Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்மோகன் சிங், சிதம்பரத்திற்கு பா.ஜ., நெருக்கடி: எம்.பி.,க்கள் குழுவில் ஆஜராக வலியுறுத்தல்

Featured Replies

[size=4]2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. [/size]

[size=4]இதுகுறித்த விசாரணைக்காக, பார்லிமென்ட் கூட்டுக் குழு முன், நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, பிரதமர் மன்மோகன் சிங், மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் ஆகியோருக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என, பா.ஜ.,- எம்.பி.,க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதால், மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.[/size]

[size=4]2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், 1.76 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்ததாக, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம், அறிக்கை தாக்கல் செய்தது. நாடு முழுவதும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்திய இந்த விவகாரத்தில், தொலைத் தொடர்பு துறை முன்னாள் அமைச்சர் ராஜா மற்றும் தொலைத் தொடர்பு துறையின் சில அதிகாரிகள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வந்துள்ளனர்.இந்த ஊழல் விவகாரம் குறித்து, பி.சி.சாக்கோ தலைமையிலான பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரித்து வருகிறது. இந்த குழுவில், லோக்சபா மற்றும் ராஜ்யசபாவைச் சேர்ந்த, 30 எம்.பி.,க்கள் இடம் பெற்றுள்ளனர். காங்கிரஸ் சார்பில் சாக்கோ உட்பட, 11 எம்.பி.,க்கள், இந்த குழுவில் உள்ளனர். பார்லிமென்ட் கூட்டுக் குழு, தன் விசாரணை அறிக்கையை, இந்தாண்டு இறுதியில் தாக்கல் செய்யவுள்ளது.[/size]

[size=4]இந்நிலையில், ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக, யார், யாரிடம் விசாரணை நடத்துவது என்பதை இறுதி செய்வதற்காக, கூட்டுக் குழு கூட்டம், நேற்று டில்லியில் கூடியது. இதில் பங்கேற்ற, பா.ஜ., உறுப்பினர்கள், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங், நிதி அமைச்சர் சிதம்பரம் ஆகியோரிடமும், விசாரணை நடத்த வேண்டும். கூட்டுக் குழு முன், நேரில் ஆஜராகி, விளக்கம் அளிக்கும்படி, இவர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும்.[/size]

[size=4]பிரதமரின் முதன்மைச்செயலர் புலோக் சட்டர்ஜி, பிரதமரின் ஆலோசகர் டி.கே.ஏ.நாயர் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்க வேண்டும் என, வலியுறுத்தினர்.[/size]

[size=4]மோதல்:

இதற்கு, காங்., உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புதெரிவித்தனர். காங்கிரஸ் கட்சித் தலைவர்களை, நேரில் ஆஜராகி, விளக்கம் அளிக்கும்படி வலியுறுத்தினால், ஏற்கனவே மத்திய நிதி அமைச்சர்களாக பதவி வகித்த, பா.ஜ.,வைச் சேர்ந்த ஜஸ்வந்த் சிங், யஷ்வந்த் சின்கா ஆகியோருக்கும், ஆஜராகும்படி அழைப்பு விடுக்க வேண்டும் என, காங்கிரஸ் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.இது தொடர்பாக, இரு கட்சிகளையும் சேர்ந்த உறுப்பினர்களுக்கு இடையே, கடும் வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து, பா.ஜ., உறுப்பினர்கள், ஜஸ்வந்த் சிங், யஷ்வந்த் சின்கா, தர்மேந்திரா பிரதான், ரவிசங்கர் பிரசாத் ஆகியோர், கூட்டுக் குழு கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதுகுறித்து, யஷ்வந்த் சின்கா கூறியதாவது@@:நாங்கள் சில கோரிக்கைகளை வலியுறுத்தியபோது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்கள், தகாத வார்த்தைகளால், எங்களை அவமதிக்கும் வகையில் பேசினர். அதிலும், காங்கிரஸ் கட்சியின் இளம் உறுப்பினர்கள் சிலர், மிக மோசமாக நடந்து கொண்டனர். இதுபோன்ற சூழ்நிலையில், பார்லிமென்ட் கூட்டுக் குழு கூட்டத்திலிருந்து, வெளிநடப்பு செய்வதை தவிர, எங்களுக்கு வேறு வழி இல்லை.இவ்வாறு யஷ்வந்த் சின்கா கூறினார்.

கூட்டுக் குழு தலைவர் பி.சி.சாக்கோ கூறுகையில், கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்வதற்கான காரணத்தை, பா.ஜ., தெரிவிக்கவில்லை. பா.ஜ., உறுப்பினர்கள், மீண்டும் கூட்டுக் குழு கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்பது தான், என் கருத்து, என்றார். [/size]

[size=4]நெருக்கடி:இதற்கிடையே, தங்கள் கோரிக்கைப்படி, பிரதமரும், மத்திய அமைச்சர் சிதம்பரமும் நேரில் ஆஜராகி, விளக்கம் அளிக்காவிட்டால், கூட்டுக் குழு கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாகவும், பா.ஜ., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2ஜி ஊழல் விவகாரத்தை மீண்டும் கிளறி, பிரதமருக்கும், நிதி அமைச்சர் சிதம்பரத்துக்கும், பா.ஜ., கட்சியினர் மீண்டும் நெருக்கடி கொடுக்கத் துவங்கியுள்ளதால், தேசிய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.[/size]

[size=4]http://tamil.yahoo.com/மன்ம-கன்-ச-ங்-ச-193400937.html[/size]

  • தொடங்கியவர்

[size=4][size=5]பிரதமர் ராஜினாமா செய்யும்வரை பார்லிமென்ட்டை இயங்க விடமாட்டோம் : பா.ஜ.[/size]

நிலக்கரி சுரங்க ஒதுக்‌கீட்டில் நிகழ்‌ந்த முறைகேட்டிற்கு முக்கிய காரணமான பிரதமர் மன்மோகன் சிங், தனது பதவி‌யை ராஜினாமா செய்யும் வரை, பார்லிமென்ட்டை நடத்தவிட மாட்டோம் என்று பாரதிய ஜனதா கட்சி தலைவர் நிதின் கட்காரி கூறியுள்ளார். டில்லியில், தனி‌யார் செய்தி சேனல் ஒன்றிற்கு ‌பேட்டியளித்த நிதின் கட்காரி கூறியதாவது, பிரதமர் ராஜினாமா குறித்த விவகாரத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே கருத்தொற்றுமை உள்ளது என்றும், காங்கிரஸ் கட்சி, இவ்விவகாரத்தில், உண்மைக்கு புறம்பாக பேசிவருவது கண்டிக்கத்தக்கது. இம்முறைகேடு விவகாரத்திற்கு தீர்வு காணும் பொருட்டு, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ளவர்கள், தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதேபோல், பார்லிமென்ட் கூட்டுக்குழு முன்பு, பிரதமர் ஆஜராகும் வரை, அந்த குழு கூட்டத்திலும் தாங்கள் பங்கேற்கப் போவதில்லை என்றும் அவர் கூறினார்.

விவாதத்திற்கு தயார் - மத்திய அரசு@@ நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நிகழ்ந்துள்ள முறைகேடு தொடர்பான விவாதத்திற்கு பார்லிமென்டில் பதிலளிக்க பிரதமர் மன்மோகன் சிங்கும், மத்திய அரசும் தயாராக உள்ளது. பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட கட்சிகள், தங்களின் கேள்விகளை பார்லிமென்டில் பிரதமரிடம் நேரில் கேட்டு தங்கள் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளலாமே தவிர, பார்லிமென்டை முடக்குவது இந்திய அரசியல் அமைப்பிற்கு எதிரான செயல் என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டி ஏலத்தை தாமதப்படுத்த பா.ஜ. திட்டம்@@இந்த முறைகேடு குறித்த விவாதத்தில், பார்லிமென்டில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் எல்லா கேள்விகளுக்கும் பதிலளிக்க பிரதமர் தயாராக உள்ள நிலையில், விவா‌தத்தில் பங்கேற்க பாரதிய ஜனதா மறுப்பு தெரிவிப்பது ஏன் என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார். டில்லியில், நிதின் கட்காரி பேட்டியளித்த அதே தனியார் சேனலுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியதாவது, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறையை மத்திய அரசு வெளிப்படையாகவே நடத்தி வருகிறது. இதற்கு சட்டீஸ்கர், மேற்குவங்கம், ராஜஸ்தான், ஒடிசா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களே சிறந்த உதாரணம். இந்நிலையில், பாரதியஜனதா கட்சி ஆட்சியில் உள்ள மாநிலங்களில், ‌நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில், போட்டி ஏல முறையை அமல்படுத்துவதை தாமதப்படுத்தும் பொருட்டே, பாரதிய ஜனதா கட்சி பார்லிமென்டை முடக்கி வருகிறது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில், ரூ. 1.86 லட்சம் கோடி அளவிற்கு முறைகேடு நிகழ்ந்துள்ளதாக, சி.ஏ.ஜி. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது இறுதித் தகவல் அல்ல என்றும், இதன் மதிப்பை உடனடியாக கணக்கிட முடியாது, இது ஒரு தொடர் நிகழ்வு இதனால், அதன் மதிப்பை இப்போதைக்கு கூற முடியாது என்றும், இதுகுறி்தது பொதுக்கணக்கு குழுவில் விவாதிக்கப்பட உள்ளதாக அவர் கூறினார்.

பேச்சுவார்த்தைக்கு தயார் பார்லிமென்ட் சுமூகமாக இயங்குவதற்கு பாரதிய ஜனதா, ஐக்கிய ஜனதா ‌தளம், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக இருப்பதாகவும், மக்களின் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்தாகவும், ஏனெனில், பா.ஜ.மேற்கொண்டுள்ள போராட்டம் நிறைவு பெற்ற நிலையில், தான் வறட்சி, விலைவாசி உயர்வு தொடர்பான விவாதங்கள் பார்லிமென்டில் நடைபெற உள்ளதாக மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறினார்.[/size]

[size=4]http://tamil.yahoo.com/ப-ர-மர்-ர-ஜ-120600905.html

[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.