Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழரின் ஏகோபித்த கருத்து

Featured Replies

வாழ்வியல் உரிமைகளுக்காகவும், அடிப்படைச் சுதந்திரங்களுக்காகவும்-ஏன் தம் இனத்தின் தனித்துவமான இருப்பை உறுதிப்படுத்தவும் வேண்டி-ஈழத் தமிழர்கள் நடத்திவரும் போராட்டத்தின் சரிதம் நீண்டது; நெருக்கடிகள் நிறைந்தது; கொந்தளிப்பான இந்த வரலாற்றுப் பாதையில் தொடர்ச்சியாகக் கொடூரங்களையும், அடக்குமுறை களையும், கொடும் போரையும் எதிர்கொண்டவர்கள் தமிழர்கள். அந்த வரலாற்று ஓட்டத்திலே மற்றொரு மைல் கல்லிலே நாம் இன்று நிற்கின்றோம்.

சுயநிர்ணயத்துக்கான தமிழரின் இந்த அரசியல், இராணுவப் போராட்ட வரலாறு சுமார் ஆறு தசாப்த காலத்துக்கு நீண்டு செல்கின்றது.

இந்தப் படிநிலை வரலாற்றில், வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு வழிமுறைகளில், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான பல்வேறு முயற்சிகளில் தமிழர்களின் தலைமை முழு ஈடுபாட்டுடனும், இதயசுத்தியுடனும் பங்கு பற்றி வந்திருப்பதை உலகம் அறியும்.

ஐம்பதுகளிலும், அறுபதுகளிலும் தமிழர்களின் அரசியல் போராட்டம் அமைதி வழியில்-அஹிம்சை முறையில்-சாத்வீக நெறியில்-மென்முறை வடிவில்-ஜனநாயக நாடாளு மன்றப் பாதையில் சுருக்கமாகக் கூறுவதானால் காந்தீய கொள்கைப் போக்கில்-முன்னெடுக்கப்பட்டது.

சத்தியாக்கிரகம், குந்துமறியல், சட்டமறுப்பு, "ஸ்ரீ' எதிர்ப்பு எனப் பல்வேறு வடிவங்களில் தமிழர்கள் நடத்திய இந்த அமைதி வழிப்போராட்டங்கள் ஆயுத முனையில்-பலாத்காரமாக-அடக்கப்பட்டன. தமது சரித்திரபூர்வத் தாயகத்தில் தம்மைத்தாமே ஆளும் சுயாட்சி வேண்டி -அரசியல் உரிமை கோரி-தமிழ் மக்கள் தொடுத்த அஹிம்சை வழிப்போராட்டங்களை சிங்கள, பௌத்த பேரினவாத அரசுகள் ஆயுதவன் முறை வாயிலாக மிருகத்தனமாக அடக்கி ஒடுக்கின.

தமிழரின் எழுச்சிப் போராட்டங்கள் இராணுவ ரீதியில் அடக்கப்பட்டபோது தமிழர்களுக்கு எதிரான பேரினவாத அடக்குமுறை தீவிரம் பெற்றது. அது, தமிழர்களின் சமூக, பொருளாதார, கலாசார வாழ்வில் ஆழமான பாதிப்புக்களை ஏற்படுத்தி, அவர்களின் மொழியுரிமை, உயர் கல்வியுரிமை, தொழில் உரிமை, வேலைவாய்ப்புரிமை, தமது தாயகத்தில் இனத்தின் தனித்துவ வாழ்வுரிமை போன்றவற்றைப் பறித்தது.

அப்போதுதான்-எழுபதுகளின் நடுப்பகுதியில்தான்-புரட்சிகர இளம் தமிழ்ச் சமுதாயம் வேறு வழியின்றி தமது விடுதலைக்கான போராட்டத்தை ஸ்திரப்படுத்தி முன்னெடுப் பதற்காக ஆயுத வழி நோக்கித் திரும்பியது எனலாம். தமிழ் இளைஞர்களின் இந்த வன்முறை எழுச்சி, ஒழுங்கமைக்கப்பட்ட ஓர் ஆயுதப் போராட்ட வடிவமாகத் தோற்றம் பெற்ற போதுதான், பேரினவாத அடக்குமுறையால் எழுந்த கொடூரங்களின் விளைவுகள் தமிழர் தாயகத்துக்கு வெளியிலும் அதன் கொடூரக் கரங்களை விரிக்கத் தொடங்கியிருப்பதையும் அது சிங்கள தேசத்திலும் சகிக்க முடியாமல் தகிக்கத் தொடங்கியிருப்பதையும், மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதையும் சிங்களத் தலைமைகள் உணர வேண்டிய சூழல் ஏற்பட்டது.

அத்தகைய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இந்தப் பிரச்சினைக்கு அமைதி வழித் தீர்வுக்கு இறங்கி வந்த சிங்களத் தலைமைகள், அந்த சமாதான முயற்சிகளில் நேர்மை சுத்தியுடன் ஈடுபடவில்லை. சிங்கள-பௌத்த-இனவாதப் பொறியில் ஊறிக் கிடக்கும் தென்னிலங்கைத் தலைமைகள் சமாதான முயற்சிகளில் விட்டுக்கொடாத கடும் போக் கைக் கடைப்பிடித்து வருவதால் இந்த முயற்சிகள் எல்லாம் சிக்கலடைந்து முன்னேற்றம் காணாது, முடங்கிப் போயின.

நீதி, நியாயமான அபிலாஷைகளின் அடிப்படையில் உரிமை கோரிய தமிழர்கள், தொடர்ந்து பேரினவாதத்தால் ஏமாற்றப்பட்டதே அமைதி முயற்சிகளின் நிலையான வர லாறாகும்.

இவ்வளவு தோல்விகரமான, ஏமாற்றங்கள் மிகுந்த அனுபவங்களுக்குப் பின்னரும் கூட-தமக்கெனத் தமது தாயகத்தில் தனி அரசுக்கான அடிப்படைக் கட்டுமானங்களை நிறுவி, ஒரு நிழல் அரசையும் தனி நிர்வாகத்தையும் உருவாக்கி, தமக்கென ஒரு தேசிய இராணுவத்தைப் பலமுள்ளதாக ஸ்தாபித்த பின்னரும் கூட-கடந்த நான்கரை ஆண்டுகளாக யுத்தத்தை நிறுத்தி, அமைதி வழித்தீர்வுக்கு வாய்ப்பளித்து, அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு, இணக்க நிலைக்கு இடம் தந்து, தமிழர் தரப்பு பொறுமை பேணுகின்றது என்றால் அதற்கு ஒரேயொரு காரணம்தான் உண்டு. சர்வதேச சமூகத்தின் பங்களிப்பில் இடம்பெறும் இந்த முயற்சிகளிலாவது தமக்கு நீதி, நியாயம் கிடைக்கும் என்று அவர்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்ப்பதுதான் அந்தக் காரணம்.

ஆனால், அந்த நம்பிக்கையும் தளர்ந்து-தகர்ந்து-போகும் சூழ்நிலை இப்போது உருவாகி வருகிறது. தமிழர்களின் ஏக, அதிகார பூர்வப் பிரதிநிதிகளாகவும், தமிழரைப் பாது காக்கும் தேசிய இராணுவமாகவும் இருக்கும் விடுதலைப் புலிகள் மீது இருபத்தியைந்து ஐரோப்பிய நாடுகளின் ஒன்றிணைப்பு அமைப்பான ஐரோப்பிய ஒன்றியம் தடை விதிக்க முயல்வது-அதுவும் இவ்வளவு காலமும் இருந்து விட்டு இலங்கையில் யுத்தம் நிறுத்தப்பட்டு, அமைதி நிலவும் இவ் வேளையில் இந்த நடவடிக்கையை எடுக்க முனைவது இலங்கை விவகாரத்தில் சர்வதேசப் பங்களிப்பினின்றும் தாங்கள் ஒதுக்கப்படுவதும், தனிமைப்படுத்தப்படுவதும் ஆன ஓர் உணர்வையே தமிழர்களுக்குத் தருகின்றது.

அமைதிமுயற்சிகளில் காலங்காலமாக இடம்பெற்றுவந்த ஏமாற்றுதல்களின் ஒரு தொடர் வடிவமாகவே இந்த நடவடிக் கையையும் பார்க்க வேண்டிய நிலைமை தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது.

பௌத்த, சிங்களப் பேரினவாதம் ஏமாற்றிய காலம் போய், அதன் வலையில் சிக்கி- அதன் கயிற்றை விழுங்கி-சர்வதேச சமூகமும் தமிழரை, அவர்களின் நீதியான போராட்டத்தின் பின்னால் உள்ள நியாயங்களைப் புறமொதுக்கி-ஏமாற்ற முயல்வதாகவே தமிழர்கள் நினைக்கின்றார்கள்.

இது விடயத்தில், சர்வதேசத்தின் மனச்சாட்சியைத் தட்டியெழுப்ப கனடாவிலும், ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் எதிர்வரும் திங்களன்று ஒரே நாளில், ஒரே நேரத்தில் புலம் பெயர்ந்த தமிழர்கள் நடத்தவிருக்கும் மாபெரும் எழுச்சி நிகழ்வு, ஈழத் தமிழர்களின் ஏகோபித்த கருத்தைப் பிரதிபலிப்பதாகவும் கூட அமைகின்றது. சர்வதேச சமூகத்துக்கு இது சமர்ப்பணம்.

நன்றி: உதயன் (ஆசிரியர் தலையங்கம்)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.