Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமது நிர்வாக கடற்பிரதேசத்தில் எமக்கு உரிமை உண்டு: கண்காணிப்ப

Featured Replies

யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்கமைய எமது நிர்வாக கடற்பிரதேசத்தில் எமது கடற்புலிகளின் நடவடிக்கைகளுக்கு உரிமை உண்டு என்று இலங்கைப் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் பதிலளித்துள்ளனர்.

யாழ். வெற்றிலைக்கேணி கடற்சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிட்ட இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர், விடுதலைப் புலிகளுக்கு இலங்கைக் கடலில் உரிமை இல்லை என்று தெரிவித்திருந்தனர்.

இதற்குப் பதில் தெரிவித்து கண்காணிப்புக் குழுத் தலைவர் ஹென்றிக்சனுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அனுப்பியுள்ள கடிதம்:

மேஜர் ஜெனரல் உல்ப் ஹென்றிக்சன்

தலைவர்

இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு

பொருள்: மே 11ஆம் நாள் நடைபெற்ற் கடற் சம்பவம் மற்றும் வன்னி பிரதேசம் மீதான குண்டு வீச்சு

யுத்த நிறுத்த ஒப்பந்தமானது இராணுவச் சமநிலையினை அடிப்படையாகக் கொண்டது. யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர இராணுவச் சமநிலை அவசியமானது என்பது சாதாரண உண்மை.

இந்த இராணுவச் சமநிலைக்கு யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்கு முன்னரே கடற்புலிகள் பங்களிப்புச் செய்துள்ளனர். எமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களின் கடற்பிரதேசங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த உண்மையை கடந்த 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் நாள் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு வெளியிட்ட அறிக்கையிலும் உறுதிபடுத்தப்பட்டது.

"யுத்த நிறுத்த ஒப்பந்தம் கடந்த 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி 22 ஆம் நாள் கைச்சாத்திடப்பட்டபோது தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களது கடற்புலிகளையும் கொண்டிருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் இருப்பானது ஒரு அறிவிக்கப்படாத கடற்படையாகும். தற்போதைய யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்கு இராணுவச் சமநிலை என்பது அடிப்படையானது. இருதரப்பினரும் தங்களது படையினரை தொடர்ந்து வைத்திருக்கும்போது இருதரப்பினரும் தங்களது பிரதேசங்களில் பயிற்சிகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உரிமை உண்டு"

என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேச கடற்பிரதேசங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்படைக் கலங்கள் ஆயுதங்களுடன் பயணிக்கும் என்று பேச்சிலும் எழுத்திலும் பலமுறை போர் நிறுத்த கண்காணிப்புக்குழுவுக்கு நாம் தெரிவித்திருந்தோம்.

மேலும் எமது நடவடிக்கைகளில் சிறிலங்கா கடற்படையினர் இடையூறு விளைவிக்கும் போது நாம் பதில் நடவடிக்கை மேற்கொள்வோம் என்றும் திரும்ப திரும்ப கண்காணிப்புக் குழுவுக்குத் தெரிவித்திருந்தோம். இந்தக் காரணத்துக்காகவே சிறிலங்காவின் கடற்கலங்களில் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் கடல் கண்காணிப்பாளர்கள் பயணிக்க வேண்டாம் என்றும் நாம் எச்சரித்திருந்தோம்.

இத்தகைய எச்சரிக்கை விடுக்கப்பட்டு எம்மால் அனுப்பி ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்ட கடிதங்களையும் நாம் இத்துடன் இணைத்துள்ளோம்.

இந்தப் பின்னணியில், மே 11 ஆம் நாளன்று எமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களின் கடற்பிரதேசத்தில் நாங்கள் பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது எமது நடவடிக்கைகளுக்கு சிறிலங்கா கடற்படையினர் இடையூறு விளைவிக்கவும் தாக்குதல் நடத்தவும் முனைந்தனர். ஆகையால் நாம் பதில் தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரித்தோம்.

சிறிலங்கா கடற்படையினரால் கடற்புலிகளின் கலங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் எமது 4 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். இரு போராளிகள் படுகாயமடைந்துள்ளனர்.

மே 11 ம் நாளன்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் இது தொடர்பில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியுள்ளதாவது:

சிறிலங்காவைச் சுற்றியுள்ள கடற்பிரதேசமானது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாகும். இதனை சர்வதேச விதிகளுக்கமைய கண்காணிப்புக் குழுவின் தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார். அரச சார்பற்ற சக்திகள் கடற்பிரதேசத்தையோ வான்பரப்பையோ நிர்வகிக்க முடியாது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அத்தகைய உரிமை இல்லை" என்று அதில் தெரிவித்திருந்தனர்.

இராணுவச் சமநிலையில் கடற்புலிகளும் ஒரு அங்கம் என்றும் அவர்கள் தங்களது பயிற்சிகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உரிமை உண்டு என்றும் முன்னர் கண்காணிப்புக் குழு வெளியிட்டிருந்த அறிக்கைக்கு இது முரணானது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

இதனடிப்படையிலும் எமது எச்சரிக்கைகளின் அடிப்படையிலும் சிறிலங்கா கடற்படையின் கடற்கலங்களுக்குப் பாதுகாப்பாக கண்காணிப்புக் குழுவின் கடற்கண்காணிப்பாளர் பயணிப்பது ஆபத்தானது. அதே நேரத்தில் எமது கடற்படையின் கடற்கலங்களுக்கோ எமது போராளிகளுக்கோ கண்காணிப்புக் குழுவினர் பாதுகாப்பு வழங்கவில்லை. இதிலும் மோசமாக, இச்சம்பவமானது யுத்த நிறுத்த மீறலாக எமக்கு எதிராக கூறப்பட்டுள்ளது.

மே 11 ஆம் நாள் கடல் சம்பவத்தைத் தொடர்ந்து சிறிலங்கா விமானப் படையினர் வன்னிப் பிரதேசம் மீது குண்டுகளை வீசினர்.

திருகோணமலை சம்பூர் பகுதியில் மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா இராணுவத்தினர் கண்மூடித்தனமான எறிகணை மற்றும் ஆட்டிலறித் தாக்குதல்களை நடத்தினர்.

இந்தத் தாக்குதல்கள் பாரிய யுத்த நிறுத்த மீறல்களாகும். இருப்பினும் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் இந்த பாரிய யுத்த நிறுத்த மீறல்களுக்குக் கண்டனம் தெரிவிக்கல்லை.

கண்காணிப்புக் குழுவினரது இந்த பாரபட்ச செயற்பாடானது எமக்கு அதிர்ச்சியளிப்பதாகவும் அதிருப்தியளிப்பதாகவும் உள்ளது.

தங்கள்

சு.ப.தமிழ்ச்செல்வன்

பொறுப்பாளர்

தமிழீழ அரசியல்துறை

இக்கடிதத்துடன் ஏப்ரல் 18, மே 10 மற்றும் கடைசி எச்சரிக்கை விடுக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட மே 11ஆம் நாள் கடிதங்களை மீண்டும் கண்காணிப்புக் குழுவுக்கு சு.ப.தமிழ்ச்செல்வன் அனுப்பி வைத்துள்ளார்.

நன்றி: புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.