Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணா குழுவுடன் அரசும் இணைந்து செயற்படுவதற்கான ஆதாரங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கருணா குழுவுடன் அரசும் இராணுவமும் இணைந்து செயற்படுவதற்கான ஆதாரங்கள் எம்மிடம் உண்டு

கண்காணிப்புக் குழுவின் தலைவர் கூறுகிறார்

கருணா குழுவினரும் அரசாங்கமும் இராணுவமும் இணைந்து செயற்படுகிறார்கள் என்பதை நிரூபிக்க தம்மிடம் போதிய ஆதாரங்கள் உள்ளன என தெரிவித்துள்ள போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் உல்ப் ஹென்றிக்சன், அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே இடம்பெற்று வரும் யுத்தத்தில் இறுதி வெற்றியை எட்டும் வகையில் எந்தவொரு தரப்புமே இராணுவ பலத்தை கொண்டிருக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகமொன்றிற்கு பேட்டியளித்துள்ள அவர் அதில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

கருணா குழுவினர் அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து தான் செயற்படுகின்றனர் என்பதற்கான வலுவான ஆதாரங்கள் எங்களிடமுண்டு. சில சமயங்களில் அவர்கள் அரச படையினருடனிணைந்தும் செயற்படுகின்றனர். இராணுவத்தினரின் முகாமினுள் நடமாடும் கருணா குழு உறுப்பினர்களை நீங்கள் கண்டீர்களேயானால், அவர்கள் இராணுவத்துடன் இணைந்து செயற்படுகின்றனர் என்பதற்கான வலுவான ஆதரமாக அது அமைந்துவிடும்.

தற்போதுள்ள சூழ்நிலையில் கருணா குழுவினரிடமிருந்து ஆயுதங்களைக் களைவதென்பது ஆபத்தான விடயம். இம் முயற்சியில் பாதுகாப்புப் படையினர் இறங்குவார்களேயானால், அது பல சிக்கல்களை தோற்றுவிக்கும். ஏனெனில், அவர்களும் ஆயுதப் பயிற்சி பெற்றுள்ளனர்.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியில் தீர்வு எட்டப்பட முடியும் என நான் நம்பவில்லை. இராணுவ ரீதியில் தீர்வு எட்டப்பட முடியுமாயின், கடந்த 20 வருடங்களாக யுத்தம் புரிந்திருக்கத் தேவையில்லை.

விடுதலைப் புலிகளை போரின் மூலம் வெல்ல முடியாது என முன்னாள் கண்காணிப்பு குழுத் தலைவர் ஹொக்லன்ட் தெரிவித்த கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். புலிகளை வெல்லும் திறன் அரசிற்கு இருக்குமாயின், ஏன் அவர்கள் இதுவரை புலிகளை வெற்றி கொள்ள முடியவில்லை. இதேபோல் அரசாங்கத்தை வெற்றிகொள்ளும் திறனும் புலிகளுக்கில்லை. இதுவே இன்றுள்ள யதார்த்த நிலையென்றார்.

-தினக்குரல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் பகுதியில் கருணா குழு இயங்கவே முடியாது: சிறிலங்காவுக்கு கண்காணிப்புக் குழுத் தலைவர் பதில்

சிறிலங்கா அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதியில்தான் கருணா குழுவினர் இயங்குகின்றனர் என்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதியில் அவர்கள் இயங்கினால் அது தற்கொலையானது என்றும் கண்காணிப்புக் குழுவின் தலைவர் உல்ப் ஹென்றிக்சன் கூறியுள்ளார்.

தங்களது கட்டுப்பாட்டுப் பகுதியில் கருணா குழு இயங்கவே இல்லை என்றும் விடுதலைப் புலிகளின் பகுதியில் அவர்கள் இயங்கக் கூடும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் மற்றும் இராணுவத் தரப்பு தொடர்ந்து கூறிவரும் நிலையில் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் உல்ப் ஹென்றிக்சன் அதை உறுதியாக மறுத்துள்ளார்.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது:

இலங்கை அமைதி முயற்சிகளில் எதிர்மாறான விளைவுகள் ஏற்படுவது குறித்து நாம் கவலை கொள்கிறோம்.

வடக்கு கிழக்கில் நடைபெறும் அனைத்து வகையான வன்முறைகளையும் கண்டிக்கிறோம்.

இனப்பிரச்சனைக்கு இராணுவத் தீர்வு காணமுடியாது. அப்படியான ஒரு தீர்வு காணப்படுமேயானால் கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்டிருக்க வேண்டும்.

தற்போதைய இலங்கை நிலைமைகள் மிகவும் மோசமானது. பொதுமக்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆகையால் இருதரப்பும் எதுவித தாமதமும் இன்றி பேச்சு மேசைக்குத் திரும்ப வேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகளால் சிறிலங்கா இராணுவத்தை இப்போது வெற்றி கொள்ள முடியாது. சிறிலங்கா இராணுவத்தாலும் தமிழீழ விடுதலைப் புலிகளை வெற்றிகொள்ள முடியாது. அப்படியான நிலையில் ஏன் இந்த நாடு இப்படிப்பட்ட சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டும்?

இலங்கைத் தீவில் கருணா குழுவினர் இராணுவத்தினருடன் இணைந்து பல பகுதிகளில் செயற்படுகின்றனர். இது ஆச்சரியமளிக்கிறது.

இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகள் அப்பொறுப்பிலிருந்து விலகுவதான செய்திகள் குறித்து எமக்கு எதுவும் தெரியாது. அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.

சிறிலங்கா இராணுவத்தினர் முன்னரங்க நிலைகளுக்கு நகர்ந்திருப்பதை ஒரு தற்காலிக நிலைப்பாடாகவே கருதுகிறேன். முன்னர் கூறியதுபோல் அரசாங்கம் ஒரு முழுஅளவிலான யுத்தத்துக்குத் தயாராக இல்லை என்று கருதுகிறேன். சிறிலங்கா இராணுவம் அதற்கான பயிற்சிகளில் மோசமாக உள்ளது. போருக்கான நோக்கமும் குறைவானதே.

ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து அச்சத்துடன் வெளியேறி வரும் நிலையில் அரச படைகள் முன்னரங்க நிலைகளை நோக்கி நகர்த்தப்படுவது நிலைமையை மேலும் சிக்கலாக்கும்.

கருணா குழுவினர் நன்கு பயிற்சி மேற்கொண்டவர்கள். அவர்கள் ஆயுதக் களைவினை விரும்பமாட்டார்கள். கருணா குழுவினரது ஆயுதக் களைவு என்பது மிகவும் கடினமானது. அரச படைகள் அத்தகைய ஆயுதக் களைவு நடவடிக்கையை மேற்கொள்ள முனைந்தால் அது பாரிய சிக்கலை உருவாக்கும். ஆகையால் அரசாங்கமானது கருணா குழு ஆயுதக் களைவை மேற்கொள்ளுமா என்பது சந்தேகத்துக்குரியது.

அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து கருணா குழு இயங்குவதற்கான வலுவான தரவுகள் உள்ளன. அக்குழுவினருக்கு சில நேரங்களில் அரச படைகள் ஆதரவளிக்கின்றன. கருணா குழுவைச் சேர்ந்த ஒரு நபர் சிறிலங்கா இராணுவ முகாமுக்குள் செல்கிறார் எனில் அந்த இரு தரப்பினரும் இணைந்து செயற்படுவதாகவே கொள்ள முடியும். அதில் இருவேறு கருத்துக்கள் இல்லை.

கண்காணிப்புக் குழுவில் வடக்கு கிழக்கு முழுமைக்குமான கண்காணிப்புப் பணிகளுக்கு மொத்தம் 60 பேர் மட்டுமே உள்ளனர். இந்த எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாக பேசி வருகிறோம்.

இனப்பிரச்சனை உள்ள பகுதியில் கண்காணிப்புக் குழுவினர் உட்பட எவருமே பாதுகாப்பானவர் அல்ல. விடுதலைப் புலிகளுக்கும் அரச படைகளுக்கும் கண்காணிப்புக் குழுவினர் முதலாவது இலக்காக இருக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

கடந்த வாரம் விடுதலைப் புலிகளின் பதுங்கு குழிகள் மீது சிறிலங்கா இராணுவம் மோர்ட்டார் தாக்குதலை நடத்தியது. அது ஒரு பாரிய யுத்த நிறுத்த மீறல்தான்.

சிறிலங்கா இராணுவத் தளபதிக்கும் படையினருக்கும் இடையே பாரிய தகவல் தொடர்பு இடைவெளி உள்ளது.

மந்துவில் பகுதியில் கண்காணிப்புக் குழுவினர் 30 மணிநேரம் கழித்தே சென்றதாக கூறப்படுவது குறித்த உண்மை நிலை எமக்குத் தெரியாது. கண்காணிப்புக் குழுவினர் நடந்தவற்றை பற்றி கேட்டு அறிய மட்டுமே முடியும். எமது உறுப்பினர்கள் அங்கு சென்றபோது காவல்துறையினர் அங்கு இருந்தனர். ரி௫6 துப்பாக்கிகள் மற்றும் இரத்தக் கறைகள் அப்பகுதியில் இருந்தன. அங்கே எந்த சடலத்தையும் நாம் பார்க்கவில்ல்லை.

கருணா குழுவினர் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இயங்குகின்றனர். அவர்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இயங்குவது என்பது தற்கொலை முயற்சியாகும். கடந்த வாரம் விடுதலைப் புலிகளுக்கும் கருணா குழுவுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் நடந்த மோதல் இதை உறுதிப்படுத்தியுள்ளது என்றார் உல்ப் ஹென்றிக்சன்.

-புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.