Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழவிடுங்கள் எங்களை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாழவிடுங்கள் எங்களை

விழுங்கப்படும் பெரு நிலங்களில் ஒன்றாக மாறிக்கொண்டிருக்கிறது கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், நாயாறு கிராமங்கள். அந்த மக்களின் பூர்வீக மண் ஆட்சியுரிமையற்று மாற்றான் கையில் வளம் பெருக்க காத்திருக்கிறது. காப்பாற்ற யாரும் அற்று அழுகிறது அந்த தேசம்.

நீண்ட நாள் அமைதிக்குப் பின்னர் ஒரு புயல் பலமாக அடிக்கத் தொடங்கியுள்ளது. தொடங்கிய இடம் தெரிந்தாலும் முடியும் இடம் எது என்று தெரியாத இந்தப் புயல் ஒரு பகுதி மக்களின் வாழ் நிலையை சீரழித்து விட்டது. அவர்கள் நின்மதியாக உறங்கவில்லை. மன நிறைவோடு உணவருந்தவில்லை. தினம் தினம் திசைகளைப் பார்த்தபடி காற்றின் வேகத்தைக் கவனித்த படி இருக்கிறார்கள்.

அவர்களது எதிர்பார்ப்பு காற்று எந்தப் பக்கம் வீசினாலும் எல்லாவற்றையும் அடித்துச் சென்றாலும் சொந்த மண்ணை மட்டும் ஒன்றும் செய்யாது எங்களிடம் தந்துவிட வேண்டும் என்பதே.

கொக்கிளாய், கொக்குத் தொடுவாய், கருநாட்டுக்கேணி அகிய பிரதேசங்களில் 6 கிராம சேவகர் பிரிவுகள் இயங்குகின்றன. இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்தப் பிரிவுகளில் மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டு விட்டனர்.

மரபார்ந்த சமூகக் கட்டமைப்பைக் கொண்ட இந்த மக்கள் சேனைப் பயிர்ச் செய்கை, பருவ காலப் பயிர்ச் செய்கை என்பவற்றோடு மற்றுமொரு பிரிவினர் கடற்றொழில் சமூகமாகவும் வாழ்ந்து வந்தனர்.

1983 இனக் கலவரத்தின் விளைவோடு இடம்பெயர்ந்த மக்கள் 27 வருடங்களின் பின்னர் 2010 இல் மீண்டும் தமது சொந்த மண்ணைப் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது. அதுவும் இருக்கும் இடத்திற்கு மட்டுமே வேறு இடங்களுக்கு அல்ல.

இவர்கள் வாழ்விடத்தில் மட்டுமன்றி தமது மூத்தோர்களால் பராமரிக்கப்பட்ட குளங்களின் கீழும் நெற் செய்கை மற்றும் பல்லின பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வந்தனர்.

குறிப்பாக வெள்ளக்கல்லடி, சவலாத்துவெளி, இருந்தகாடு, நாயடித்தமுறிப்பு, முந்திரிக்குளம், முருக்கடி, ஆமையன்குளம் உள்ளிட்ட 20 இற்கு மேற்பட்ட சிறு குளங்கள் ஏழாயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் இவர்களுக்கு சொந்தமானவை.

6 கிராம அலுவலர் பிரிவிலும் ஆயிரத்துக்கு அதிகமான குடும்பங்கள் தற்போது வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்களுக்கான பூர்வீக நிலத்தை பயிர்ச் செய்கைக்கு கையளிப்பதிலும் அதற்கான உறுதிப் பத்திரங்களை சமர்ப்பிப்பதிலும் பெரும்பான்மை சமூகத்தினர் பின்னடித்து வருகின்றனர். குறிப்பாக இந்தக் கிராமங்களில் 70 வீதமான மக்கள் விவசாயத்தை வாழ்வாதாரமாகவும் 30 வீதமான மக்கள் கடற்றொழிலை வாழ்வாதாரமாகவும் கொண்டுள்ளனர். ஆனால் இவர்களுக்கு ஒரு வீதம் கூட அவற்றுக்காக அனுமதி வழங்கப்படவில்லை.

மாரியாமுனை, நெருஞ்சிமுனை ஆகிய கடல் பகுதிகளில் இந்த மக்களுக்கு இதுவரை மீன் பிடிப்பதற்கான அனுமதி வழங்கவில்லை. "2 வருடங்களாக தாம் பூர்வீகத் தொழிலில் ஈடுபடும் உரிமை மறுக்கப்பட்ட நிலையிலேயே இங்கு வாழ்ந்து வருகிறோம். அதிகாரிகள் எமது பூர்வீக நிலங்களையும் கடற் பரப்பையும் மீட்டுத் தருவதாக உறுதி கூறினர்.

அதற்காக சிறிது காலம் காத்திருங்கள் என்றும் பக்குவப் படுத்தினர். பொறுமை காத்த எமக்கு இனியும் அதை செய்யமுடியாமல் இருக்கிறது. காரணம் வயிற்றுப் பிழைப்புக்கு நாங்கள் அங்கே போயே ஆக வேண்டும். தொழிலில் ஈடுபட்டே ஆக வேண்டும். இதனைப் புரிந்துகொள்வதற்கு எமது தரப்பில் எந்த அதிகாரிகளும் இல்லை.

பதிலுக்கு அந்த நிலத்தைப் பறித்து பெரும்பான்மை சமூகத்திடம் கொடுத்து விடுவதற்கே சிலர் முயற்சிக்கின்றனர். அதில் எம்மவர்க்கும் பங்கிருக்கிறது என்பதே வேதனையான விடயம்'' என்கிறார் அந்த ஊர் முதியவர் ஒருவர்.

பழமை வாய்ந்த அரசியல் பேசும் இவர் பூர்வீக விவசாயி. தமது மூத்தோர்கள் அந்தக் கிராமங்களில் எவ்வாறு வாழ்க்கையை நடத்தினர். நாங்கள் எவ்வளவு சந்தோசமாக வாழ்ந்தோம் என மீள மீள நினைவுபடுத்தும் அவர் "இவங்களை நாங்கள் ஏதும் தர வேண்டும் என்று நம்பியிருக்கவில்லை கேட்கவில்லை. எங்கட சொந்த நிலங்களை எங்களிட்டை தந்தாலே போதும்.

ஆனால் எவனோ ஒருவனுக்கு தாரை வார்ப்பதற்கு எங்களுக்கு கதை சொல்லுகிறானுகள் இவங்கள்'' என்று தனது ஆதங்கங்களை பேசிக்கொண்டிருந்தார் அந்த முதியவர்.

மேலே குறிப்பிடப்பட்ட கிராமங்கள் 80 களின் பின்னர் முற்றுமுழுதாக பெரும்பான்மை சமூகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. கொக்கிளாய் ஆற்றுக்கு மேற்கு மற்றும் வடக்கு பக்கங்களில் இந்த விவசாய நிலங்கள் இருக்கின்றன.

அவற்றில் பெரும்பான்மை மக்கள் இன்றுவரை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இடம்பெயர்வு காரணமாக மக்கள் அங்கில்லாத சூழலில் அவர்கள் செய்கை பண்ணிய நிலங்களை உரிய மக்களிடம் மீள வழங்குவதற்கு அதிகாரிகள் ஒப்புக்கொண்டிருந்தனர்.

வரும் கால போகத்திலாவது (இப்போது மழை தொடங்கியுள்ளது. பெரும்போக நெற்செய்கைக்காக சிங்களவர்களே அந்த நிலங்களை பண்படுத்த தொடங்கிவிட்டனர்.) நிலங்களை மீட்டு விவசாய நடவடிக்கைக்கு தருவதாக உறுதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால் அது இன்றுவரை நடக்கவில்லை.

83 இன் பின்னர் அகதிகளாக அலைந்து திரிந்த மக்களுக்கு உருப்படியாக ஒரு வீடு இல்லை. சேர்த்து வைத்த சொத்து இல்லை. இனியாவது கஷ்ரப்பட்டு முன்னேறுவதற்கு அவர்களின் சொந்த இடம் அவர்களிடம் இல்லை.

"எங்களை திட்டமிட்டு வெளியேற்றவே சிலர் முயற்சிக்கின்றனர். நாங்கள் இப்போது தொழில் வாய்ப்பை பெறுவதாயின் 38 கிலோ மீற்றருக்கு வெளியே செல்ல வேண்டும். இந்த வலிந்த தொழில் மூலம் எங்களை அந்த இடங்களுக்கே நகர்த்துவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். இதன் மூலம் எமது பூர்வீக நிலங்களை சிங்கள மயமாக்குவதில் அவர்கள் குறியாக உள்ளனர். இதற்காக நிர்வாக பிரிப்புக்களும் இடம்பெற்றுள்ளன.

வெலிஓயா (மணலாறு) பிரதேச செயலகம் இப்போது இயங்கத் தொடங்கிவிட்டது. இவையெல்லாம் திட்டமிட்ட நில அபகரிப்பே'' என்கின்றனர் அந்த மக்கள். சொந்த நிலத்தில் தொழில் செய்ய முடியாத அவலத்தில் வாழும் இந்த மக்கள் கேட்பது தமது பூர்வீக தொழில் இடத்தை மாத்திரமே.

நிவாரணம் தருகிறோம். வாழ்வாதார உதவி செய்கிறோம். வீடு தருகிறோம். காசு தருகிறோம். தொழில் உபகரணம் தருகிறோம் என்றெல்லாம் பேசிக் கொள்பவர்கள் ஏன் எங்கள் சொந்தக் காணிகளை எங்களிடம் தர மறுக்கின்றனர். அதற்காக குரல் கொடுத்தால் நசுக்க முற்படுகின்றனர் என்பதே அந்த மக்களின் ஏக்கமாக உள்ளது.

"நாங்கள் இங்கு மீளக்குடியேற்றப்பட்டுவிட்டதாக சொல்கிறார்கள். உண்மைதான். ஆனால் எங்களை இவர்கள் வாழ்விக்கவில்லை. பதிலாக இன்னும் ஏழைகளாக எவரிடமோ கையேந்துபவர்களாக மாற்றியிருக்கின்றனர்.

இரண்டு வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் ஏக்கமும் பெரு மூச்சுமே வாழ்க்கையாகிவிட்டது.'' இதுவே அந்தக் கிராம மக்களின் கதையாக மாறிவிட்டது.

பசுமையான அந்த நிலங்களில் எந்த உரிமையும் அற்ற எவரோ விளைச்சலை அள்ளிச் செல்ல தினமும் கொட்டாவி விட்டபடி ஏங்குகின்றனர் அந்த மக்கள்.

யாரும் தமக்காக குரல் கொடுக்க இல்லை என்பதையும் அவர்கள் தெளிவாகக் கூறுவதோடு எதிர்கால வாழ்க்கைக்கான எல்லாத் தேடல்களையும் கைவிட்டு எதுவுமே வேண்டாம் செத்துத் தொலைந்துவிடுவோம் என்ற எண்ணமே அந்த மக்களிடம் புரையோடியிருப்பதைக் காணமுடிகிறது.

கிராமம் கிராமமாக விழுங்கப்படும் நிலங்களின் வரிசையில் இந்த மக்களின் வாழ்க்கையும் விழுங்கப்படுகிறது.

http://onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=8485238207689925

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.