Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஷிரானி மீதான குற்றச்சாட்டுகளை அரசாங்கம் வெளியிட்டது

Featured Replies

இலங்கையின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஷிரானி பண்டாரநாயக மீது அரசாங்கம் கொண்டுவந்துள்ள பதவிநீக்க கண்டன தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் விவரங்களை இலங்கை அரசாங்கம் தற்போது வெளியிட்டுள்ளது.

[size=3][size=4]தனது வருமானத்துக்கும் சொத்துகளுக்கும் அவர் முறையாக கணக்கு காட்டவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.[/size][/size]

தனது அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதன் மூலம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு அவர் அவப்பெயரை ஏற்படுத்திவிட்டார் என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

[size=3][size=4]ஷிரானிக்கு எதிராக மொத்தத்தில் 14 குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.[/size][/size]

[size=3][size=4]சுமார் இரண்டு கோடி ரூபாயை ரொக்கப் பணமாக கொடுத்து ஒரு சொத்து வாங்கப்பட்டுள்ளது. இந்தப் பணம் எங்கிருந்து வந்தது என்று தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை என்பதாக ஒரு குற்றச்சாட்டு அமைந்துள்ளது.[/size][/size]

[size=3][size=4]தேசிய அபிவிருத்தி வங்கியின் கிளை ஒன்றில் ரூபாய் 3 கோடியே 40 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டுப் பணம் இவர் பெயரில் உள்ளது என்பது இன்னொரு குற்றச்சாட்டு.[/size][/size]

[size=3][size=4]அதிகாரிகளிடம் தெரியப்படுத்தாமல் இருபது வங்கிக் கணக்குகள் இவரிடம் உள்ளன என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.[/size][/size]

[size=3][size=4]ஷிரானியின் கணவர் பிரதீப் காரியவாசம் மீது ஊழல் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு கொழும்பில் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது என்பதையும் இந்தக் கண்டனத் தீர்மானம் குறிப்பிடுகிறது.[/size][/size]

[size=3][size=4]ஆனால் நீதிமன்றத்தின் சுதந்திரத்தை ஒடுக்கும் நோக்கில் பொய்யான குற்றச்சாட்டுகள் தலைமை நீதிபதி மீது கொண்டுவரப்படுவதாக அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் கூறுகின்றனர்.[/size][/size]

[size=3][size=4]ஜனாதிபதிக்கும் நீதித்துறையின் உயர்மட்டத்துக்கும் இடையில் கடந்த சில வாரங்களாக முறுகல் நிலை ஏற்பட்டுள்ள ஒரு சூழ்நிலையில், இந்த பதவிநீக்க கண்டன தீர்மானம் கடந்த வியாழனன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.[/size][/size]

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/11/121106_chargesonshirani.shtml

சிராணிக்கு நேரத்திற்கே சொன்னனான் கிரோனிக்கா மாதிரி மூளையை பாவிக்க சொல்லி. இப்போது காலம் கடந்துவிட்டது.

இப்போது காரியவாசம், சிராணிதான் தேசிய அபிவிருத்தி வங்கியை கொள்ளையடித்ததாக சாட்சி சொல்ல போகிறார். இரண்டு கோடி ரூபா தனியாள் கணக்கில் இருந்ததை வங்கித் தலைமை அதிகாரி அறிந்திருக்க வில்லை. இதுதான் சிராணி, தேசிய அபிவிருத்தி வங்கியில், காரியவாசம் அறியாமல் நடத்திய சதி.

இதற்கு பதவி பறிக்கப்பட்ட பின்னர் சிறைக்கும் போக வேண்டும்.

இலங்கையின் மிக மோசமான அமைப்புகளில் ஒன்று நீதித்துறை. தமிழர்களுக்கு எதிரான அனைத்து முயற்சிகளுக்கும் அரசியலமைப்புக்கும் வெளியே போய் தீர்ப்பளித்து இலங்கை அரசின் இனவாத இயந்திரத்தை தொடர்ந்து இயங்க உதவிவருகின்ற அமைப்பு இது. தமிழர்களை கொன்ற, பாதிப்பு ஏற்படுத்திய எவருக்கும் இந்த அமைப்பினூடாக எவ்வித தண்டனையும் வழங்கப்படாததுடன், பாதிக்கப்பட்டவர்களையே தண்டித்து வருகின்ற அமைப்பு. இன்று பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க பின்னிற்கும் மேற்கு இந்த குப்பை அமைப்புக்கு எதிரான அரசின் செயல்களை மட்டும் கேள்வி கேட்கின்றது.....

இனி வரப்போவது யாரோ தெரியாது. ஆனால் சிராணிக்கும், மநிந்தாவுக்குமான போட்டியை நீதிக்கும், சர்வாதிகாரத்திற்குமான போட்டியாக நினைத்து கருத்தெழுதுவது முழுமையான சிந்தனை அல்ல. சிராணியை சந்திரிக்கா சுப்பிரீம் கோட்டு நீதிபதியாக்கும் போதே அவருக்கு தரம் இருக்க வில்லை.

தமிழரை அழிப்பதற்கு ஒரு தளபதியை மகிந்தா தேடிய போது யாழ்ப்பாணத்திலும் மற்றைய இடங்களிலும் கேடுகெட்ட நடத்தைகளில் ஈடுபட்டிருந்த பொன்சேக்கா நல்ல விண்ணப்பதாரியாக கருதப்பட்டார். அதனாலேயே அவர் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார். பதவிக்கும் அவரின் தகமைக்கும் தொடர்பு கிடையாது.

அது போலவே சந்திரிக்காவின் சரத் என் சில்வாவையும் விட கேடு கெட்ட நீதிபதி ஒருவரை தமிழரை அழிக்க, LLRC போர்க்குற்ற விசாரணைகளை நடத்தி உலகத்தை எமாற்ற ஒரு ராஸ்கல் தேவைப்பட்ட போது சிராணி அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார். இந்த சிரரணி பொன்சேக்கா, சரத் சில்வா பாணியிலேயே பதவிக்கு வந்து அதே மாதிரியே பதவியையும் இழக்கிறா. இனி அவர்கள் மாதிரியே தமிழ் உரிமையும் பேசுவா. அவர்கள் மாதிரியே மகிந்தாவை பதவி நீக்க அரசியலிலும் குத்திப்பா.

இவவை இலங்கை நீக்குவதை பார்த்து தமிழீழ தமிழர் கவலைப்பட்டு எழுதுவது போல் எழுதுவது அநாவசியமானது. இவர்களைவிட திருக்குமார் நடேசனுக்கு தமிழ்நாட்டில் அடிவிழுந்த பொது கவலைப்பட்ட தமிழர்கள் பரவாயில்லை.

அதாவது இங்கே நீதிக்கு புதிதாக ஏதும் கேடு நடக்கவில்லை. அதை இறைவன் இன்னொரு திரியில் ஏற்கனவே சுருக்கமாகவும், தெளிவாகவும் சொல்லிவிட்டார்.

Edited by மல்லையூரான்

திவிநெகும சட்டமூலத்தின் ஒரு பிரிவுக்கு கருத்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் – சிறிலங்கா உயர்நீதிமன்றம்

திவிநெகும சட்டமூலம் தொடர்பான சிறிலங்கா உயர்நீதிமன்றத்தின் விளக்கத்தை, சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் சமல் ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

இதன்படி, மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் திவிநெகும சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும் என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

அதேவேளை, இந்த சட்டமூலத்தின் எட்டாவது பிரிவு, கருத்துவாக்கெடுப்பு மற்றும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் சிறிலங்கா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச திவிநெகும சட்டமூலத்தை இரண்டாம் வாசிப்புக்காக இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

http://www.puthinapp...?20121106107252

உயர் நீதிமன்றம் பாராளுமன்றத்திற்கேற்ப இறங்கி வந்திருக்குமாப்போலிருக்கிறது. அதாவது வட மாகாணத்தை எப்போதும் தென் மாகானங்கள் மேவி வாக்களிக்க முடியும். அதாவது 13ம் திருத்தம் பம்மாத்து திருத்தம். சிங்கள மக்கள் அதை எத்திர்த்து வாக்களிப்பார்கள் என்பதால் வடமாகாணத்தை மேவி செல்வதற்கு, ஒதுக்கிவிட்டுவிட்டு தென் மாகாணங்களின் அப்பிப்பிராயத்தை பெறும்படி உயர் நீதிமன்றம் தனது ஆலோசனையை சொல்லுகிறது. .

இப்படி தீர்ப்புக் கூறி தோழி சிராணி தப்பிவிடுவாவோ என்று கவலையாக இருக்கிறது. 13ம் திருத்தம் எங்கு போனாலும் சிராணி தப்பினால் சர்வதேசம் திரும்ப தூங்கப் போய்விடும் என்பதால் சிராணி தப்பக் கூடாது. நாம் முட்டள்களோ இல்லையோ சர்வதேசம் இப்படி முட்டாள்களாக இருகிறர்களே!

Edited by மல்லையூரான்

சிறாணி விலக்கப்பட்டு பிரியாணி பிரதம நீதியரசராக வந்தாலும் தமிழ் மக்களுக்கு எவ்வித பயனும் கிடைக்க போவதில்லை: கையெழுத்துப் போட்ட பிரபா!

பிரதம நீதியரசருக்கெதிராக 14 குற்றச்சாட்டுகளை முன்வைத்து அரசாங்கம் கொண்டுவந்திருக்கும் பிரேரணைக்கு ஆதரவாக கையெழுத்திட வேண்டிய கடமை அரசாங்கத்தில் இருக்கும் தென்னிலங்கை இந்திய வம்சாவளி பாராளுமன்ற உறுப்பினர்களான எங்களுக்கு உள்ளது என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

மேலும்; தெரிவித்ததாவது,

நீதித்துறையில் அரசாங்கம் தலையிடுகிறது என்ற குற்றச்சாட்டை எதிர்கட்சிகள் ஒரு புறம் வைக்க இதில் கைச்சாத்திட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை வசை பாடுவது இன்னொரு புறம் இருக்கின்றது. இந்திய வம்சாவளி தென்னிலங்கை பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அரசாங்கத்தின் மூலமாக கொழும்பு, களுத்துறை பகுதியிலுள்ள பல தமிழ் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யக்கூடிய வாய்ப்பு கிட்டியுள்ளது. பிரதம நீதியரசர் சிறாணி தமது பதவி காலத்திலே தமிழ் அரசியல் கைதிகள் சம்பந்தமாக எவ்வித அக்கறையும் கொண்டதில்லை.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் சிறாணி பண்டாரநாயக்க விலக்கப்பட்டு அதற்காக பிரியாணி பண்டாரநாயக்க வந்தாலும் தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மையும் பயக்கப்போவதில்லை. ஆகவே இவருக்கெதிராக கைழுத்திடுவதன் மூலமாக தமிழ் மக்களுக்கு மேலதிகமாக எதனையாவது அரசாங்கத்தின் மூலமாக பெற்றுக் கொடுக்க முடியுமா என்பதே எனது குறிக்கோளாகும்.

எப்பொழும் எனது நோக்கம் முதலில் தாயைக் கவனிப்போம். பின்பு தாயகத்தைக் காப்போம் என்பதேயாகும். குறிப்பாக தென்னிலங்கையைச் சார்ந்த இந்திய வம்சாவளி பாராளுமன்ற உறுப்பினர்கள் இதில் கைச்சாத்திட்டமையை குறைகூறுபவர்கள் எவரும் 10அடி லயன் காம்பராக்களில் வாழும் கல்வித்துறையிலும், சுகாதார துறையிலும் வீழ்ச்சியடைந்துள்ள எமது மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டுக்கொடுக்க மாற்று வழியை கூற வேண்டும்

http://www.seithy.co...&language=tamil

பிரபாக்கே விளங்கும் சிராணியின் வழக்கு இது. தமிழர்கள் எல்லோரும் விளங்க வேண்டும் இதை. நாம் அரசை அரசின் போக்குக்கு விட்டால் மட்டுமே எமக்கு தீர்வை காண முடியும். விசரனான அரசின் பிரியாணியை பைத்தியகாரரான தமிழர் பறிக்க போக கூடாது.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

[size=4]நீதித்துறையை மேற்கோள் காட்டி எமது பிரச்சனைகளுக்கு சிங்கள தேசத்தால் நீதியான தீர்வு கிடைக்காது என்பதை நாம் பரப்புரை ரீதியாக சுட்டிக்காட்டலாம். [/size]

இலங்கையின் மிக மோசமான அமைப்புகளில் ஒன்று நீதித்துறை. தமிழர்களுக்கு எதிரான அனைத்து முயற்சிகளுக்கும் அரசியலமைப்புக்கும் வெளியே போய் தீர்ப்பளித்து இலங்கை அரசின் இனவாத இயந்திரத்தை தொடர்ந்து இயங்க உதவிவருகின்ற அமைப்பு இது. தமிழர்களை கொன்ற, பாதிப்பு ஏற்படுத்திய எவருக்கும் இந்த அமைப்பினூடாக எவ்வித தண்டனையும் வழங்கப்படாததுடன், பாதிக்கப்பட்டவர்களையே தண்டித்து வருகின்ற அமைப்பு. இன்று பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க பின்னிற்கும் மேற்கு இந்த குப்பை அமைப்புக்கு எதிரான அரசின் செயல்களை மட்டும் கேள்வி கேட்கின்றது.....

[size=5]நாடு கடந்த அரசு போன்றவர்கள் இது போன்ற பல உண்மைகளை வெளிக் கொண்டுவரும் கடப்பாடு உடையவர்கள்.[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.