Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்.

Featured Replies

என்னங்கடா இது படத்தோட டைட்டில்… பக்கத்தை காணோம்?

சில்லரையை காணோம்மின்கிட்டு என்பதாய் இந்த படத்தின் டைட்டிலை மனதில் நக்கல் விட்டுக்கொண்டு இருந்தேன்… பத்தோடு பதினோன்றாக இதுவும் ஒரு உப்புமா படம் என்று நினைத்து இந்தம படத்தின் விளம்பரத்தை பார்த்து விட்டு அடுத்த வேலை பார்க்க போய் விட்டேன்… ஆனால் இந்த படத்தின் புரமோஷன் செய்திகள் அடிக்கடி மீடியாவில் கசிந்து கொண்டு இருந்தன.. இளைஞர்களிடம் மிக எளிதில் செல்லக்கூடிய யூடியூபில் படத்தின் டீசர்களை பர பரக்க வைத்தார்கள்… மக்கள் மத்தியில் இந்த படத்தினை பற்றிய எதிர்ப்பார்ப்பை ஏற்றி விடடார்கள்..

படம் அந்த அளவுக்கு இருக்குமா? இல்லை சொதப்புமா? என்று பயத்துடன் படத்தை பார்க்க போனேன்.. பெரிய ஸ்டார் படத்துக்கு வரும் கூட்டம் அளவுக்கு பத்திரிக்கையாளர் காட்சிக்கு பெரிய கூட்டம் கூடி இருந்தது எனது புருவத்தை உயர செய்தது…

படத்தை பார்த்தேன் என் கவலைகள் எல்லாம் தீர்ந்த போனது போல மனம் மிக சந்தோஷமாக இருந்த்து.... எல்லோருமே புதுமுகங்கள்..ஹீரோ ஹீரோயினை தவிர... அவர்களும் அறியப்பட்டவர்கள்தான்...லோ பட்ஜெட்... அற்புதமான திரைக்கதை.... சான்சே இல்லை.... அசந்து போய் விட்டேன்....

============

Naduvula Konjam Pakkatha Kaanom-2012/ படத்தின் ஒன் லைன்...

naduvula_konjam_pakkatha_kaanom_movie_posters_2745.jpg

தலையில் அடிபட்டு ஒருவனுக்கு இரண்டு வருட நியாபகங்களை சுத்தமாக மறந்து விட்டால்???

=============

Naduvula Konjam Pakkatha Kaanom-2012/ படத்தின் கதை என்ன?

naduvula_konjam_pakkatha_kaanom_movie_posters_3223.jpg

விஜய் சேதுபதி (பிரேம் குமார்) தான் உயிருக்கு உயிராக காதலிக்கும் காயத்திரியை ( தனலட்சுமி)இரண்டு நாளில் திருமணம் செய்து கொள்ளப்போகும் புது மாப்பிள்ளை.... நண்பர்கள் அரையில் உட்கார்ந்த அரட்டை அடித்துக்கொண்டு இருக்கும் போது கிரிக்கெட் விளையாடுகின்றார்கள்... அதில் விஜய் சேதுபதிக்கு தலையில் அடிபட்டு விடுகின்றது... இரண்டு வருடத்துக்கு முன் நடந்த சம்பவங்கள்தான் நினைவுக்கு வருகின்றது...மறுநாள் திருமணத்துக்கு முதல்நாள் ரிசப்ஷென் எல்லாத்தையும் மறந்து தொலைச்சிட்டு சொன்னதையே சொல்லற ஆளான சேதுபதிக்கு கல்யாணம் நடந்த்தா? என்பதை டென்ஷனுடன் பாடம் பார்த்து சிரித்து விட்டு இந்த படத்தை பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த தளத்தில் பகிருங்கள்...

==============

படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

முதலில் இந்த தைரியாமான, கேச்சியான தலைப்பு தேர்ந்து எடுத்தமைக்கு முதலில் படக்குழுவுக்கு ஒரு ஹேட்ஸ் அப்.

ரொம்ப நாள் ஆகி விட்டது... மனது விட்டு சிரித்து... நானும் நண்பர் நித்யகுமாரும் பாஸ் என்கின்ற பாஸ்கரன் படத்தை மாயாஜாலில் பார்த்து விட்டு வயிறு வலிக்க சிரித்ததுதான் கடைசி அதன் இந்த படத்தை பார்க்கும் போதுதான் கண்ணில் நீர் வர சிரித்தேன்..

எடிட்டிங்க படித்து விட்டு, யாரிடமும் உதவியாளராய் இல்லாமல் இரண்டு படத்துக்கு ஸ்கிரிப்ட் ரைட்ராக இருந்து விட்டு அற்புதமான திரைப்படத்தை எடுத்த பாலாஜிதரனிதரனுக்கு என்னுடைய வாழ்த்துகள்..

தமிழ்சினிமா கவனிக்க தவறிய திரைப்படமான வர்ணம் என்ற திரைப்படத்துக்கு ஸ்கிரிப்ட் பாலாஜிதான்.. சினிமா இவருக்கு மிக எளிதாக சாத்தியமாய் இருக்கின்றது.. வாழ்த்துகள்..

சமீபத்தில் விஜய் சேதுபதியோடு பிட்சா ஸ்பெஷல் என்ற புரோகிராமுக்காக நுங்கம்பாக்கத்தில் இருக்கும் பிட்சா கடையில் அவரோடு ஷுட்.... நிறைய பேசிக்கொண்டு இருந்தோம்... வாரிசு அரசியல் போல வாரிசு சினிமா கோலோச்சும் தமிழ் சினிமாவில் துபாயில் அக்கவுண்டன்டாக வேலை பார்த்துவிட்டு ,வேலையை உதறி சென்னை வந்து வாய்ப்பு தேடி, கூத்து பட்டறையில் சேர்ந்து, திருமணமாகி இரண்டு பிள்ளைகள் இருக்கும் போது, சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் வெற்றி பெறுவது என்பது சாதாரண விஷயம் அல்ல...வாழ்த்துகள் சேதுபதி என்றேன்.

IMG_20121108_131719.jpg

ஜாக்கி தென்மேற்கு பருவக்காற்று படம் அவார்டு வாங்கிடுச்சி... அதுக்கு அப்புறம் பீட்சா மற்றும் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் திரைப்படங்களில் நான் நடித்துக்கொண்டு இருக்கின்றேன் என்று சொன்ன போது... நிறைய பேர்... உப்புமா படங்களில் நான் நடிப்பதாக என்னை கேலி செய்தார்கள்....ஆனால் இந்த இரண்டு படங்கள்தான் நான் பட்டி தொட்டி எங்கும் என்னை கொண்டு போய் சேர்த்து இருக்கு என்றார்....

விஜய் சேதுபதி கிராமத்து வெள்ளந்திதனத்தோடு பேசும் அந்த டயலாக்குகள் வெகு இயல்பாய் இருக்கின்றன....

கூட நடித்து இருக்கும் கண்ணாடிகாரர் மற்றும் ராஜ்குமார், பாலஜி போன்றவர்கள் அசத்தி இருக்கின்றார்கள் என்றே சொல்ல வேண்டும்..

இந்த படத்தில் புதுமுகங்கள் நடித்து இருந்தாலும் சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் பேப்பர் ஒர்க் முடிந்த கம்ப்ளீட்டாக இரண்டு மாதம் ரிகர்சலுக்கு பிறகே படத்துக்கு ஷூட் சென்று இருக்கின்றார்கள்..

காயத்திரிக்கு பெரிய நடிப்புக்கான ஸ்கோப் இல்லாவிட்டாலும் மெயின் ரோல் போல் அந்த கிளைமாக்சில் அவர் கொடுக்கும் ரியாக்ஷன் அருமை...

கயிற்றில் மேல் நடக்கும் கதை.. கரணம் தம்பினால் போர் அடித்து விடக்கூடிய கதை... அதை அழகாக செதுக்கு இருக்கின்றார்கள்...

நான்கே நான்கு மெயின் கேரக்டர்கள் வைத்துக்கொண்டு ஜமாய்த்து இருக்கின்றார்...

பசங்க, சுந்தரபாண்டியபுரம் போன்ற படங்களில் கேமராமேனான பிரேம்குமார் வாழ்வில் நடந்த இரண்டு நாள் நிகழ்வை பட்டி டிக்கரிங் பார்த்து திரைக்கதையாக்கி இருக்கின்றார்கள்..

படத்தின் காட்சிகளை சொன்னால் சஸ்பென்ஸ் போய் விடும் என்பதால் படத்தை பாருங்கள்.. குறிப்பாக மருத்துவமனை காட்சிகளில் லென்தி ஷாட்டுகளில் கேமராமேன் பிரேம் அசத்தி இருக்கின்றார்...

பாடல்ளும் , பின்னனி இசையும் படத்தின் பெரிய பலம்....

கடைசி வரை அந்த டெம்ப் என்னவாகுமோ? நண்பர்கள் மாட்டிக்கொள்ளுவார்களோ? என்று பதைபதைப்பு படம் முடியும் வரை கொண்டு சென்ற திரைக்கதைத்தான் இந்த படத்தின் பெரும் பலம்...

சலூனில் முடிவெட்டிக்கொள்வதில் ஆரம்பித்து,ரிசப்ஷனுக்கு தயாராவது வரை... பெண்ணை பார்த்து திரும்ப திரும்ப யாப்பா மூஞ்சாடா இது என்று டயலாக் சொல்வதில்சேதுபதி நிற்கின்றார்..

கிளைமாக்ஸ் காட்சி உங்கள் வயிற்றை பதம் பார்ப்பது உறுதி...

சினிமாக்கரர்களிடம் பேசும் அது நொட்டை இது நொள்ளை என்று சொன்னார்கள்.. காரணம் அவர்களுக்கு உள்ளே உறங்கி இருக்கும் கிரியேட்டர் எதையாவது சொல்லிக்கொண்டு இருப்பான்... படம் லென்த்தி அதை குறையுங்கள் என்று சொல்லி இருக்கின்றார்கள்.. நான் படத்தில் ஒரு சீன் கூட கட் பண்ண வேண்டாம் என்று சொன்னேன்.. பட் சேதுபதி ,காயத்ரி காதல் காட்சிகளை கத்திரி போட்டு இருக்கின்றார்கள் என்பது தெரிகின்றது....

இந்த படம் திறமையானவர்கள் ஒன்று கூட இருக்கும் படம்... படத்தை பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

வாழ்த்துகள் ....பாலாஜி மற்றும் படக்குழுவினர்... இந்த படத்தை புரோமோட் பண்ண விதத்துக்கு ஒரு ஷொட்டு.....

http://www.jackiesekar.com/2012/11/naduvula-konjam-pakkatha-kaanom-2012.html?m=1

ஒரு 2005இல் கோமாவிற்கு போன ஒரு ஈழத் தமிழர் 2012இல் கண் முழித்தால் என்ன எல்லாம் நடக்கும்? அதுவும் அவர் என்னைப் போல் ஆய்வுக் கட்டுரைகள் எழுதியவராக அல்லது ஒருங்கிணைப்புக் குழுவில் வேலை செய்தவராக இருந்தால் அவருடைய நடவடிக்கைகள் எப்படி இருக்கும்?

இதை வைத்துக் கதை எழுத வேண்டும் என்று நான் கடந்த ஆண்டில் உண்மையாகவே நினைத்தது உண்டு. என்னையும் உள்ளடக்கிய இந்த சமூகத்தின் மீதான எள்ளலோடுதான் அந்தக் கதை என்னுடைய கற்பனைக்குள் இருந்தது. ஆனால் ஒரு சோகமான அவல முடிவை வைத்து எள்ளல் வேண்டாம் என்பதால் அந்தக் கதையை எழுதாமலேயே விட்டேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.