Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயங்கரவாத முத்திரைக்குள் உள் அடங்க இலங்கை அரசுக்கு சகல தகுதி

Featured Replies

பிரபல சிங்கள திரைப்பட இயக்குநர் அசோக கந்தகம `தினக்குரல்' க்கு விசேட பேட்டி

-சோ.ஜெயமுரளி-

`

அக்ஷரய' (A Letter of Fire) எனும் சிங்கள திரைப்படம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பிரபல சிங்கள திரைப்பட இயக்குநர் அசோக கந்தகமவின் இத் திரைப்படத்தில் 12 வயது சிறுவன் ஒருவன் தவறான விதத்தில் சித்திரிக்கப்படுவதாகவும் இது சிறுவர் துஷ்பிரயோக நடவடிக்கையெனவும் கூறி கலாசார அமைச்சர் இத் திரைப்படத்தை இலங்கையில் திரையிட அனுமதிக்க முடியாதென தெரிவித்துள்ளார்.

தணிக்கை சபையால் திரையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள இத் திரைப்படத்தை கலாசார அலுவல்கள் அமைச்சர் மகிந்த யாப்பா அபேயவர்த்தனவின் அதிகாரத்தை பயன்படுத்தி தேசிய திரைப்பட கூட்டுத் தாபனம் தடை செய்ய முயற்சிப்பதாக இயக்குநர் அசோக கந்தகம தெரிவித்தார்.

தென்னிலங்கையை பொறுத்த வரை அசோக கந்தகம ஒரு சர்ச்சைக்குரிய இயக்குநர் இலங்கையின் இன முரண்பாட்டை மையமாக வைத்து பல்வேறு சிங்கள திரைப்படங்களை இயக்கியுள்ள அசோக கந்தகம, சர்வதேச விருதுகளையும் பெற்றுக் கொண்டுள்ளார். தென்னிலங்கை கடும் போக்காளர்களால் மிக மோசமாக விமர்சிக்கப்பட்டு வரும் இவர், அண்மையில் தனக்கு கிடைத்த விருதை பெறுவதற்கு விருது வழங்கும் விழாவுக்கு செல்லவில்லை. இலங்கையில் தமிழர்கள் துன்பப்படுவதை கண்டித்தே இவ் விழாவை கந்தகம புறக்கணித்திருந்தார். தனக்கு விருதாக கிடைத்த பணத் தொகைக்கு புத்தகங்களை வாங்கி இலங்கை அரசினால் எரிக்கப்பட்ட யாழ்ப்பாண பொது நூலகத்திற்கு வழங்கியிருந்தார்.

சிங்கள கடும் போக்காளர்களின் விமர்சனங்களுக்கும் கடும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகியுள்ள அசோக கந்தகம தனது புதிய திரைப்படத்தை எடுத்துள்ளார். `அக்ஷரய' எனும் இத் திரைப்படம் அரசாங்கத்தால் திரையிடுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. "இலங்கையிலுள்ள ஊடகத் துறையினர் தமது கருத்துகளை சுதந்திரமாக வெளியிடுவதில் அச்சுறுத்தலை எதிர்கொண்டிருப்பதாகவும் அதிலோர் அங்கமாகவே தனது புதிய திரைப்படத்திற்கு விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த பிரபல சிங்கள திரைப்பட இயக்குநர் அசோக கந்தகம, இலங்கையில் ஜனநாயகம் என்பது கிடப்பில் போடப்பட்டதோர் வார்த்தையாக மாத்திரமே உள்ளதாகவும் அது நடைமுறையில் செயற்படுத்தப்படும் போதே இலங்கையிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாமெனவும் தெரிவித்தார்.

மக்களின் சொத்தான யாழ்ப்பாண நூலகத்தை எரித்து நாசமாக்கியது அரச பயங்கரவாதத்தின் ஓர் நடவடிக்கையெனவும் அரசாங்கத்துக்கு எதிராக கருத்துகளை வெளியிடும் தமிழ் ஊடகவியலாளர்களே அதிகளவில் கொல்லப்பட்டிருப்பதாகவும் இதற்கு அரசு பொறுப்பேற்க வேண்டுமெனவும் `தினக்குரல்' க்கு வழங்கிய விசேட பேட்டியில் தெரிவித்தார்.

கே:- `அக்ஷரய' என்ற உங்கள் புதிய திரைப்படத்துக்கு கலாசார அலுவல்கள் அமைச்சு தடைவிதித்திருப்பது குறித்து உங்கள் கருத்தென்ன?

ப:- தணிக்கை சபையால் பொதுமக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்பட்ட எனது `அக்ஷரய' என்ற திரைப்படத்தை கலாசார அலுவல்கள் அமைச்சரின் அதிகாரத்தை பயன்படுத்தி தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் திரையிடாமல் தடுப்பதற்கு முயன்று வருகின்றது.`வயது வந்தவர்களுக்கு மட்டும்' என்ற வகைப்படுத்தலின் கீழ் திரையிடுவதற்கு தணிக்கை சபையால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள இத் திரைப்படத்தை திரையிட அனுமதிக்கமாட்டேன் என கலாசார அமைச்சர் தொடர்ச்சியாக ஊடகங்களுக்கு சொல்லி வருகின்றார்.

இலங்கையில் சட்டமொன்று இருக்கிறது.... பொது மக்களின் பார்வைக்காக எந்தவொரு திரைப்படத்தையும் வெளியிடுவதாயின் பொது மக்கள் ஆவண சபையின் அனுமதி அல்லது அங்கீகாரத்தை பெறவேண்டும். அதை நாம் பெற்றிருக்கின்றோம்.எனவே, சட்டரீதியாக அமைச்சரால் இத் திரைப்படத்தை தடைசெய்ய முடியாது. ஏனெனில், ஏற்றுக் கொள்ளப்பட்ட அரச நிறுவகம் ஒன்றின் அனுமதியை இத் திரைப்படம் பெற்றிருக்கின்றது. ஆனால், எனக்கு எதிரானவர்கள் இதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்பதற்காக வேறு வழிகளை கையாண்டு வருகின்றனர். சர்வதேச திரைப்படக் கூட்டுத்தாபனத்தால் தெரிவு செய்யப்பட்ட சிலருக்கு இத் திரைப்படம் காண்பிக்கப்பட்டது. அதில் கேள்விகளை கேட்கக் கூடிய வாய்ப்புகளும் வழங்கப்பட்டிருந்தது. இதற்கு பின்னர் சிலர் தேசிய பெண்கள் மற்றும் பிள்ளைகள் பாதுகாப்பு சபையில், நான் இத் திரைப்படத்தின் மூலம் சிறுவர் துஷ்பிரயோக நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். இது தற்போது கொழும்பு நீதிவான் நீதிமன்றில் வழக்காகவுள்ளது. விசாரணைகள் நடைபெற்றுவருகின்றது.

கே:- உங்களிடம் இதுவரையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதா?

ப:- இல்லை. இதுவரையில் என்னிடம் எதுவித விசாரணைகளையும் மேற்கொள்ளவில்லை. ஆனால், இத்திரைப்படத்தில் பங்குபற்றியுள்ள கலைஞர்கள் விசாரிக்கப்பட்டிருக்கின்றா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.