Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

0 நிமலரூபனின் உடல் அடக்கம் நீர்கொழும்பிலா? வவுனியாவிலா? நாளை மறுநாள் தெரியவரும்

Featured Replies

வவுனியா சிறையில் இடம்பெற்ற கலவரத்தின் பின் தாக்குதலுக்கு உள்ளாகி ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த தமிழ் அரசியல் கைதி கணேசன் நிமலரூபனின் சடலம் தொடர்பில் அவருடைய பெற்றோர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை எதிர்வரும் 20ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற நீதிபதி, பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க முன்னிலையில் குறித்த மனு இன்று (18) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

சட்ட மா அதிபர் திணைக்களம் மற்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை பரிசீலித்த பிரதம நீதியரசர் மனு மீதான விசாரணையை 20ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

பெரும்பாலும் நிமலரூபனின் சடலத்தை வவுனியாவுக்குக் கொண்டு செல்வதா அல்லது நீர்கொழும்பில் அடக்கம் செய்வதா என்ற முடிவை உயர் நீதிமன்றம் 20ம் திகதி அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இன்றைய வழக்கு விசாரணையில் நிமலரூபனின் பெற்றோர், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், ஐக்கிய சோஷலிச முன்னணியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

http://thaaitamil.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/

  • கருத்துக்கள உறவுகள்

பிணத்தை எங்கு அடக்கம் செய்வது என நீதிமன்றம் சொல்லுமளவுக்கு செல்லும் நிலையில் தமிழரின் சுதந்திரம் உள்ளது என்பதையும் இப்படியும் ஒரு நாடு உலகில் உள்ளது எனும் போது வெட்கப்பட வேண்டியவர்கள் யார்??

[size=5]இந்த அடிப்படை உரிமை பற்றிய தீர்ப்புக் கூற இத்தனை நாட்கள் எடுத்துக் கொண்டதன் மூலம் - சிங்கள நீதிபதிகளும் சிங்கள அரச பயங்கரவாதிகளின் கைப் பொம்மைகளாகவே செயற்படுகின்றனர், சிங்கள நீதிபதிகளும் தமிழின விரோதிகள் தான் என்பது மீதும் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது!

இந்த நிலையில் சிங்கள பயங்கரவாத அரசே போற்குற்றங்களை விசாரிப்பது கேலிக்குரியது என்பதை மனித நேயம் தெரிந்த நாடுகள் விளங்கிக் கொள்வர்![/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிமலரூபனின் சடலத்தை வவுனியாவுக்குக் கொண்டு செல்வதா அல்லது நீர்கொழும்பில் அடக்கம் செய்வதா என்ற முடிவை உயர் நீதிமன்றம் 20ம் திகதி அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது?????

என்னங்கையா நடக்குது நம்ம நாட்டில ........இதுக்கெல்லாமா நீதிமன்ற உத்தரவு ? அவங்க குடும்ப விருப்பத்துக்கு இடமில்லையா ? ஒண்ணுமே புரியல்ல ........

  • கருத்துக்கள உறவுகள்

நிமலரூபனின் சடலத்தை வவுனியாவுக்குக் கொண்டு செல்வதா அல்லது நீர்கொழும்பில் அடக்கம் செய்வதா என்ற முடிவை உயர் நீதிமன்றம் 20ம் திகதி அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது?????

என்னங்கையா நடக்குது நம்ம நாட்டில ........இதுக்கெல்லாமா நீதிமன்ற உத்தரவு ? அவங்க குடும்ப விருப்பத்துக்கு இடமில்லையா ? ஒண்ணுமே புரியல்ல ........

இதுவே ஒரு சிங்களவர் எனில் நிலைமையை சிந்தித்து பாருங்கள்.

எனது கண்ணீர் அஞ்சலிகள்.

இறந்து போனவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

இனிமேல் அந்த ஆத்மாவுக்கு நிரந்தர விடுதலை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மைதான் நுணாவிலான்....

தமிழர்கள் என்றால் கேள்வி கேட்க யாருமற்ற அனாதைகள் என்று நடக்கிறார்கள்... நீதித்துறை செத்து பல வருடங்கள் ஆகிவிட்டன.... பொதுவான நீதி என்பது இங்கில்லை .பக்கசார்பான அரசியல் சார்பான நீதிமன்றங்களும் நீதிபதிகளும் ( ஒரு சிலரை தவிர)

இவர்களுக்கெல்லாம் கடவுள் தான் நீதியை செய்ய வேண்டும் !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.