Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யதார்த்தம் புரியாமல் கையாள்வதால் கோட்டைபோகும் சந்தர்ப்பங்கள்

Featured Replies

யதார்த்தம் புரியாமல் கையாள்வதால் கோட்டை போகும் சந்தர்ப்பங்கள்

புலிகளால் மேற்கொள்ளப்பட்ட யுத்த நிறுத்த மீறல்கள் என்று தெரிவித்து புலிகள் மீது குற்றம் சுமத்தி வெளியிடப்பட்ட சில தகவல்கள் குறித்து கடந்த 5 ஆம் திகதி இப்பத்தியில் குறிப்பிட்டிருந்தோம்.

முல்லைத்தீவுக்கும், திருகோணமலைக்கும் இடையில் கடல் வழியாக இலங்கைக் கடற்படை எதிர்ப்பையும் மீறி புலிகள் மேற்கொண்ட கடற் பயணத்தையும்

மட்டக்களப்பு பொலன்னறுவை மாவட்டங்களின் எல்லைப் புறத்தில் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் விடுதலைப் புலிகளின் கொமாண்டோ அணி ஒன்று ஊடுருவி, ஒட்டுப் படையினர் மீது அதிரடித் தாக்குதல் நடத்திய சம்பவத்தையும் அப்போது சுட்டிக்காட்டியிருந்தோம். இந்த இரண்டு யுத்த நிறுத்த மீறல் குற்றச்சாட்டுகளும் விடுதலைப் புலிகளுக்கு எதிராக எழுவதற்குக் காரணமாக இருந்த அடிப்படை அம்சங்களை அந்த ஆசிரிய தலையங்கத்தில் விலாவாரியாக விளக்கியிருந்தோம்.

யுத்த நிறுத்த உடன்பாட்டை அதன் விதிகளின் பிரகாரம் செயற்படுத்துவதில் இலங்கை அரசுத் தரப்பு காட்டிய உதாசீனமும் யுத்த நிறுத்த உடன்பாட்டை மீறும் வகையில் அரசுத் தரப்பு மெத்தனமாகச் செயற்பட்டதுமே இந்த இரு யுத்த நிறுத்த மீறல் நடவடிக்கைகளுக்கும் விடுதலைப் புலிகளைத் தூண்டி வழிப்படுத்தின என்பதையும் தெளிவுபடுத்தியிருந்தோம்.

அது மட்டுமல்ல. இத்தகைய போக்கின் விளைவுகள் எப்படியாக இருக்கும் என்பதையும் அதில் கோடிகாட்ட நாம் தவறவில்லை.

யுத்த நிறுத்த உடன்பாட்டின் கீழ் தனக்குரிய கடப்பாடுகளையும், பொறுப்புகளையும் நிறைவு செய்யாமல், தட்டிக் கழிப்பதோடு அதற்கு முரணாகவும் நடந்து கொள்ளும் தனது போக்குக்காக, இதே போன்ற பல விடயங்களில் புதிய, புதிய படிப்பினைகளைக் கற்றுக் கொள்ள வேண்டிய நிலை அரசுத் தரப்புக்கு தென்னிலங்கைக்கு இனிமேல் ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் அப்போது விளக்கியிருந்தோம்.

அப்படியான புதிய படிப்பினைகளை அரசுத் தரப்பு இப்போது அனுபவத்தில் எதிர்கொண்டு வருவதுதான் யதார்த்தத்தில் நடந்தேறுகின்றது. இதுவரை காலமும் கடலில் விடுதலைப் புலிகளுக்கு உரிமையோ, இறைமையோ இல்லை என்று மார்தட்டிக் கொண்டு, புலிகளின் கடற்போக்குவரத்துக்கு வேண்டு மென்றே இடக்குப்போட்டு வந்த ஆயுதப்படைகளுக்கு இப்போது "செக் மேட்" வைத்திருக்கின்றார்கள் கடற்புலிகள்.

வடக்கு தெற்கு தமிழீழப் பிரதேசங்களுக்கு இடையில் புலிகளின் தளபதிகள் போக்குவரத்துச் செய்வதற்கு வழக்கமாக வழங்கும் ஹெலிக்கொப்டர் வசதியை வழங்க மறுத்ததோடு, புலிகளின் கடல் மார்க்கப் போக்குவரத்துக்குப் பொருத்தமற்ற நிபந்தனைகளை விதித்து அதன் மூலம் நிலைமையைக் குட்டிச் சுவராக்கிய தென்னிலங்கைச் சிங்களம் அதன் பெறுபேறுகளை இப்போதுதான் கட்டியளக்கும் எதிர்கொள்ளும் நிலைக்கு உள்ளாகியிருக்கின்றது; தள்ளப்பட்டிருக்கின்றது.

கடலிலும், வானிலும் புலிகளுக்கு உள்ள உரிமையைப் பார்த்தும் பாராமலும் விட்டுப்பிடிப்பதை விடுத்து, புலிகளிடமிருந்து அந்த உரிமைகளை முழுமையாகப் பறித்து ஏப்பம் விட முயன்ற தென்னிலங்கை, இப்போது புலிகள் கடலிலும், வானிலும் தமது உரிமைகளையும் கடந்து இறைமைகள் குறித்துப் பேசும் நிலைமையை உருவாக்கியிருப்பதால் விழிபிதுங்கி நிற்கின்றது.

கடலில் அரசுப் படைகளின் அசைவியக்கத்தையே முற்றாகக் கட்டிப்போட்டுள்ள புலிகள், கடல் மீதான இறைமை குறித்து ஒரு சர்ச்சையையே கிளப்பி விட்டிருக்கின்றார்கள்.

வடக்கு கிழக்கில் தமிழர் தாயகத்தில் நிலத்தை அண்டிய கடற்பிரதேசத்தைப் பயன்படுத்தும் உரிமையும், இறைமையும் புலிகளுக்கு உண்டோ? இல்லையோ? என்பது வேறு விடயம். ஆனால், அதைப் பயன்படுத்தும் அவசியமும், தேவையும், நியாயமும் புலிகளுக்குக் கட்டாயம் உள்ளது என்று இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு தெளிவுபட உரைத்து விட்டது.

இந்த நியாயத்தை ஏற்றுக் கொண்டு புத்தி சாதுரியமாகக் காய் நகர்த்துவதன் மூலமே யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைத் தக்க வைத்து, மேற்கொண்டு அமைதி முயற்சிகளை முன்நகர்த்தலாம் என்ற யதார்த்தத்தை தென்னிலங்கை அரசு புரிந்து கொள்ள வேண்டும். புலிகள் போன்ற அரசியல், இராணுவ வலிமை மிக்க போராளி அமைப்புக்களைக் கையாளும் தந்திரோபாயம் தெரியாமல், "எடுத்தோம், கவிழ்த்தோம்" என்ற பாணியில் செயல்படுவதால் இலங்கையில் ஜனாதிபதி மஹிந்தர் தலைமையிலான புதிய அரசு பல தவறுகளை இழைத்து, சந்தர்ப்பங்களையும் கோட்டை விட்டு வருகின்றது. இந்த வகையில், அமைதித் தீர்வுக்கான சமாதான முயற்சிகளுக்கான வாய்ப்புகளும்கூட முற்றாக அடி யோடு அடிபட்டுப் போகும் சூழல் உருவாகி வருகின்றமை தெளிவாகப் புலப்படுகின்றது.

நன்றி: உதயன் ஆசிரியர் தலையங்கம்

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இவ்வேளையில் எம் பக்கத்தில் உள்ள சில தவறுகளையும் திருத்திக் கொள்ளவேண்டும். வெறுமனே ஒட்டுப்படைகளைத் தாக்குதல் நடத்தியவர்களாகச் சித்திரிகரிக்கும்போது, குற்றவாளி நிலையில் இருந்து சிறிலங்கா இராணுவம் பாதுகாக்கப்படுகின்றது.

உண்மையில் சிங்கள அரசும் இதையே விரும்புகின்றது. தமிழ்குழுக்களுக்கிடையிலான மோதலாக இதைப் பிரச்சாரம் படுத்துகின்றது. அந்த நிலையை மாற்றி எனி வரும் காலப்பகுதியில் நடக்கும் இராணுவத்தின் தாக்குதல்களை, இராணுவத் தாக்குதலாகவே அடையாளப்படுத்த வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.