Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை பாதுகாப்பான நாடு என ஏற்றதனலேயே தஞ்சம் கோரிச் செல்வோரை சர்வதேச நாடுகள் திருப்பியனுப்புகின்றன:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை பாதுகாப்பான நாடு என ஏற்றதனலேயே தஞ்சம் கோரிச் செல்வோரை சர்வதேச நாடுகள் திருப்பியனுப்புகின்றன:

17 நவம்பர் 2012

இலங்கை ஒரு பாதுகாப்பான நாடு என்பதை ஏற்றுக் கொண்டுள்ளதாலேயே இங்கிருந்து தஞ்சம் கோரிச் செல்வோரை சர்வதேச நாடுகள் திருப்பியனுப்ப நடவடிக்கை எடுத்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்குமி டையிலான நல்லுறவு மிகுந்த ஆரோக்கியமாக தொடர்வதாகவும் இது சீனாவுடனான இலங்கையின் நல்லுறவை எவ்விதத்திலும் பாதிக்காது எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

பிரித்தானியா, சுவிஸ்லாந்து உட்பட பல்வேறு நாடுகள் பெரும் எண்ணிக் கையான இலங்கையர்களை திருப் பியனுப்பியுள்ளன. இலங்கை பாது காப்பான நாடு என்பது உறுதிப் படுத்தப்பட்டிருப்பதாலேயே அந்த நாடுகள் இலங்கையர்களைத் திருப் பியனுப்பி வருகின்றன.

வரவு செலவுத் திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான ஆறாவது நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கையில் சமாதானத்தையும், நிலைப்புத் தன்மையையும் உறுதிப்படுத்த அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கை களை பல வெளிநாடுகள் வரவேற்று பாராட்டியுள்ளன. இலங்கை பாதுகாப் பான, அமைதி நிலவும் நாடு என்பதையும் அந்நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன.

இதனாலேயே பல நாடுகளிலிருந்து இலங்கையர்கள் நாடு திருப்பியனுப்பப் பட்டுள்ளனர். இவ்வாறு நாடு திருப்பும் நடவடிக்கைகளுக்கு எதிராக சில சக்திகள் அந்நாடுகளில் நீதிமன்றம் சென்றன. எனினும், அதனை ஏற்றுக்கொள்ளாத அந்நாடுகள் இலங்கையானது மக்கள் வாழ்வதற்கு ஏற்ற பாதுகாப்பான நாடு. எனவே சட்ட விரோதமாகத் தங்கியிருக் கும் இலங்கையர்கள் நாட்டுக்குத் திருப்பியனுப்பப்பட வேண்டும் என அறிவித்தன. அதேபோல, சட்ட விரோதமாகப் படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்குச் செல்பவர்களைத் தடுப்பதற்கு அவுஸ்திரேலியாவுடன் இணைந்து நாம் செயற்பட்டு வருகின்றோம். புகலிடக் கோரிக்கை நடைமுறைகள் நிராகரிக்கப்பட்டவர்களை நாட்டுக்குத் திருப்பியனுப்புமாறு அந்நாட்டுக்கு நாம் கூறியுள்ளோம்.

இவ்வாறான கடும் நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் சட்ட விரோத புகலிடக் கோரிக்கையாளர்களைத் தடுக்க முடியாது என்பதையும் அவுஸ்திரேலிய அரசுக்கு நாம் சுட்டிக்காட்டியுள்ளோம்.

சட்ட விரோத படகுகளில் செல்பவர்களைத் தடுப்பதற்கும், கடல் மார்க்கமான கடத்தல்களையும் தடுப்பதற்கு இலங்கை கடற்படையினர் முன்னெடுத்திருக்கும் நடவடிக்கைகளை எமது பிராந்திய நாடுகள் வரவேற்றுள்ளன.

இலங்கை இந்தியாவுடன் கொண்டிருக்கும் உறவு தொடர்பில் லக்ஷ்மன் கிரியல்ல எம். பி. எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர், இலங்கை இந்தியா உள்ளிட்ட பிராந்திய நாடுகளுடன் நெருக்கமான உறவைக் கொண்டுள்ளது.

இந்தியாவுடன் இலங்கைக்குக் காணப்படும் உறவானது, சீனாவுடனான நட்புறவுக்கு எவ்வகையிலும் பாதிப்பினை ஏற்படுத்தாது என்றார்.

30 வருடங்களுக்கு அதிகமாகத் தொடர்ந்த யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு சமாதானமும், நிலைப்புத் தன்மையும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் சூழ்நிலையில், இதனை மேலும் பலப்படுத்தும் வகையிலேயே பொருளாதார இராஜதந்திர நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன. இலங்கையின் நிதிக்கொள்கைகளை பல்வேறு சர்வதேச நாடுகள் பாராட்டியுள்ளன என அமைச்சர் கூறியுள்ளார்.

ஆபிரிக்க நாடுகளுடன் வலுவான பிணைப்பை ஏற்படுத்த நடவடி;ககை எடுக்கப்படும் - ஜீ.எல்.பீரிஸ்

ஆபிரிக்க நாடுகளுடன் வலுவான பிணைப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தீவு நாடுகள் மற்றும் ஆபிரிக்க நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்த வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை கடல் வள வருமானத்தை அதிகரிக்க இந்த நாடுகளுடனான உறவுகள் அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

முதலீடு செய்வதற்கு மிகவும் பாதுகாப்பான நாடாக இலங்கையை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கருதுகின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு முதலீடுகளை அதிகரித்துக் கொள்ளும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையுடன் வர்த்தக உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள இந்தியா கூடுதல் அக்கறை காட்டி வருவதாக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/85506/language/ta-IN/article.aspx

[size=4]அபிவிருத்தி என்ற பெயரில் நடப்பது ஊழலே.[/size]

pratheep_08-05-2012.jpg

[size=5] [/size][size=5]மற்றையது தமிழின அழிப்பு :([/size]

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரெலியாவில் சிலரைப் படகுகளில் அனுப்பி, திரும்பி சிறிலங்காவுக்கு விருப்பத்தில் செல்லப்போவதாக படகில் செல்பவர்கள் சொல்லவைத்து நாடகங்கள் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.

திருப்பி அனுப்புவதற்கான காரணம் - உண்மையில் பாதிக்கப்படாத சந்தர்ப்பவாத தமிழரின் பொருளாதார நலனுக்காக தாய் நாட்டை விட்டு ஓடும் இழி புத்தியை அறிந்தமையாகவும் இருக்கலாம்.

இதை ஊக்குவிப்பது சிங்கள அரச பயங்கரவாதிகள் என்பதை ஆதரங்களுடன் ஆஸ்திரேலியா அறிந்து - அதை சிங்கள அரச பயங்கரவாதிகளுக்கு காட்டிய பின்னர் தான், கண்துடைப்புக்காக (வேறு வழியில்லாமல்) கடந்த சில மாதங்களில் 2000 க்கு மேற்பட்ட தப்பியோட நினைத்த தமிழர்கள் சிங்கள அரச பயங்கரவாதிகளால் கைது செய்யப்பட்டனர். இதில் 98 % ஆனவர்கள் யுத்தத்தில் சிக்காமல், போராட்டத்தில் பங்கு பெறாமல் சொகுசாக வாழ்ந்து, பொருளாதார நலனுக்காக நாட்டை விட்டு ஓட நினைத்த இழிபுத்தி உடையவர்கள்.

திருப்பி அனுப்பபடுபவர்கள், அவர்கள் ஓட ஊக்குவித்த சிங்கள அரச பயங்கரவாதிகளால் சித்திரவதை செய்யப்படுகிறார்கள் என்பது உண்மை. இதற்கு சிறந்த தீர்வு இவர்களுக்கு தஞ்சம் வழங்குவது இல்லை - மாறாக இவர்கள் நாட்டை விட்டு ஓட நினைக்கும் ஈனப் புத்தியை மாற்ற வேண்டும்.

திருப்பி அனுப்பும் நாடுகள் ஈழத்தில் ஈழத்தமிழரின் இருப்பை உறுதி செய்கின்றனர் என்பதுவும் கசப்பான உண்மை.

தொடர்ந்து தாய் நாட்டை விட்டு பொருளாதார நலன்களுக்காக தப்பி ஓடும் ஈனப் புத்தி மாறவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.