Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சொல்புத்திக்காரரா கூட்டமைப்பினர்? - மட்டு நேசன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]சொல்புத்திக்காரரா கூட்டமைப்பினர்? - மட்டு நேசன்[/size]

'இம்சை அரசன் 23ம் புலிகேசி' திரைப்படத்தில் அரசி மனோரமாவுக்கு 'இரட்டைக் குழந்தைகள் பிறக்கும்' எனவும் 'மூத்த பிள்ளை சொல்புத்தி - இரண்டாவது பிள்ளை சுயபுத்தி' என ஜாதகத்தைக் கணிக்கும் ஜோதிடர் குறிப்பிடுவார். இதனைக் கேட்கும் மனோரமாவின் சகோதரர் நாசர், சுயபுத்தி உள்ள பிள்ளை இருந்தால் தனது திட்டங்கள் நிறைவேறாது எனக் கருதி அதனைக் கொல்ல ஏற்பாடு செய்வார். சொல்புத்தி உள்ள பிள்ளையை தான் சொல்வதை எல்லாம் கேட்கும் 'மக்கு' இளவரசனாகவே வளர்ப்பார்.

***

சிங்கள மக்கள் குறிப்பாக பௌத்த சிங்களவர்கள் ரணிலை ஆற்றலுள்ள ஒரு தலைவராகக் கருதவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியினரோ அவரை வெற்றியைப் பெற்றுத் தரும் ஒரு வழிகாட்டியாக எண்ணவில்லை. ஆனால் ஓரிரு தரப்பினர் மட்டும் ரணிலின் கயிற்றை அப்படியே விழுங்கிவிட்டு தமிழ் மக்களின் அதிருப்தியை சம்பாதித்து வருகின்றனர். அந்த சொல்புத்திக்காரர்கள் வேறு யாருமல்ல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தான்.

கடந்த பொதுத்தேர்தலில் வடக்குக் கிழக்குக்கு வெளியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் போட்டியிடவில்லை. அப்படிப் போட்டியிட்டிருந்தால் கொழும்பில் ஒரு பிரதிநிதித்துவம் கட்டாயம் கிடைத்திருக்கும். அது தவறியிருந்தாலும் தேசியப் பட்டியல் மூலம் மேலதிக ஆசனங்கள் கிடைக்கும் வகையில் களுத்துறை, கம்பஹா மாவட்ட தமிழ் மக்கள் வாக்களித்திருப்பார்கள். ஆனால் ரணிலின் நட்பு கருதி வடக்குக் கிழக்குக்கு வெளியே போட்டியிடுவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தவிர்த்திருந்தனர்.

'நீ பொரி கொண்டு வா, நான் உமி கொண்டு வருகிறேன். இருவருமாக ஊதி ஊதிச் சாப்பிடலாம்' என்ற கதையாக அரசுக்கு எதிரான தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நண்பர் போல் காட்டிக் கொண்ட ரணில், யாழ்ப்பாணத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் திருமதி விஜயகலா மகேஸ்வரனை நிறுத்தி அரசுக்கு எதிரான வாக்குகளின் ஒரு பகுதியைப் பெற்று தமது பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்திக் கொண்டார். இங்கே மொத்தத்தில் இழக்கப்பட்டது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு ஆசனமே. நட்புக்கு ஒருவழிப் பாதையைக் காட்டிய ரணிலின் தந்திரத்தை தமிழ்த் தலைமையால் இனங்காண முடியவில்லை.

அடுத்த நாடகம் யாழ் மேதின நிகழ்வில் இடம்பெற்றது. காணாமற்போனோரின் உறவுகள், அரசியல் கைதிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் சம்பந்தன் ஐயாவின் கையில் சிங்கக் கொடியைக் கொடுத்து ஆட்டுவித்தார் ரணில். இதன்மூலம் திருமலையில் புலிக்கொடியை ஏற்றிய சம்பந்தனின் கையில் சிங்கக் கொடியை ஏந்தவைத்தவர் நானே என்ற செய்தியை தென்பகுதி மக்களுக்குத் தெரியப்படுத்தினார் ரணில். அப்போதுகூட ரணிலால் ஆட்டுவிக்கப்படும் சொல்புத்திப் பிள்ளைகளாக தாம் இருக்கின்றோமே என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உணரவில்லை. மாறாக, 'பத்ரகாளியின் பக்தன் நான். எனவே தான் சிங்கக் கொடியை ஏந்தினேன்' என்ற சம்பந்தன் ஐயாவின் கூற்றைக் கேட்டு புளகாங்கிதம் அடைந்தனர் அவர்கள்.

அன்று இலங்கையின் சுதந்திர நாளை முன்னிட்டு திருமலை மணிக்கூட்டுக் கோபுரத்தில் சிங்கக் கொடி ஏற்றப்பட்டிருந்தது. இதனைக்கண்டு சினமுற்ற நடராசா என்ற தமிழரசுக் கட்சியின் தொண்டரான லாவோஜி தேயிலை விற்பனை நிலையத்தின் ஊழியர் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தப் போய், சிங்களக் காடையரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமடைந்தார். அன்று யாராவது சிங்கக் கொடி பத்திரகாளியினுடையது என அந்த அப்பாவி இளைஞனுக்கு சொல்லியிருந்தால், அவர் அநியாயமாக உயிரிழந்திருக்க நேர்ந்திருக்காது. தமிழரசுக் கட்சியின் பத்திரிகையான சுதந்திரன், நடராசனை தியாகி என்றே எப்போதும் குறிப்பிட்டு வந்தமை சம்பந்தன் ஐயாவுக்கும் தெரிந்திருக்கும்.

1977 பொதுத் தேர்தலில் திருமலை தேர்தல் தொகுதியில் சம்பந்தன் ஐயா போட்டியிட்டார். இத் தேர்தலில் போட்டியிட்ட சம்பந்தன், ஆனந்தசங்கரி (திரு.கனகரத்தினம் தவிர்ந்த) தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர்கள் தந்தை செல்வாவின் நினைவிடத்தில் 'தமிழீழக் கோரிக்கையை கைவிடமாட்டோம்' என சத்தியப் பிரமாணம் செய்ததை நாம் மறந்து விடுவோம். ஆனால் திருமலையில் சம்பந்தனை ஆதரித்து நடைபெற்ற பெரும்பாலான கூட்டங்களில் உரையாற்றியவர்கள் 'இது நடராஜன் பிறந்த மண்' என்று குறிப்பிட்டார்கள். இதற்கு என்ன அர்த்தம் என சம்பந்தன் ஐயா விளக்கம் தரவேண்டும்.

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற பிரேரணை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சியின் கீழ் செயற்படும் யாழ் மாநகரசபையில் 29.03.12 அன்று ஆளுந்தரப்பினரால் கொண்டு வரப்பட்டது. இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழர் விடுதலைக் கூட்டணியினரும் ஆதரவளிக்க இப்பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இதே பிரேரணை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிர்வாகத்தின் கீழுள்ள காரைநகர் பிரதேசசபையில் கொண்டுவரப்பட்ட போது ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களும் அதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

ஆனால் கொழும்பு மாநகரசபையில் இதே பிரேரணை கொண்டு வரப்படவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்ட போதெல்லாம் ஐக்கிய தேசியக் கட்சியினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை ஐக்கிய தேசியக் கட்சி நடத்தும் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு அழைத்துச் செல்லும் மனோ கணேசன் தலைமையிலான கட்சியினரும் தயங்குகின்றனர். 'இப்பிரேரணையை அங்கே நிறைவேற்ற முடியாது. சிங்களவர்கள் இதனை ஒத்துக் கொள்ள மாட்டார்கள்' என பக்குவமாக எடுத்துரைக்கின்றனர். காரைநகரில் இதே கொள்கைக்கு ஆதரவளிப்போர் ஏன் கொழும்பில் ஆதரவளிக்க முடியாது?

அவர்களையும் சொல்லிக் குற்றமில்லை. நல்லூர் பிரதேசசபைத் தலைவர் வசந்தகுமார் தாக்கப்பட்டதை கண்டித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது ஆளுகைக்கு உட்பட்ட சகல உள்ளூராட்சி சபைகளிலும் தீர்மானம் நிறைவேற்றினர். அவர்களே காரைநகர், கரைச்சி உள்ளிட்ட ஒரு சில சபைகள் தவிர்ந்த ஏனைய சபைகளில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தீர்மானம் கொண்டு வரவில்லை. இதற்காக போய் மண்டையை உடைப்பதைவிட தேங்காயை உடைத்தால் எண்ணெயை ஊற்ற கொப்பராவாவது கிடைக்கும் என அவர்கள் எண்ணியிருக்கலாம். இந்நிலையில் ரணிலிடம் இதை எதிர்பார்க்க முடியாது தான். அவரைப் பொறுத்தவரை யாழ்ப்பாணத்தில் அவர் கலந்து கொள்ளும் கூட்டங்களுக்கு ஆட்கள் தேவை. அதற்கு சுலபமாகக் கிடைக்கக்கூடிய ஏமாளிகள் காணாமற்போனோர் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பத்தினர்தான். இதற்காக கொழும்பு மாநகர சபையில் இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்து சிங்கள பௌத்தர்களின் வாக்குகளை இழக்க அவர் தயாரில்லை. அவருக்கு காரைநகரில் ஏமாந்த தமிழர்களின் வாக்குகளும் வேண்டும். கொழும்பில் பௌத்த சிங்களவர்களின் வாக்குகளும் வேண்டும். மொட்டையும் அடித்து குடும்பியும் கட்ட அவரால் தான் முடியும்.

ஆனால் ரணில் எப்படி உதைத்தாலும் அவரது கரங்களை உதற கூட்டமைப்பினர் தயாரில்லை. இறுதியாக 21.10.12 அன்று கே.பிக்கு எதிராக பொங்கி எழுந்தார் தேசியப் பட்டியல் உறுப்பினர் சுமந்திரன். ஐக்கிய தேசியக் கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் சுமந்திரனும், டாக்டர் ஜயலத் ஜயவர்த்தனவும் நீதியை நிலைநாட்ட தமது ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.

'சர்வதேச இன்ரபோல் பொலிஸாரால் தேடப்படும், எமது பக்கத்து நாட்டில் தேடப்படும் பட்டியலில் உள்ள கொலைக் குற்றங்களைப் புரிந்த குற்றவாளிகளோடு அரசாங்கம் பேசுகிறது. அவ்வாறானவர்களை தமிழ் மக்களின் தலைவர்களாக பலாத்காரமாக திணிப்பதற்கு அரசு முயற்சிகளை எடுத்து வருகின்றது. இதற்கு தமிழ் மக்கள் விரைவில் தமது எதிர்ப்புகளை வெளிப்படுத்துவார்கள்' எனக் குறிப்பிட்டார் சுமந்திரன்.

இதில் சொல்லப்படாத விடயம் என்னவென்றால் இவரது குற்றச்சாட்டுக்கள் 19.05.2009க்கு முன்னர் கே.பியின் செயற்பாடுகள் குறித்தவை என்பதே. யார் விரும்பினாலோ, விரும்பாவிட்டாலோ கே.பிக்கு இந்தப் போராட்டத்தில் முக்கிய பாத்திரம் இருந்தது என்பது உண்மை. அதற்காக கே.பியின் இன்றைய நிலைப்பாடு சரியென்று அர்த்தமல்ல.

ஆனால் இப்போராட்டத்துக்கும் சுமந்திரனுக்கும் என்ன சம்பந்தம்? அவர் ஒரு ஷெல் சத்தம் கேட்டிருப்பாரா? அல்லது பதுங்கு குழிக்குள் வாழும் வாழ்வு வாழ்ந்திருப்பாரா? இன்று ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டு விட்டது. இனிமேல் அது சாத்தியமில்லை என்பது உண்மை. ஆனால் இந்த ஆயுதப் போராட்டத்தினால் உருவான அரசியல் சூழ்நிலைகளின் விளைவாகவே ஒரு வாக்குக்கூடப் பெறாத சுமந்திரன் தமிழரின் பிரதிநிதியாக உலகில் வலம் வருகிறார். கொழும்பில் கிரிக்கெட் விளையாடுகிறார்.

கே.பி துரோகியா இல்லையா என்பதை தமிழ் மக்கள் தீர்மானிக்கட்டும். அவர் குற்றவாளி என்ற சுமந்திரன் எப்படிக் கூறமுடியும்? ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தனது தலைமறைவு வாழ்க்கையை முடித்துக் கொண்டு இலண்டனில் இருந்து நாடு திரும்பிய சில தினங்களில் இரத்மலான பகுதியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றினார்.

'இந்திய விமானங்கள் வடபகுதியில் உணவுப் பொட்டலங்களைப் போட்டன. அதனை சிறிலங்கா விமானப்படை தடுத்து நிறுத்த முன்வராததாலேயே கட்டுநாயக்க படைத்தளம் மீது தாக்குதல் நடத்தினோம்' எனக் குறிப்பிட்டர் அவர். பல்லாயிரம் பேர் முன்னிலையில் ஒப்புதல் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளும் தகுதியைக் கொண்ட ஏ.எஸ்.பி தலைமையிலான பொலிஸார் பாதுகாப்பு வழங்கிய நிலையிலேயே அவர் இவ்வாறு பகிரங்கமாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். இன்று ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட எந்தவொரு ஜே.வி.பி.யினருமே சிறைகளில் இல்லை. கே.பி 18.05.2009க்கு முன் செய்தவற்றுக்காக குற்றவாளி என்றால் சோமவன்சவும் குற்றவாளி தான். இந்தக் குற்றவாளியோடு எத்தனை அரசியல் நிகழ்வுகளில், தேர்தல் தொடர்பான சந்திப்புகளில் சுதந்திரன் கலந்து கொண்டிருப்பார். ஏன் இதுவரை சோமவன்ச அமரசிங்கவைக் கைது செய்ய வேண்டும் என இவர் கோரிக்கை விடுக்கவில்லை. அதுதான் போகட்டும். இவரோடு கூட பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வோரில் இரத்தக்கறை படிந்த கரங்களைக் காணவில்லையா? அவர்கள் புனிதர்களாகி விட்டனரா?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சொல்புத்திக்காரர்கள் என்பதற்கு இன்னொரு உதாரணம் கடந்த 21.10.12 அன்று வெளியான வீரகேசரி வாரவெளியீட்டின் தலைப்புச் செய்தி.

'இனிநாம் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பு இந்தியாவையும், சர்வதேசத்தையுமே சார்ந்ததாகும்' என தெரிவித்துள்ளார் சுமந்திரன்.

>சரி! எப்போது தான் எங்கள் கருத்துக்களை இந்தியாவையோ, சர்வதேசத்தையோ ஏற்கவைக்கப் போகின்றீர்கள்? தமிழருக்கு சுயபுத்தி கதாபாத்திரம் (உத்தமபுத்திரன்) தென்படவே மாட்டாதோ?

ஏற்கெனவே இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் முக்கியஸ்த்தரான பிரிகேடியர் றிஸ்வி சக்கி தலைமையிலான Verite Research எனப்படும் ஆய்வு நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. தனது இனத்தை அழிக்க தீவிரமாகச் செயற்பட்டவர்களிடம் ஆலோசனை கேட்க காசு கொடுக்கும் ஒரு கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தான். உலகில் வேறெந்த கட்சியும் இந்த வரலாற்றைக் கொண்டிருக்கவில்லை.

தந்தை செல்வா சரியாகத் தான் சொன்னார் 'தமிழரை இனி கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்' என்று.<

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=10&contentid=0f93ff1a-4bad-441d-9bc9-e3b4713a3d52

கே.பி துரோகியா இல்லையா என்பதை தமிழ் மக்கள் தீர்மானிக்கட்டும். அவர் குற்றவாளி என்ற சுமந்திரன் எப்படிக் கூறமுடியும்? ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தனது தலைமறைவு வாழ்க்கையை முடித்துக் கொண்டு இலண்டனில் இருந்து நாடு திரும்பிய சில தினங்களில் இரத்மலான பகுதியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றினார்.

[size=4]தானும் குழம்பி ஆய்வு என்று குழப்புகின்றார்.[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.