Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பழுத்த அரசியல்வாதியும் இந்திய ஜனாதிபதியுமான திரு.பிரணாப் முகர்ஜி அவர்களின் சுதந்திர தின உரை ..! ஈழதேசம் செய்தி..!

Featured Replies

[size=3]பழுத்த அரசியல்வாதியும் இந்திய ஜனாதிபதியுமான திரு.பிரணாப் முகர்ஜி அவர்களின் சுதந்திர தின உரை ..! ஈழதேசம் செய்தி..![/size]

[size=3]

ஊழல் என்பது தொற்று நோய் போன்றது. நாட்டின் ஆற்றலை அரித்தெடுக்கும் 'பிளேக் நோய்' போன்றது. அதற்கு எதிரான கோபம் நியாயமானது தான். மக்கள் பொறுமையை இழந்து விடும் தருணங்களும் உள்ளன. ஆனால் அதற்காக ஜனநாயக அமைப்புகளை தாக்குவதற்கு இதை ஒரு சாக்காக கொள்ளக்கூடாது. அதாவது ஊழல் என்பது பிளேக் நோய் - யைப் போன்றது. இந்த நோய் மக்களை அரித்தெடுக்கும். அதாவது கொத்து கொத்தாக கொன்றொழிக்கும். கொத்து கொத்தாக என்றால்..? 2009 - ல் லட்சம் பேரை முள்ளிவாய்க்கால் பகுதியில் வைத்து கொல்லப்பட்டார்களே அது போன்று என்றும் கொள்ளலாம். [/size]

[size=3]

பாராளுமன்றம் போன்ற ஜனநாயக அமைப்புகள், நமது அரசியல் சட்டத்தின் தூணாக இருப்பவை.அதில் விரிசல் ஏற்பட்டால் அரசியல் சட்டத்தின் மாட்சிமையை கட்டிக் காக்க முடியாது என்றார். இந்த ஜனநாயக அமைப்புகள் மக்களுக்கும் - கொள்கைக்கும் பாலமாக இருப்பவை. நமது உரிமையை பாதுகாக்கும் காவலர்களாக இருப்பவை. அவற்றை பலவீனப்படுத்தக் கூடாது. மேலும் வலிமையானதாக ஆக்க பாடுபட வேண்டும் என்றார். விரிசல் ஏற்படக்கூடாது என்கிறார்.எனவே ஊழல், லஞ்சம், கருப்புப்பணம் போன்ற போராட்டங்களை நடத்தக் கூடாது என்கிறார்.வேண்டுமென்றால் வீட்டு மூலையில் ஒரு ஓரத்தில் இருந்து கொண்டு,அய்யகோ..! ஊழல் நடந்து விட்டது என்று கூறி ஒரு இரண்டு சொட்டு கண்ணீர் விட்டுக் கொள்ளுங்கள், அதைவிடுத்து வீதிகளில் இறங்கி போராடினால், பாராளுமன்ற சுவற்றில் விரிசல் விழுந்து விடும் என்கிறார். மேலும் கூறுகையில்,[/size]

[size=3]

அதிகாரம் - சர்வாதிகாரமாக மாறும்போது ஜனநாயகம் பாதிக்கப்படுகிறது. ஆனால், ஜனநாயக அமைப்புகளுக்கு எதிரான போராட்டங்களால் நாடு குழப்பத்தில் சிக்கி விடும். ஜனநாயகத்தில் எல்லோருக்கும் பங்கு உண்டு. நாம் எல்லோரும் சேர்ந்தே வெற்றி பெற வேண்டும். அல்லது சேர்ந்தே தோல்வி அடைய வேண்டும். மாற்று கருத்துக்களை சகித்துக் கொள்ளும் மனப்பான்மையை ஜனநாயகம் விரும்புகிறது என்றார். இந்திய பாராளுமன்றம் மக்களுக்கும் - கொள்கைக்கும் பாலமாக இருப்பவை என்கிறார். அது என்ன பாலம்..? மக்களுக்கும் கொள்கைக்கும் என்றால் என்ன..? மக்களை பற்றித்தான் எல்லோருக்கும் தெரியுமே..! கொள்கை என்றால் என்ன..? அதாவது ஒட்டுக் கட்சிகளைத் தான் அவ்வாறு பொடி வைத்து கூறி இருக்கிறார். கொள்கை என்றாலே அது காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.மற்றும் போலி கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் தி.மு.க. & அ.தி.மு.க. திராவிடக் கட்சிகள் என்கிறார். எனவே இந்தக் கட்சிகள் தான் மக்களுக்கு பாலமாக இருக்கிறார்களாம் பாராளுமன்ற வழியே, எனவே இந்த பாலத்தை தகர்த்து விடாதீர்கள் என்கிறார். [/size]

[size=3]

நாம் சேர்ந்தே வெற்றி பெற வேண்டும் அல்லது சேர்ந்தே தோல்வி பெற வேண்டும் என்கிறார். எதற்கு சேர்ந்தே வெற்றி பெற வேண்டும்..? ஏன் சேர்ந்தே தோற்க வேண்டும்..? இந்த வார்த்தைகளை நன்கு புரிந்து கொள்ள வேண்டும் என்றால் முடியாது தான். என்றாலும் மக்கள் இவ்வாறு நினைத்து விட்டால்..? உங்கள் கட்சியோ மாபெரும் ஊழல் கட்சிகள், மக்கள் விரோத கொள்கைகளை உடையவர்கள், நாங்கள் ஏன் உங்களோடு சேர்ந்து வெற்றி பெற வேண்டும்..? எதற்காக உங்களுடன் சேர்ந்து தோற்க வேண்டும்..? [/size]

[size=3]

27 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட 'சார்க்' அமைப்பு, தீவிரவாதத்தை எதிர்த்து போராட தகுதியான அமைப்பு. அந்த அமைப்பை பலப்படுத்த வேண்டும்.சர்வதேச ஒத்துழைப்பு மூலம் இந்த விசயத்தில் வெற்றி பெறலாம் என்கிறார். விடுதலைப் புலிகளையும், அவர்களின் அரசையும், அந்த அரசின் கீழ் மிக செழிப்பாக வாழ்ந்த மக்களை ஒட்டு மொத்தமாக அழிக்கவே சார்க் அமைப்பு உருவாகி இருக்குமோ..? என்ற சந்தேகம் வந்தால், அந்த சந்தேகத்திற்கு யாரும் விளக்கம் அளிக்க முடியாது தான்.[/size]

[size=3]

மேலும் கூறுகையில், அப்பாவி மக்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுபவர்களை நீதியின் முன்பு நிறுத்த 'சார்க்' நாடுகள் ஒத்துழைக்க வேண்டும். இந்த துணைக் கண்டத்தில் அமைதி நிலவுவதற்கு இதைத் தவிர வேறு வழியில்லை. என்று கூறினார். இந்த துணை கண்ட விவகாரம் இந்திய அப்பாவி பொது மக்களுக்கு கூறும் செய்தி அல்ல. அமெரிக்காவிற்கும், வடக்கு அட்லாண்டா நாடுகளுக்கும் விடுக்கும் செய்தியாக இருக்குமோ என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். [/size]

[size=3]

ஆக, பிரதமர், கட்சிகளின் தலைவர்கள், பாராளுமன்றம், அமைச்சகம் இவையெல்லாம் விட நான் உயர்ந்தவன் என்று, அதாவது வானளாவிய அதிகாரம் கொண்டவன் இந்த ஜனாதிபதி என்று உரக்க சொல்லுகிறாரோ..? சுதந்திர தின விழா செய்தி என்று கருதலாமா..? [/size]

[size=3]

மாயாண்டிக்கருப்பு [/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.