Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழத்திற்கு நேரு குடும்பத்தின் ஆதரவு கிடையாது..! - செண்பகத்தார்

Featured Replies

எமது நாட்டின் முதலாவதும் மிக நீண்ட காலம் பிரதமர் பதவி வகித்தவருமான (1947 – 1964) ஜவகர்லால் நேருவின் அரசியல் தந்திரோபாயங்களும் இராணுவ அதிரடி நடவடிக்கைகளும் பாரத தேசத்தின் பாரம்பரியமாக இடம்பெறுகின்றன. அவருடைய பரம்பரையினர் நேரு பாரம்பரியத்தைத் தொடர்ந்து கடைப்பிடிக்கின்றனர்.

சமாதானச் சகவாழ்வு என்ற உன்னதமான பஞ்ச சீலக் கொள்கையை வகுத்தவர் எமது பாரதப் பிரதமராவார். சோவியத் ஒன்றியத்திற்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நிலவிய பனிப் போரின் வெப்பத்தைத் தணிக்க இந்தக் கொள்கை உதவியது. இரு வல்லரசுகளும் அதன் அடிப்படையில் நல்லிணக்கத்தை (Detente) ஏற்படுத்தின என்பது உலகறிந்த உண்மை.

வெளி உலகிற்கு சமாதானப் பிரியராகவும் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்குப் பேச்சு வார்த்தையும் விட்டுக் கொடுப்பும் சிறந்த வழி என்று உலகிற்கு உபதேசம் செய்தவராகவும் இருந்த நேரு அவற்றை சொந்த நாட்டுப் பிரச்சனைகளில் பயன்படுத்தவில்லை என்பதும் உண்மை தான்.

ஜப்பானுக்கும் சீனாவுக்கும் இடையில் சில தீவுகள் தொடர்பான கடும் முறுகல் நிலை அண்மையில் தோன்றியுள்ளது. அதியுச்ச இராணுவ பலமுள்ள சீனா ஜப்பான் நாட்டெல்லைக்கு வெகு தூரத்திலுள்ள இந்தத் தீவுகளைச் அதிரடி நடவடிக்கை மூலம் கைப்பற்றலாம் என்ற அச்சம் ஜப்பான் அரசிடம் நிலவுகிறது.

இதற்கு வரலாற்றில் பல உதாரணங்கள் இருப்பதாக ஜப்பான் கொள்கை வகுப்பாளர்கள் கருதுகின்றனர். 1961ம் ஆண்டு இப்போது இந்திய மாநிலமாகிவிட்ட கோவாவை படை நடவடிக்கை மூலம் நேரு கைப்பற்றினார். கோவா அப்போது போத்துக்கல் நாட்டின் ஆட்சியில் இருந்தது. நேரு செய்ததைப் போல் சீனத் தலைவர்களும் செய்யலாம் என்ற கருத்து பிரபல செய்திச் சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது (Newsweek 08-11-2010).

நேரு பற்றிய தவறான கற்பிதங்கள் மூலம் நாம் எம்மையே ஏமாற்றிக் கொள்கிறோம். “கடந்த 10,000 ஆண்டுகளில் பிறநாடுகள் மீது படையெடுக்காத நாடு இந்தியா” என்று ஒரு பேச்சாளர் 2010 டிசெம்பர் 26ம் நாள் மக்கள் தொலைக்காட்சியின் கனவு மெய்பட வேண்டும் நிகழ்ச்சியில் அடித்துக் கூறினார். கனவு தொடர்பான நிகழ்ச்சி என்றபடியால் அப்படிக் கூறினார் போலும்.

பாரத தேசம் பிரிட்டிசாரிடமிருந்து விடுதலை பெற்றவுடனேயே போரும் தொடங்கிவிட்டது. முதலாவது இந்தியா, பாக்கிஸ்தான் போர் 1947-48ம் ஆண்டுகளில் நடைபெற்றது. காஷ்மீர் பிரச்சனையைச் சுமூகமாகத் தீர்க்க முடியாமல் பாரத தேசம் அழிவுப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. காஷ்மீர் பிரச்சனையை நேரு விட்டுச் சென்ற முதுசொம் என்பதில் தவறில்லை.

வங்கதேசத்தை உருவாக்கிய 1971ம் ஆண்டின் இந்திய –பாக்கிஸ்தான் போர் 1947-48ம் ஆண்டுப் போரின் தொடர்ச்சியாகும். இது மூன்றாவது இந்தியா – பாக்கிஸ்தான் போர். இரண்டாவது இரு நாடுகளுக்கிடையிலான போர் 1965ல் நடைபெற்றது. அப்போது நேருவுக்குப் பிறகு பிரதமரான லால் பகதூர் சாஸ்திரி தலைமைப் பதவியில் இருந்தார்.

ஈழத் தமிழர்கள் வங்கதேசத்தை உருவாக்கிய இந்தியா தமிழீழத்தை நிறுவ உதவுமென ஒரு காலத்தில் மனப்பால் குடித்தார்கள். இப்போது கனவு கலைந்த நிலையில் இந்தியாவை நன்கு இனங்கண்டுள்ளாhகள்;. வங்கதேசப் போர் நடந்த போது இந்தியாவின் பிரதமராக இந்திரா காந்தி இருந்தார்.

வங்கதேசமாக உருவாகிய கிழக்கு பாக்கிஸ்தானுக்குள் இந்தியப் படைகளை அனுப்புவதற்கு இந்திரா காந்தி எடுத்த முடிவுக்குச் சாதகமாக மேற்குப் பாக்கிஸ்தான் விமானப் படை மேற்கு பாக்கிஸ்தானின் கிழக்கு எல்லையிலுள்ள இந்திய மாநில விமான தளங்கள் மீது டிசம்பர் 1971ல் அதிரடித் தாக்குதல் நடத்தியது.

இதைப் போர்ப் பிரகடனமாக ஏற்றுக் கொண்ட இந்திரா காந்தி இந்தியப் படை நடவடிக்கைக்கு உத்தரவிட்டார். மேற்கு பாக்கிஸ்தானையும் அழித்து உலக வரைபடத்தில் இருந்து பாக்கிஸ்தானை நீக்கும் நோக்கம் இந்திரா காந்தியிடம் இருந்தது. பாக்கிஸ்தானின் நட்பு நாடு அமெரிக்கா அதைத் தடுத்தது.

தமிழீழப் போராளி அமைப்புகளுக்கு இந்திய மண்ணில் புகலிடமும் ஆயுதமும் பொருளாதார உதவியும் இந்திரா காந்தி வழங்கியதோடு ஜே.ஆர் ஜெயவர்த்தனா தலைமையிலான இலங்கை அரசுக்கு எதிரான பிரசாரத்தையும் முடுக்கி விட்டார். இதற்கு உள்நோக்கம் இருந்தது.

வங்கதேசத்தில் முக்தி பகினி என்ற ஒற்றைப் போராளி அமைப்பு மாத்திரம் இருந்தது. தமிழீழத்தில் ஒற்றைப் போராளி அமைப்பு இருப்பதை இந்திரா காந்தி அரசு அனுமதிக்கவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்குப் போட்டியாக ஜந்துக்கும் மேற்பட்ட அமைப்புக்களை றா உளவுப் படை உருவாக்கி சகோதரச் சண்டைகளை ஊக்குவித்தது.

இதைப் பிரதமர் இந்திரா காந்தி அறியாமல் இல்லை. தந்தையைப் போல் இந்திராவும் தமிழீழப் போராளி அமைப்புக்களை ஒரு குறிப்பிட்ட தேவைக்காகப் பயன்படுத்த உத்தேசித்தார். இதை இந்திரா காந்தி தமிழீழம் அமைக்க உதவியிருக்கலாம் என்று தவறாக எண்ணுகிறார்கள்.

நேருவின் முன்னுதாரணத்தை இந்திரா பின்பற்றினார் என்பது தான் சரியான விளக்கம். 1949ம் ஆண்டு நிறுவப்பட்ட மாவோ தலைமையிலான சீன அரசிற்கும் நேருவின் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் ஆரம்ப கட்டத்தில் நேர்த்தியாக இருந்தன. 1950ல் சீனப் படைகள் திபெத்துக்குள் நுளைந்து அதைச் சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன.

இது சீனாவை இந்திய இமாலய எல்லைக்கு அருகாமையில் கொண்டு வந்து சேர்த்தது. திபெத் எப்போதும் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடைப்பட்ட நாடாகவே (Buffer State) பிரிட்டிஸ் ஆட்சி காலத்தில் இருந்தது. 1950க்குப் பிறகு நிலமை மாறிவிட்டது.

தீர்க்கப்படாத இந்தியா சீனா இமாலய எல்லைப் பிரச்சனை இன்று போல் அன்றும் இருந்தது. இமாலய எல்லையை நோக்கி வந்த சீனப் படைகளை எதிர்கொள்ள வேண்டிய நிர்பந்தம் இந்தியாவுக்கு இருக்கிறது.

1960ம் ஆண்டு தொடக்கம் சீனா இந்தியா உறவுகள் மோசம் அடையத் தொடங்கின. பாக்கிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளுடன் சீனா நெருக்கமான உறவுகளைப் பேணத் தொடங்கியது. நேபாள மன்னர் மகேந்திரா சீனா பக்கம் சாய்ந்தார். இதை விரும்பாத நேரு மகேந்திராவை இந்தியா பக்கம் இழுக்க ஒரு சூழ்ச்சி செய்தார்.

இளம் நேபாள மாணவர்களைப் புது டில்லிக்கு அழைத்து அவர்களை நேபாள மன்னருக்கு எதிராக ஜனநாயகக் கிளர்ச்சி (Democratic Agitation) செய்யும்படி அறிவுரை வழங்கினார். நேபாளம் திரும்பிய மாணவர்கள் தொடக்கிய ஜனநாயக கிளர்ச்சிகளால் மிரண்டு போன மன்னர் இந்தியா பக்கம் திரும்பினார்.

இந்த விபரம் இந்தியா டுடே என்ற ஆங்கில செய்திச் சஞ்சிகையில் பெட்டிச் செய்தியாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளது. நேபாள மாணவர்களை இந்தியாவுக்கு திருப்பி அழைத்த நேரு அரசு அவர்களைக் காணாமற் போகச் செய்ததாகவும் ஒரு செய்தி அடிபடுகிறது. அந்த இளைஞர்களுக்கு என்ன நடந்தது பற்றி இதுவரை தெரியாமல் இருக்கிறது.

“வரலாறு எனது வழிகாட்டி” என்று சொல்லும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இந்திரா காந்தி மீது பேரன்பும் பெருமதிப்பும் பூண்டிருந்தாலும் அடிமனதில் அவர் பற்றி ஆழ்ந்த சந்தேகம் கொண்டிருந்தார். இதன் காரணமாக அவர் தனித்துவமான தேசியக் கொள்கையை வகுத்து நடைமுறைப் படுத்தினார்.

இலங்கையில் நடப்பவை இந்தியாவை நேரடியாகப் பாதிக்கும் என்று பாராளுமன்றத்தில் பகிரங்கமாகச் சொன்னவர் இந்திரா காந்தி. 1983ம் ஆண்டு இலங்கை அரசு முன்னெடுத்த ஈழத் தமிழர்களுக்கு எதிரான மூர்க்கத்தனமான இன அழிப்பு நடவடிக்கையை இந்திரா காந்தி வன்மையாகக் கண்டித்தார்.

ஆனால் இன அழிப்பிற்குப் பரிகாரத் தீர்வாக தமிழீழத்தை உருவாக்கும் நோக்கம் அவரிடம் இருக்கவில்லை. மேற்கு நாடுகள் பக்கம் சாய்ந்த ஜே.ஆர் ஜெயவர்த்தனா அரசைப் போராளி அமைப்புக்கள் ஊடாக இந்தியா பக்கம் இழுக்கும் திட்டம் அவரிடம் இருந்தது. ஈழத் தமிழர்களுக்குச் சில அரசியல் சலுகைகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கமும் அவரிடம் இருந்திருக்கலாம்.

திருகோணமலைத் துறைமுகம் அமெரிக்கா வசம் விழக்கூடாது என்பதிலும் அங்குள்ள எண்ணைக் குதங்கள் அமெரிக்க நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் வரக்கூடாது என்பதிலும் இந்திரா காந்தி அரசு அக்கறை காட்டியது. நேபாள மன்னரைப் போல் ஜெயவர்த்தனாவையும் வீழ்த்த இந்திரா நகர்வுகளை மேற்கொண்டார்.

ஜெயவர்த்தனா மீது இந்திராவுக்குத் தனிப்பட்ட குரோதம் இருந்தது. இந்திரா காந்தி பதவியிழந்து இருந்த காலத்தில் மொராஜி தேசாய் சிறிது காலம் (1977-79) பிரதமர் பதவி வகித்தார். அந்தக் காலகட்டத்தில் இலங்கை அதிபராக இருந்த ஜெயவர்த்தனா மொராஜி தேசாயை வெளிப்படையாக ஆதரித்தார்.

கொழும்பு அரச விருந்தினராகச் சென்ற மொராஜி தேசாய் இந்திரா காந்தியைத் தரக்குறைவாக விமர்சித்தார். ஜெயவர்த்தனா தனது பங்கிற்கு இந்திரா காந்தியையும் அவருடைய மகன் சஞ்சே காந்தியையும் “பசுவும் கன்றும்” என்று கேலி செய்தார். இது இந்திராவைக் கடுஞ்சினம் கொள்ளச் செய்தது.

இந்திரா காந்தி 1984ம் ஆண்டு ஒக்ரோபர் 31ம் நாள் சீக்கிய மெய்ப்பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு பிரதமர் பதவியேறிய ராஜீவ் காந்தி ஈழத் தமிழர்களுக்கு எதிராகப் போர் புரிய 1987 இந்தியப் படைகளை இலங்கைக்கு அனுப்பினார். சுதந்திர இந்தியாவின் முதலாவது கடல்கடந்த படையெடுப்பாக அது இடம்பெற்றது.

www.Tamilkathir.com

[size=5]நேரு குடும்பம் இந்த உபகண்டத்தின் சாபக்கேடு. [/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.