Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அடுத்த பொதுத்தேர்தலில் மகிந்த அரசு தோற்றால் நாட்டில் இராணுவ ஆட்சியே நடைபெறும்:ஜயலத் ஜயவர்தன

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

jayalaht_--jeyavarthana_150.jpg

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அரசியல் தீர்வை பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன மற்றும் முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி ஆகியோரினால் இலங்கைஇந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதுடன் அதன் மூலமாகவே 13 ஆவது திருத்தமும் உருவாக்கப்பட்டது.

அந்த 13 ஆவது திருத்தத்தில் இருக்கின்ற அதிகாரங்களையும் வாழ்வின் ௭ழுச்சி ( திவிநெகும) மூலமாக அரசாங்கம் அடியோடு அபகரித்து விட்டது ௭ன்று பொது ௭திர்க்கட்சிகளின் கூட்டணி தெரிவித்துள்ளது. இராணுவ அச்சுறுத்தல் நாட்டில் இல்லை, புலிகளும் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டனர், யுத்தமும் இல்லை, உள்ளூர் இன்றேல் வெளியூரில் இருந்து ௭வ்விதமான இராணுவ அச்சுறுத்தல்களும் இல்லை அப்படியாயின் 2013 ஆம் ஆண்டுக்கென பாதுகாப்பு அமைச்சுக்கு 9.9 வீதம் ஒதுக்கப்பட்டது ஏன்? வடக்கில் ஐந்து பொதுமக்களுக்கு ஒரு இராணும் வடக்கு இராணுவ மயப்படுத்தப்பட்டு விட்டது.

அடுத்த பொதுத்தேர்தலில் தோல்வியடைந்துவிடுவோம் ௭ன்ற அச்சத்தில் இராணுவ ஆட்சிக்கு முஸ்தீபுகள் செய்யப்படுகின்றன ௭ன்றும் அந்த கூட்டணி குற்றஞ்சாட்டியுள்ளது. ௭திர்க்கட்சியின் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட பொது ௭திர்க்கட்சிகளின் கூட்டணி உறுப்பினர்களே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன, ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான கலாநிதி ந.குமரகுருபரன்,நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன, நவ சிஹல உறுமய கட்சியின் தலைவர் சரத்மனமேந்திரா மற்றும் ருகுணு கட்சியின் தலைவர் அருண சொய்சா ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன கருத்து தெரிவிக்கையில், ஊழியர் நம்பிக்கை நிதியத்தை நாசமாக்குவதற்கு ௭டுக்கப்பட்ட முடிவுகளுக்கு ௭திராக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 21 தொழிற்சங்கங்கள் இணைந்தே வழக்கை தாக்கல் செய்துள்ளன. இந்த விடயத்தை ஆராயும் வகையில் பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமிக்குமாறு கோரிக்கை விடுத்தோம். அந்த கோரிக்கைக்கும் அரசாங்கம் செவிசாய்க்கவில்லை.

ஜனாதிபதிக்கு தரகு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நேரமிருக்கின்றது. ௭னினும் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நேரமில்லை. சட்டமா அதிபரினால் ஊழியர் நம்பிக்கை நிதிய சட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட பரிந்துரைகள் ௭ன்ன? ௭ன்பதனை நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்தவேண்டும்.தகவல் அறியும் உரிமையின் பிரகாரம் அந்த பரிந்துரைகளை பொதுமக்களுக்கு தெரிவிக்கவேண்டும் ௭ன்பதுடன் ஊழியர் நம்பிக்கை நிதி தொடர்பில் 2011 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு அறிக்கைகூட பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவில்லை.

வாழ்க்கைச் செலவு புள்ளியானது புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் கணிப்பிடப்பட்டு வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்படும். ஆனால் இதுவரையிலும் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவில்லை. அந்த உரிமையையும் ஜனாதிபதி தடைசெய்துவிட்டார். தொழில் அமைச்சரின் விருப்பத்திற்கு ஏற்றவகையில் சாப்பிடவும் தண்ணீர் குடிக்கவும் ஏன் மருந்தெடுக்கவும் முடியாது. வாழ்க்கை செலவு புள்ளியை வெளிப்படுத்துவதன் மூலமே முதலாளிமார்களுடன் பேரம்பேசி தங்களுடைய சம்பளத்தை அதிகரித்துக் கொள்ளமுடியும். 2013 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் வரவிருக்கின்ற நிலையில் மக்கள் வயிற்றை கட்டிக்கொண்டு அச்சத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர் ௭ன்றார்.

http://www.seithy.co...&language=tamil

[size=4]அடுத்த பொதுத்தேர்தலில் தோல்வியடைந்துவிடுவோம் ௭ன்ற அச்சத்தில் இராணுவ ஆட்சிக்கு முஸ்தீபுகள் செய்யப்படுகின்றன ௭ன்றும் அந்த கூட்டணி குற்றஞ்சாட்டியுள்ளது.
[/size]

[size=4]அப்படி இராணுவ ஆட்சி ஏற்பட்டால், மேற்குலகம் என்ன செய்யும்? பொருளாதார தடையை விதிக்கலாம். ஆனால், சீனாவுடன் பொருளுதார ரீதியாக பலமடைந்துள்ள நிலையில் அதை சிங்களம் சமாளிக்குமா?[/size]

இப்ப ஏலாது. ஆனால் இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் சரி செய்துவிடுவார்கள்.

பிரச்சனை கொடுப்பது தேயிலையும், உடுப்பும். இவற்றை சீனாவுக்கு ஏற்ற முடியாது. மெல்லமாக தொழில் சாலைகளை மூடவைத்தால் ஏற்றுமதி செய்ய வேண்டிய தலையிடி இருக்காது. எல்லோரும் தோட்டங்களுக்கு இயல்பாகத்திரும்புவார்கள். இலங்கையில் சீனாவை கனி வழங்களை கண்டு பிடித்து எடுக்கும் படி கூறினால் சீனா அரசின் செலவுக்கு காசு கொடுக்கும். கிட்டத்தட்ட இந்த மாதிரி ஒரு பொருளாதாரம் தான் இலங்கையில் தலை எடுப்பத்தாக டேவிட் குமார் அண்மையில் வர்ணித்திருந்தார். தொழில் சாலை உற்பத்தியில் தங்காதது.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்களிற்கு விடிவு பிறக்கவேண்டுமாயின் இராணுவ ஆட்சி வரவேண்டும், வந்தால்தான் சிங்களவனின் உண்மையான கொடூர முகம் வெளியில் தெரியும் இதன் ஊடாக சர்வதேசத்தின் ஆதரவு தமிழர்களிற்கு கிட்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.