Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கற்றிருத்தல் வேறு, கற்பித்தற்கலை வேறு : கவிதா (நோர்வே)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கற்றிருத்தல் வேறு, கற்பித்தற்கலை வேறு : கவிதா (நோர்வே)

கற்பித்தல் என்பது ஒரு கலை என்பதை நான் உணர்ந்தபோது நடனத்தில் கற்பித்தலைத் தொடங்கி எட்டு ஆண்டு காலங்கள் கடந்துவிட்டிருந்தது. இந்த எட்டு ஆண்டுகளில் என் மாணவர்களை வருத்தியும் கண்டித்தும் திட்டியும் புரியவைத்தும் அவர்களை உருவாக்கிக் கொண்டிருந்தாலும் அவர்களது கலைத்திறனிலும் சரி வளர்ச்சியிலும் சரி நான் நினைத்த உயரத்தின் அருகிற்கூட நிற்க முடியாமல் போனது யாருடைய பிழை என்பதைத் தெரிந்து கொள்ளாமலேயே எனது கற்பித்தற் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது.

எப்போதும் ஆசிரியர்கள் நாம் சரியாகக் கற்பிக்கின்றோம், மாணவர்கள்தான் புரிந்து கொள்கின்றனர் இல்லை, ஆர்வம் இல்லை, அவர்களுக்கு நேரமில்லை, அதற்குரிய சூழல் இங்கில்லை, பாடசாலைப் படிப்புகள் அதிகமாக இருக்கின்றன என்ற காரணங்களைத் தேடிக்கண்டுபிடித்து எம்மை நாமே சமாதானப்படுத்தி வைத்திருக்கின்றோமே தவிர, ஆசிரியராக எம்மை நாம்; சுயவிமர்சனம் செய்துகொண்டதில்லை. ஒரு ஆசிரியராக நான் செய்த தவறுகளை சுயவிமர்சனம் செய்வதுடன், இந்த கட்டுரை உங்களுக்கும் பயன் தரும் என்றே நம்புகின்றேன்.

சில வருடங்களுக்கு முன்பு இணையத்தளங்களிற் கண்ட சில மாணவியரின் கலை வெளிப்பாட்டினை, திறனை, அவர்களுடைய நேர்த்தியை கண்டபின்; எப்படி இவர்களால் மட்டும் முடிகிறது என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.

புலம் பெயர் தேசங்களில் பலர் கலைகளை கற்றுக் கொண்டாலும், பரீட்ச்சைகளில் சித்தி பெற்று தமக்கென பல பட்டங்களைப் பெற்றுக்கொண்டாலும் அவர்களில் ஒருவருடைய கலைவெளிப்பாடிற்கூட கலைநுணுக்கங்களையோ, ஆர்வத்தினையோ காணமுடிவதில்லை. பரீட்சை முடிந்து தேர்ச்சி பெற்றவுடன் அவர்களுடைய கலையார்வத்திற்கு என்னவாகிறது? ஓடி ஓடி மூச்சுமுட்டி படித்து சித்திபெற்று இவர்கள் கண்டது என்ன? பல நூறு மாணவர்களும் கலைஞராகிவிடுவர் என்ற எதிர்பார்ப்பில்லை என்றாலும் ஒருவர் கூடவா இல்லாமற் போகின்றனர்? கலையை கற்பித்தல் எனும் போது கலையை ஒரு பாடப் பொருளாக்கிக் கற்பிக்கின்றோம். கலையைக் கற்பித்தலென்பது வெறுமனே அதன் இலக்கண விதிகளையும், அமைப்புகளையும் கற்பித்தலன்று, சமூகத்திற்கும் கலைஞர்களுக்கும் மத்தியில் ஏற்படக்கூடய தொடர்பாடல் மொழியை கற்றுக்கொடுத்தலும், இனத்தின் வரலாற்றையும் பண்பாட்டையும் கற்பித்தலுமாகும். நாம் கலை இலக்கண விதிகளாலான கலையின் அமைப்பைக் கற்றுக்கொண்டு, கலையின் உள்ளிருந்து இயங்கும் இனத்தின் வரலாறு, பண்பாடு மற்றும் மாறுபட்ட கலாச்சாரங்களுடன் இணைந்து எம்மை அடையாளப்படுத்தல் என்பதே வளர்ச்சிப்பாதைக்கு இட்டுச்செல்லும் கற்பித்தல் முறையெனலாம்.

சில வருடங்கள் முன்புவரை எனது மாணவர்களும் இப்படித்தான் தேர்வை நோக்கியே தமது கலைப் படிப்பினை மேற்கொண்டு வந்தனர். அனைவருமே மிகச்

சிறந்த மதிப்பெண்களுடன் சித்தியெய்தினர். சிலர் அரங்கேற்றங்களை ஆர்வத்துடன் செய்து முடித்தனர். அவை முடிந்த கையுடன் அவர்களுள் பெரும்பான்மையினர் காணமற் போயினர். அதுவரை ஆர்வத்துடன் தமது குழந்தைகளை இழுத்து வந்து கற்பித்தலை மேற்கொண்ட பெற்றோர்களும் தமது கடமை முடிந்தது என்றும் பிள்ளைகள் கலையிற் புலமை பெற்றுவிட்டனர் என்ற மனத்திருப்தியுடனும் சென்றுவிடுகின்றனர். இந்த நிலைக்கு எமது கலை வாழ்க்கை தள்ளப்படுவதன் காரணம் என்ன, யார், என்ற கேள்விக்குக் கற்பித்தலை மேற்க்கொள்ளும் குருவே முதற்காரணி என்பேன் நான்.

குழந்தைகள் ஒரு கலையை கற்க வரும்போது ஆர்வத்தின் பெயரில், ஒரு தேடுதலில் தான் தன் குருவை நோக்கிச் வருகின்றனர். தம் குழந்தைகைள் ஒரு காலத்திற் இக்கலையினால் பயன் பெறுவர் என்பதைத் தாண்டி தம் குழந்தைகளை அழைத்துவரும் பெற்றோர்கள் சிந்திப்பதில்லை. யாரும் ஒரு அரங்கேற்றத்தை மனதிற் கொண்டோ பரீட்சைகளை நினைத்துக்கொண்டோ வருவதில்லை. அப்படியே வந்தாலும் அவர்களைச் சரியான வழியிற் கொண்டு வழிநடத்திச் செல்வது என்பது கற்பித்தல் தொழிலைக் கொண்ட ஆசிரியர்களிடமே உள்ளது.

ஒரு கலைஞன் தன் துறையில் வெற்றி காண்பவனாயிருக்கிறான் என்றால் அவன் கற்ற கலையின் அத்திவாரம் சரியாக, நேர்த்தியாகப் போடப்பட்டிருக்கின்றது என்பதே முதல் படியாகும். திடமான அத்திவாரம் என்பதே மாணவர்களிடத்தில் தன்நம்பிக்கையையும் அதைத் தொடர்ந்த கலையின்பத்தையும் கொடுக்கும் என்பதை நாம் அறிதல் முக்கியம். அதை எத்தனை ஆசிரியர்கள் சரிவரக் கற்றுகொடுத்திருக்கின்றோம்? அரங்கேற்றம் கண்டு பரீட்சைகளில் சித்தி கண்டு பட்டங்களைக் காவிக் கொண்டிருக்கும் மாணவர்களிடம் கூட அவர்கள் கற்ற முதல் அடியைக் கேட்டால் சரிவரத் தெரியாத நிலையே புலம் பெயர் தேசங்களிற் காணக்கூடியதாக இருக்கிறது. அதற்கான காரணம் ஒவ்வொரு ஆண்டும் பரீட்சையில் சித்தியடைவதற்கான பாடங்களைக் கற்று முதல் வருடத்திற் கற்றவைகளை கைவிடுவதுதான் என்று சொன்னால் இங்கு வாழும் பெரும்பான்மையான ஆசிரியர்கள் முரண்பாடின்றி தலையசைப்பாரகள். சின்ன வட்டத்திற்குள் தாமே தம் கலைகளை இரசித்து இதுதான் கலையென்ற முடிவுடனும், தேடலின்மையுடனும், இதுவே உச்சம் என்று இருக்கும் புலம் பெயர்வாழ் கலைஞர்கள் ஒரு தேர்ந்த கலைஞராக வெற்றி பெற்று வெளிவரமுடியாதவர்களாகவே இருக்கின்றனர். பரீட்சைகளில் சித்தியெத்துவதற்காகவே ஓடிஓடி தம்கலைவாழ்வை முடித்துக்கொள்கின்றனர். இது இப்படியே தொடரும் பட்சத்தில் நாம் உயர்ந்து நிற்கும் கோபுரங்களைப் போல அல்ல சிறு கற்குவியல் அளவுகூட உயரமுடியாதென்ற எனது கருத்து தற்போது மேலும் வலுப்பெற்றிருக்கிறது.

இதில் இருந்து சிறு மாற்றமாவது வேண்டும் என எண்ணி சில வருடங்களுக்குமுன் வரை இருந்த பரீட்சைமுறைக் கலைக்கல்வியை நான் முதலில் உறுதியுடன் கைவிட்டபோது பல திசைகளில் இருந்து அதிருப்தியான பேச்சுகளையும், கேள்விகளையும்;, கேலிகளையும்;, புறக்கணிப்புகளையும் சந்திக்க நேர்ந்தது. எப்போதும் புதியமுயற்சியின் போதும் மாற்றங்களின் போதும் இத்தகைய பேச்சுக்கள், புறக்கணிப்புகளை சந்திக்க நாம் தயாராக இருத்தல் வேண்டும். கடந்த ஆண்டுகளாக பரீட்சையின் மோகத்தில் இருந்த என் வகுப்பறைக்கு அதற்குப் பதிலாக கற்பித்தல் முறையில் திறமைவாய்ந்த நடன ஆசிரியை மட்டுமல்ல தன்னிடமுள்ள அத்தனை மாணவர்களையும் மிகச்சிறந்த கலைஞராக உருவாக்கிக் கொண்டிருக்கும் ஆசிரியை ஒருவரை அழைத்து, அவர் மூலம் எனது மாணவர்களுக்குக் கற்பித்து பார்த்த பின்புதான் இத்தனை வருடங்களாக என் கற்ப்பித்தல் முறையில் இருந்த தவறுகள் பலவும் புரியத்தொடங்கியது.

இந்தப் பட்டறை மூலம் நான் முதலில் தெரிந்துகொண்ட விடயம், ஒரு கலையைக் கற்க மாணவர்களுக்கு இருக்கும் பொறுமையைவிட நூறு மடங்கு பொறுமை ஆசிரியருக்கு அமைந்திருக்க வேண்டும் என்பதுதான். தனது மாணவனுக்கு சொல்லிக்கொடுக்கும் முதற் பாடம் நேர்த்தியாகும் வரை இரண்டாவது படிக்கு நாம் தாவக்கூடாது. நூறு தரம் ஆயிரம் தரம் அல்ல அதற்கு மேலும் அவன் பழகும் முதற் பாடத்தை மீண்டும் மீண்டும் சகிப்புத்தன்மையோடு பார்க்கும், திருத்தும் பொறுமை எமக்கு வருமானால் அதுவே ஒரு ஆசிரியனுக்கு இருக்கக்கூடிய முதல் குரு லட்சணமாகும். இத்தனை நாளாக இதைத்தானா கற்றுக்கொண்டிருப்பது என்று பொறுமைவிட்டுப் போன பெற்றோர்க்கும், குழந்தையின் பொறுமை எல்லைகடந்து விடாத அளவில் சுவாரிசியத்துடனும் நாம் கலையில் போடப்பட வேண்டிய அத்திவாரத்தைப்பற்றிய விபரத்தை அவர்கள் அறிந்து கொள்ளும் படி பேசிப் புரியவைக்குமளவு பொறுமையும், சாமர்த்தியமும் நமக்கு வேண்டும். இந்த அத்திவாரமென்பது ஒரு வருடமோ, இரண்டு வருடமோ அல்லது மூன்று வருடங்களோ தன்னும் ஆகலாம் என்பதை நாம் ஆரம்பிக்கும் குழந்தைக்கும், பெற்றோர்களுக்கும் அறிவிக்கலாம். இருந்தும் தான் கற்கும் கலையில் ஆர்வமில்லாத குழந்தைகளை இனம்கண்டு, அவர்களுடைய ஆர்வம் வேறு எங்கு ஏற்பட்டிருக்கிறது என்பதை அறிந்து அந்த குழந்தையின் பெற்றோரிடம் தெரிவித்தல் நல்ல வழிநடத்தல் ஆகும்.

இப்படியான கற்பித்தல் முறையைக் கடைபிடித்தால் யாரும் கலையைக்கற்க நம்மிடம் வரமாட்டார்கள், வேறு குருவைத் தேடிப்போய்விடுவர் என்ற பயம் இருக்கும்வரை நாம் சிறந்த கற்பித்தலை தரும் குருவாக திகழமுடியாது. புலம் பெயர் தேசங்களில் கலைகளைக் கற்கவரும் மாணவர்களின் தொகையைப் போலவே, கலையைக் கற்று, அதன் பின் ஆசிரியர்களாகி கற்றுக்கொடுப்பவர்களின் தொகையும் பெருகி வருகிறதே தவிர தரமான கலைஞர்களின் எண்ணிக்கை கூடிவிடவில்லை. ஏன்? ஒரு கலைஞனாக இருக்கும் மனத்திருப்தியை இந்த சமூகம் கொடுக்கவில்லைiயா? கலைஞனாக இருக்கக்கூடியவனுக்குக் கிடைக்கக்கூடிய யாவும் மறந்த இன்பஉணரவில் யாருக்கும் விருப்பில்லையா? அல்லது ஆசிரியர்களாகிய நாம் அந்த உணர்வை ஒரு பொழுது கூட ஒரு மாணவனிடம் ஏற்படுத்தவில்லையா?

கற்றபித்தல் என்பது ஒரு கலை. அது இப்படித்தான் இருக்கவேண்டும் என்று கையேடோ விதிமுறையோ இந்த உலகில் யாரிடமும் இல்லை. கற்பித்தல் தனிப்பட்ட ஒவ்வொருவருடைய செய்நேர்த்தி. ஆரம்பத்தில் ஏதோ ஒரு வகையில் தன் கற்பித்தல்முறையைக் கொண்டிருந்தாலும் அனுபவ முதிர்வால் ஆசிரியர்கள் தமக்கென தரமான அணுகுமுறையை உருவாக்க வேண்டும்.

ஒரு கலைஞனாக ஒருவன் அரங்கத்தில் மக்கள் முன் நிற்கிறான் என்றால் அது பெருமைக்குரிய விடயம். இப்போதெல்லாம் ஒரு மருத்துவனாகவோ, ஒரு வக்கீலாகவோ, பொறியியலானகவோ வருவதென்றால் பணம் கொடுத்துக்கூடப் படித்து முடித்துவிடலாம். ஆனால் எத்தனை பணம் கொடுத்தும் ஒரு நல்ல கலைஞனாக முடியாது. கலையை ஒருவன் இன்னொருவனிடம் இருந்து கற்றுக்கொள்ளும் போது அக்கலையின் மாணவனாக இருந்தாலும், தனது தேடுதல் மூலமும் படைப்பாற்றல் மூலமும்தான் ஒரு முழுமையான கலைஞனாகின்றான். அவன் தனக்குள்ளிருந்து தானே சுயம்புவாய் பிறப்பெடுக்கின்றான். தான் கற்பிக்கும் கலையில் ஆத்மார்த்தமான தேடுதலோ, படைப்பாற்றலோ அல்லாத குருவினால் தேடுதற்கலையை தன் மாணவனிடம் உருவாக்க முடியாது. ஒரு ஆசிரியரின் கடமை தான் கற்றதை அப்படியே கற்பிப்பதல்ல, மணவர்களுள் இருக்கும் திறமையை, சிந்தனையை வெளிக்கொணர்வதுதான். ஆசிரியருக்கும் மாணவர்களுக்குமான கருத்தாடல் வெளி உருவாகின்ற போதுதான் உண்மையான கலைதிறனும் அதனூடு நம்பிக்கையும் வெளிப்படும். குருபக்தியைப் போதிக்குமளவு நாம் எமது கலைகளிற் தன்நம்பிக்கையை விதைப்பதில்லை. தன்நம்பிக்கையும் வெற்றியும் கண்ட ஒரு மாணவனிடத்தில் சுயேட்சையாக ஏற்படும் குருபக்தியை பெறும் ஒரு ஆசிரியராக இருப்பதே கற்பித்தற் தொழிலுக்குக் கிடைக்கும் பெரும் வெற்றி. தன்நம்பிக்கையையும், படைப்பாற்றலையும், தேடலையும் ஒரு மாணவனிடத்தில் உருவாக்குவதில் வெற்றி கண்டவர்களே முழமைபெற்ற குருவாகமுடியும்.

இன்றைய உலகமயச் சூழலில் பிரபஞ்பமெங்கும் பரந்து நாம் வாழ்வதும், மொழி, கலை, கலாச்சார நிகழ்வுகளுக்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பதும் காணக்கூடியாதாக இருக்கின்றது. ஒரு இனம் அழியாமற் காப்பதில் மொழி மற்றும் கலை முக்கிய பங்குவகிக்கின்றன. மொழியையும், கலையையும் வெறுமனே கற்றுக்கொள்ளல் மூலம் நாம் எம் அடையாளங்களை வெகுதொலைவிற்கு எடுத்து செல்ல முடியாது. நம் கலையையும் மொழியையும் தொடர்பாடல் கருவியாக்கி அதனூடு தன்நம்பிக்கையை ஏற்படுத்தி மாணவனை கலையில் ஈடுபாடு உள்ளவனாக்குவதே ஒரு ஆசிரியரின் வெற்றியாகும்.

சமூகம் விரும்புவதைக் கொடுப்பவன் அல்ல கலைஞன். எம் சமூகத்திற்கு எது தேவை என்பதை உணர்ந்து அதை அவர்கள் மாற்றும் வண்ணம் கொடுப்பவனை சிறந்த கலைஞனென சமூகத்தில் நாம் இனம்காண முடியும்.

http://inioru.com/?p=30482

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாவலனின் பின்னூட்டம்..

நாவலன்

Posted on 09/22/2012 at 12:16 am

கவிதா,

நீங்கள் தொட்டிருப்பது புலம்பெயர் நாடுகளில் இதுவரை பேசாப் பொருள். பொதுவாக புலம் பெயர் தமிழர்கள் பேச வேண்டிய ஒன்று.

அண்மையில் புலம் பெயர் தமிழர்களின் குழந்தைகள் விழா ஒன்றிற்கு சென்றிருந்தேன். முதலாவது நாடகம் முற்றத்தில் கோலம் போட்டு பொங்குவதாக வருகின்றது. இரண்டாவதாக இலங்கையில் நடக்கும் ஒரு நகைச்சுவை நாடகம். எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். பின்னர் ஒரு குழந்தை பாட்டி வடை சுட்டு விற்ற கதை சொன்னது.

பிறகு ஆட்டுக்குட்டி எந்தன் குட்டி என்ற பாட்டை ஒரு குழந்தை பாடியது. பெற்றோர் குதூகலித்தனர். நிகழ்ச்சி முழுவதும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். குழந்தைகளுக்கு எதுவும் விளங்கியதாகத் தெரியவில்லை. இங்கு பெற்றோரின் மகிழ்ச்சிக்காக குழந்தைகள் சுரண்டப்படுகிறார்கள்.

இவ்வாறான ஒரு சுரண்டலையே பரத நாட்டியம், கர்னாடக சங்கீதம் போன்ற புரியாத புதிர்களை ஐரோப்பிய அமரிக்க நாடுகளில் பிறந்த குழந்தைகளில் திணிக்க முற்படுகிறவர்களும் மேற்கொள்கிறார்கள்.

நீங்கள் உங்களது கலைக் கண்ணிற்கு அழகாகத் தெரியும் முத்திரைகளோடு ஆயிரம் தில்லானாக்களுக்கு நடனமாடினாலும் இங்கு யாருக்கும் புரியப் போவதில்லை. இடக்கையைத் தலையில் ஒரு மாதிரியாக வைத்துக்கொண்டு வலது கையை அகல விரித்து நடந்தால் மன்னர் வருகிறார் என்பீர்கள். யாருக்குத் தேவை இது?

பெற்றோரின் மகிழ்ச்சிக்காக குழந்தைகள் மீதான உங்கள் சுரண்டல் வேதனையானது.

பல நூறு வருடங்களின் முன்னர் மன்னர்கள் சார்ந்த மேட்டுக்குடி சமூகத்திற்காக உருவாக்கப்பட்ட பரத நாடியம், முதலில் மக்கள் சார்ந்த கலைவடிமா என்பது கேள்விக்குரியது. நடனம் குறித்த சில ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்புக்களைக் கற்றுக்கொள்வதற்கு வேண்டுமானால் ஒரு எல்லை வரை இது பயன்படலாம்.

புலம் பெயர் சமூகத்தில் 70 வீதமானவர்கள் தொழிலாளர்கள் என்ற உண்மையைப் பலர் ஒத்துக்கொள்வதில்லை. எஞ்சிய முப்பது வீதத்தில் ஒரு பகுதி, ஐரோப்பிய மேட்டுகுடிகளோடு இணைந்துகொள்ளும். ஏற்கனவே எல்.சுப்பிரமணியத்தின் கச்சேரிக்கு பெருமைக்காகச் சென்று புரியாமல் கைதட்டும் வெள்ளையர் கூட்டத்தோடு இவர்கள் இணைந்து ஐரோப்பியர்கள் ஆகிவிடுவார்கள்.

புறக்கணிக்கத்தக்க இவர்களைத் தவிர, மிகுதிப்பேருக்கு உங்கள் நடனம் அப்பட்டமான சுரண்டல். இதை நீங்கள் உங்களை அறியாமலே மேற்கொள்கிறீர்கள்.

இலங்கையில் வடமோடி, தென்மோடி கூத்து முறைகள் பிரபலமானவை. நோர்வேயில் ரூட்ல் போன்ற உழைக்கும் மக்களின் நடனவடிவங்கள் காணப்படுகின்றன. இவைகளை பரத நாட்டியத்தின் அமைப்புச் சார்ந்த அறிவோடு உழைக்கும் வெளினாட்டவருக்கான நடனமாக ஏன் மாற்றக் கூடாது. பாட்டி வடை சுட்டதற்குப் பதிலால அகதிகளின் அவலத்தை ஏன் கற்பிக்கக்கூடாது?

எட்டு வருடங்களின் முன்னரே இதை நீங்கள் ஆரம்பித்திருந்தால் இன்று புதிய கலை வடிவத்தையே உருவாக்கியிருக்கலாம். அது அமரிக்கக் கறுப்பர்களின் இசைவடிவங்கள் போன்று உலகைத் தொட்டிருக்கும். புலம் பெயர் நாடுகளிலிருந்து விஜை ரிவிக்குப் போய் சினிமாக் கூத்தாடிகளின் அழுக்குப்படிந்த கால்களைத் தொட்டுக் கும்பிடுவதற்கா இத்தனை இழப்புக்களும்?

எனக்குக் கலைக்கண் கிடையாது. எழுதியவற்றில் மனதைப் புண்படுத்தியிருந்தாலோ, தவறுகள் காணப்பட்டாலோ மன்னித்துக்கொள்ளுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கிருபன் அண்ணா நல்ல ஒரு பகிர்விற்கு...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.