Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"ஒற்றுமை வாரம்", கனடாவில் கடைப்பிடிக்க ஏற்பாடு!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கைத்தீவின் சமாதானத்தை வலியுறுத்தி எதிர்வரும் மே 8-14 வரையான காலப்பகுதியை "ஒற்றுமை வாரம்" ஆகக் கனடியத் தமிழ் அமைப்புபுக்கள் அறிவித்துள்ளன.

கனடிய தமிழர் அமைப்புக்களான இளையவர், மாணவர் அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள், கனடிய தமிழர் ஊடகத்துறை இணையம், முதியவர் அமைப்புக்கள், பழைய மாணவர் மற்றும் ஊர்ச் சங்கங்கள், விளையாட்டுக்கழகங்கள், மத அமைப்புக்கள் ஆகியவற்றுடன் துறைசார் வல்லுநர்களால் இந்த ஒற்றுமை வாரம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து கூறப்பட்டுள்ளதாவது:

கனடாவில் விடுதலைப் புலிகள் மீதான தடை, இருதரப்பு சமநிலையை சமாதான முன்னெடுப்பில் மிகவும் பாதித்துள்ளது.

இச்சமநிலைப் பாதிப்பு, சிறிலங்கா அரசை சமாதானத்தின் பாதையில் இருந்து விலகிச் செல்ல தூண்டுகிறது. சிங்கள பேரினவாதிகளையும், இனவெறியாளர்களையும், இலங்கைத் தீவில் மீண்டும் ஒரு போரை ஆரம்பிக்க அனுமதித்துள்ளது.

போரை நோக்கிய சிறிலங்கா அரசின் செயற்பாடுகள் தடையின் பின்னான காலத்தில் தீவிரப்பட்டுள்ளது.

கனடா தடையின் பின்னான காலத்தில் தமிழர்கள் மீதான மிலேச்சத்தனமான தாக்குதல்கள், படுகொலைகள் பெருமளவில் இலங்கைத்தீவில் அதிகரித்துள்ளமை புள்ளிவிபரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

திருமலையில் தொடரும் தமிழர் இனப்படுகொலை, புத்தூர் படுகொலை, தற்போது கொழும்பில் நடைபெறும் படுகொலை என பட்டியல் நீள்கிறது.

தமிழர் வாழும் வடக்கு-கிழக்கு எங்கும் தமிழ் மக்கள் நாளாந்தம் கொல்லப்படுவது, கனடிய தமிழ் மக்களுக்கு தமது உறவினர்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை பெரிதும் அதிகரித்துள்ளது.

கனடாவில் விடுதலைப் புலிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை தொடர்ந்து, கனடிய குடிமக்களான கனடிய தமிழ் மக்களின் அன்றாட செயற்பாடுகளில் நெருக்கு வாரங்கள் ஏற்படுத்தப்படுவதாகவும், அவர்களிற்கு உரிமை மறுப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

ஒரு தலைப்பட்சமாக தமிழர் என்ற சொற்பதத்துடன் வெளியிடப்படும், செய்திகள் தமிழர் குறித்த தப்பபிப்பிராயத்தை ஏனையவர்கள் மத்தியில் ஏற்படுத்துவதால், தொழிலிடங்கள் மற்றும் பயிலிடங்களில் கனடிய தமிழர் நெருக்குவாரங்களை எதிர்கொள்கின்றனர்.

வழமையான தமிழர் செயற்பாடுகள் மீதும் திடீரென தேவையற்ற கெடுபிடிகள் அதிகரித்துள்ளதாகவும் அஞ்சப்படுகின்றது.

தனிநபர் உரிமைகளை அரசியல் சாசனம் கொண்டே உறுதிசெய்யும் முதல்தர நாடான கனடாவில், இவ்வாறு தவறான முனைப்புக்கள் ஏற்புடையவையல்ல, உடன் தடுக்கப்பட்டாக வேண்டும்.

உண்மை நிலைமைகளை மறைத்து, உலகத்தை பொய்மைக்குள் தள்ள சிறிலங்கா அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை கண்டிக்கிறோம்.

இதன் ஒரு அங்கமாக தமிழ் ஊடகவியலாளர்கள் பலரும் சமாதான காலத்திலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்த எந்தவொரு கைதும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

மேற்கத்திய ஊடகவியலாளர்கள் மீதும், உண்மையை வெளியிடுகின்றார்கள் என்ற ஒரே காரணத்திற்கான பாய்ச்சலும், நெருக்குவாரங்களும் அதிகரித்துள்ளன.

இந்நிலையில், உண்மையின் குரலாக, உரிமையின் குரலாக, சமாதானத்தின் குரலாக, கனடியத் தமிழ் மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாக சமாதானத்தை வேண்டிய கனடியத் தமிழர் ஒற்றுமை வாரம் அமையும்.

இந்த வாரத்தில் தமிழர் இல்லங்கள், வியாபாரத்தலங்கள், வாகனங்கள் தோறும், கறுப்புக் கொடிகளை பறக்க விடுவது என்றும், தமிழர் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில், சமாதானத்தை வேண்டியும், உரிமைகளின் காப்பை வலியுறுத்தியும், தமிழர் ஒன்றுகூடல்கள் பல நடைபெற உள்ளன.

நன்றி :உலகத்தமிழ் ஊடகம்

http://www.worldtamilpress.com/index.php?o...d=351&Itemid=28

இலங்கைத்தீவின் சமாதானத்தை வலியுறுத்தி எதிர்வரும் மே 8-14 வரையான காலப்பகுதியை "ஒற்றுமை வாரம்" ஆகக் கனடியத் தமிழ் அமைப்புபுக்கள் அறிவித்துள்ளன.

:roll: :roll:

எல்லாரும் கொண்டாத்திற்கு எல்லே ஆரவாரப்படுகினம், தேசிய தொலைக்காட்சி உட்பட...

அது சரி என்று 2 ஆங்கில மொழியில் சிங்களத் தரப்பு வெளியிடுகிறார்கள். அதில் தமிழரின் விடையங்களையும் உள்ளடக்கி ஊடுருவல் கச்சிதமாக நடந்தேறி வருகுது.

எங்கடையள் 25 இக்கும் மேற்பட்ட தமிழ் பத்திரிகைகளை மாத்திரம் அடிச்சுவிடியினம்.

உந்த உலகத்தமிழர் இலச்சினைக்கு என்ன இழவுக்கு ரவைகள் துவக்கும் கத்தியும்? கூடவே மப்பிள் இலையை போட்டு என்ன கனடாவிலை ஆயுதப் போராட்டம் நடத்தப் போறம் எண்டு சொல்லவாறியளோ?

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் கொண்டாத்திற்கு எல்லே ஆரவாரப்படுகினம், தேசிய தொலைக்காட்சி உட்பட...

அது சரி என்று 2 ஆங்கில மொழியில் சிங்களத் தரப்பு வெளியிடுகிறார்கள். அதில் தமிழரின் விடையங்களையும் உள்ளடக்கி ஊடுருவல் கச்சிதமாக நடந்தேறி வருகுது.

எங்கடையள் 25 இக்கும் மேற்பட்ட தமிழ் பத்திரிகைகளை மாத்திரம் அடிச்சுவிடியினம்.

உந்த உலகத்தமிழர் இலச்சினைக்கு என்ன இழவுக்கு ரவைகள் துவக்கும் கத்தியும்? கூடவே மப்பிள் இலையை போட்டு என்ன கனடாவிலை ஆயுதப் போராட்டம் நடத்தப் போறம் எண்டு சொல்லவாறியளோ?

இது குறித்து நிதானமாக சட்டவல்லுனர்களோடு ஆராய்வு நடந்து வருகின்றதாம். அடுத்த தசாப்பத்தினுள் தீர்வு கண்டு விடலாம் என்று கருதுகின்றினமாம். :wink: :P

  • கருத்துக்கள உறவுகள்

தலைக்கு மேல தண்ணி போட்டுதாம். இப்ப தான் "தம்" பிடிக்க பயிற்சி எடுக்கினமாம்!! :oops: :oops:

தமிழர் ஒற்றுமை வாரமா? கறுப்புக் கொடியைக் கட்டி யார் பார்க்கப்போகின்றார்கள். ஓன்றுகூடி தீர்மானம் நிறைவேற்றுவார்கள் அடுத்த ஒன்றுகூடல் எப்ப என்று.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரோகரா....

புண்ணாக்குத் தின்னிகள்!! ...

இல்லை பேசாதயுங்கோ!!

பன்னாடைகள்!! ....

ஐயோ! வேண்டாம் ஈழ்பதீஸானுக்கே பொறுக்காது!!!

வேண்டாம்! யாம் ஈழ்பதீஸ் உண்டியலுடனேயே நிற்போம்!!!

அப்பாடா! இப்பதான் ஆறுதல்!!! வீணா இன்னுமொன்று வேண்டாம் ...

தூஊஊ....

அரோகரா....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.