Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழத்தமிழ் அகதிகள் மீது பொய்வழக்கு போட்டு சித்திரவதை செய்கிறது தமிழக அரசு: ‌சீமா‌ன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Seeman20111014-150.jpg

தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தவர்கள் ப‌ட்டி‌னி‌க் ‌கிட‌ந்து போராடிக்கொண்டிருப்பார்களா, பொய் வழக்கு போட்டு ஈழத் தமிழ்ச் சொந்தங்களை மிரட்டிவரும் காவல்துறைக்கு இந்த அடிப்படை அறிவு கூட இல்லையா? எ‌ன நா‌ம் த‌மி‌ழ‌ர் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் ‌சீமா‌ன் கே‌ள்‌வி எழு‌ப்‌பியு‌ள்ளா‌ர். இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வ‌ெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், பூந்தமல்லி, செங்கல்பட்டு சிறப்பு முகாம்களில் சட்டத்திற்குப் புறம்பாகவும், மனிதாபிமானமற்ற வகையிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள், தனிமைச் சிறையில் வாட்டும் தங்களை சாதாரண முகாம்களுக்கு மாற்றுங்கள் என்ற கோரிக்கையுடன் பலமுறை பட்டி‌னிப் போராட்டங்கள் நடத்தியுள்ளனர்.

அப்படி போராடிய போதெல்லாம் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் மாவட்ட நிர்வாகிகளுக்கும், தமிழக காவல்துறையின் க்யூ பிரிவு அதிகாரிகளும், உங்களை சிறப்பு முகாம்களில் இருந்து விடுதலை செய்கிறோம் என்று வாக்குறுதி அளித்து போராட்டத்தை முடித்து வைப்பார்கள். ஆனால், அதன் பிறகு அவர்களை கண்டுகொள்வதில்லை. சிறப்பு முகாம்வாசிகளும் பொறுத்துப் பார்த்து பொறுமையிழந்து அதன் பிறகு சாகும்வரை பட்டிணிப் போராட்டம் அறிவித்து அதில் ஈடுபடுவார்கள். இது தொடர்கதையாக பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இப்படி அவர்கள் பட்டிணிப் போராட்டம் நடத்தும்போதெல்லாம் வாக்குறுதி அளித்தபடி, அவர்களை சிறப்பு முகாம்களில் இருந்து விடுவித்து, ஈழத் தமிழ் சொந்தங்கள் வாழும் சாதாரண முகாம்களுக்கு அனுப்பியிருந்தால் அவர்கள் சாகும்வரை பட்டின‌ிப் போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. மேலும், சாகும்வரை பட்டி‌னிப் போராட்டம் நடத்திய காரணத்தினால்தான் கடந்த காலங்களில் பலரும் விடுவிக்கபட்டு சாதாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இப்போது பூந்தமல்லி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 7 ஈழத் தமிழர்களில் பரமேஸ்வரன், தர்ஷன், பிரதீபன் ஆகிய மூன்று பேரும் கடந்த 23ஆம் திகதியிலிருந்து ஒருவர் பின் ஒருவராக பட்டி‌னிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று, விடுதலை செய்யாமல், அவர்கள் மீது தற்கொலைக்கு முயன்றார்கள் என்று க்யூ பிரிவு காவல் துறை வழக்கு பதிவு செய்து, புழல் சிறையில் அடைத்துள்ளது. இது உண்மைக்கும், நியாயத்திற்கும் எதிரான அடக்குமுறை நடவடிக்கையாகும். ஈழத்தில் வாழும் தங்கள் சொந்தங்களுக்கு மண்ணெண்ணெய் கடத்தினார்கள், இரத்தம் கடத்தினார்கள் என்கிற குற்றச்சாற்றுகளின் கீழ்தான் பெரும்பாலான நம் சொந்தங்களை இப்படி சிறப்பு முகாம்களில் அடைத்து வைத்து சித்திரவதை செய்து வருகிறது தமிழக காவல்துறையின் க்யூ பிரிவு. அதனை எதிர்த்து அவர்கள் நீதிமன்றத்திற்குச் சென்று பிணைய விடுதலை பெற்ற நிலையிலும், அவர்களை விடுவிக்காமல், தாய் தமிழ்நாட்டிற்கு அடைக்கலம் தேடி ஏதிலிகளாக வந்தவர்களை, அயல்நாட்டினர் சட்டத்தின் கீழ் தொடர்ந்து தடுத்து வைத்துள்ளது க்யூ பிரிவு.

இதனை பலமுறை தமிழக அரசுக்கு சுட்டிக்காட்டியுள்ளோம். அப்படியிருந்தும், தங்களை விடுவிக்க வேண்டும் என்று கோரி ஜனநாயக வழியில் பட்டிணிப் போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது தற்கொலைக்கு முயன்றதாக வழக்கு பதிவு செய்வது, இப்படியொரு போராட்ட வழிமுறையை கையாண்டு பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை எதிர்த்து போராடிய தேசத் தந்தை காந்தியையே அவமதிக்கும் செயலாகும். பட்டி‌னிப் போராட்டம் நடத்துவோரின் நோக்கம், தங்களது நியாயமான கோரிக்கையை மக்களுக்கு தெரியப்படுத்துவதும், அந்த கோரிக்கை அரசு ஏற்க வேண்டும் என்று வலியுறுத்துவதற்காகவும்தான் என்பது அனைவருக்கும் தெரிந்த சாதாரண உண்மையாகும். ஆனால், அவர்கள் தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் நோக்குடன் பட்டிணிப் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என்று வழக்குத் தொடர்வது சட்டத்தை தவறாக கையாளும் அராஜக நடவடிக்கையல்லவா? தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தவர்கள் இப்படித்தான் போராடிக்கொண்டிருப்பார்களா? பொய் வழக்கு போட்டு ஈழத் தமிழ்ச் சொந்தங்களை மிரட்டிவரும் காவல் துறைக்கு இந்த அடிப்படை அறிவு கூட இல்லையா?

இலங்கையில் சிங்கள பெளத்த இனவாத அரசின் திட்டமிட்ட இன அழிப்பிலிருந்து தங்களை காத்துக்கொள்ள தாய் தமிழகத்திற்கு வந்தவர்களை இப்படித்தான் நடத்தி அவமதிப்பதா? வாழ்ந்த நிலம்இ இருந்த வீடு, உழுத நிலம் என்று அனைத்தையும் விட்டுவிட்டு, தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள தமிழகத்தில் தஞ்சமடைந்த ஏதிலிகளை இப்படி நடத்துவது பன்னாட்டு மனித உரிமை சட்டங்களுக்கு முரணானதல்லவா? இதையெல்லாம் தமிழக அரசு சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். தமிழகத்தில் தஞ்சமடைந்த நம் சொந்தங்களையெல்லாம் பயங்கரவாதிகள் என்று சித்தரிக்கும் கொடுஞ்செயலை க்யூ பிரிவு பல ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருகிறது. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும், க்யூ பிரிவின் அராஜக செயல்பாட்டில் மட்டும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. சிறப்பு முகாமைக் காட்டியும், சிறையில் அடைத்தும் ஈழத் தமிழர்களை அவர்கள் தொடர்ந்து மிரட்டியும், சித்திரவதை செய்தும் வருகின்றனர். ஏதிலிகளாக வந்த ஈழத் தமிழ் சொந்தங்களுக்கு நிலையான வீடுகளை கட்டித் தர ரூ.25 கோடியை மனிதாபிமானத்துடன் ஒதுக்கியுள்ள தமிழக முதல்வர், க்யூ பிரிவினரின் இப்படிப்பட்ட மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நம் சொந்தங்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க முன்வர வேண்டும். இதனை செய்யத் தவறினால், தமிழக அரசின் இரட்டை முகத்தை மக்களிடம் எடுத்துக்காட்ட நாம் தமிழர் கட்சி மீண்டும் போராட்டதில் ஈடுபடும் எ‌ன்று ‌சீமா‌ன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

http://www.seithy.co...&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.