Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"தடை" - செய்யக் கூடியதும் கூடாததும்!

Featured Replies

"தடை" - செய்யக் கூடியதும் கூடாததும்!

ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் பட்டியலில் இணைத்ததன் பிற்பாடு, புலம்பெயர்ந்து வாழும் சில தமிழ் மக்கள் மத்தியில் ஒரு குழப்ப நிலை உருவாகி உள்ளது. என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது என்று எதுவும் தெரியாத நிலையில் ஒரு தடுமாற்றத்துடன் நிற்கின்றார்கள். இதுதான் சமயம் என்று மக்களை மேலும் குழப்பி அச்சத்தில் ஆழ்த்துகின்ற வேலையை தேசிய விரோதிகளின் பிரச்சார சாதனங்கள் செய்கின்றன. இந்த வேளையில் சில விடயங்களை தெளிவு படுத்துகின்ற கடமை எமக்கு உண்டு.

விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகளின் பட்டியலில் இணைத்திருந்தாலும், விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் இல்லை என்று சொல்கின்ற, எழுதுகின்ற உரிமை அனைவருக்கும் உண்டு. இதை எந்த சட்டமும் தடுக்க முடியாது. விடுதலைப்புலிகள் என்பது ஒரு விடுதலை இயக்கம் என்றும், தமிழினம் அவர்களை ஆதரிக்கிறது என்றும், விடுதலைப்புலிகளை அங்கீகரியுங்கள் என்றும் தாராளமாக குரல் கொடுக்கலாம். விடுதலைப்புலிகளின் பக்கம் உள்ள தர்ம நியாயத்தை எடுத்துச் சொல்லி பரப்புரை செய்யலாம். விடுதலைப் பாடல்களைக் கேட்கலாம். பாடலாம், ஆடலாம். தேசியத் தலைவரினதோ, வேறு போராளிகளினதோ படங்களை வைத்திருப்பதும் குற்றம் என்று ஆகாது. பொதுவாக இதுவரை செய்து வந்ததில் பெரும்பாலானவற்றை தொடர்ந்து செய்யலாம்.

ஆனால் விடுதலைப்புலிகளுக்காக நிதி வழங்குவதும், நிதி சேர்ப்பதும், வன்முறைகளை தூண்டுவதும் குற்றங்கள் ஆகின்றன. ஆனால் அமெரிக்காவில் இருந்து இயங்குகின்ற மனித உரிமைகள் மையத்தின் அறிக்கையின்படி விடுதலைப்புலிகள் இறுதி யுத்தத்திற்கான நிதியை சேர்த்துவிட்டார்கள். ஆகவே நிதி சம்பந்தமான குற்றத்தை செய்ய வேண்டிய தேவை புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு இனி ஏற்படப் போவதில்லை. வன்முறைகளை தூண்டுவது போன்று தமிழர்கள் பொதுவாகவே நடந்து கொள்வதில்லை என்பதால், அது குறித்தும் கவலை கொள்ளத் தேவை இல்லை.

ஆகவே தேசிய விரோதிகளின் பிரச்சாரங்களாலும், மித மிஞ்சிய அச்சத்தாலும் தடுமாறாது எமது மக்கள் இருக்க வேண்டும். ஐரோப்பிய ஒன்றியம் போட்ட தடையோடு, எமக்கு நாமே மேலும் அர்த்தமற்ற தடைகளை போட்டுவிடக் கூடாது. நாம் வாழும் நாடுகளின் சட்டங்களை மதித்து நடப்பதோடு, எமது நாட்டின் விடுதலைக்கான பணிகளை தொடர்ந்து செய்வோம்.

www.Webeelam.com

அமெரிக்காவில் இருந்து இயங்குகின்ற மனித உரிமைகள் மையத்தின் அறிக்கையின்படி விடுதலைப்புலிகள் இறுதி யுத்தத்திற்கான நிதியை சேர்த்துவிட்டார்கள். ஆகவே நிதி சம்பந்தமான குற்றத்தை செய்ய வேண்டிய தேவை புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு இனி ஏற்படப் போவதில்லை

உண்மையாகவா? ஐரோப்பிய ஒன்றியம் நிதியை முடக்கினாலும் பிரச்சினை இல்லையா?

  • தொடங்கியவர்

  • கருத்துக்கள உறவுகள்

மங்கள சமரவீர இவ்வாறு சொல்கிறார் -தினக்குரல்

மேற்குலகில் திரட்டப்பட்ட நிதியை சிங்கப்பூர், மலேசியாவுக்கு கொண்டு வரும் புலிகள் தென்கிழக்காசியாவில் ஆயுதக் கொள்வனவு

-மங்கள சமரவீர தெரிவிப்பு மேற்குலக நாடுகளில் திரட்டப்படும் நிதியை சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு கொண்டு வரும் விடுதலைப் புலிகள் அந்த நிதியை பயன்படுத்தி தாய்லாந்து, கம்போடியா போன்ற நாடுகளில் ஆயுதக் கொள்வனவில் ஈடுபடுவதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து வெளியாகும் நியூ ஸ்டிரெய்ட் ரைம்ஸ் செய்தித்தாளிற்கு அளித்துள்ள பேட்டியிலேயே மங்கள சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் நிதி திரட்டுவதையும் ஆயுதங்களை கொள்வனவு செய்வதையும் கட்டுப்படுத்துமாறு இந்த நாடுகள் கேட்டுள்ளதாகவும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் திரட்டப்பட்ட நிதியை மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு கொண்டு சேர்க்கும் பணி குழப்பமானது என தெரிவித்துள்ள மங்கள சமரவீர இதன் காரணமாகவே மலேசியா போன்ற நாடுகளின் உதவியை கோரியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மலேசியா,தாய்லாந்து,கம்போடியா போன்ற நாடுகள் இதனை பாரதூரமான விடயமாக கருத தொடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்குலகில் திரட்டப்படும் நிதி பெருமளவிற்கு தென்கிழக்காசிய நாடுகளில் குறிப்பாக மலேசியா , கம்போடியா போன்ற நாடுகளில் ஆயுதங்களை கொள்வனவு செய்யவே பயன்படுகின்றது எனவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

அணிசேரா இயக்கத்தின் 116 ஆவது மாநாட்டிற்காக மலேசியா சென்றுள்ள அமைச்சர், மலேசிய வெளிவிவகார அமைச்சரின் உதவியை நாடியுள்ளதுடன் இந்த விடயம் குறித்த புலனாய்வு தகவல்களை பரிமாறவும் இணங்கியுள்ளார்.

மேற்குலகில் திரட்டப்பட்ட நிதியின் ஒரு பகுதி மலேசியாவிலும் ஏனைய பிராந்திய நாடுகளிலும் உள்ள வங்கிகளில் வைப்புச் செய்யப்படலாம் எனவும் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் தென்கிழக்கு ஆசியாவில் நியாய பூர்வமான வர்த்தகத்தில் முதலீடு செய்வதாகவும் குறிப்பிட்டுள்ள அமைச்சர் எனினும் இதற்கான ஆதாரம் எதனையும் முன்வைக்கவில்லை.

விடுதலைப் புலிகளின் நிதி திரட்டும் நடவடிக்கையை கட்டுப்படுத்துவதே சமாதான முயற்சிகளுக்கு உதவுவதற்கான சிறந்த வழி என தெரிவித்துள்ள மங்கள சமரவீர ஐரோப்பிய ஒன்றிய தடையை பாராட்டியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை புலம் பெயர்ந்த தமிழர்களிடமிருந்து நிதி கிடைப்பதை தடுக்கும் என மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நீரென்ன தம்பி பக்கத்திலை நிண்டு எண்ணிக்குடுத்தனீரோ ? தம்பியவை உங்கடை கருத்துக்களை கொஞ்சம் யோசிச்சு எழுதுங்கோ ? உப்பிடியெல்லாம் பைத்தியக்காரத்தனமாகவெல்லாம

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எவர் எதனைச் செய்தாலும் உண்மையான தாயக உணர்வுகளை எவராலும் மழுங்கடிக்கச் செய்யமுடியாது. தடைகள் போடுவதும், நீக்குவதும் காலங்காலமாக நிகழ்பவைதான். எதிரியும், எதிர்ப்பவர்களும் இன்னும் எதையெதையோ செய்வார்கள். ஆனால் எமது இலக்கில் நாம் தெளிவாக இருந்தால் எமது நியாயமான போராட்டம் நிச்சயம் வெற்றிபெறும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் அரசியலில் ஈடுபடுவதில்லை என்றாலும் சில கருத்துக்களை கூறவேண்டியுள்ளது விடுதலைப்புலிகளை ஐரோப்பாவில் தடைசெய்வதற்கு இலங்கை மட்டும் காரணமல்ல ஒரு சில புலம்பெயர்ந்த தமிழர்களும் தான் காரணம் இவர்கள் தாங்கள் புலிகளின் ஆதரவாளர்கள் என்று சொல்லி மாற்றுக்கருத்துள்ளவர்களை தூற்றினார்கள் இணையப்பக்கங்களில் மாற்றுக்கருத்துக்காரர்களைப

நான் அரசியலில் ஈடுபடுவதில்லை என்றாலும் சில கருத்துக்களை கூறவேண்டியுள்ளது விடுதலைப்புலிகளை ஐரோப்பாவில் தடைசெய்வதற்கு இலங்கை மட்டும் காரணமல்ல ஒரு சில புலம்பெயர்ந்த தமிழர்களும் தான் காரணம் இவர்கள் தாங்கள் புலிகளின் ஆதரவாளர்கள் என்று சொல்லி மாற்றுக்கருத்துள்ளவர்களை தூற்றினார்கள் இணையப்பக்கங்களில் மாற்றுக்கருத்துக்காரர்களைப
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காசு வேண்டி எழுதுவன் அல்ல நான் ஆனால் போலி ஊடகவியலாளர் நாகாPகமற்றமுறையில் எழுதுவோர் புலிகளின் பெயரைச்சொல்லி ஆபாசபபடங்களை தமது இணையப்பக்கங்களில் இணைததுள்ளவர்களுக்கு எதிராக நிச்சயம் எழுதுவேன்

காசு வேண்டி எழுதுவன் அல்ல நான் ஆனால் போலி ஊடகவியலாளர் நாகாPகமற்றமுறையில் எழுதுவோர் புலிகளின் பெயரைச்சொல்லி ஆபாசபபடங்களை தமது இணையப்பக்கங்களில் இணைததுள்ளவர்களுக்கு எதிராக நிச்சயம் எழுதுவேன்

அப்ப நீர் ஒரு மாற்றுக்கருத்துகாறர் அல்லது அவர்கள் ஆதரவாளர் என்று பயமின்றி நெஞ்சை நிமிர்த்தி சொல்லுமன், எதற்கு பயப்படுவான், உமக்கும் கருத்து சுதந்திரம் மீது நம்பிக்கை இருந்தால். 8)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் மாற்றுக்கருத்துக்காரன் அல்ல ஆனால் அவர்கள் ஆதரவாளரும் அல்ல பயப்பிடNவுண்டிய அவசியம் எனக்கு இல்லi

  • தொடங்கியவர்

அய்யா கணேசா

இன்று மாற்றுக்கருத்து என்று ஒன்று இல்லை. உண்மையான மாற்றுக்கருத்துக்காரர்களும

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.