Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனியும் போர் நிறுத்தம் என்ற கோட்டுக்குள் நிற்க வேண்டுமா?

Featured Replies

மட்டக்களப்பு மாவட்டத்தின் துணைத் தளபதி ரமணன் சிறிலங்கா பேரினவாத அரசின் கூலிப் படைகளும், கூலிப் படைகளுடன் சேர்ந்தியங்கும் ஒட்டுக்குழுக்களின் திட்டமிட்ட நயவஞ்சகத்தனமான தாக்குதலில் வீரச்சாவடைந்துள்ளார். தமிழினம் துக்கத்தில் மூழ்கியுள்ள அதேவேளை போராளிகளை இந்தச் சம்பவம் கொதிப்படைய வைத்துள்ளது. போர் நிறுத்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்ட காலத்திலிருந்து இரத்தத்தையும், தசையையும் இழந்து இழந்து கட்டிக்காத்த பொறுமையைக் கேள்விக் குறியாக்கியுள்ளது.

சேனாதி, வாவா, யோகா, டிக்கான், கௌசல்யன் என எத்தனை போராளிகளை, பொறுப்பாளர்களை விலை மதிக்க முடியாத மாவீரர்களை இழந்து இன்று உயர் மட்ட தளபதிகளில் ஒருவரை இழக்கின்ற நிலைக்குப் போர் நிறுத்த உடன்படிக்கை நிலைமையை மோசமாக்கி விட்டிருக்கின்றது.

தளபதி ரமணன் அவர்கள் தேசியத் தலைவரின் காலத்தில் விடுதலையை வென்றெடுக்க வேண்டும் என்ற உறுதி மிக்க தளத்தில் நின்றவர். தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட கருணா பிரதேச வாதத்தைத் தூண்டித் தமிழ்த் தேசியத்திற்கு எதிராக சதி முயற்சி மேற்கொள்ள முனைந்த போது, கருணாவின் துரோக வலையில் விழாது தேசியத் தலைவரிடம் சென்று பின்னர் தென் தமிழீழ மண்ணையும், மக்களையும் மீட்டெடுத்த தளபதிகளில் ஒருவர்.

பல களம் கண்டு வெற்றிச் சரித்திரம் படைத்து நின்ற ரமணன் அவர்கள் மட்டு. அம்பாறை புலனாய்வுத் துறைப் பொறுப்பாளராக, மாவடி முன்மாரிக் கோட்டத் தளபதியாகப் பதவிகளை வகித்து இறுதியாக மாவட்ட துணைத் தளபதியாகச் செயற்பட்டவர்.

இன்று அவரது இழப்புப் பெரும் சோகத்தையும், துக்கத்தையும் மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. போர்நிறுத்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்ட காலத்திலிருந்து இற்றவரை நடைபெற்று வரும் சம்பவங்கள் ஒவ்வொன்றும் தமிழினத்தின் உரிமைகளைச் சிங்கள இனவாத அரசு தரப்போவதில்லை என்பதையே கோடிகாட்டுகின்றன.

தமிழினம் பலமாக இருப்பது சிங்கள இனவாத சக்திகளுக்கு சவாலான விடயம். தமிழின விடுதலைப் போராட்டம் ஆரம்பமாகாத கால கட்டத்தில் தமிழினம் எவ்வாறு சிங்கள ஏகாதிபத்திய சக்திகளுக்கு அடிமைப்பட்டுக் கிடந்ததோ அதே அடிமை வாழ்வை இப்போது திணிக்க முடியாது சிங்கள அரசு திணறி நிற்கின்றது.

இது நிற்க படுகொலைகளையும், வன்முறைகளையும் கட்டவிழ்த்து விட்டுள்ளது. போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட காலத்திலிருந்து வன்முறைகள் அதிகரித்துச் செல்கின்றன.

தமிழினம் அழிக்கப்படுகின்றது. போராளிகள் ஒட்டுக் குழுக்களாலும், சிங்கள இராணுவத்தாலும் படுகொலை செய்யப்படுகின்றனர். தமிழினம் தமது விடுதலைப் போராட்டத்தின் மூலம் விடுதலையை வென்றெடுக்க வேண்டும் என்ற இலட்சிய வேட்கையைப் போர் நிறுத்த உடன்படிக்கை சிதறடித்து வருகின்றது.

சாதாரணமான அற்ப விடயங்களைக் கடினமாக்கி விட்டுக் கொடுப்பற்ற தன்மையுடன் கடும் போக்கான கொள்கைகளுடன் சிங்கள அரசு செயல்பட்டு வரும் அதேவேளை சர்வதேச சமூகத்துக்குச் சமாதான வேடதாரியாகக் காட்ட முனைகின்றது.

ஜெனீவாப் பேச்சுக்களில் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய ஒட்டுக்குழுக்களின் ஆயுதங்களைக் களைந்து போர் நிறுத்த உடன்படிக்கையைப் பலப்படுத்தாத சிறிலங்கா அரசு இரண்டாம் கட்ட ஜெனீவாப் பேச்சுக்கள் நடைபெறுவதற்கான சூழலைக் கூட உருவாக்காது சிதறடித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது தமிழினம் போர் நிறுத்தம், சமாதானம் என்ற நம்பிக்கையை அடியோடு இழந்து விட்டது. ஒட்டுமொத்தத் தமிழினமும் தேசியத் தலைவரின் காலடியில் அணி திரண்டு விடுதலையை வென்றெடுக்க வேண்டும் என்ற உணர்வும், தற்காப்புப் பயிற்சியின் ஆர்வமும் அதிகரித்துள்ள சூழலில் தளபதி ரமணன் மீதான தாக்குதல் சம்பவம் இன்னும் தமிழ் மக்களைக் கொதிப்படையச் செய்துள்ளது.

எனவே, இந்தத் தாக்குதலுக்கான முழுப் பொறுப்பையும் சிறிலங்கா அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்பதுடன், இச்சம்பவத்தை சர்வதேச சமூகம் பக்கச்சார்பாக நடந்து கொள்ளாது, கண்டிப்பதுடன் தமது நடு நிலைத்தன்மையைப் பேண வேண்டும்.

அதேவேளை இதுவரை காலமும் நடந்த சம்பவங்களை விட தளபதி ரமணன் வீரச்சாவடைந்த சம்பவமானது விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரை இனியும் போர்நிறுத்தம் என்ற கோட்டுக்குள் நிற்க வேண்டுமா? என்ற கேள்வியை நிச்சயம் எழும்பும். சிங்கள அரசு அதிர்ச்சி அடையக் கூடிய வகையில் எதிர்கால கள நிலவரங்கள் இதற்கான பதிலை விரைவில் உணர்த்தும் என்பதில் ஐயமில்லை.

மட்டக்களப்பு ஈழநாதம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.