Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவம்பர் 9 இல் வெளிவருகிறது துப்பாக்கி- என்ன செய்யப்போகிறார் சீமான்?

Featured Replies

மாவீரர் துயிலுமில்லப் பாடலை தனது அரசியல்கட்சியின் கொள்கை விளக்கப்பாடலாகமாற்றி மாவீரர்களை அவமதித்த சீமான் அவர்கள் இன்று தேசியத் தலைவர் அவர்கள் அறிவித்த மாவீரர் வாரத்தை(நவம்பர் 21-27) மாற்றி மாவீரர் மாதமாக அறிவித்து நவம்பர் மாதத்தில் ஒருவரும் கலைநிகழ்வுகள் நடத்தக்கூடாது எனக்கூறுகிறார்.

தன் சுயநல அரசியலுக்காக மாவீரர்களைப் பயன்படுத்தும் சீமான் அவர்கள் இளையராஜாவின் இசைநிகழ்ச்சியை புறக்கணிக்கும்படி கேட்டிருந்தது பழைய செய்தி. புதிய செய்தி, நவம்பர் 9ந்திகதி அவுஸ்திரேலியாவில் தாணு தயாரிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி திரைப்படம் வெளிவருகிறது. அதற்குரிய ரிக்கற்றுக்கள் விற்பனையாகின்றன.

அவுஸ்திரேலியாவில்மட்டும் இதை நவம்பர் 9 இல் வெளியிடமாட்டார்கள் உலகம்பூராகவும் அதே நாள் இத்திரைப்படம் வெளிவரும் என நம்புகிறேன்.

காவலன் திரைப்படம் வெளிவந்தபோது அசின் நடித்ததால் காவலனுக்கெதிராக போராட்டம் நடத்துவதாக அறிவித்த சீமான் விஜயையும் அவரது தந்தையையும் சந்தித்தபின் போராட்டத்தைக் கைவிட்டிருந்தார். அதற்குப்பின்னால் என்ன நடந்தது என்பது ஊரறிந்த ரகசியம். தனது இயக்கத்தில் விஜய் ஒரு படம் நடிப்பார் என உறுதிகொடுத்தபின்பு, போர்க்குற்றவாளி ராஜபக்ச குடும்பத்தத்தை சந்தித்த அசின் நடித்த படத்துக்குரிய தனது எதிர்ப்பைக் கைவிட்டார். இதுதான் சீமானின் பொதுநலம்?

இப்பொழுது சீமான் பிரகடனப்படுத்திய மாவீரர் மாதத்தில் துப்பாக்கி வெளிவருகிறது. இதற்கு சீமான் என்ன செய்யப்போகிறார்? மாவீரர்களின் புனிதப்பாடலை தனது ஓட்டுப்பொறுக்கி அரசியல்கட்சியின் கொள்கை விளக்கப்பாடலாக மாற்றி மாவீரர்களை அவமதித்த சீமான் சொன்னால் எல்லாம் சரியாக இருக்கும் என நம்பும் அவரின் அதிதீவிர விசுவாசிகள் என்ன செய்யப்போகிறார்கள்?

துப்பாக்கி தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்கள் சீமானின் அடுத்த படத்தைத் தயாரிக்கப்போவதால் மாவீரர்மாதத்தில் துப்பாக்கி வெளியிடுவதற்கு விலக்கு அளிக்கப்படலாம்.

இசை நிகழ்ச்சி வேற? திரைப்படம் வேற என சப்பைக்கட்டு கட்ட சீமானின் விசுவாசிகள் தயாராகுங்கள்!

-ஊர்ப்பூராயம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில் சீமான் என்ன கேட்டார் என்ன செய்தார்? செய்யப்போகிறார் என்பதை விட்டு நாம் என்ன செய்யப்போகிறோம்.மாவீரர்கள் சீமனுக்காகவா செத்தார்கள்.நாங்கள் கேட்க வேண்டியதையும் செய்ய வேண்டியதையும் மற்றவனைச் செய்ய விட்டு வேடிக்கை பார்க்கிறோம்.முள்ளி வாய்க்காலில் என் இனமே சாகும் போது மன்மதன் அம்பு பார்க்க அடிபட்ட கூட்டமல்லவா நாங்கள்.எங்கள் இனத்துக்கு வாற இழிவை தடுக்காமல் அவன் என்ன செய்யபோறான் இவன் என்ன புடுங்கப்போறான் என அறிக்கை வேறு.நாங்கள் உருப்படுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் எம்மவர் நிகழ்வுக்கு கருத்தைச் சொல்லுங்கள் பிறகு துப்பாக்கியை பார்ப்போம்

  • தொடங்கியவர்

முதலில் சீமான் என்ன கேட்டார் என்ன செய்தார்? செய்யப்போகிறார் என்பதை விட்டு நாம் என்ன செய்யப்போகிறோம்.மாவீரர்கள் சீமனுக்காகவா செத்தார்கள்.நாங்கள் கேட்க வேண்டியதையும் செய்ய வேண்டியதையும் மற்றவனைச் செய்ய விட்டு வேடிக்கை பார்க்கிறோம்.முள்ளி வாய்க்காலில் என் இனமே சாகும் போது மன்மதன் அம்பு பார்க்க அடிபட்ட கூட்டமல்லவா நாங்கள்.எங்கள் இனத்துக்கு வாற இழிவை தடுக்காமல் அவன் என்ன செய்யபோறான் இவன் என்ன புடுங்கப்போறான் என அறிக்கை வேறு.நாங்கள் உருப்படுவோம்.

மாவீரர்கள் சீமானுக்காக மடியவில்லை. ஆனால் இளையராஜாவின் கனடா நிகழ்ச்சியைப் புறக்கணித்து மாவீரர்களுக்கு எப்படி மரியாதை செய்வது என்பதை இங்கு சில ஈழத்தமிழருக்கு செல்வமணியும் சீமானும்தான் சொல்லித் தரவேண்டிய தேவை இருந்திருக்கிறது.

இங்கு சிலருக்கு சீமானைப்பற்றி எழுதினால் மட்டும் கோபம் பொத்துக்கிட்டு வந்திடுது. அவரின் இரட்டை வேடங்களைப்பற்றி மட்டும் ஒருவரும் பேசக்கூடாது.

  • தொடங்கியவர்

முதலில் எம்மவர் நிகழ்வுக்கு கருத்தைச் சொல்லுங்கள் பிறகு துப்பாக்கியை பார்ப்போம்

மாவீரர் வாரத்தை தவிர்த்து மற்றைய நாட்களில் துப்பாக்கி திரையிடப்படுவதில் தேசியத் தலைவர் அறிவித்த மாவீரர் வாரத்தைப் பின்பற்றுவோருக்கு பிரச்சினை இருக்காது.

ஆனால் புதிய தலைவர் (??????? )சீமானின் சொல்லைக்கேட்டு இளையராஜாவின் நிகழ்ச்சியைப் புறக்கணிக்கக்கோரியோர்தான் இங்கே கருத்துச் சொல்லவேண்டும்.

  • தொடங்கியவர்

முள்ளி வாய்க்காலில் என் இனமே சாகும் போது மன்மதன் அம்பு பார்க்க அடிபட்ட கூட்டமல்லவா நாங்கள்.எங்கள் இனத்துக்கு வாற இழிவை தடுக்காமல் அவன் என்ன செய்யபோறான் இவன் என்ன புடுங்கப்போறான் என அறிக்கை வேறு.நாங்கள் உருப்படுவோம்.

புலம்பெயர் தமிழர்களை குற்றம்சொல்லவதே சிலருக்கு ஒரு fashion ஆகிப்போச்சுப்போல. முள்ளிவாய்க்காலில் நம்மவர்கள் செத்துக்கொண்டிருக்கும்போது புலம்பெயர் தமிழர்கள் வீதியில் இறங்கிப் போராடிக்கொண்டிருந்தார்கள்.

மன்மதன் அம்பு வெளிவந்தது டிசம்பர் 2010. ஆகவே எப்படி அப்படத்தை 2009 ஆண்டில் பார்த்திருக்க முடியும்? (ஆதாரம் http://en.wikipedia.org/wiki/Manmadan_Ambu )

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.