Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் பொறுமையைச் சர்வதேசம் புரிந்து கொள்ளுமா?

Featured Replies

புலிகளின் பொறுமையைச் சர்வதேசம் புரிந்து கொள்ளுமா?

பரணி

Friday, 05 May 2006

தமிழ் மக்கள் யுத்தத்தை விரும்பவில்லை. யுத்தம் ஒன்று மீண்டும் தொடங்கினால் பாரிய அழிவுகள் ஏற்படும். இவ்வாறு அழிவுகள் ஏற்பட்ட பின்பும் பேச்சுவார்த்தைக்குத்தான் செல்ல வேண்டும். எனவே, அழிவுகள் ஏற்பட்டாமல் தவிர்க்க வேண்டுமானால் சின்னச் சின்ன சாட்டுகளைக் கூறிக் கொண்டிருக்காமல் பேச்சுவார்த்தை மேசைக்கு உடனடியாகச் செல்வதே நல்லது.

மேலெழுந்தவாரியா இதனைப் பார்க்கும் பொழுது நல்ல கருத்தைக் கூறியிருப்பதாகவே புலப்படும். இதனைக் கூறியவர் வெளிநாட்டில் வாழும் ஒரு பத்தி எழுத்தாளர் என்றும், இக்கருத்தை இவர் வெளிநாட்டு வானொலிக்கு வழங்கிய செவ்வியிலேயே தெரிவித்திருந்தார் என்பதும் கவனிக்கப்பட வேண்டியதாகும்.

இதேநேரம் சிறிலங்காவின் சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருப்பதனையும் இங்கு பார்க்க வேண்டும். ஜெனிவாவில் நடைபெற்ற முதலாம் கட்டப் பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட முடிவுகளுக்கு அமைய விடுதலைப்புலிகள் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவேண்டும் என்றும் என்றும் கூறியுள்ளார். சனாதிபதின் இக்கூற்றை நோக்கினாலும் ஜெனிவாவில் ஒப்புக்கொண்டதற்கமைய விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வருகின்றார்களே என்று எண்ணும் அளவுக்கு மஹிந்தரின் அரசு பரப்புரைகளைச் செய்து வருகின்றது.

மேலே இருக்கும் இருவரினதும் கருத்துக்களைப் பார்க்கும் பொழுது அரசு பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகவும், தமிழ் மக்களும் சமாதானப் பேச்சுவார்த்தையை எதிர்பார்த்திருப்பதாகவும் தமிழீழ விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தை மேசைக்குச் செல்லாது பின்னடிப்பதாகவும், யுத்தத்தின் மேல் பற்றுக்கொண்டவர்களாகவும் காட்டப்படுகின்றனர்.

பெப்ரவரி 22, 23களில் ஜெனிவாவில் ஏட்டப்பட்ட முக்கிய முடிவுகள் வருமாறு:-

முதலாவது அரசுப் படைகளுடன் சேர்ந்தியங்கும் ஒட்டுக்குழுக்கள் அல்லது துணை ஆயுதக்குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என்பதாகும்.

இரண்டாவது மேற்கொண்டு அடுத்த நடைமுறைகளைப் பற்றி ஏப்ரல், 19, 20, 21களில் மீண்டும் ஜெனிவாவில் எடுக்கப்பட்ட முதலாவது முடிவை சிறிலங்கா அரசு எவ்வளவு தூரம் நடைமுறைப்படுத்தியுள்ளது? இந்தக ;கேள்விக்குப் பதில் பூச்சியம் என்பதேயாகும்.

துணை ஆயுதக் குழுக்களின் ஆயுதங்களைக் களையாதவர்கள் இவ்வாயுதக் குழுக்கள் அலுவலகங்ளை மட்டக்களப்பு நகரிலே திறந்து நடத்துவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிவருகின்றார்கள். வெலிகந்தை, பகுதியில் இராணுவப் பாதுகாப்புடன் தங்கி இருக்கும் ஆயுதக் குழுக்களுக்கு மட்டக்களப்பில் அலுவலகம் திறக்கும் வாய்ப்பையும் வழங்கியதன் மூலம் ஜெனிவாவில் ஒப்பமிட்ட உடன்படிக்கையை அரசு முற்றுமுழுதாக மீறிவிட்டது.

ஆயுதக்களைவைச் செய்யாது மேலும் எதைப்பற்றிப் பேசுவது? என்ற கேள்வி எழுகின்றது. ஜெனிவாவிற்கோ அல்லது வேறு எங்காவதோ போய்பேசிப் பேசிக்கொண்டிருப்பதோடு அவற்றை நடைமுறைப்படுத்தாமல் விடுவது என்ன பலனைக்கொடுக்கும்? வெறுமனே பேச்சுவார்த்தை என்பது அதில் எடுக்கப்படும் முடிவுகளைச் செயற்படுத்துவதில் முடியவேண்டும்.

இந்தச் சூழ்நிலையில்தான் பல இடைஞ்சல்களையும் இடையூறுகளையும் ஏற்படுத்தி விடுதலைப்புலிகளின் மத்திய குழுக்களைக் கூடவிடாது தடுத்துவருகின்றது அரசு. இதன் மூலமே விடுதலைப்புலிகளைப் பேச்சுவார்த்தை மேசைக்குச் செல்லவிடாது தடுப்பதில் அரசு அக்கறை காட்டிவருகின்றது.

அதேநேரம் விடுதலைப்புலிகள் மேசைக்குச் செல்லவிடாது தடுப்பதில் அரசு அக்கறை காட்டிவருகின்றது. அதேநேரம் விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தை மேசைக்கு வரப் பின்னடிப்பதாகப் பரப்புரை செய்து வருகின்றது. இதுவரை நடைமுறையிலிருந்த பயண ஒழுங்குகளில் மாற்றங்களை ஏன் ஏற்படுத்த வேண்டும்?

உண்மையில் பேச்சுவார்த்தையில் அரசுக்கு அக்கறை இருக்குமானால் இதுவரை நடந்தமாதிரி விடுதலைப்புலிகளின் மத்திய குழு உறுப்பினர்களை பிராந்தியத் தளபதிகளின் போக்குவரத்தை அங்கீகரித்திருக்கவேண்டும். இவற்றைச் சர்வதேச சமூகம் சரியான கண் கொண்டு பார்க்கும் எனத் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மஹிந்தரின் அரசின் கருத்துகளுடன் ஒத்தூதும் கருத்தாகவே மேலே காட்டப்பட்டவரின் கருத்தும் அமைந்துள்ளது. அவரது கூற்றுப்படி தமிழ் மக்கள் சமாதானத்தை விரும்புவதாகவும், விடுதலைப்புலிகள் யுத்தத்தை விரும்புவதாகவும் கூறுகின்றார். இவர்கள் தமிழ் மக்களையும், விடுதலைப்புலிகளையும் வேறுபடுத்திப் பார்க்க அல்லது காட்டமுற்படுகின்றார்கள்.

மக்களின் ஆதரவு இல்லாமல் இவ்வாறு ஒரு இயக்கம் இயங்க முடியுமா? என்று கேள்விகேட்காது எழுந்தமானமாக எதையும் எழுதலாம், பேசலாம் என்பது அவரின் கருத்தாக உள்ளது. தற்பொழுது எழுந்துள்ள நெருக்கடியான நிலையில் தமிழ் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அவர்களுடன் வாழ்பவர்களால் தான் அறிந்துகொள்ள முடியும்.

தமிழின ஆதரவாளர்கள், தமிழப் பற்றாளர்கள் என்று பலர் நாளும் படுகொலைக்கு உள்ளாகி வருகின்றனர். சமாதான காலம் என்று ஒன்று வந்தபொழுது அக்காலத்தில் தமிழினத்தின் விடுதலையை எதிர்பார்த்து முன்னின்று உழைத்தவர்கள் இனம் காணப்பட்டுப் படுகொலை செய்யப்படுகின்றனர். சமாதான காலம் என்ற ஒன்று வந்திராமல் யுத்தம் தொடர்ந்திருக்குமானால் இந்த நிலை ஏற்பட்டிருக்கமாட்டாது.

1976இல் வாருங்கள் யாழ்ப்பாணத்திற்கு என இடம்பெயர்ந்த மக்கள் காணாமற் போனார் பட்டியலில் அடக்கப்பட்டுள்ளனர். அதே போன்ற நிலைதானே சமாதானம் என்ற பெயரில் தற்பொழுதும் காணப்படுகின்றது. இதைக் கண்டிக்கவோ அல்லது புட்டுக்காட்டவோ தெரியாதவர்கள் மக்களின் மனங்களை அறிந்தவர்களாக கூறுவதைத் தவிர்த்துக் கொள்வது நன்றாக இருக்கும்.

புலிகள் யுத்தத்தை விரும்புகிறார்கள் என்ற குற்றச்சாட்டையும் வைக்கிறார் அந்த கட்டுரையாளர் - தற்பொழுது அரசு முற்றுமுழுதாக யுத்தநிறுத்த உடன்படிக்கையை மீறி வான், கடல், தரை என்பவற்றிலிருந்து அப்பாவி மக்கள் மேல் குண்டுகளை வீசி வருகின்றது. இருபதுக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொடூரமாகக் குண்டுவீச்சால் கொல்லப்பட்டுள்ளார்கள். சிறுவர்கள், குழந்தைகள் என்பவர்கள் அடங்கப் பலரும் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். பல்லாயிரக் கணக்கானோர் இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றனர். யுத்தத்தின் மீது புலிகள் பற்றுக்கொண்டவர்களாயிருந்தா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.