Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நித்தியானந்தாவைப் பதவி விலக்கத் தயார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நித்தியானந்தாவைப் பதவி விலக்கத் தயார்

நித்யானந்தரை விட சிறந்தவரை காண்பித்தால் அவரை இளைய ஆதினம் பதவியில் இருந்து நீக்கத் தயார் என்று கொடைக்கானலில் நடந்த நிகழ்ச்சியில் மதுரை ஆதினம் அருணகிரிநாதர் தெரிவித்தார். கொடைக்கானல் அட்டுவம்பட்டி ஸ்டெர்லிங் ரிசார்ட்டில் 21 நாள் யோகா தியான பயிற்சி முகாம் நித்யானந்தாவின் தியான பீடம் சார்பில் நடத்தப்படுகிறது. முகாமினை மதுரை ஆதினம் அருணகிரிநாதர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து நித்யானந்தா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

கொடைக்கானலில் நடைபெறும் இம்முகாமில் கலந்து கொள்பவர்கள் திட உணவு உட்கொள்ளாமல் 21 நாட்கள் யோகா பிராயணம் உள்ளிட்டவரை செய்வர். 434 பேர் வெவ்வேறு நாடுகளில் இருந்து கலந்து கொள்கின்றனர். மதுரை ஆதினம் இம்முகாமை துவக்கி வைத்துள்ளது பெருமை அளிக்கிறது. மதுரை ஆதினத்தை நான் நடத்துகிறேன். அருணகிரிநாதர் என் கட்டுப்பாட்டில் வைத்துள்ளேன் என்கின்றனர். இது தவறான செய்தி. தியான பீடத்தையும், மதுரை ஆதினத்தையும் அவரே தான் நடத்துகிறார். அவர் தமிழ்நாட்டில் எண்ணற்ற சேவை செய்துள்ளார். தியா பீடத்தில் ஏதாவது தேவை என்றால் நான் அவரை நாடுகிறேன். அவரது அனுபவம் தான் என் வயது. அவரது அனுபவம் தான் எனக்கு உதவுகிறது என்று தெரிவித்தார்.

மதுரை ஆதினம் அருணகிரிநாதர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

எனக்கும் நித்யானந்தாவிற்கும் சண்டை என்று ஊடகங்கள்செய்தி வெளியிட்டு வருகின்றன. நாங்கள் இருவரும் ஒன்றாகவே இருக்கிறோம். ஒற்றுமையாகவே இருக்கிறோம். எங்களை வைத்து விளம்பரம் தேடுபவர்கள் தோற்றப் போவார்கள். அவரை நான் தான் வாரிசாக்கினேன். மதுரை ஆதின சொத்து 1000 கோடி ரூபாய். இதை பராமரிக்க திறமைமிக்க பக்தியான நபர் தேவை. எனவே தான் நித்யானந்தாவை வாரிசாக்கினேன். இதற்காக என்னை யாரும் பாராட்ட வேண்டாம். அவரும் ஒரு தமிழன் தான். எவர் சொன்னாலும் அந்த தமிழனை நான் விட்டுக் கொடுக்க மாட்டேன். வாரிசு பதவியில் இருந்து ஒருபோதும் மாற்ற மாட்டேன்.

எங்கள் இருவருக்கும் பிரச்சனை என்றால் அதை நாங்களே பேசி தீர்த்துக் கொள்வோம். அவர் அவுட் ஆக மாட்டார். நிரந்தரமானவர். பதவியை வைத்து ஆதாயம் அடையவோ, சொத்தை எதிர்பார்த்தோ அவர் இளைய சந்நிதானம் பதவியை ஏற்கவில்லை. மதுரை ஆதினத்தை நிர்வகிக்க 100 கோடி ரூபாய் தருகிறேன் என்றார். எனக்கு அவர் தான் தேவை. அவர் இல்லாமல் ஆள் பலம், பணபலம் வராது. படித்த பெண்கள் சீடர்களாக இருப்பது வரவேற்கத் தக்கது

இவரை விட சிறந்தவரை கொண்டு வாருங்கள். நான் இவரை இளைய பீடாதிபதி பதவியில் இருந்து நீக்குகிறேன். இவரை விட சிறந்தவரை உருவாக்க முடியாது. பாலியல் வழக்குகள் இல்லாத பீடாதிபதிகள் யார். நாங்கள் பனங்காட்டு நரிகள். இந்த சலசலப்புக்கு அஞ்ச மாட்டோம். 5 மாதங்களாக பத்திரிகைகளுக்கு தீனி போட்டுள்ளோம். மதுரை ஆதின மடத்தை உலகம் முழுவதும் பரப்பிய ஊடகங்களுக்கு நன்றி என்றார்.

அதனைத் தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர்கள் அளித்த பதில்களும் வருமாறு

கேள்வி - புகார்கள் குறித்து...?

நித்தி - காமெடி வழக்குகள். நிரூபிப்பேன்.

கேள்வி - இடையூறு செய்பவர்கள் யார்? யார்?

ஆதினம் - பொறாமை பிடித்தவர்கள் தான்.

கேள்வி - 100 கோடி ரூபாய் கொடுத்து தான் இந்த பதவியை பெற்றீர்களா?

நித்தி - 8 ஆண்டுகளுக்கு முன்பே எனக்கு இவரைத் தெரியும். நான் பணம் கொடுத்து பதவியை பெற வேண்டிய அவசியம் இல்லை.

கேள்வி - சீடர்கள் நீக்கப்பட்டது பற்றி..?

நித்தி - 2 சீடர்கள் மதுரையில் இருந்து தியான பீடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கேள்வி - கைலாயம் சென்ற போது நடிகை ரஞ்சிதாவும் உடன் வந்தாரா? இதுகுறித்து ஆதீனத்திற்கு தெரிவிக்கவில்லையா?

நித்தி - ரஞ்சிதா வரவில்லை.

ஆதினம் - அவர் உடன் சென்றிருந்தால் நான் அவரை அனுமதித்திருப்பேன். ரஞ்சிதா அவரது தீவிர பக்தை. அவர் சென்றிருந்தால் சிறந்த முறையில் கவனித்திருப்பார்.

கேள்வி - கொடைக்கானலில் தியான பீடம் அமைக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறதே?

நித்தி - நான் கொடைக்கானல் ஏற்கனவே வந்துள்ளேன். எனது பக்தர் மதுரையைச் சேர்ந்தவர் நிலம் தருகிறேன் என்றார். நான் மறுத்து விட்டேன். இங்கு ஆசிரமம் அமைக்கும் எண்ணமில்லை.

கேள்வி - யோகா முகாம் கொடைக்கானலில் நடத்தும் நோக்கம்?

நித்தி - வெளிநாட்டவர்கள் அதிக அளவில் இந்த முகாமில் கலந்து கொள்ள இருப்பதாலும், சீதோஷ்ண நிலை காரணமாகவும் தான் என்றார்.

மேலும் அவர் கூறுகையில் கடந்த ஆட்சிக்காலத்தில் எனது 120 தியான பீடங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த ஆட்சியில் 1 தியான பீடம் அடித்து நொறுக்கப்பட்டது. கொடைக்கானலில் மருத்துவமனை அமைக்கும் எண்ணமில்லை என்றார்.

தினபூமி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.