும்பு அரசாங்கம் தயாராகிவருகிறது.

கடந்த வாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1395 பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன. உண்மையில் பட்டதாரிகளின் கல்வி ஆண்டை அடிப்படையாகக் கொண்டால் 1050 பேருக்கே, நியமனங்கள் வழங்க வேண்டும். ஆனால் மேலதிகமாக 345 பேருக்கு நியமனங்கள் வழங்க வேண்டியதன் அவசியம் என்ன? பட்டதாரிகளுக்கான நியமனங்கள் ஆயுதக்குழுவின் தலைவரும் மீள்குடியேற்ற பிரதியமைச்சருமான விநாயகமூர்ததி முரளிதரன் வழங்கியிருந்தார்.

இந்நிகழ்வில் அவர் தெரிவிக்கையில், மகிந்தாவின் அரசாங்கத்தைப் பலப்படுத்துவதனுடாகவே மாவட்டங்களில் வேலைவாய்ப்பு, அபிவிருத்தி என அனைத்துத் திட்டங்களையும் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளார். ஆனால், கடந்த காலங்களில் படையினரின் கெடுபிடிகளின் மத்தியில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி தமது கல்வி நடவடிக்கையினை முன்னெடுத்து பல்கலைக்கழக பட்டத்தைப் பெற்றவர்கள் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக வேலையற்ற நிலையில், பல தடவைகள் கொடி பிடித்து போராட்டங்களை நடத்தினர்.

இந்நிலையில், கிழக்கில் மாகாண சபையைக் கலைத்து தேர்தல் நடாத்த திட்டமிட்டுள்ள நிலையில், பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திரன முன்னணியின் அரசியல் பலம் கிழக்கில் சரிவடைந்துள்ள நிலையில், இவ்வாறான நியமனங்களை வழங்கி அரசியல் செல்வாக்கை கொழும்பு அரசாங்கத்திற்குப் பெற்றுக் கொடுக்க கருணா முன்னின்று செயற்படுகின்றார்.

பட்டத்தினைப் பூர்த்தி செய்த சில பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர். பட்டதாரிப் பயிலுநர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் வைபவம் இடம் பெற்றுக் கொண்டிந்தவேளை, இவர்களின் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. தாங்கள் பெற்ற பட்டம் பொய்யானதா?, பட்டங்களை பெற்ற பட்டதாரிகளின் எதிர்காலம் என்ன?, உயர்கல்வி அமைச்சினால் வழங்கப்படும் சான்றிதழின் பெறுமதி இதுதானா? பொது நிர்வாக அமைச்சின் 46(90) இலக்க சுற்று நிருபம் வெறும் காகிதமா? பட்டதாரிகளுக்கு சமமான எம்மை புறக்கணிப்பது ஏன் போன்ற பதாகைகளை ஏந்தியவாறு தமது ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

அரசாங்கம் வேலைவாய்ப்புக்களை வழங்க வேண்டுமாகவிருந்தால் அரசியல் இலாபமற்ற முறையில் அனைவருக்கும் வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். ஆனால், இன்றைய அரசாங்கம், பொதுத் தேர்தல்கள், ஜனாதிபதித் தேர்தல், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள், மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறுகின்ற காலங்களில்தான் வேலைவாய்ப்புக்கள், அபிவிருத்தி என வாய்திறக்கின்றனர்.

இந்நிலையில்தான், மற்றொரு தந்திரோபாயமாக ஆயுதக்குழுக்களை அல்லது படைப்புலனாய்வுப் பிரிவினர்களைப் பயன்படுத்தி அச்சுறுத்தல்களை மேற்கொண்டுவருகின்றனர். இவற்றின் ஒரு கட்டமாக அண்மையில், அம்பாறை மாவட்டம் காரைதீவு தவிசாளரான செல்லையா இராசையா என்பவருக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டள்ளது. கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவதாயின் ஆளுங்கட்சியில் கேட்க வேண்டும். அல்லாவிட்டால் பெரும் விளைவுகளை எதிர்நோக்க வேண்டிவரும் என காரைதீவு பிரதேச சபை தவிசாளருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.

மகிந்த ராஜபக்சதான் தற்போது நாட்டுக்கு சாப்பாடு போடுவதாகவும், அவரை எதிர்த்து எவரையும் செயற்பட விடமாட்டோம் என்று எச்சரித்துள்ளனர். எனினும், நீங்கள் யார்? நேரில் வாருங்கள் என தவிசாளர் கூறிய போது, நேரம் வரும் போது நாங்கள் நேரில் வருவோம் என பதிலளித்துள்ளனர். தொலைபேசியில் உரையாடிய நபர் ‘சரத்கேம்’ என்ற படை முகாமிற்கு வருமாறும் அந்த நபர் கோரியுள்ளார். இவ்வாறு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வதற்காக, ஒரு மாவட்டத்தில் சலுகைகள், மற்று மாவட்டத்தில் அச்சறுத்தல்களை மேற்கொண்டுவருகின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் முஸ்ஸிம் மக்களிடையே கொழும்பு அரசாங்கத்திற்கான செல்வாக்கு சரிவடைந்துள்ளதைக் கடந்த காலங்களில் அவதானித்திருந்தோம். இந்நிலையில்தான், தமிழர்களின் வாக்குகளை அபகரிப்பதற்கான முயற்சியில் அரசாங்கம் தனது நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளது. தமிழர்களின் வாக்குப் பலத்தை சிதைப்பதற்காக மற்றொரு திட்டத்தையும் அமுல்படுத்திவருகிறது. அதாவது, தமிழர் பகுதியில் குடிப்பரம்பலை மேற்கொள்ளுதல், திருகோணமலை மாவட்டத்தில் போர் முடிவடைந்த பின்னர் மிக அதிகமான பெரும்பான்மை இனத்தவர்களை படையினரின் பாதுகாப்புடன், தமிழர்களின் காணிகளில் அத்து மீறிய குடியேற்றங்களை மேற்கொண்வருகின்றன.

நன்றி : ஈழமுரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.