Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கண்காணிப்புக்குழுப் பேச்சாளருக்கான பகிரங்க மடல்!!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருமதி ஹெலன் கொஸ்தோட்டில் அம்மையார் அவர்களுக்கு

இலங்கையரசின் அடக்குமுறைகளால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழன் என்றவகையில் இம் மடலை ஆதங்கத்தோடும் சோகத்தோடும் எழுதுகின்றேன். தாங்கள் பேச்சாளராக இருக்கும் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் நடுநிலமை என்பது சமீப காலங்களில் கேள்விக்குறியாக வந்து கொண்டிருக்கின்றது.

கடந்த சில தினங்களுக்கு முன், மூதூரில் சிறிலங்கா விமானப்படை நடத்திய மக்கள் படுகொலைகளை பற்றிய முதல் அறிக்கையை உங்களின் தலைவர் நேரில் சென்று பார்த்த பின் வெளியிட்டதும், பின் இலங்கையரசின் கோபத்திற்கு ஆளாகக் கூடாது என்பதற்காக சில இராணுவத் தளபதிகளின் மேல் தான் பிழை என்ற வகையில் குற்றம் சுமத்தி விட்டு தப்பிக்க முனைந்ததும் எவ்வகை நியாயம் என்று புரியவில்லை.

கொழும்பு கட்டுநாயக்கா விமானப்படைத் தளத்தில் இருந்து புறப்பட்டு சென்று, மூதூர், சம்பூர் பகுதிகளில் தாக்குதல் நடத்தியிருக்கும், விமானப்படை என்பது கட்டாயம் மூத்த சிங்கள இராணுவத் தளபதிகளின் வேண்டுகோளுக்கு இணங்கவே செயற்பட வேண்டும் என்பதை நீங்கள் அறியாதது அல்ல. குறிப்பாக விமானப்படையை கட்டுப்படுத்தும் தளபதி அதற்கு அனுமதி கொடுத்திருக்க வேண்டும். ஆகவே தங்களை சிறிலங்காவின் அரசு கண்டித்தது என்பதற்காக ஒரு மக்கள் கொலையை மூடி மறைத்து உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ள ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் ஏமாற்றம் செய்கின்றீர்கள்!

மேலும் சிறிலங்கா அரசு முதல் நீங்கள் வெளியிட்ட அறிக்கையை விமர்சனம் செய்து விவாதத்துக்கு அழைத்து அறிக்கையை மாற்றம் செய்யத் தூண்டியது என்பது உங்களின் நடுநிலமையையில் சிறிலங்கா அரசு தலையிடுகின்றது என்பதை தாங்கள் புரிந்து கொள்ளவேண்டும். இதை விட சிறிலங்கா அரசு "இராணுவத் தளபதிகள்" கட்டுப்படாமல் செயற்பட்டதால் தான் இவ்வாறு ஆகிவிட்டது என்று கூறும்போது, பதிலுக்கு அத் தளபதிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி சிங்கள அரசை வற்புறுத்தல் செய்திருக்க வேண்டும். ஆனால் நீங்களும் கேட்கவில்லை. சிறிலங்கா அரசும் அதைச் செய்யவில்லை. ஆகவே மீண்டும் ஒரு முறை இது போன்ற அநியாயப் படுகொலைகளை தமிழ்மக்கள் மீது சிறிலங்காப் படைகள் செய்யாது என்பதை உங்களால் உத்தரவாதப்படுத்த முடியுமா?

இதை விட நேற்று முன்தினம்(10.05.2006) அன்று பாராளுமன்றத்தில் இலங்கையின் முக்கிய பொறுப்பில் உள்ள ஒரு அமைச்சர், சம்பூர் பகுதியில் தாங்கள் தாக்குதல் நடத்தவே இல்லை என்று சொல்லியிருக்கின்றார். சிங்கள அரசுத் தலைவர்கள் தமிழரின் படுகொலைகளை மூடி மறைப்பது ஒன்றும் புதிய விடயமல்ல. ஆனால் அவர் அப்படி ஒரு துணிவாக அறிக்கை விடுவதுவதற்கு உங்களின் அசமந்தப் போக்கும், அரச சார்பு நிலையும் தான் காரணமாகக் கருத இடமுண்டு.

11.05.2006ம் ஆண்டு நடந்த கடற்படை மீதான தாக்குதல் குறித்து, அதை போர்நிறுத்தமீறலாக பிபிசி செய்திக்கு பேட்டியளித்திருக்கின்றீர்க

  • கருத்துக்கள உறவுகள்

கண்காணிப்புக் குழு நடுநிலை தவறுகிறதா?

போர் நிறுத்த உடன்பாட்டை கண்காணிக்கும் கண்காணிப்புக் குழு ஒரு தரப்பு சார்ந்து நிற்கின்றதா? என்ற கேள்வி இப்போது தமிழ் மக்களிடையேயும், தமிழீழ விடுதலைப் புலிகளிடமும் ஏற்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தை, தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுமானத்தின் ஆழ நீளங்களை அறியாது பேரினவாத சக்திகளின் பாணியில் ஆயுதக் குழு என்ற வரையறைக்குள் முடக்க நினைப்பது எதிர்காலத்தில் கண்காணிப்புக் குழு மீதான நல்லெண்ணத்தை கேள்விக்குறியாக்கி விடும்.

போர் நிறுத்த உடன்பாடு என்பது இரு தரப்பின் சமவலுத் தன்மையுடன் தான் கையொப்பமிடப்பட்டது.

இதில் தமிழர் தாயகத்தின் எழுபது வீதமான நிலப்பரப்பு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாக உள்ளது. நிலத்தின் மீது எவ்வாறு விடுதலைப்புலிகளின் ஆதிக்கம் வலுவாகவுள்ளதோ அதேபோன்று ஆகாய, கடல் வழிகளும் விடுதலைப் புலிகளுக்கு உருத்துடையவையாகும். இதனடிப்படையில் தமிழீழ கடல் வலயம் என்பது விடுதலைப் புலிகளின் ஆளுகைப் பிரதேசம். அதேபோன்று வான் பரப்பிலும் அதே உரிமம் உண்டு.

இதன் அடிப்படையில் தான் போர் நிறுத்த உடன்பாடு கையொப்பமிடப்பட்டது. ஆனால் தமிழீழ கடற்பரப்பை புலிகள் சொந்தம் கொண்டாட முடியாது. அவை சிங்கள தேசத்துக்குத் தான் சொந்தம் என கண்காணிப்புக்குழு தலைவர் கூறியிருக்கும் கூற்று நியாயமற்றது. அவர் போர் நிறுத்த உடன்படிக்கையை முழுமையாக நுட்பமாக அறியவில்லை போலும்.

இதைத்தான் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களும், உல்ப் ஹென்றிக்சனிடம் தெளிவுபடுத்தியுள்ளார். எனவே, போர் நிறுத்த உடன்படிக்கை அமைவாக கண்காணிப்புக்குழு செயற்பட வேண்டும். வெற்றிலைக்கேணி கடற்பரப்பினூடாக சென்ற துருப்புக் காவிக் கப்பலில் படையினர் நிராயுதபாணிகளாகச் சென்றனர். அவர்களைத் தாக்குவது என்பது போர் தருமத்திற்கு முரணானது என கண்காணிப்புக் குழு விடுதலைப்புலிகள் மீது குற்றச்சாட்டை முன்வைப்பதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

ஏனெனில,; போர் நிறுத்த உடன்பாட்டிற்கு அமைய நிராயுத பாணிகளாக படையினர் கட்டுப்பாட்டுப் பகுதியில் அரசியல் பணியில் செயற்பட்ட போராளிகளை சிங்கள இராணுவமும், சிங்கள இராணுவத்திடம் சேர்ந்தியங்கும் ஒட்டுக் குழுக்களுமே சுட்டுப்படுகொலை செய்த போது ஏன்; கண்காணிப்புக் குழு இதனை பாரதூரமான போர் நிறுத்த மீறலாக வெளிப்படுத்தி ஒட்டுக்குழுக்களின் செயற்பாடுகள் குறித்து வெளிக் கொணரவில்லை.

மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் நிராயுதபாணியாக பயணம் செய்த போது படுகொலை செய்யப்பட்டதை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு அறிந்திருக்கவில்லையா? மட்டக்களப்பு, விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் புலிகளின் முன்னரங்கக் காவல் நிலைகள் மீது படைத் தரப்பினர் தொடர்ச்சியாக கண்மூடித் தனமான தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர்.

விடுதலைப் புலிகள் கண்காணிப்புக் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டு வந்த பிற்பாடு கண்காணிப்புக் குழு நிலமைகளை வந்து பார்வையிட்டுக் கொண்டிருந்த போது படைத் தரப்பினர் தாக்குதலை மேற்கொண்டனர். இது கண்காணிப்புக் குழுவால் நிரூபிக்கப்பட்ட உண்மை.

ஆனால் இதுவரை அவ்விடயம் தொடர்பாக கண்காணிப்புக் குழு வெளிக் கொணரவில்லை என்பது கவலைக்குரியது. அது மாத்திரமன்றி விடுதலைப்புலிகளின் வவுணதீவு முன்னரங்க நிலைகள் நோக்கிப் படையினர் ஏவும் எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கின்ற சத்தம் கேட்கும் தூரத்தில் கண்காணிப்புக் குழு அலுவலகம் அமைந்திருப்பதால் படையினர் எறிகணை வீச்சு நடத்துவதை உணரக்கூடியதாக இருக்கின்றது.

ஆனால் இராணுவப் பேச்சாளர் அவ்வாறு தாக்குதல் எதுவும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி நோக்கி நடைபெறவில்லை எனக்கூறுகின்றார். அக்கூற்றை மறுத்து கண்காணிப்புக் குழு தாக்குதல் இடம்பெற்றதை பகிரங்கமாக கூறாதுள்ளனர். எனவே, போர் நிறுத்தம் முறிவடைந்த ஒரு சூழ்நிலை உருவாகி தாக்குதல்கள் உக்கிரம் அடைந்துள்ள நிலையில் மீளவும் போர் நிறுத்த உடன்பாட்டை நடைமுறைப்படுத்துவது என்பது காலம் கடந்த விடயமாகிக் கொண்டிருக்கும் நிலையில் கண்காணிப்புக் குழுவின் அறிக்கையில் விடுதலைப்புலிகள் மீது மட்டும் பழி சுமத்துவது சர்வதேச சமூகம் மீது தமிழ் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

எனவே இனியாவது கண்காணிப்புக் குழு நடுநிலைமை பேணுவதன் மூலம் அதன் நம்பகத் தன்மையைப் பேண முடியும்.

-மட்டக்களப்பு ஈழநாதம்-

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த கண்காணாத குழுவினால் எமக்கு அனைத்துலக நாடுகளிடமிருந்து கண்டனங்கள்தான் மிச்சம்.ஏனென்றால், இந்த பைத்தியங்கள் கொடுக்கும் அறிக்கைகளை வைத்து அந்தப் பைத்தியங்களும் கண்டனம் விடுகிறதென சில பைத்திய ஊடகங்களும் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. தமிழன் செத்தால் மூச்சு பேச்சு விடாதவன் எல்லாம், சிங்களவன் செத்தால், இவன் விடும் அறிக்கையை கேட்டு துள்ளுறான். கோபி அண்ணன் கூட!

என்ன பொறுமையென்னம் எமக்கு! இந்த -சர்ப்பதேச- கண்டனத்திற்கெதிராக நாமனைவரும் மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது மற்றய தொடர்புசாதனங்களூடாகவோ, எமது கண்டனத்தை அவனவன் மொழியில் தெரிவிக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

அல்லிகா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த கண்காணிப்புக் குழுவில், சட்டம், நீதித் துறையை சார்ந்தவர்களாக இருந்தால், நாம் நீதியை எதிர் பார்க்கலாம். தங்கள், தங்கள் நாட்டில் வேலை கிடைக்காதவர்களும், இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர்களும், தங்களுக்கு நேரம் போகவில்லை என்பதற்காகவும், எமது நாட்டின் சுகங்களை பெறுவதற்காகவும் இந்த வேலைக்கு மனு போட்டுத் தெரிவு செய்யப்பட்டவர்கள்தான் இவர்கள்.

உண்மையான இராணுவத்தினன் இவர்களைப்போல், களத்திற்கு போக அஞ்ச மாட்டான். இந்த பச்சோந்திகளோ, உடலங்களை பார்க்க சாதாரண மக்களுக்கிருந்த துணிவில்லாமல், கண்துடைப்புக்காக எல்லாம் முடிந்த பின் வரும் -போலீசு- போல வந்து போய், கண்துடைப்புக் குழுக்களாக மாறிவிட்டனர்.

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றிலைக் கேணித் தாக்குதல் நடந்து ஒரு மணிநேரத்தினுள் அறிக்கை வெளியிட்ட கண்காணிப்புக் குழு, அல்லைப்பிட்டி உற்பட நேற்று மட்டும் 19 தமிழ்மக்கள் கொல்லப்பட்டபோது ஏன் எவ்வத மூச்சையும் வெளியிடவில்லை என்பதை வைத்து, அதன் நடுநிலமை குறித்து தெளிவாக உணர்ந்து கொள்ளமுடியும். சிறிலங்காக் கடற்படையினர் அத் தாக்குதலை நடத்தி 36 மணிநேரங்களாகி விட்டன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.