Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை, உங்களுக்கு நட்பு நாடா?: கருணாநிதி திடீர் கேள்வி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

28-karunanidhi-protest-300.jpg

சீனா பக்கம் சாய்கிற இலங்கை உங்களுக்கு நட்பு நாடா?: மத்திய அரசுக்கு கருணாநிதி திடீர் கேள்வி.

சென்னை: சீனா பக்கம் சாய்ந்திருக்கும் இலங்கையை நட்பு நாடு என்று மத்திய அரசு எப்படிச் சொல்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தொடரும் ராணுவ பயிற்சி

இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சி கொடுப்பது பற்றி தமிழகத்தின் சார்பில் முறையிடும் போதெல்லாம் அந்த ராணுவ வீரர்களைத் திருப்பி அனுப்புவதும், சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் பயிற்சி கொடுப்பதும் தொடர் கதையாக நீடிப்பதைப் பற்றி நேற்றையதினம் நான் கூறும்போது, டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையே எடுத்துக்காட்டி, இருந்தாலும் இந்த ராணுவப் பயிற்சி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்தப் போக்கினை மத்திய அரசு இனியும் நீடிக்காமல், உடனடியாக இலங்கை அரசுடன் இந்தப் பயிற்சி குறித்தும், இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது குறித்தும் கடுமையாகப் பேசி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேன். நான் கேட்டுக் கொண்டதைப்போல, தமிழகத்திலே உள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், தமிழக முதல்-அமைச்சரும் மத்திய அரசுக்கு இதுகுறித்து வேண்டுகோள் விடுத்திருந்தார்கள். இதற்கு முன்பு ஓரிரு முறை இலங்கை ராணுவத்திற்கு தமிழகத்திலே பயிற்சி அளித்தபோது அதுபற்றி கழக ஆட்சியிலும், அ.தி.மு.க. ஆட்சியிலும் மத்திய அரசிடம் முறையிட்டதும், உடனடியாக அப்படி பயிற்சிக்கு வந்தவர்கள் தமிழகத்திலிருந்து திரும்ப அனுப்பப்பட்டார்கள். ஆனால் இப்போது அதற்கு மாறாக மத்திய அரசின் சார்பில், ராணுவ இணை அமைச்சர் பல்லம் ராஜு நேற்றைய தினம் கூறும் போது, இலங்கை, நமது நட்பு நாடு, எனவே இலங்கை ராணுவத்திற்கு தொடர்ந்து பயிற்சி அளிப்போம் என்று கூறியிருக்கிறார்.

இலங்கையின் நட்பு நாடுகளாக சீனா, பாக்.

இந்தப் பதில் தமிழ்நாட்டையும், தமிழர்களின் உணர்வுகளையும் மத்திய அரசு காயப்படுத்துகிறது என்று கருதத்தக்கதாகும். 2009ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற போருக்குப்பின், இலங்கை அரசு இந்தியாவை நட்பு நாடாகக் கருதுவதைவிட, சீனாவையும், பாகிஸ்தானையும் தான் நட்பு நாடுகளாகக் கருதிச் செயல்படுகிறது. தமிழர்களின் வடக்கு மாகாணத்தில் பலாலி, காரைநகர், மன்னார், ஆனையிறவு, தல்லாடி, முல்லைத் தீவு, கிளிநொச்சி, வவுனியா போன்ற இடங்களில் இலங்கை அரசின் ராணுவம், விமானப்படை மற்றும் கப்பற்படை தளங்களை அமைத்துள்ளது. அந்த முகாம்கள் அங்கே அமைக்கவும், ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் குடும்பங்கள் அங்கே தங்குவதற்குமான ஏற்பாடுகளையெல்லாம் சீனாதான் செய்து தருகிறது.

இலங்கை வரும் சீனா குழு

இதைப்பற்றி விவாதிக்க சீன ராணுவ அமைச்சர் லியாங் குவாங்ஜி என்பவர் 29-ந்தேதி இலங்கைக்கு வருகிறார். அப்போது அங்கே உயர்மட்ட ராணுவப் பிரதிநிதிகளின் கூட்டமும் நடைபெறவுள்ளது. மேலும் வருகிற செப்டம்பர் 15ஆம் தேதியன்று சீன மக்கள் காங்கிரசின் துணைத் தலைவர் யு பாங்கோ தலைமையிலான பிரதிநிதிகள் குழு ஒன்றும் இலங்கைக்கு வருகிறது. அந்தக் குழுவிலே 96 சீன பிரதிநிதிகள் இருப்பார்களாம். இந்தக் குழு இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து நேரில் பார்வையிட இருக்கிறார்களாம். இது மாத்திரமல்ல, இலங்கைக்கு சீனா 36 ஆயிரம் கோடி ரூபாய்ச் செலவில் 14 திட்டங்களை நிறைவேற்றி தந்திருக்கிறது.

இலங்கை ராணுவம் மற்றும் போலீஸ் துறையில் பணிபுரிபவர்களின் குழந்தைகளை படிக்க வைக்க ஒன்பது கோடி ரூபாய் செலவில் பள்ளிக்கூடம் ஒன்றை சீனா கட்டிக் கொடுத்திருக்கிறதாம். சீனாவிடமிருந்து 59 கோடி ரூபாய் செலவில் எம்.ஏ. 60 ரக பயணிகள் விமானம் வாங்கிட இலங்கை ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியாவைவிட ஆறு மடங்கு அதிகமான பல்வேறு உதவிகளை சீன நாடு, இலங்கைக்கு செய்து கொடுத்திருக்கின்ற நிலையில் இந்தியா எதை நம்பி இன்னமும் இலங்கை நட்பு நாடு என்று சொல்லிக் கொண்டிருக்கிறதோ? இதை ஒரு தலை நட்பு என்றுதான் சொல்ல முடியுமே தவிர, இரு நாடுகளுக்கு இடையேயான சுமூகமான நட்பு என்று எப்படிச் சொல்ல முடியும்?

திருப்பி அனுப்புங்கள்

இந்தியப் பிரதமர் உடனடியாக இந்தப் பிரச்சினையிலே தலையிட்டு, ராணுவ இணை அமைச்சர் பல்லம் ராஜு தெரிவித்துள்ள கருத்தினை மறு பரிசீலனை செய்வதோடு, நீலகிரி மாவட்டத்தில் பயிற்சி பெறும் இரண்டு இலங்கை ராணுவ அதிகாரிகளை மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்பிடவும், மீண்டும் இப்படிப்பட்ட ராணுவ பயிற்சிகள் இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவிலே அளிப்பதை உறுதியாகத் தவிர்த்திடவும் வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி தற்ஸ்தமிழ்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்திய அரசு ஆட்டுது.. இவர் ஆடுறார்.. :D

இவர் ஆடி என்ன. காங்கிரஸ் இவரை இறுக்க அணைத்து வைத்துக்கொண்டு இவரின் அரசியல் ஆற்றலை சக்கை போகும் வரை உறிஞ்டி எடுத்துவிட்டது. இவர் தனக்கு ந்டப்பதை கவனிக்காமல் அண்ணா கட்டி எழுப்பிய தி.மு.வை. சக்கை போகும் வரை உறி தனது குடும்ப செல்வத்தை கட்டியெழுப்புவிட்டர். இனி தி.மு.க வினதோ அல்லது கருணாநிதியின் அரசியல் சரித்திரம் "ஓவர்". குடும்பம் ஜெயலலிதாவோடு முட்டி மோதாவிடில் உழைத்த பணத்தை வைத்து தலைமுறை தலைமுறையாக சந்தோச வாழ்க்கை வாழலாம். அரசியலில் இறங்கினால் ஜெயாவோடயை மனித போட்டியில் அகப்பட்டு பழிவாங்கல்கள் நடக்கும்.

இப்போ ஆவது கேட்டாரே.? என்ன ஐய்யா இரவு அடிச்ச மப்பு இறங்காமல் கேட்டுவிட்டாரோ இல்லை .

தானே கேள்வி தானே பதில் அடிப்படையில் இப்போ கேள்வியை கேட்டுவிட்டு அடுத்த அறிக்கையில் பதில் விடுவார் என்று நினைக்கிறன்.

1956 இல் இந்தியாவும் இலங்கையும் அதியமானும் அவ்வையாரும் போல

1975 இல் கர்ணனும் துரியோதனனும் போல

1996 இல் பிசிராந்தையாரும் சோழனும்

2009 இல் நானும் நித்தியனதாவும் போல

இப்படி அவர் பதில் அறிக்கை விட வாய்ப்பு இருக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.