Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிவந்தன் எனும் போராளி - கார்த்திகன்

Featured Replies

“எமது மக்கள் போற்றப்படவேண்டியவர்கள், கௌரவிக்கப்படவேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயாக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மனவுறுதி படைத்த மாமனிதர்கள் என்று தான் அழைக்க வேண்டும்.” என தமிழீழத் தேசியத் தலைவர் மிகவும் உறுதியாகக் குறிப்பிட்டிருக்கின்றார்.

அந்தளவிற்கு மக்களின் அர்ப்பணிப்புக்களையும், போராட்டங்களையும் தலைவர் மிகவும் உயர்வாக கருதியிருந்தார். அத்தகைய போராட்டங்களை அவர் கௌரவப்படுத்தியும் இருந்தார். முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னர் ஒரு வருடம் கடந்தோடியதன் பின்னரும் இனப்படுகொலையில் இருந்து உயிர் தப்பிய மக்கள் சிங்களத்தின் தடுப்புச் சிறை முகாம்களிலும், சித்திரவதை முகாம்களிலும் இருந்து விடுவிக்கப்படவில்லை. சர்வதேச விதிமுறைகளுக்கு முற்றும் முரணான நடவடிக்கையாக இது இருந்தபோதும் ஐ.நா. முதற்கொண்டு யாருமே அந்த மக்களைக் கண்டுகொள்ளவில்லை.

பெரும் அவலங்களைச் சந்தித்த அந்த மக்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளுக்காக பேசவும், அந்த மக்களின் நீதிக்காகக் குரலெழுப்பவும் தயாரில்லாது, இந்த உலகமே மௌனித்துப்போயிருந்த நிலையில், ஒரு இனத்திற்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக நீதி கேட்டு ஐ.நா மனித உரிமைகள் நோக்கி நடையாய் நடந்தவர் கோபி சிவந்தன். 1200 கிலோ மீற்றர் தூரத்தை நடந்தே கடந்து செல்லமுடியும் என்று நம்பிக்கையோடு தனது பயணத்தை பிரித்தானியாவில் இருந்து தொடங்கிய சிவந்தன், ஜெனீவாவிலுள்ள ஐ.நா.வின் மனித உரிமைகள் சபையின் கதவுகளை அறைந்து தட்டும் வரை தனது பயணத்தை நிறுத்தவில்லை. தனது மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரத்திற்கு நீதி வேண்டும் என்பதே சிவந்தனின் இந்த நடைப் பயணத்தின் ஒரே குறிக்கோளாக இருந்தது.

சிவந்தனின் இந்தப் பயணம் ஐ.நாவின் மனக் கதவுகளைத் தட்டியதோ இல்லையோ, அடங்கிக்கிடந்த தமிழர்களை எழுச்சிகொள்ள வைத்தது என்பது மட்டும் உறுதி. எல்லாவற்றையும் இழந்துபோன சோகத்தோடும், சோர்வோடும் இருந்த புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் உணர்வுகளைத் தட்டியெழுப்பி, அதன் பின்னர் எத்தனையோ போராட்டங்களையும், நடைப் பயணங்களையும் தமிழ் மக்கள் எழுச்சியோடு மேற்கொள்வதற்கு சிவந்தன் ஆரம்பித்துவைத்த இந்த உறுதியான போராட்டமும் ஒரு முக்கியமான காரணம் என்பது மிகையல்ல.

ஆனாலும், லிபியாவில் கடாஃபி அரசாங்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கும், சிரியாவில் ஆசாத் அரசாங்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கும் முண்டியடித்த சர்வதேசம், இலங்கையில் மகிந்த அரசாங்கத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக இன்றுவரை காத்திரமான குரலைக்கொடுக்க முன்வரவில்லை. இன்றும், சிறீலங்கா தமிழ் மக்களுக்கு எதாவது செய்துவிடும் என்ற நம்பிக்கையோடும், குற்றவாளிகளான சிங்கள ஆட்சியாளர்களே குற்றங்களைக் கண்டுபிடித்து தண்டனை வழங்குவார்கள் என்ற எதிர்பார்ப்போடும் ‘இலவுகாத்த கிளியாக’க் காத்திருக்கின்றது. சர்வதேசத்தின் இந்தக் காத்திருப்பிற்குள் காலம் தாழ்த்தாது தமிழ் மக்களின் மண்ணை விழுங்கிவிடத் துடிக்கின்றது சிங்களம்.

தமிழ் மக்கள் எத்தனையோ போராட்டங்களை இந்த ஐரோப்பிய மண்ணில் நிகழ்த்திவிட்டார்கள். இன்னும் தொடர்ந்தும் நிகழ்த்திக்கொண்டே இருப்பார்கள். முள்ளிவாய்க்கால் வரையான இன அழிப்புப்போர் தொடர்ந்துகொண்டிருந்தபோது உலகப் பரப்பெங்கும் வாழும் தமிழ் மக்கள் நடத்திய போராட்டங்கள் சாதாரணமானவையல்ல. அதில் எத்தனையோ பேர் உண்ணாநிலைப் போராட்டத்தையும் தொடர்ச்சியாக நடத்தியிருந்தார்கள். தமிழகம் தொடக்கம் புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் பிரான்சில், பிரித்தானியாவில், கனடாவில், தென் ஆபிரிக்காவில் என பல்வேறு நாடுகளிலும் நாட்கணக்காகத் தமிழ் மக்கள் உண்ணாநிலைப் போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்திருந்தார்கள்.

அதன் பின்னர் இப்போது சிவந்தன் 22 நாட்கள் தொடர்ச்சியாக நீண்ட உண்ணாநிலைப் போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றார். 15 நாட்களைக் கடந்து அவரது போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. மற்றைய போராட்டங்களை விட இதுவொரு காத்திரமான போராட்டம் என்றே கொள்ளலாம். காரணம், உலக நாடுகளின் தலைவர்கள் பலரும், மக்களும் ஒரே இடத்தில் திரளக்கூடிய நிகழ்வு ஒலிம்பிக் நடைபெறும் இடமாகத்தான் இருக்கமுடியும். அதனாலேயே இலண்டன் நகரில் ஒலிம்பிக் நடைபெறும் இடத்திற்கு மிகவும் அருகில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்.

ஆட்சியாளர்களின் மனக்கதவு திறக்காத நிலையில், உலக மக்களின் கவனத்திற்கு என்றாலும் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட கொடூரங்கள் சென்றடையும் என்பது நம்பிக்கை. அதற்காகவே தன்னை வருத்தி இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வரும் சிவந்தனுக்கு அனைத்துத் தமிழ் மக்களும் ஆதரவு வழங்கவேண்டும். தாயகத்தையும், மக்களையும் நேசிக்கின்ற ஒருவரால்தான் இத்தனை உறுதியாகவும், தொடர்ச்சியாகவும் போராட்டத்தை முன்னெடுக்க முடியும். ஆயுதம் தாங்கியதாக இருந்தாலும், ஜனநாயக வழியிலாக இருந்தாலும் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுகின்ற எல்லோரும் போராளிகள்தான். அந்த வகையில் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சோர்வின்றித் தனது போராட்டத்தை முன்னெடுத்துவரும் சிவந்தனும் ஒரு போராளிதான்.

சிவந்தனின் இந்தப் போராட்டத்திற்கான தங்கள் தார்மீக ஆதரவை வழங்கவேண்டியது தமிழ் மக்கள் ஒவ்வொருவரினதும் கடமை. விடுமுறைகளைக் கழிப்பதற்காக எங்கெங்கோ செல்ல நினைப்பவர்களும், நேரமில்லை என்று சாக்குப்போக்குச் சொல்லி நழுவ நினைப்பவர்களும் நின்று நிதானமாக கொஞ்சம் யோசிக்கவேண்டும். இணையத் தளம் ஒன்றில் வேல்தர்மா என்பவர் கடந்த வாரம் எழுதியிருந்த கவிதை இது.

நேரமில்லை என்றிவன் இருக்கவில்லை

காதலியின் கண்கள் அனுப்பும்

குறுந்தகவல்களின்

குறிமுறைகளைய

காதலனுக்கு நேரமில்லை

கட்டிய மனைவி

கட்டிட ஆடை வாங்க

கடைத் தெரு செல்லக்

கணவனுக்கு நேரமில்லை

பிள்ளையின் வீட்டுப் பாடத்திற்கு

உதவிப் பிள்ளையின்

அறிவு வளர்த்திடப்

பெற்றோர்க்கு நேரமில்லை

மூலையில் சிவனே என்றிருக்கும்

முதியவர்களிடம் பேச்சுக் கொடுக்க

இந்தக் காலத்து

இளையவர்க்கு நேரமில்லை

எழுத நேரமில்லை என்று

அன்று இருந்திருந்தால்

ஷேக்ஸ்பியரின் நாடகங்கள்

எமக்கில்லை இன்று

அப்பிள் ஏன்விழுந்தது

என்று யோசிக்க நேரமில்லை

என்று அன்று இருந்திருந்தால்

புவியீர்ப்பு விசை

நாமறிந்திருப்போமா

இனக்கொலையாளிகளும்

நேரமில்லை என்றிருப்பதில்லை

தொடர்கின்றனர்

ஓயாத கொலைகளை

காட்டிக் கொடுக்கும் கயவர்களும்

நேரமில்லை என்றிருப்பதில்லை

ஓயாமல் தொடர்கின்றன

துரோகங்கள்

இந்தியத் துதிபாடிகளும்

நேரமில்லை என்றிருப்பதில்லை

வல்லரசை அனுசரித்துப்

போகவேண்டும்

எனும் பல்லவி பாட மறப்பதில்லை

ஒலிம்பிக் ஒளிபரப்புப்

பார்க்க வேண்டும்

நேரமில்லை எனக்கு என

கோபி சிவந்தன் இருக்கவில்லை

ஈரமில்லா உலக நெஞ்சகத்தின்

வஞ்சகம் வெளிப்பட

உணவு மறுத்துத்

தன்னூன் வருத்திப்

போராடுகிறான் பலநாளாய்

நேரமில்லை எமக்கென இருக்காமல்

தாயக விடுதலைக்குப்

பங்களிப்போம் என்னாளும்

- வேல் தர்மா

நன்றி : ஈழமுரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.