Jump to content

ஒரே(டெசோ) மேடையில் இரண்டு கலைஞர்கள்! - தமிழ் லீடர் ஆசிரியர் பீடம்


Recommended Posts

[size=4]ஈழத்தமிழன் சிந்திய இரத்தமும் கொடுத்த விலைகளும் தமிழ் மக்களின் மனங்களில் ஆறாத ரணங்களாய் இன்னமும் வாட்டிக்கொண்டே இருக்கின்றன. ஆனாலும் இத்தனைக்குப் பின்னும் ஈழத்தமிழர்களின் அளவிட முடியா அர்ப்பணிப்புக்களின் மேல் நின்று வயிறு வளர்க்கும் தலைமைகளும் எமது இனத்தின் மத்தியில் இருப்பதனைத்தான் தமிழ்மக்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது.[/size]

[size=4]ஜனநாயக வழியில் முன்னெடுக்கப்பட்ட தாயகத்திற்கான விடுதலைப் போராட்டத்தினை அதே வழியில் வெற்றி கொள்ள முடியாது என்பதால் தான் இளைஞர்களின் கைகளுக்கு போராட்டம் ஒப்படைக்கப்பட்டது. அதன் விளைவு தான் இன்று தமிழன் என்றொரு இனம் உண்டு என்று சர்வதேசத்தினைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கின்றது. உலகின் செவிப்பறைகளில் ஓங்கி அறைந்து எமது விடுதலையின் தார்ப்பரியத்தினை வெளிப்படுத்தியது தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம்.[/size]

[size=4]ஆயுதப் போராட்டத்தின் வீச்சு நினைத்துப் பார்க்க முடியாது சூழ்சிப் பின்னல்களின் காரணமாகவே வீழ்த்தப்பட்டது என்றாலும் சூழ்சிப் பின்னணியில் யார் எல்லாம் இருந்திருப்பார்கள் என்பதை இனி வருங்காலங்களின் வரலாறுகள் வெளிப்படுத்தத்தான் போகின்றன. ஆயுதப் போராட்டம் வீழ்ந்தாலும் அதன் அனுதாபிகளும் உணர்வாளர்களும் உண்மையான போராட்ட முனைப்புக்களைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.[/size]

[size=4]அதேவேளை ஈழத்தமிழனின் அவலத்தினைச் சொல்லிச் சொல்லியே பிழைப்பு நடத்தும் கூட்டம் பற்றி அம்பலப்படுத்த வேண்டிய தேவை தற்போது உணரப்பட்டிருக்கின்றது. தமிழகத்தில் கலைஞர் கருணாநிதி டெசோ மாநாட்டினை நடத்துவதற்கு பிரமாண்டமான ஏற்பாட்டினை மேற்கொண்டு வருகின்றார். கலைஞர் கருணாநிதி செம்மொழி மாநாடு நடத்தலாம், திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் நிகழ்சிகளில் பிரதம அதிதியாகப் பங்கேற்கலாம்.. அது எல்லாம் ஈழத்தமிழர்களுக்குப் பிரச்சினைக்குரிய விடயங்கள் அல்ல. ஆனால் முள்ளிவாய்க்காலில் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு உயிர்கள் துடிதுடித்து வீழ்ந்த போது அந்த உயிர்களைக் காப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காது தமிழகத்தில் எழுந்த ஆர்ப்பரிப்பு அலைகளைத் தணிப்பதற்காக அவர் ஆடிய நான்கு மணி நேர உண்ணாவிரதம் உட்பட்ட நாடகங்களை ஈழத்தமிழர்கள் மறந்துவிடப் போவதில்லை. கலைஞர் நினைத்திருந்தால் போர் உச்சம் பெற்றிருந்த போது மத்திய அரசில் பெற்றிருந்த அங்கத்துவத்தைத் தூக்கி எறிந்து அரசினை நிலைகுலையச் செய்திருப்பதுடன் வரலாற்றில் ஒரு உன்னதமான பணியினையும் ஆற்றியிருக்கலாம். ஆனாலும் அவர் முடியப்போகிறது.. முடிந்துவிடட்டும் என்று ஆற அமர இருந்து பார்த்ததோடு நின்று விடாது மூன்று இலட்சம் வன்னி மக்கள் தங்கள் வசந்தமான வாழ்க்கைத் தொலைத்து முகாம்களில தறப்பாள்களின் கீழே வாடிய போது தனது மகள் உட்பட்ட தனது விசுவாசத்துக்கு உரியவர்களை முகாம்களுக்கு அனுப்பியது மட்டுமல்லாமல் அங்கு மக்கள் வசதியாக வாழ்கிறார்கள் என்று ஊடகங்களுக்கு கதைகளும் சொல்லுவித்தார்.[/size]

[size=4]இறுதியில் நடைபெற்ற தேர்தலிலும் கட்டிப்பிடித்திருந்த முதலமைச்சர் கதிரையையும் அவர் பறிகொடுக்கும் அவல நிலையினைச் சந்திக்க நேர்ந்தது. அதன் விளைவாக மீண்டும் ஈழத்தமிழர்களின் அனுதாபி என்ற மாயையை தமிழக மனங்களில் தோற்றுவித்து அடுத்த தேர்தலில் முடிந்த அளவு கதிரைகளைப் பிடுங்கி எடுக்கவேண்டும் என்பதே கலைஞரது உண்மையான நோக்கமாகும். அதற்காக அவர் செயற்படுவது அனைவருக்கும் பட்டவர்த்தனமாக தெரிந்த விடயமாகும். தமிழீழத்திற்கான மாநாடு என்ற தொனிப் பொருளை மையமாக வைத்து மாநாடு நடத்தப்பட்டாலும் அதற்கான பிரகடனத்தை செய்யப் போவதில்லை என்று அறிவித்துள்ள கலைஞர் இனியும் காலம் தாழ்த்தி எப்போது செய்யப் போகிறார் என்பது தான் புரியவே இல்லை. ஆனாலும் பாம்பின் கால் பாம்பறியும் என்பதற்கு அமைய தனது போராட்டத்தினை வெற்றியடையச் செய்வதற்கு அவர் இன்னொரு கலைஞரின் உதவியினையும் நாடியிருக்கின்றார். அவர் இரா.சம்பந்தன்.[/size]

[size=4]தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு - கிழக்கு மக்களின் பெரும்பான்மை விருப்புக்குரிய கட்சியாகத் தெரிவு செய்யப்பட்டாலும் அதன் போக்குத் தொடர்பிலான பகிரங்க விமர்சனங்கள் தாயக ஊடகங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்கின்றன. அது தொடர்பிலான விரிவான பார்வையினை அடுத்த ஆசிரியப் பார்வையினூடே நோக்கலாம்.[/size]

[size=4]நிற்க, தாயகக் கலைஞர் சம்பந்தன் தலைமையிலான நான்குபேர் அடங்கிய குழு ஒன்று தமிழகக் கலைஞர் நடத்தும் மாநாட்டில் பங்கேற்கும் என்ற தகவல் ஒன்று வெளியாகியிருக்கின்றது. தாயகக் கலைஞர் சம்பந்தன், சர்வதேச ஊடகங்களிலும் தென்னிலங்கை ஊடகங்களிலும் தமிழ் மக்களின் மீட்பர் என்ற தோற்றங்காட்டினாலும் உண்மையில் அவர் தமிழினத்திற்கு எதிரானவர் என்பதை பல்வேறு சான்றாதாரங்களுடன் நிறுவிவிட முடியும். சுதுமலையில் தமிழீழப் பிரகடனம் மேற்கொண்ட போது அதில் பிரதான பங்கு வகித்திருந்த தமிழ் கட்சிகளில் சம்பந்தன் அங்கத்துவம் பெற்றிருந்த கட்சியும் ஒன்றாகும். அதன் பின்னான போராட்டத்தில் 40 ஆயிரம் வரையிலான போராளிகளின் உயிர்க்கொடைகள் தமிழீழத்தினை நோக்கியதாகவே அமைந்திருந்தது. ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் ஓய்வுபெற்றிருந்தாலும் அதனைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கான வழிமுறைகளை கைக்கொள்வர் என்ற நோக்கின் அடிப்படையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தமிழ் மக்கள் வாக்களித்திருந்தனர். ஆனால் அதன் தலைவர் சம்பந்தனும் அவரது கட்சி முக்கியஸ்தர்களும் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்கள் போலச் செயற்படத் தலைப்பட்டிருக்கின்றனர். டெசோ மாநாட்டிற்கான அழைப்பினை கலைஞர் கருணாநிதி அனுப்பியதும், 'தமிழீழம் தொடர்பிலான தீர்மானம் மேற்கொள்ளப்படாது என அறிவிப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது, எனவே பிரிவினை வாதத்தினை வலியுறுத்தாமையால் அந்த மாநாட்டில் பங்கேற்பது தொடர்பில் பரிசீலிக்கிறோம் என்ற சாரப்பட சம்பந்தன் உடனடியாகவே தகவல் வெளியிட்டிருக்கின்றார்.[/size]

[size=4]வாசகர்கள் மிகத் தெளிவாக ஒரு விடயத்தினை அவதானிக்கலாம். இலங்கை அரசின் அதி உயர் மட்டங்களில் உள்ளவர்கள் இலங்கையின் ஒருமைப்பாடு தொடர்பில் கதைப்பதிலும் அதிகமாக சம்பந்தனும் அவருக்கு நெருக்கமான ஒரு சிலரும் நாங்கள் ஒரு போதும் தமிழீழத்தைக் கேட்கவில்லை, தமிழ் மக்கள் ஒரு போதும் தமிழீழத்தினைக் கேட்கவில்லை. இலங்கையில் அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வினையே வலியுறுத்துகிறோம் என்று தெரிவித்து வருகின்றனர். இதன் உள் நோக்கம் என்ன? இந்த இடத்தில் மிக முக்கிய விடயம் ஒன்றினைக் குறிப்பிட முடியும். வன்னியில் போர் தீவிரம் பெற்றிருந்த போது போரைத் தடுத்து நிறுத்த கருணாநிதி முனைப்புக் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டாலும் அதற்கு நிகரான குற்றச்சாட்டினை சம்பந்தன் மீதும் சுமத்த முடியும். போர் நடைபெற்றுக்கொண்டிருந்த போதும் கூட்டமைப்பின் தலைவராகவே சம்பந்தன் இருந்தார். இலங்கையின் மிக மூத்த அரசியல் வாதிகளில் ஒருவராக இலங்கை ஜனாதிபதியாலேயே மதிக்கப்படுகின்ற ஒருவர் போரை நிறுவதற்கான எத்தகைய முனைப்புக்களை மேற்கொண்டார் என்பதை அம்பலப்படுத்த முடியுமா? முடிந்திருந்தால் ஏதாவது ஒரு தூதரகத்தின் முன்னால் உண்ணாவிரதம் இருப்பது பற்றி யோசித்ததாவது உண்டா?[/size]

[size=4]கலைஞர் முன்னெடுக்கும் எந்தப் பெறுமதியுமற்ற போலி மாநாட்டில் பங்கேற்பதன் மூலம் தாயகத்தில் உள்ள மக்களிடம் ஏற்பட்டு வருகின்ற தமது கட்சி தொடர்பிலான விரக்தி நிலையினைப் போக்க முடியும் என்று சம்பந்தர் கருதுகிறார் என்றே எண்ண முடியும். அதேபோல ஈழத்தமிழர்களினை வைத்து அரசியல் செய்து மீட்டும் அதிகாரங்களை ஏப்பமிடத் துடிக்கும் கலைஞர் ஈழத்தமிழ் மக்களின் பிரதிநிதிகளே வந்திருக்கின்றனர் என்று அரசியல் செய்யலாம் என்று நினைத்திருக்கலாம். இருப்பினும் இரண்டு கலைஞர்களது நாடகங்களுக்குள் அகப்பட்டிருப்பது ஈழத்தமிழ் மக்களின் ஈகங்கள் தான்.[/size]

[size=4]புலத்தில் வௌ;வேறு போராட்டங்களை முன்னெடுத்துவரும் தமிழ் உணர்வாளர்களுக்காக ஒரு வரி, ஒரே ஒரு வரி ஆறுதல் அறிக்கை வெளியிட நினைக்காத கூட்டமைப்பிற்குத் தலைமை தாங்கும் சம்பந்தன் மிக மோசமான அரசியல் பித்தலாட்டம் நடத்தும் கருணாநிதியின் மாநாட்டிற்குச் செல்வதன் மூலம் எதனைச் சாதிக்கப்போகிறார். ஜெனீவாவில் உலக நாடுகள் முன்வந்து ஈழத்தமிழர் பிரச்சினைகளுக்காக பிரேரணை முன்வைத்து இலங்கை அரசுடன் பொருதிய போது அந்த நாடுகளுடன் கை கோர்த்து ஈழத்தமிழர் பிரச்னையின் தார்ப்பரியத்தினை எடுத்துச் சொல்ல வக்கற்ற நிலையில் இருந்து கொண்டு தமது முயற்சியின் பலனாகத்தான் ஜெனீவாத் தீர்மானம் வென்றது என்று அறிக்கை வெளியிட்டிருந்தமையையும் வரலாறு மறக்காது.[/size]

[size=4]புலத்தில் பல்வேறு போராட்டங்களை தமிழ் உணர்வாளர்கள் முன்னெடுத்துவருகின்ற நிலையில் அந்தப் போராட்டங்கள் தாயகத்தில் உள்ள தமிழ் மக்களுக்காகத்தான் நடக்கின்றன என்பதை எண்ணிப் பார்ப்பதற்கு சம்பந்தனுக்கும் அவரது எம்பிக்களுக்கும் மனங்கள் இடங்கொடுப்பதில்லை. கட்சிக்கு பணம் சேர்ப்பதற்காக மட்டும் புலத்தில் உள்ளவர்களை நாடுவார்கள். தாயகத்தில் போரால் குடும்பத் தலைவர்களை இழந்த பெண்களில் பலர் விபச்சாரம் செய்தே தமது பிள்ளைகளையோ குடும்பத்தினையோ பார்க்க வேண்டிய நிலையில் உள்ளனர். இவ்வாறான அவலங்களைப் போக்குவதற்கு பொதுவான கட்டமைப்பு எதனையும் உருவாக்குவதற்கு எந்த விதமான முனைப்புக்களையும் செய்யாத சம்பந்தன் தமையிலானவர்கள் தமிழகத்தில் கலைஞர்கள் சங்கமிப்பில் கலந்து கொண்டு ஈழத்தமிழ் மக்கள் சார்பில் கதைப்பதற்கு என்ன அருகதை இருக்கிறது?[/size]

[size=4]இதனை விடவும் மிகப் பெரிய வரலாற்றுத் துரோகத்தினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அண்மையில் நிகழ்த்தியிருக்கின்றது. சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தாமாக முன்வந்து உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். அதற்கான ஆதரவு அலைகள் தமிழகத்திலும் புலத்திலும் எதிரொலித்தன. சர்வதேசமும் அது தொடர்பில் கவனம் செலுத்த முற்பட்டது. உடனடியாக சிறையில் வாடும் அப்பாவிக் கைதிகளின் விடுதலையைத் தடுப்பதற்கும் அரசாங்கத்தைக் காப்பாற்றுவதற்கும் விரைந்து செயற்பட்டது. அதன் அடிப்படையில் கூட்டமைப்பினை இரண்டு பிரவுகளாகச் செயற்படுத்தி அரசியல் நாடகம் ஆடினார் சம்பந்தன். அதற்கு கூட்டமைப்பு எம்பிக்கள் தாளம் போட்டனர்.[/size]

[size=4]கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் மாவை சேனாதிராசா, சுரேஸ் பிறேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் உட்பட்ட எம்பிக்கள் பங்கேற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த அதேவேளை கொழும்பில் உண்ணாவிரதப் போராட்டத்தினைத் தொடங்கிய சிறைக் கைதிகளைச் சந்தித்த சுமந்திரன், சிறீதரன், அப்பாத்துரை விநாயக மூர்த்தி ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்மை நம்பி உண்ணாவிரதத்தினைக் கைவிடும்படியும் ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுப்போம் என்றும் சொல்லி அப்பாவிக் கைதிகளை ஏமாற்றி உண்ணாவிரதப் போராட்டத்தினை இடை நிறுத்தினர். கூட்டமைப்பு வழங்கிய ஒரு மாதம் இரு மாதமாகி தற்போது பலமாதமாகிவிட்டது. இறுதியில் அரசியல் கைதிகளை அடித்து உதைத்து சித்திரவதை செய்து கொன்று, கோமா நிலைக்குத்தள்ளி, முடவர்களாக்கியிருக்கிறது பேரின அரசு. இனிவருங்காலங்களில் தமிழ் அரசியல் கைதிகள் எந்த ஒரு போராட்டத்தினையும் நிகழ்த்த முடியாத அளவிற்கு அவர்களை அச்சமூட்டும் வகையில் இந்தக் கெடுபிடி மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இதற்கும் வழமை போல அரசாங்கத்தின் மீதும் படைத்துறை மீதும் குற்றம்சாட்டிவிட்டு அரசியல் செய்ய முடியாது. இதற்கான முழுப்பொறுப்பையும் கூட்டமைப்பே எடுக்கவேண்டும். கைதிகளைத் தடுத்துநிறுத்துவத்கான கோரிக்கையை தமிழ் மக்கள் சார்பில் யாரும் முன்வைத்திருப்பதற்கு வாய்பில்லை. அரசாங்கத்தைக் காப்பாற்றவே கூட்டமைப்பு இவ்வாறான மிக மோசமான செயற்பாட்டினை மேற்கொண்டிருக்கின்றது என்றே கருத முடிகிறது.[/size]

[size=4]தேர்தல் காலங்களில் மாவீரர்களையும், மண்ணையும் வீர வசனங்களையும் கூறி மக்களை உணர்வின்பால் தள்ளி வாக்குகளைப் பெற்றுக்கொண்டு பொடி நடையாக சென்றுவிடுவார்கள். மீண்டும் தேர்தல் வந்தால் மட்டும் ஊர்களுக்கும், கிராமங்களுக்கும் படையெடுப்பார்கள். இதுதான் தற்போது கிழக்கில் நடந்துகொண்டிருக்கிறது. அவ்வாறு இல்லையே கிராமங்களில் மக்களைச் சந்திக்கச்செல்வதாக இருந்தால் மக்களுக்கு உதவி செய்கிறார்களோ இல்லையோ, புகைப்படக் கருவிகளைச் சுமந்து செல்லத் தவறுவதில்லை.[/size]

[size=4]ஈழத்தமிழினம் ஏதிலிகளாக அரசியல் அநாதைகளாக விடப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் நடைபெறவிருக்கும் டெசோ மாநாட்டுப் பொம்மை நாடகத்தில் கலைஞர்கள் கருணாநிதியும், சம்பந்தனும் புதிதாக எதனைச் சாதித்துவிடப் போகிறார்கள் என்பது தற்போது உள்ள கேள்வியாகும்.[/size]

[size=4]-தமிழ் லீடர் ஆசிரியர் பீடம்[/size]

http://tamilleader.c...6-20-02-00.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாரிய கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட எதிர்பார்க்கிறோம்; சமன் ரத்னப்பிரிய! 27 SEP, 2024 | 05:07 PM (எம்.ஆர்.எம்.வசீம்) வரலாற்றிலேயே  மிகப்பெரிய கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட எதிர்பார்க்கிறோம். ஐக்கிய மக்கள் சக்தியுடனான கலந்துரையாடலும் சாதகமான நிலைக்கு வந்துள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசிய கட்சி எடுத்துவரும் நடவடிக்கை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.   இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,  பாராளுமன்ற தேர்தலுக்கு தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் எதிர்க்கட்சியில் இருக்கும் அனைத்து கட்சிகளையும் இணைத்துக்கொண்டு தேர்தலுக்கு முகம்கொடுப்பதற்கே எதிர்பார்க்கிறோம்.   நாட்டு மக்களின் எதிர்பார்ப்பும் அவ்வாறு இருப்பதாகவே எமக்கு தோன்றுகிறது. அவ்வாறான பரந்துபட்ட கூட்டணியை அமைக்குமாறே அனைவரும் வற்புறுத்தி வருகின்றனர்.   அதனால் இந்த கூட்டணியை அமைப்பதற்காக தற்போது ஐக்கிய மக்கள் சக்தியுடனான கலந்துரையாடலை ஆரம்பித்திருக்கிறோம்.    அதேபோன்று மொட்டு கட்சியின் பெரும்பான்மை பிரிவினர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுடனும் கலந்துரையாடல் இடம்பெற்று வருகிறது.    ஓரிரு தினங்களில் இந்த கலந்துரையாடல்களை முடிவுக்கு கொண்டுவர முடியுமாகும். அதனால் வரலாற்றில் பெரிய கூட்டணி அமைத்து இந்த பாராளுமன்ற தேர்தலில் பாேட்டியிட முடியுமாகும் என எதிர்பார்க்கிறோம். பல்வேறு தரப்பினர்கள் கட்சிகளுடன் கலந்துரையாடிய விடயங்களை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடனும் நாங்கள் கலந்துரையாடினோம்.    ரணில் விக்ரமசிங்கவின் ஆலாேசனையின் பிரகாரம் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இரண்டு தினங்களுக்கு முன்னர் கலந்துரையாடினோம். நேற்றும் கலந்துரையாடினோம்.    அந்த கலந்துரையாடல் சாதகமாக அமைந்துள்ளது. ஆரம்பத்தில் ஐக்கிய மக்கள் சக்தி இந்த பேச்சுவார்த்தைக்கு பின்வாங்கியபோதும் தற்போது அவர்கள் கலந்துரையாடல்களுக்கு இணக்கம் தெரிவித்து, ஆராேக்கியமான பல கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள்.    அதனால் தொடர்ந்தும் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி எப்படியாவது பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியாக போட்டியிடவே நாங்கள் எதிர்பார்க்கிறோம்.   கூட்டணி அமைத்து போட்டியிடுவதன் மூலமே எமக்கு தேர்தலில் எதிர்பார்ப்பொன்றை ஏற்படுத்திக்கொள்ள முடியும். எமது ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பும் அதுவாகும் என்றார். https://www.virakesari.lk/article/194920
    • நிலாமதியவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. கிறுக்க முயற்சிக்கிறேன்.  நாம்தானே ஓடிவந்துவிட்டோம். எங்கோ ஒதுங்கி ஓடிய காலங்களைத் திரும்பிப்பார்க்கும் போது வெறுமையாய் தெரிகிறது.    நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி சுவியவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. நீங்களே ஒரு சிறந்த படைப்புகளைப் தருபவர். உங்கள் வரிகள் உற்சாகம் தருவனவாக உள்ளன.  நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி ஈழப்பிரியனவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. உண்மைதான். ஆனால், சிங்களத்தின் சிந்தனையல்லவா எம்மை ஆக்கிரமித்துள்ளது.  நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
    • ஸ்துமாரி (Stumari) ஸ்துமாரி (Stumari) என்கிற ஜார்ஜியா மொழி வார்த்தைக்கு விருந்தினர் என்ற பொருள்.  இன்றைக்கு இந்த வார்த்தையை நான் தெரிந்து கொள்ள காரணமாக இருந்தது இன்றைய சிறப்பு தினம்! ஆம் இன்றைக்கு உலக சுற்றுலா தினம் - 27 செப்டம்பர் - ஒவ்வொரு வருடமும் இந்த தினத்தினை உலக சுற்றுலா தினமாக, உலகம் முழுவதும் கொண்டாடுகிறார்கள்.  இந்தப் பழக்கம் ஆரம்பித்தது எப்போது தெரியுமா? 1980-ஆம் ஆண்டு. ஒவ்வொரு வருடமும் இந்த தினத்திற்கான நோக்கம் ஒன்று தான் - அது சுற்றுலா. தவிர ஒவ்வொரு வருடத்திற்கான Theme மட்டும் மாறுபடுகிறது.  இந்த வருடத்திற்கான உலக சுற்றுலா தினத்தின் Theme - Tourism and Peace! இந்த வருடம் உலக சுற்றுலா தினம் கொண்டாட தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் இடம் Georgia! அதனால் தான் எனக்கும் ஜார்ஜியா மொழியில் இருக்கும் ஸ்துமாரி (Stumari) என்கிற வார்த்தை தெரிந்தது.  அவர்கள் விருந்தினரை கடவுளின் அன்பளிப்பாக கருதுகிறார்கள் (Stumari is a gift of God!). ஸ்துமாரி குறித்த ஒரு காணொளியை பாருங்களேன். சுற்றுலா குறித்த எனது ஆர்வம் குறித்து எனது தொடர்பில் இருக்கும் பலரும் அறிந்திருப்பார்கள். நான் சென்ற சுற்றுலாக்கள் பொதுவாக சராசரியை விட அதிகம் என்றாலும் ஒரு சிலருடன் ஒப்பிடும்போது குறைவு தான் 🙂ஹாஹா…  எத்தனை பயணம் செய்தாலும் இன்னும் வேண்டும், இன்னும் இன்னும் பயணிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் குறைவதே இல்லை.  பயணம் மீது ஒரு வெறுப்பு வருவதே இல்லை.  எப்போது பயணிக்க வேண்டும் என்று சொன்னாலும் உடனே மனதில் புத்துணர்வு வந்து விடுகிறது.  சூழல்கள் காரணமாக கடந்த சில மாதங்களாக எந்த வித சுற்றுலாவும் செல்லவில்லை என்றாலும் சுற்றுலா மீதான ஆர்வம் இன்னும் குறையவே இல்லை.  வாழ்க்கையில் இருக்கும் ஒரு ஆசை தொடர்ந்து சுற்றுலா செல்வதும், அந்தப் பயணங்கள் வழி பல விஷயங்களைத் தெரிந்து கொள்வதும் தான்.  வேறு பெரிய ஆசைகள் எதுவும் இல்லை. பார்த்தது கையளவு என்றால் பார்க்காதது உலகளவு.  உலகம் முழுதும் பார்க்க வேண்டும் என்று கூட இல்லை, பாரதம் முழுவதும் பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே ஒரு ஆசையாக இருக்கிறது.  இந்த வருடத்தின் உலக சுற்றுலா தினம் குறித்த Concept Note UN தளத்தில் பார்க்கக் கிடைத்தது.  உங்களுக்கு விருப்பம் இருந்தால் அதனை இங்கே படிக்கலாம். இந்தக் குறிப்பின் படி, 2024-ஆம் ஆண்டின் உலக சுற்றுலா தினம், சுற்றுலா மற்றும் அமைதியை உருவாக்குவதற்கான தொடர்பினை சந்திப்பை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  பயணம், கலாச்சார பரிமாற்றம் மற்றும் நிலையான சுற்றுலா நடைமுறைகள், அமைதியை உலகம் முழுவதும் நிலைநிறுத்த எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதையும் நாடுகளுக்கு இடையேயான மோதல்களுக்கு தீர்வு, நாடுகளுக்கு இடையே நல்லிணக்கம் மற்றும் உலகளவில் அமைதியை மேம்படுத்துதல் ஆகியவற்றை பிரதான நோக்கமாக கொண்டு கொண்டாடப்படுகிறது.  எங்கு பார்த்தாலும் நாடுகளுக்கு இடையே சண்டைகள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் என்று ஒவ்வொரு நாளும் செய்திகளில் படிக்கையில் சுற்றுலா இந்த பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக இருக்க முடியும் என்றே தோன்றுகிறது.   நம் நாட்டில் மட்டுமே எத்தனை எத்தனை சுற்றுலா தலங்கள்? ஒரு பிறப்பில் இவை அனைத்தையும் பார்த்து விட முடியுமா என்ன?  அதனால் எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு விட வேண்டும்.  சுற்றுலா/பயணம் மூலம் பல இடங்களை பார்க்க முடியும் என்பதோடு விதம் விதமான மனிதர்களையும் சந்திக்க முடிகிறது.  பல வித அனுபவங்களையும் பயணங்கள் நமக்குத் தருகின்றன.  ஆதலினால் பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!  இந்த உலக சுற்றுலா தினத்தில் நமக்கு பயணம் செய்ய கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வோம் என்று தீர்மானம் செய்து கொள்வோம்.  தொடர்ந்து பயணிப்போம்.  பல அனுபவங்களைப் பெறுவோம். பயணம் நல்லது ஆதலினால் பயணம் செய்வீர்! https://venkatnagaraj.blogspot.com/2024/09/World-Tourism-Day-2024.html
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.