Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீவகத்திலும் ஒட்டுக்குழு ஈ.பி.டி.பி கட்சியின் மணல் கொள்ளை.

Featured Replies

ஒட்டுக்குழு ஈ.பி.டி.பி கட்சியின் மணல் கொள்ளை தற்போது தீவுப்பகுதிகளிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனைத் தடுத்து நிறுத்த முயற்சிப்பவர்களுக்கு கொலை மிரட்டலும் விடப்படுகின்றது.

எவராலும் கட்டுப்படுத்த முடியாத அளவு வடமராச்சி குடத்தனை மற்றும் பெற்பதிப் பகுதிகளில் ஈ.பி.டி.பி கட்சியினரால் மணல் அகழ்ந்தொடுக்கப்பட்டு வருகின்றது. அப்பகுதியில் அளவுக்கு அதிகமாக மண் அகழப்படுவதால் கடல் நீர் உட்புகும் அபாயம் ஏற்பட்டுள்து.

இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் தீவுப் பகுதியில் குறிப்பாக மண்கும்பான் பகுதியில் தற்போது ஈ.பி.டி.பியினரால் மணல் அகழப்படுகின்றது. அரசியல் அதிகாரத்தினைப் பயன்படுத்தி மணல் அகழ்விற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது.

எனினும் அனுமதி பெறப்பட்ட பகுதிகளுக்கு அதிகமான நிலப்பரப்பில் மணல் அகழ்ந்தெடுக்கப்படுகின்றது.

யாழ்.குடாநாட்டில் தற்போது நிலவும் கடும் வரட்சி காரணமாக தீவுப் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை எற்பட்டுள்ளது.

இதற்கிடையில் தீவுப் பகுதியின் குடிநீர் அங்கு காணப்படும் மணலிலேயே தங்கியுள்ளது. எனவே கட்டுக்கடங்காத அளவு அப்பகுதியில் மணல் அகழ்ந்தெடுக்கப்படுவதால் தீவுப் பகுதிக்கான குடிநீர் முழுமையாக அழிவடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேற்படி மணல் அகழ்விற்கு சிறிலங்கா காவல்துறையினரும் முழுமையான பங்களிப்பு வழங்கப்படுவதால் ஈ.பி.டி.பியினரின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.

இன்று காலை யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் வேலணைப் பிரதேச செயலர் திருமதி மஞ்சுளா அவ்விடையம் தொடர்பாக தெரிவித்திருந்தார். அவர் மணல் அகழ்வில் ஈடுபடுபவர்கள் பலருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும் சுட்டிக் காட்டியிருந்தார்.

எனினும் இக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய சிறிலங்கா அரசாங்க அடிவருடி அமைச்சர் டக்ளஸ் சாதூரியமாக கூட்டத்தை இடைநிறுத்தி அங்கிருந்து வெளியேறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

http://thaaitamil.com/?p=32660

430242_187171148081790_1203696984_n.jpg
  • கருத்துக்கள உறவுகள்

90 ஆண்டுக்குப் பிறகு என்ன விலை போகுது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.