Jump to content

பேரவைக்கு வருவது சரியாக இருக்காது: ஜெ.


Recommended Posts

பேரவைக்கு வருவது சரியாக இருக்காது: ஜெ.

தமிழக சட்டப் பேரவையில் 1989-ல் நடந்த சம்பவத்தை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அதே முதல்வர், அதே அமைச்சர்கள் வந்துள்ளனர். எனவே பேரவைக்கு நான் வருவது சரியாக இருக்காது என்று அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா கூறினார்.

அதிமுக தலைமை அலுவலகத்தில் நிருபர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது:

சட்டப் பேரவைக்கு நான் வரவேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்ப்பதாகச் சொன்னார்கள். ஆனால் 1989-ம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி நான் தாக்கப்பட்டதை யாரும் மறந்திருக்க முடியாது. அப்போது யார் அவமானப்படுத்தினார்களோ தாக்கினார்களோ அவர்களெல்லாம் தற்போது வந்திருக்கிறார்கள். அடிப்படை நாகரிகம், பண்பாடு தெரியாத காட்டுமிராண்டிக் கும்பல்.

அதனால் பேரவைக்கு நான் வருவது சரியாக இருக்காது. அதிமுக எம்எல்ஏக்களுக்கு வழிகாட்ட நான் இருக்கிறேன். முக்கிய விவாதங்களில் பங்கேற்பீர்களா என்று கேட்கிறீர்கள். அவசியம் ஏற்பட்டால் வருவேன். பார்க்கலாம்.

கடந்த 5 ஆண்டு காலமாக 2001 முதல் 2006 வரை மிகவும் கண்ணியமான முறையில் ஆட்சியையும் சட்டப்பேரவையையும் நடத்தினேன்.

1989-ல் நடந்ததைப் போல் கேவலமான வன்முறை சம்பவம் நடந்ததே இல்லை. 2001-06 வரை நாங்கள் ஆளும் கட்சியாக இருந்தபோது எதிர்க்கட்சியாக அமர்ந்திருந்த திமுகவினர் கண்ணியக்குறைவாகவும் அநாகரிகமாகவும் நடந்து கொண்டார்கள். அடிப்படை பண்போடு நடக்கவில்லை. நான் முதல்வராக இருந்தபோதே அப்படி நடந்தார்கள்.

அதே முதல்வர். அதே அமைச்சர்கள். இந்த அநாகரிகம் தெரியாத காட்டு மிராண்டிக் கும்பல் முன் அம்மா வரக் கூடாது என்று அதிமுக எம்எல்ஏக்கள் முடிவு எடுத்திருக்கிறார்கள்,

அவர்களது முடிவுக்கு மதிப்பளிக்கிறேன். சட்டப் பேரவைக்கு நான் வராமல் இருப்பதற்கு காரணம் உள்ளது. கருணாநிதி வராமல் இருந்ததற்கு எந்தக் காரணமும் இல்லை.

நான் இல்லாமல் இருந்தாலும் அவர்கள் நன்றாக செயல்படுவார்கள் என்றார் ஜெயலலிதா

dinamani.com

Link to comment
Share on other sites

தேர்தல் தோல்வியால் பலியான 7 பேர் குடும்பத்துக்கு தலா ரூ. 1 லட்சம்: ஜெயலலிதா அறிவிப்பு

அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப் பட்டு இருப்பதாவது:-

சட்டமன்றத் தேர்தல் முடிவுகளைக் கேட்டு கழக உடன்பிறப்புகள் 7 பேர் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்டார்கள் என்ற செய்தி அறிந்து நான் அளவற்ற துன்பம் அடைந்தேன்.

வடசென்னை மாவட்டம், பெரம்பூர் பகுதி, 35-வது வட்டம், வியாசர்பாடி, இந்திராகாந்தி நகரைச் சேர்ந்த ஜி.வசந்தி தீக் குளித்து மரணமடைந்தார். வேலூர் மேற்கு மாவட்டம், கந்திலி ஒன்றியம், தெலுங்கு மட்றபள்ளியைச் சேர்ந்த ஜெமினி கணேசன்பபவிஷம் அருந்தி உயிரை மாய்த்துக் கொண்டார். திருவண்ணா மலை மாவட்டம், தோக்கவா டியைச் சேர்ந்த எம்.ஆலன் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

தருமபுரி மாவட்டம், வெங் கடசமுத்திரம் கிளைக் கழகத் தைச் சேர்ந்த கண்ணம்மாள் கோவை மேற்கு தொகுதி, 37-வது வட்டக் கழக மேலமைப்புப் பிரதிநிதியும், வட்ட பேரவைச் செயலாளரு மான முனுசாமி, கோவை பெரியநாயக் கன்பாளையம் ஒன்றியம், மடத்தூர் கிளைக் கழக அவைத் தலைவர் ஏ.காளிமுத்து, கோவில்பட்டி நகரத்தைச் சேர்ந்த சி.பால முருகன் ஆகியோர் அதிர்ச்சி யில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தனர் என்ற செய்தி அறிந்து நான் அளவற்ற மனவேதனை அடைந்தேன்.

தேர்தலில் வெற்றி தோல்வி என்பது இயல்பு. ஆனால், இந்தத் தேர்தல் முடிவு பொறுத் தவரையில், நாம் தோல்வி அடையவில்லை என்பதே உண்மை. நாம் தனித்து இல்லை, இன்றும் மக்கள் நம்முடனேயே உள்ளார்கள். தேர்தலில் நமது வாக்குகளின் சதவீதம் கூடியிருப்பதே இதற்குச் சாட்சி. எனவே, யாரும் வருத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை. யாரும் கவலை கொள்ள வேண்டிய தேவையும் இல்லை. எதிர்காலம்

நமக்கே.நான் உயிரோடு இருப்பதே உங்களுக்காகத்தான்! நீங்கள் அனைவரும் நலமோடு வாழ்வதற்காகவே நான் பாடு பட்டு வருகிறேன். நீங்கள் இருக்கிறீர்கள் என்ற தைரி யத்தில் தான் நான் தைரிய மாக இருக்கிறேன். எனவே, உங்கள் இன்னுயிரை இழந்து என்னை தைரியம் இழக்கச் செய்யாதீர்கள்!

1996-ஆம் ஆண்டு கழகம் மிகுந்த பின்னடைவைச் சந்தித் தது. அப்போது மீண்டும் கழகத்தை ஆட்சியில் அமரச் செய்வேன் என்று நான் சொன் னேன். சொன்னபடி கழகத்தை ஆட்சியில் அமர்த்தினேன். அன்று இருந்ததைவிட, இன்று நாம் மிக்க நல்ல நிலையில் உள்ளோம் நிச்சயமாக நாம் மீண்டும் ஆட்சியைப் பிடிப் போம். மற்ற கட்சிகளை விட, கழகத்திற்கே வளமான எதிர் காலம் உண்டு.

எனவே, மீண்டும் நான் வலியுறுத்திச் சொல்கிறேன். யாரும் தேர்தல் முடிவு குறித்துக் கவலைப்படவோ, விலை மதிப்பில்லாத தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்ளவோ கூடாது உங்கள் அன்பும் உங்கள் பாசமும் எனக்குப் புரிகிறது. தன்னம் பிக்கையோடு இருந்து சவால் களைச் சமாளிப்பது தான் இப்போதைய தேவை. உயிரைப் போக்கிக் கொள்வது அல்ல!

எனவே, தயவு செய்து தங்களை மாய்த்துக் கொள்ளுகின்ற செயல்களில் ஈடுபடவே கூடாது என்பதோடு, அத்தகைய எண்ணமே கழக உடன்பிறப்புகள் நெஞ்சத்தில் தோன்றத் கூடாது என்று மீண்டும் மிகுந்த அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

தேர்தல் முடிவு கேட்டு, தங்கள் இன்னுயிரை இழந்த 7 கழக உடன்பிறப்புகளின் குடும்பங்களுக்கு, எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரி வித்துக் கொள்வதுடன், அவர்களது குடும்பத்திற்கு, கழகத்தின் சார்பில் குடும்ப நல நிதியுதவியாக தலா 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

maalaimalar.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மட்டக்களப்பு எல்லையில் புதிதாக விகாரை அமைப்பு – திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் தீவிரம் May 23, 2024   மட்டக்களப்பை சிங்கள மயமாக்கலின் அடிப்படையில் எல்லைக் கிராமமான கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வடமுனை கிராம சேவகர்பிரில் உள்ள நெலுகல் மலை எனப்படுகின்ற மலையில் எமது மாவட்டத்தின் இரு இராஜாங்க அமைச்சர்களின் ஆசீர்வாதத்துடன் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் புதிதாக விகாரை கட்டும் பணி திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளா் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார். மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி காரியாலத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். திட்டமிட்ட அடிப்படையிலே கிழக்கு சிங்கள தேசத்துக்குள் படிப் படியாக கரைந்து கொண்டிருக்கின்றது அம்பாறை. திருகோணமலை மாவட்டம் முழுவதுமாக சிங்கள தேசத்தின் திட்டமிட்ட அபகரிப்பு உட்பட்டு தமிழ் மக்கள் கையில் இருந்து விடுவிக்கப்படுகின்ற மிகப் பெரிய ஆபத்தான நிலைக்கு போயிருக்கின்றது. அதன் அடுத்த கட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இதில் எல்லைப்புற கிராமங்கள் சிங்கள தேசத்தினாலும் பெரும்பான்மை இனத்தவர்களால் குறிவைக்கப்பட்டு எல்லைக் கிராமங்கள் அபகரிக்கும் செயற்பாடுகள் படிபடியாக நடந்தேறிவருகின்றது. அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள வடமுனை கிராமசேவகர் பிரிவிலுள்ள நெலுகல் மலையில் எனப்படுகின்ற குடும்பி மலையின் பின்பகுதியான இந்த மலையில் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் விகாரை கட்டும் பணியை திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது. இந்த பகுதியில் பாரிய கட்டிடம் அமைக்கப்பட்டு அதில் இருந்துகொண்டு கட்டுமானப்பணியில் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன்நோக்கம் கிழக்கு மாகாணத்தை முற்றுமுழுதாக சிங்கள பௌத்த தேசத்துக்குள் கரைப்பதற்கான நடவடிக்கையபக பார்க்கின்றோம் வடக்கில் குருந்தூர்மலை வெடுக்குநாறி மலை, கையகப்படுத்தப்பட்டுள்ள இந்த வேளையிலே கிழக்கு மண் சத்தம் இல்லாமல் பறிபோய் கொண்டிருக்கின்றது. மயிலத்தமடு மேச்சல்தரையில் ரவுண்டப் எனும் புல்லுக்கு அடிக்கும் மருந்தையடித்து மேச்சல் புல்தரைகள் அழிக்கப்பட்டு 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட மேச்சல் தரை காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளது அதேவேளை மகாவலி ஏ வலயத்துக்குரிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு பெரும்பான்மை இனத்தவர்களை குடியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தப் பண்ணையாளா்கள் தொடர்ந்து அச்சுறுத்தி அங்கிருந்து அவர்களை வெளியேற்றுகின்ற நடவடிக்கைகள் கச்சிதமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றது இந்த நடவடிக்கைகளுக்கு யார் காரணம் என்பதை மக்கள் மிகத் தெளிவாக விளங்கிகொள்ள வேண்டும். இந்த மாவட்டத்தில் 2 இராஜாங்க அமைச்சர்கள் இருக்கின்றனர். இவர்களுடைய பணி சிங்கள தேசத்தினுடைய நிகழ்சி நிரலை அமுல்படுத்துவதுதான் இவர்களது நோக்கமாக இருக்கின்றதே தவிர மட்டக்களப்பு மாவட்ட மக்களை பாதுகாக்க எந்தவொரு முன்னேற்றகரவமான செயற்பாடுகளையும் செய்யவில்லை. குறிப்பாக மேச்சல்தரை பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் போக முடியாத சூழ்நிலை காணப்பட்டது அதனை எமது கட்சி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அந்த இடத்துக்கு சென்று அந்த பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் கூட செல்லமுடியாது என்பதை சர்வதேசத்துக்கு அம்பலப்படுயிருந்தார். இந்த நிலையில் கஜேந்திரகுமார் ஏன் இங்கு வரவேண்டும் என பிள்ளையான் நேற்ரூ முன்தினம் கூட்டத்தில் கேட்டிருந்தார். எனவே கஜேந்திரகுமார் இந்த இடத்துக்கு வரவேண்டியதாக இருந்தது. நீங்கள் ஒரு காட்டிக் கொடுப்பை செய்து தமிழ் மக்களை அழிக்கின்ற செயற்பாட்டில் நின்றதனால் அந்த மக்கள் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளை கூப்பிடவேண்டிய அபாய நிலைக்கு இட்டுச் சென்றீர்கள் எனவே அது ஒரு வெக்க கேடான விடயம். இவரின் செயற்பாடுகளை பார்த்தால் தெரியும் தங்களது பக்கற்றுக்களை நிரப்புகின்ற விதமாக தங்களின் அமைச்சுக்கு ஊடாககிடைக்கின்ற வீதிகளை அமைத்து அதில் 15 வீதம் தரகு பணம் பெற்றுக் கொண்டு அதற்கு வக்காளத்து வாங்குகின்ற ஒப்பந்தகாரர்களை பின்னால் வைத்துக்கொண்டு பேச ஒப்பந்தகாரர்கள் கையடிக்கின்ற செயற்பாட்டை மிகக் கச்சிதமாக பிள்ளையான் செய்துவருகின்றாா் என்றும் சுரேஷ் தெரிவித்தாா்.   https://www.ilakku.org/மட்டக்களப்பு-எல்லையில்-ப/
    • ஈரான் ஜனாதிபதியின் ஜனாசா நல்லடக்கம் இன்று sachinthaMay 23, 2024 ஹெலிகொப்டர் விபத்தில் கொல்லப்பட்ட ஈரான் ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர் மற்றும் ஏனையவர்களுக்காக அந்நாட்டு உயர்மட்டத் தலைவர் ஆயதொல்லா அலி காமெய்னி நேற்று தொழுகை நடத்தினார். ஈரானிய கொடி போர்த்திய இறந்தவர்களின் உடல்கள் அடங்கிய பேழைகள் டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டு பெரும் எண்ணிக்கையான மக்களுக்கு முன் உயர்மட்டத் தலைவர் ஜனாஸா தொழுகையை நடத்தினார். ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிர் அப்துல்லாஹியன் மற்றும் மேலும் ஆறு பேர் சென்ற ஹெலி கடந்த ஞாயிற்றுக்கிழமை அசர்பைஜான் நாட்டு எல்லைக்கு அருகில் விபத்துக்குள்ளாகியதில் ஒருவரும் உயிர் தப்பவில்லை. ‘இறைவனே நாம் அவரிடம் நன்மையைத் தவிர வேறு எதனையும் பார்க்கவில்லை’ என்று உயர்மட்டத் தலைவர் பிரார்த்தனையின்போது தெரிவித்தார். தொடர்ந்து அந்த பேழைகள் மக்களால் சுமந்து செல்லப்பட்டதோடு வெளியே ‘அமெரிக்கா ஒழிக’ என்ற கோசமும் எழுப்பப்பட்டது. இந்த இறுதிக் கிரியையில் பல வெளிநாட்டு தலைவர்களும் பங்கேற்றனர். ஈரான் ஜனாதிபதியின் இறுதிக் கிரியை கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் தெற்கு கொராசன் மாகாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அவரது சொந்த ஊரான மஷாத்துக்கு எடுத்து வரப்படவுள்ளது. இன்று (23) மாலை இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.   https://www.thinakaran.lk/2024/05/23/world/62483/ஈரான்-ஜனாதிபதியின்-ஜனாச/
    • இதெல்லாம் ரணிலுக்கு வாக்கு போட சொல்லும் ஒரு யுக்தி , மொக்கு சிங்களவனுக்கு சொல்லும் செய்தி 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.