Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்ரீலங்கா அரசாங்கத்தைப் பொறுத்தவரை நாங்கள் நிச்சயமாக வெல்லுவ

Featured Replies

ஸ்ரீலங்கா அரசாங்கத்தைப் பொறுத்தவரை நாங்கள் நிச்சயமாக வெல்லுவோம். - தளபதி கேணல் பால்ராஜ் (படங்கள் உள்ளே)

நாம் அனைவரும் ஆயுதம் ஏந்திப் போராடவேண்டிய ஒரு இறுதிக் காலம் வந்துவிட்டது" இவ்வாறு கட்டளைத் தளபதி கேணல் பால்ராஜ் அவர்கள் லெப்.கேணல் நவம் அவர்களின் 17 வது ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்.

இன்றைய சூழலைப்பொறுத்தவரை நான்காம் கட்ட ஈழப்போர் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. என்றுதான் கூறவேண்டும். மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்தபோது தான் ஜதார்த்தவாதி என்று கூறியமையால் அவருக்கான சந்தர்ப்பத்தினை வழங்கியுள்ளோம். ஆனால் அதனை அவர் சரியாகப் பயன்படு;த்திக் கொள்ளவில்லை. பிறேமதாஸ ஆட்சிக்காலத்திலும் இதேபோன்ற படுகொலைகள் கண்மூடித்தனமாக நடைபெற்றன.

நேற்று முன்தினம் கூட ஏதுமறியாத பிஞ்சுகள் கொடூரமான முறையில் படுகொலைசெய்யப்பட்டனர். நாங்கள் இன்று சம பலத்துடன் இருக்கின்றோம்.

இனிவரும் நாட்களில் அனைவரும் வயதுவேறுபாடின்றி ஆயுதம் ஏந்திப் போராடவேண்டிய ஒரு இறுதிக்காலத்துக்குள் வந்துவிட்டோம்.

ஸ்ரீலங்கா அரசாங்கத்தைப் பொறுத்தவரை நாங்கள் நிச்சயமாக வெல்லுவோம். ஸ்ரீலங்காவில் பல இராணுவத்தளபதிகள் வந்துவந்து போகின்றார்கள் ஆனால் எமது மரபுவழி இராணுவத்திற்கு தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள் தான் தலைவராக உள்ளார். அவருடைய காலத்தில் எமக்கான விடுதலை நிச்சயமாகக் கிடைக்கும்.

நாங்கள் அனைவரும் மூன்று மடங்குகளாக உழைக்கவேண்டிய காலமாகவும் தற்ப்பாதுகாப்பிற்க்காக ஆயுதம் ஏந்த வேண்டிய காலமாகவும் இக்காலம் உருவாகியுள்ளது. என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து மூத்த போராளி யோகி அவர்கள் லெப்.கேணல் நவம் அவர்களின் 17ஆம் ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்து கொண்டு நினைவுரையாற்றுகையில் சிங்கள தேசம் எங்களை பலமிழந்தவர்களாக கருதக்கூடாது. அன்று ஆயிரம் வரையான போராளிகள் இருந்தபோது உலகத்தினுடைய வல்லரசுகளில் ஒன்றான இந்தியாவினால் வெல்லமுடியாதுபோனது. இன்று பல்லாயிரம் போராளிகள் உள்ளோம். சிங்கள தேசம் எதனையும் எமக்கு தரப்போவதில்லை எமது மரபு என்பது போராடுவோம். அன்றும் இன்றும் நவீன தொழில்நுட்த்திற்கு ஏற்ப தலைவர் அவர்கள் போராட்டத்தை வளர்த்துச்செல்கிறார்.

லெப்.கேணல் நவம் அவர்கள் மேஜர் பசிலன் அவர்களுடன் போராட்டத்தில் இணைந்து செயற்பட்டவர் உடல் வலுவிழந்த போதும் உறுதி தளராத ஒரு போராளி மணலாற்றுக்காட்டிலே அவரது பணி மிகமுக்கியமானது அன்று இந்தியப்படை ஆக்கிரமிப்புக்காலத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் பாதுகாப்பு லெப்.கேணல் நவம் அவர்களிடம் தான் இருந்தது. அத்துடன் மீள்கட்டுமானம் படைவலு என்பவற்றிற்கும் நவம் தான் காரணமாக இருந்தவர். என யோகி அவர்கள் மேலும் தெரிவித்தார்.

லெப்.கேணல் நவம் அவர்களின் 17வது ஆண்டு நிறைவு நிகழ்வு லெப்.கேணல் நவம் அறிவுக்கூட வளாகத்தில் நேற்று பிற்பகல் 5.00 மணிக்கு நவம் அறிவுக்கூடப் போராளி தமிழன்பு தலைமையில் நடைபெற்றது.

தொடர்ந்து நவம் அறிவுக்கூடப் போராளிகளின் மாவீர வணக்க நடனம் சங்க நாதம் குழுவினரின் கலை நிகழ்வு நவம் அறிவுக்கூடப் போராளிகளின் கவியரங்கம் நாடகம் என்பனவும் நடைபெற்றன. சிறப்புரையினை தளபதி கேணல் பால்ராஜ் அவர்களும் நினைவுரையினை மூத்தபோராளி யோகி அவர்களும் நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில் பொதுமக்கள் தளபதிகள் பொறுப்பாளர்கள் போராளிகள் எனப்பலர் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.

sankathi.com

இணைப்பு : newstamilnet.com

Tuesday, 16 May 2006 USA

http://www.newstamilnet.com/index.php?suba...t_from=&ucat=1&

1533015rv5dp.gif

sneha00072fi.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.