Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் இளைய சமுதாயத்தின் கல்வி திசைமாறிச் செல்கிறதா

Featured Replies

[size=4]தொன்மைச் சமுதாயத்தில் பெருவெடிப்பு நிகழ்ந்து எங்கு சென்று கொண்டிருக்கின்றது எமது கலாச்சாரமும் மதக் கோட்பாடுகளும்.[/size]

[size=2]

[size=4] யாழ் இளைஞர்களின் இலட்சிய வேட்கையில் அன்று தொட்டு யாழ் மண்ணிற்குப் பெருமை தேடித் தந்த கல்வித்துறை கூட இன்று எம்மைத் தலைகுனிவிற்குக் கொண்டு சென்றுவிடுமோ என ஐயப்பட வேண்டிய சூழ்நிலையில் எமது இளைய சமுதாயம் பயணித்துக் கொண்டிருக்கிறது.[/size][/size]

[size=2]

[size=4]உள்நாட்டு யுத்தத்தால் எமக்கு அடிக்கடி ஏற்பட்ட இடப்பெயர்வு கூட நமக்குப் பல பாடங்களைப் புகட்டியது. ஆனால் நாமோ அந்த இடப்பெயர்வைக் காரணம் காட்டி, எமது திறமைகளையும் மதக் கோட்பாடுகளையும், எமது பாரம்பரிய கலாச்சாரத்தையும், உடைத்தெறிகின்றோம். [/size][/size]

[size=2]

[size=4]இக்கால இளைஞர்களை நல்வழிப்படுத்துவதற்கு எமக்கே நேரம் போதவில்லை. பாவம் அவர்கள் என்ன செய்வார்கள் என்று பெரியோர்களும் நகைக்கின்றார்கள். காரணம் பழைய காலத்திலிருந்து இலட்சிய வேட்கை கல்வியில் ஆர்வம் இக்கால இளைஞர்களுக்கு இல்லையென்பதைக் தெள்ளத் தெளிவாகப் பெரியோர்கள் அறிகிறார்கள்.[/size][/size]

[size=2]

[size=4]யாழ்ப்பாணத்தில் ஆரம்ப காலத்திலிருந்த கல்விமான்கள், அறிவியலாளர்கள், புத்திஜீவிகள் என எல்லோரும் எதைவிட்டுச் சென்றார்கள்?, இளைஞர்களே எம் கலாச்சாரம் பாரம்பரியம் யாழ். மண்ணின் மரபுகள் எல்லாவற்றையும் உடைத்தெறியுங்கள். இணையம் மற்றும் தொலைபேசி என உங்கள் உங்கள் நேரத்தைச் செலவிடுங்கள் என்றா? சொல்லிச் சென்றார்கள். [/size][/size]

[size=2]

[size=4]நம் யாழ் மண்ணில் வாழ்ந்த நம் கவிஞர்கள் எத்தனையோ பேர் எம் மண்ணின் வாசனை பற்றியும் யாழ்ப்பாணத்தின் மகிமை பற்றியும் சொல்லிச் சென்றார்கள் காரணம் அவர்கள் யாழ்ப்பாண மண்ணின் மீது வைத்திருந்த அசையாத நம்பிக்கையையும் எம்மரபுகளைப் பேணிப் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்துடனும் அவர்கள் வாழ்ந்தார்கள்.[/size][/size]

[size=2]

[size=4]இப்போதுள்ள எந்த இளைஞன், யுவதி தனது இலட்சியப் பாதையில் பயனிக்கிறார்கள் என்று சொல்லுமளவிற்கு எம் இளைய சமுதாயத்தின் பாதை தற்போது உடைத்தெறியப்படுகிறது. [/size][/size]

[size=2]

[size=4]ஆம். இலட்சியமற்ற மனிதன் சிறகில்லாத பறவை போலாவான் என்பார்கள். எந்த ஒரு இலட்சியமும் இல்லாமல் பயனிக்கின்றவன் தன் வாழ்வின் பக்கங்களை எப்போதாவது புரட்டிப் பார்க்கும் சந்தர்ப்பம் வந்தே தீரும். அப்போது தான் அவன் தனக்குள் எந்த இலட்சியமும் இல்லை என்பதையும் வசந்தத்தை விட்டு இலையுதிர் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் என்று உணர்வான்.[/size][/size]

[size=2]

[size=4]மேம்பட்ட பட்டப்படிப்பு, தனியார் கல்வி நிலையங்கள் என யாழ். மண் பல்வேறு துறையில் கால் பதிக்கின்றதும் கல்வியியல் நடவடிக்கைகள் விருத்தியடைந்து வருவதும் கண் கூடாகக் காண்கின்றோம். இருந்தும் யாழ். இளைஞர்களின் ஆசையும் ஆர்வக் கோளாறும் மற்றும் இன்றுள்ள சுற்றுலாப் பயணிகளின் வருகையும் எம் இளைஞர் மனதை வெகுவாகப் பாதித்து வருகின்றதை நாம் அறிவோம். இதனால் நம் இளைய சமுதாயம் தீயபாதையில் அதிகமாய் தன் கால் சுவடுகளைப் பதித்துக் கொள்கிறது.[/size][/size]

[size=2]

[size=4]இக்கால இளைஞன் ஆளமாய் சிந்திக்கின்றான். எவ்வாறு வாழ்கிறார்கள் என்ன செய்யலாம். எது நன்மை எது தீமை என்று சொல்லிக் கொண்டே போகலாம். இவ்வாறான இளைஞர்களுக்கு மத்தியிலும் தனது அயராத முயற்சியாலும் யாழ் மண்ணின் பெருமையைச் சிதறடிக்காமல் எடுத்துக்காட்டாய் திகழ்கிறார்கள் என்பதில் ஐயமில்லை. [/size][/size]

[size=2]

[size=4]2010ம் ஆண்டிற்கான இளம் விஞ்ஞானிகள் தெரிவில் இந்துக்கல்லூரி மாணவன் தெரிவு பெற்றதை நாம் மறந்துவிடக் கூடாது. மற்றும் தனது ஆளுமையை நாடகத்துறையில் அளகாக வெளிப்படுத்தி தேசிய ரீதியில் முதலிடம் பெற்றார். [/size][/size]

[size=2]

[size=4]யாழ் பல்கலைக்கழக மாணவி இவ்வாறு அயராத முயற்சியும் பயிற்சியும் பெற்று யாழ் இளைய சமுதாயத்தின் போக்கை மாற்றக்கூடிய திறன் படைத்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். [/size][/size]

[size=2]

[size=5]நம் இளைய சமுதாயம் சமுதாய கலாச்சார மாற்றங்களை எதிர்கொள்ளும் போது அதிலிருந்து தீமைகள் அனுகாதவாறு பாதுகாக்க வேண்டியவர்கள் பெற்றோர்களே.[/size][/size]

[size=2]

[size=4]இக்கால இளம் யுவதிகள் மற்றும் பாடசாலை மாணவிகள் அவர்களின் வாழ்க்கைப் பயணம் செல்லும் பாதை சரியா கலாச்சார மாற்றம் என்ன போரில் ஏற்பட்டு வரும் சீரழிவிற்கு பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இப்போது பெண்களில் 90% பாடசாலை மாணவிகளே. சிறுவயதில் கருத்தரிக்கிறார்கள். இது ஒரு அதிர்ச்சித்தகவல் தான். என்ன செய்வது நம் இளைய சமுதாயம் எதை நோக்கிச் செல்கிறது. யாழ் மண்ணிற்கு இவர்கள் என்ன நன்மை செய்யப் போகிறார்கள்.[/size][/size]

[size=2]

[size=4]யாழ். மண்ணின் தனித்துவம் இப்படியே மங்கிவிடுமா என்ன? ஒரு அரசியலை, எம் யாழ். மண்ணின் தனித்துவத்தை, அழகை, பெருமையை உடைத்தெறியும் நோக்கம் ஒரு அரசியல் தந்திர உபாயமாகக் கூட இருக்கலாம். இருப்பினும் அரசு யாழ். மண்ணிற்கு சுற்றுலாத்துறை கேளிக்கை நிகழ்ச்சிகளை யாழ்ப்பாணத்தில் ஏன் புகுத்த வேண்டும். [/size][/size]

[size=2]

[size=4]ஏன் அடிக்கடி கேளிக்கை நிகழ்ச்சிகளை யாழ் மக்களிற்கு புகுத்த வேண்டும். எங்கு இனப் பிரச்சினையும் கொடூரமும் இருந்ததோ அங்குதான் இவற்றையெல்லாம் செயற்படுத்த வேண்டும். அவர்கள் தான் மகிழ்ச்சியுற்று வாழ்வார்கள். அவர்களுக்கு அது தேவைதான். அது எங்களை மகிழ்ச்சிப்படுத்தும் நிகழ்வல்ல எம்மண்ணின் தனித்துவத்தை அடியோடு பிடுங்கி எறிய சில இராஜதந்திரிகள் போட்ட திட்டம்.[/size][/size]

[size=2]

[size=4]மாற்றம் ஒன்றுதான் மாறாதது. எனினும் நாம் தீயவற்றை நோக்கி எம் கால்கள் பயணிப்பது சற்றுத் தொலைவில் நின்று திரும்பிப் பார்க்கும் போது தான் அறிய முடிகின்றது. ஆரம்ப காலம் முதல் நன்மைகள் குவிந்து கிடக்கும். எம் யாழ். மண்ணின் பெருமை இன்று எங்கே செல்கிறது. இனிமேல் என்ன நடக்கப் போகின்றது. ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் கூட இன்று யாழ். மண் பின் தங்கிச் சென்று கொண்டிருக்கின்றது. ஆரம்பத்தில் பெறுபேறுகள் இருந்த நிலையென்ன இன்றைய நிலைதான் என்ன?.[/size][/size]

[size=2]

[size=4]எந்த தீய சக்தி வந்தாலும் நம் மண்ணின் பெருமையையும் தனித்துவத்தையும் விருத்தியையும் மாறாது நன்மை வழிக் கொண்டு செல்வது இம்மண்ணின் இளைஞர்களாகிய உங்கள் கடமை இளைய சமுதாயம் சென்று கொண்டிருக்கும் பாதையில் தான் யாழ் மண்ணின் பெருமை தங்கியிருக்கிறது என்பதை அக்கால இளைஞர்கள் மனதில் கொள்ள வேண்டிய விடயமாகும்.[/size][/size]

[size=2]

[size=4]எம் இளைய சமுதாயம் கல்வியில் திசை மாறிச் சென்று கொண்டிருக்கிறது என்பதை நாம் அறிவோம். இருப்பினும் எம் தனித்துவத்தை பெருமையை மரபை யார் எரிதணலிட்டு எரிப்பினும் அதனை அழகான இளைய சமுதாயம் பூஞ்சோலைகளாய் மாற்றி எம் யாழ் மண்ணிற்குப் புத்துயிர் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. [/size][/size]

[size=2]

வேலணையூர் பார்த்தீபன். [/size]

http://onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=5613340809240756

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
http://www.youtube.com/watch?feature=player_embedded

Edited by ஜீவா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.