Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு தூக்குத்தண்டனை தீர்வாகுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அண்மைக்காலமாக எமது நாட்டில் அதிகரித்து வரும் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களையடுத்து ,இக்குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து கருத்துக்கள் வெளிப்பட்டு வருகின்றன.

ஆனால் இம்முறை மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து எந்த மனித உரிமை அமைப்போ அல்லது மனித உரிமை ஆர்வலர்களோ கருத்து கூற முன் வரவில்லை இதற்குக்காரணம் அதிகரித்துச்செல்லும் துஷ்பிரயோகங்களில் நேரடியாக சம்பந்தப்பட்டு சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ளவர்களில் அரசியல்வாதிகள், பொலிஸ் அதிகாரிகள், மதகுருமார்கள் ,பிரபல வர்த்தகர்கள் என்போர் அடங்குகின்றனர். அதிகாரத்தையும் பணத்தையும் கையில் வைத்திருப்போர் தமக்கு இஷ்டப்படி எந்த சட்ட விரோத நடவடிக்கையிலும் ஈடுபடலாம் என்ற விடயத்தை ஊக்குவிப்பதாகவே பல சந்தர்ப்பங்களில் எமது நாட்டில் சம்பவங்கள் இடம்பெற்று வந்திருக்கின்றன.

இதற்கு பல உதாரணங்களைக் கூறலாம். அதிகார பதவியிலிருப்போருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படாதது இதற்கு முதன்மையான காரணம். எனினும் தற்போது சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு மரண தண்டனையே தீர்வு என்ற ரீதியில் அரசியல்வாதிகள் உட்பட பலரும் பேசி வருகின்றனர். இவ்விடயமானது இவ்வாறான குற்றச்செயல்களில் எதிர்காலத்தில் ஈடுபடுவோரை இருட்டை காட்டி சிறு பிள்ளையை பயமுறுத்தும் செயலுக்கு ஒப்பானது என்பதே உண்மை. காரணம் எமது நாட்டில் மரண தண்டனை அமுலில் இல்லாததாகும். 1978 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் மரண தண்டனை அமுல்படுத்தப்படவில்லை.

பாரதூரமான குற்றச்செயல்களுக்கு மரண தண்டனை பெற்றவர்கள் ஆயுள் தண்டனையையே அனுபிவித்து வருகின்றனர். இவர்களுக்கு மரண தண்டனையை அமுல்படுத்தும் அதிகாரத்தை ஜனாதிபதி கொண்டிருக்கிறார். இந்நிலையில் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகத்தை கட்டுப்படுத்த மரண தண்டனையே தீர்வு என சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிரேஷ்ட அமைச்சர்களும் இது குறித்து தமது கருத்துக்களை முன்மொழிந்துள்ளனர்.

தீர்வுகளை இனங்காண வேண்டும்

சிறுவர்கள் மீதான துஷ்பிரயோக சம்பவங்கள் பெரும்பாலும் 90 வீதமானவை அவர்களின் உறவினர்களாலும் அறிமுகமானவர்களினாலுமே மேற்கொள்ளப்படுகின்றன என்பது ஆய்வுகளின் முடிவு. இதற்கும் அப்பாற்பட்டு தமது பிள்ளைகளை உறவினர்களிடம்,பாதுகாவலர்களிடம் விட்டுச்செல்லல் ,தாய்மார் வெளிநாடு செல்லுதல், குடிப்பழக்கத்திற்கு அடிமையான பெற்றோர்கள் ,தீய சகவாசம் கொண்ட நண்பர்கள் போன்ற விடயங்களும் துஷ்பிரயோகத்தை ஊக்குவிக்கின்றன,இடம்பெற வழிவகுக்கின்றன. முக்கியமாக தமது பிள்ளைகளை பாதுகாவலர்களிடம் விட்டுச்செல்லும் தாய்மாரை குறிப்பிடலாம். இதன் காரணமாகவே அண்மையில் அரசாங்கம் சிறு வயது பிள்ளைகளை கொண்ட தாய்மார்கள் வெளிநாடு செல்வதில் சில கட்டுப்பாடுகளை கொண்டு வரப்போவதாக அறிவித்துள்ளது.

இதற்கும் மேலாக பாடசாலைகளில் மாணவிகள் மீது பாலியல் சேஷ்டைகள் புரியும் அதிபர்,ஆசிரியர்களுக்கு எதிராக இது வரையிலும் எந்த உருப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. ஆகவே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதற்கான ஆரம்ப நிலை காரணங்களை ஆராயாது நேரடியாக மரண தண்டனையே தீர்வு என சொல்ல வருதல் நிச்சயமாக குற்றங்கள் குறைவதற்கு காரணமாக அமையாது.

சிறுவர்கள் மீதான பாலியல் வல்லுறவு என்பது இன்று எமது நாட்டில் ஒரு சமூக பிரச்சினையாக மாறி உள்ளது. இதை கட்டுப்படுத்து ஒரு நீண்ட கால செயற்றிட்டம் அவசியம் என ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைகழக குற்றவியல் பீட தலைவர் பேராசிரியர் ஜெயசுந்தர அவர்கள் தெரிவித்திருப்பதை நாம் அவதானிக்க வேண்டும். மேலும் அவர் மரண தண்டனை என்பது ஒரு பயமுறுத்தும் செயற்பாடாகவே உள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.

குற்றங்கள் குறையவில்லை.

இதே வேளை இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தலைவர் டாக்டர் பிரதீபா மஹாநாம குறிப்பிடுகையில் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும் நாடுகளில் கூட இந்த குற்றச்சம்பவங்கள் குறைந்திருப்பதாக தெரியவில்லை என ஆதாரங்களை முன்வைக்கின்றார்.இது ஒரு குறுகிய கால தீர்வாகவே அமையும் ,உதாரணமாக அமெரிக்கா ,மலேசியா, சவுதி அரேபியா போன்ற நாடுகளில் மரண தண்டவை அமுலில் உண்டு எனினும் இந்நாடுகளில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் குறைந்தபாடில்லை.

இதை தடுப்பதற்கு அரசாங்கமானது சாத்தியப்படக்கூடியதான விழிப்புணர்வு மற்றும் அறிவுறுத்தல் செயற்பாட்டை ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் முன்னெடுக்க வேண்டும். சிறுவர் துஷ்பிரயோகத்தை எங்ஙனம் தடுப்பது என்பது குறித்து இது அமைய வேண்டும். ஒரு பிள்ளை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியதன் பின்னர் அதற்கு காரணமானவரை தூக்கில் போடுவதன் மூலம் அந்த பிள்ளை இயல்பு நிலைக்கு திரும்பி விடாது. ஆகவே இக்குற்றம் நடக்கும் முன்னர் தடுப்பதாகவே செயற்பாடுகள் இருக்க வேண்டும் என்கிறார் அவர்.

குற்றங்கள் அதிகரிப்பு

இலங்கையை பொறுத்தவரை 2010 ஆம் ஆண்டிலிருந்து சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்து வந்துள்ளன. பாலியல் துஷ்பிரயோகத்திற்கு அப்பாற்பட்டு பல வழிகளில் சிறுவர்களை சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபடுத்தலும் கூட துஷ்பிரயோகமாகும். அந்த வகையில் 2010 ஆம் ஆண்டு 16 வயதிற்கு குறைவான சிறுமிகளை பாலியல் துஷ்பிரோயகத்திற்கு உள்ளான சம்பவங்களாக 75 பதிவாகியுள்ளன. 2011 ஆம் ஆண்டு மட்டும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த முறைப்பாடுகள் 20 ஆயிரமாகும். இதில் 1085 முறைப்பாடுகள் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களாகும். 22 சிறுவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். 54 பேர் கடத்தப்பட்டுள்ளனர். 2012 ஆம் ஆண்டு இச்சம்பவங்கள் உச்ச நிலையை அடைந்துள்ளமை மிகக்கவலைக்குரியது.

தீர்வுகள் தான் என்ன?

சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோக குற்றங்களுக்கு மரண தண்டனை மட்டும் தீர்வாக முடியாது. கொலைக்குற்றச்சாட்டு சம்பவங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகின்ற எமது நாட்டில் கொலைகள் இடம்பெறாமலா இருக்கின்றன? மேலும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மரண தண்டனை கொண்டு வரப்பட்டாலும் கூட இத்தண்டனையை எதிர்நோக்கி சிறையிலுள்ள சுமார் 1,164 பேரின் நிலை குறித்தும் அவதானிக்க வேண்டியுள்ளது.

2004 ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான அம்பேபிட்டிய கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அரசாங்கம் கொலை ,பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் போதை பொருள் கடத்தலுக்கு மரண தண்டனையை அமுல்படுத்தியது. தற்போது மரண தண்டனையை நிறைவேற்றும் அலுகோசு எனும் சிறை உத்தியோகத்தர் பதவிக்கு அரசாங்கம் விண்ணப்பிக்கும்படி கோரியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை வரை நாடெங்கினும் இருந்து இதற்கு 70 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் அதிகரித்து வரும் குற்றச்செயல்களையடுத்து மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என எழுந்த அழுத்தங்களால் மேற்படி பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அப்படியானால் தூக்கு மேடை தூசு தட்டப்படுகின்றதா ?பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சிவலிங்கம் சிவகுமாரன்

http://virakesari.lk/article/local.php?vid=89

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.