Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியத்தால் இழந்த காவிரி

Featured Replies

[size=6]காவிரி நதி நீர் ஆணையம் கூட்டப்படுவது சந்தேகமே: பலன் கிடைக்காது என்பதால் மத்திய அரசு தயக்கம்[/size]

[size=4]காவிரி நதி நீர் ஆணையத்தை கூட்டினால், இரு மாநில முதல்வர்களும், தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பர்; கூட்டம் வெற்றியடையாது; எந்த ஒரு பலனும் கிடைக்காது. எனவே, காவிரி நதி நீர் ஆணையம் கூட்டப்படுவது சந்தேகமே என, மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.[/size]

[size=3][size=4]காவிரி நதி நீர் ஆணையத்தை கூட்ட வேண்டும் எனக்கோரி, மே, 18ம் தேதி, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்திற்கு, எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை. இதையடுத்து, காவிரி நதி நீர் ஆணையத்தை கூட்டும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்தது. சமீபத்தில் இந்த மனு விசாரணைக்கு வந்த போது, காவிரி நதி நீர் ஆணையத்தை கூட்டும்படி, தமிழக அரசு கோரியுள்ளது; இதற்கு மத்திய அரசின் பதில் என்ன என்பதை தெரிவிக்க வேண்டும். காவிரி நதி நீர் ஆணையத்தை கூட்டுவது தொடர்பாக, மத்திய அரசு, தன் நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை எனில், கடுமையான கேள்விகள் எழுப்பப்படும் என, சுப்ரீம் கோர்ட் எச்சரித்தது. [/size][/size]

[size=3][size=4]சில மாதங்களுக்கு முன், தமிழக மற்றும் கர்நாடக மாநில தலைமைச் செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தை, மத்திய நீர்வளத் துறை செயலாளர் கூட்டியிருந்தார். அந்தக் கூட்டத்தில், போதுமான அளவில் மழை பெய்யாத காலங்களில், அணைகளில் இருக்கும் தண்ணீரை, இரு மாநிலங்களும் எப்படி பகிர்ந்து கொள்வது, என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.[/size][/size]

[size=3][size=4]வலியுறுத்தல்: காவிரி நடுவர் மன்றம், 1991ம் ஆண்டு பிறப்பித்த இடைக்கால உத்தரவில், மழை பொய்த்துப் போனால், அணைகளில் உள்ள தண்ணீரை, எப்படி பகிர்வது என்பது குறித்த, பங்கீட்டு பார்முலாவை தெரிவித்திருந்தது. அதைச் சுட்டிக் காட்டிய தமிழகம், அதன்படியே இப்போதும் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க வேண்டுமென, வலியுறுத்தியது. ஆனால், கர்நாடக அரசு அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இறுதி தீர்ப்பு வந்து விட்ட நிலையில், இடைக்கால உத்தரவு என்பதே இல்லை; [/size][/size]

[size=3][size=4]இடைக்கால தீர்ப்பில், கூறப்பட்டிருக்கும் பங்கீட்டு பார்முலாவை அமல்படுத்த வேண்டிய சூழலே இல்லை என வாதிட்டது. உடன், இறுதி தீர்ப்பில் கூட, வறட்சிக் காலங்களில் அணைகளின் தண்ணீரை, பங்கிட்டுக் கொள்ளும் பார்முலா கூறப்பட்டுள்ளது. அதன்படியாவது, தமிழகத்துக்கு தண்ணீர் தர வேண்டும் என, தமிழகம் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அதற்கு, இறுதி தீர்ப்பு ஒன்றும் அரசின் கெஜட்டில் வெளியிடப்படவில்லை. மேலும், தீர்ப்பு குறித்த வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. எனவே, பங்கீட்டு பார்முலாவை செயல்படுத்த முடியாது என, கர்நாடகா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. [/size][/size]

[size=3][size=4]காவிரி நடுவர் மன்றம், இறுதித் தீர்ப்பு அளித்து, ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. ஆனால், அந்தத் தீர்ப்பானது, அரசு கெஜட்டில் வெளியிடப்படவில்லை. அதனால், தீர்ப்பு அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரவில்லை. மேலும், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு இருப்பதை காரணம் காட்டி, கெஜட்டில் வெளியிடாமல் மத்திய அரசும் காலம் தாழ்த்தி வருகிறது.[/size][/size]

[size=3][size=4][size=5]தமிழக கட்சிகள் தூக்கம்:[/size] காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை, மத்திய அரசின் கெஜட்டில் வெளியிடும்படி, நிர்பந்தம் கொடுக்க, டில்லியில் எந்த தமிழக கட்சிகளும் தயாராக இல்லை. [/size][/size]

[size=3][size=4]பார்லிமென்டில், இதுகுறித்து வலுவான வாதங்களை எழுப்பி, அரசுக்கு நெருக்கடி கொடுக்க, குறிப்பாக, தி.மு.க.,வும் தயாராக இல்லை. மத்திய அரசில் இடம் பெற்றுள்ளதோடு, மத்தியில் அரசு இயங்குவதற்கே காரணமாகவும், தி.மு.க., உள்ளது. ஆனாலும், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை, கெஜட்டில் வெளியிடும்படி வலியுறுத்த, இதுவரை போதுமான நடவடிக்கைகளை தி.மு.க., எடுக்கவில்லை. காலம் கடந்து போன சூழ்நிலையில் தான், இப்போது, காவிரி நதி நீர் ஆணையத்தை கூட்டும்படி, தமிழக அரசு வலியுறுத்திக் கொண்டும், அதற்காக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்வதுமான நிலைமைகள் உள்ளன. காவிரி நதி நீர் ஆணையத்தை கூட்டுவது தொடர்பாக, மத்திய அரசு தன் நிலையை தெரிவிக்க வேண்டும் என, சமீபத்தில், சுப்ரீம் கோர்ட் கண்டிப்புடன் தெரிவித்த பின்னரே, மத்திய அரசு வட்டாரங்கள் பரபரப்பில் ஆழ்ந்துள்ளன. காவிரி நதி நீர் ஆணையம் கூட்டப்படுமா என்ற கேள்வியும், பலமாக எழுந்துள்ள நிலையில், அதற்கான வாய்ப்பே இல்லை என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் நேற்று டில்லியில் உறுதிபட தெரிவித்தன. [/size][/size]

[size=3][size=4]அந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: [/size][/size]

[size=3][size=4]சுப்ரீம் கோர்ட் உத்தரவு என்பதெல்லாம் சரிதான். ஆனால், நடைமுறையில் உள்ள பிரச்னைகளை கையாள்வதில், மத்திய அரசுக்கு பெரும் சிக்கல் இருக்கிறது. காவிரி ஆணையத்தை கூட்டுவதால், எந்த பயனும் இல்லை. அப்படியே கூட்டம் கூட்டப்பட்டாலும், அதில், பங்கேற்கும் இரு மாநில முதல்வர்களும், அவரவர் கோரிக்கையில் உறுதியாகவே இருப்பர். விட்டுத் தரவோ, சிக்கலை தீர்க்க சற்று கீழிறங்கி வரவோ மாட்டார்கள். அதனால், கூட்டம் வெற்றியடைய வாய்ப்பே இல்லை. எனவே, தோல்வியடையும் கூட்டத்தை, பிரதமர் தலைமையில் கூட்டுவதா என்பதே, மத்திய அரசுக்கு தற்போதுள்ள தயக்கம். இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் கூறின.[/size][/size]

[size=3][size=4]தீவிரமாக படிக்கிறோம்: மத்திய நீர்வளத் துறை அமைச்சர் பவன்குமார் பன்சாலிடம் இதுபற்றி கேட்டபோது, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை, மத்திய அரசு தீவிரமாக படித்து வருகிறது. இதுகுறித்து, விரைவில் உரிய பதில் அளிக்கப்படும், என்றார். காவிரியில் தண்ணீர் திறந்து விடாத காரணத்தால், தமிழகத்தில் குறுவை சாகுபடி பொய்த்துப் போய் விட்டது. 40 முதல், 60 சதவீதம் வரை குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்து வரும் சம்பா சாகுபடிக்கும் தண்ணீர் தேவை. எனவே, சம்பா பயிர் பலத்த கேள்விக் குறியில் நிற்கிறது. கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து, போதுமான அளவுக்கு தண்ணீர் திறந்து விடப்படாத காரணத்தால், மேட்டூரில் தண்ணீர் போதுமான அளவுக்கு இல்லை. இப்படி, பிரச்னை தீவிரமாக இருந்தும் கூட, இதுகுறித்து இன்னும் தமிழக எம்.பி.,க்கள் யாருமே, நடப்பு பார்லிமென்ட் கூட்டத் தொடரில், குரல் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.[/size][/size]

http://tamil.yahoo.c...-181000748.html

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.