Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்”- யேர்மனியில் வெளிவிவகார அமைச்சு முன்றலில் நடைபெற்ற கண்டன கவனயீர்ப்பு

Featured Replies

நிலத்திலும் புலத்திலும் உரிமைக்கான போராட்டம் - யேர்மனியில் வெளிவிவகார அமைச்சு முன்றலில் நடைபெற்ற கண்டன கவனயீர்ப்பு

 

 

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் மீதான சிங்கள அரசின் தாக்குதலை கண்டித்து யேர்மனியின் வெளிவிவகார அமைச்சு முன்றலில் இன்று கண்டன கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்றது . சிங்கள பயங்கரவாத அரசின் தமிழர்கள் மீதான இனவழிப்பு தாக்குதல் தொடர்ந்த வண்ணம் இருப்பதற்கான சாட்சியாக மாணவர்கள் மீதான இத் தாக்குதல் அமைக்கின்றது .அதை தொடர்ந்து மண்ணுக்காய் மரணித்த மாவீரகளுக்கு தமது வணக்கத்தை செலுத்தும் முகமாக தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு பொய்யான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கும் மாணவர்களுக்கான ஓங்கி ஒலிக்கும் குரலாக இந்த கண்டன கவனயீர்ப்பு அமைந்திருந்தது .


இக் கண்டன கவனயீர்ப்பு நிகழ்வில் சிங்கள இனவெறி அரசு தமிழர்கள் மீது தொடர்ந்து முன்னெடுக்கும் இனவழிப்பை உடனடியாக நிறுத்தவேண்டும் , கைதுசெய்யப்பட்ட மாணவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் அத்துடன் அவர்களின் பாதுகாப்புக்கு உறுதி வழங்கப்பட வேண்டும் , அவர்கள் தமது இனத்தின் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க பன்னாட்டு சமூகம் பாதுகாப்பு வழங்கவேண்டும் , தமிழர்கள் ஒரு தேசிய இனம் எனும் அடிப்படையில் அவர்களுக்கு தன்னாட்சி உரிமை , இறைமை , பாரம்பரிய தேசம் அங்கீகரிக்கப்பட வேணும் , சிறீலங்கா அரசு தமிழர்கள் மீது மேற்கொண்ட இனவழிப்பு மீதும் அனைத்துலக சமூகம் தமிழர்களை பாதுகாக்க திட்டமிட்ட வகையில் தவறியதையும் ஒரு அனைத்துலக சுயாதீன விசாரணையின் கீழ் உட்படுத்தப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி மனு கையளிக்கப்பட்டது .

 

அத்தோடு எதிர்வரும் நாட்களில் வெளிவிவகார அமைச்சுடன் சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது .


எதிர்வரும் வெள்ளிக்கிழமை யேர்மனி நகரில் மாநில அரசின் சட்ட சபை முன்றலில் தமிழ் இளையோர் அமைப்பால் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் மீதான சிங்கள அரசின் தாக்குதலை கண்டித்து கவனயீர்ப்பு நிகழ்வு ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.

 

 

 



252280_307035222733730_228600354_n.jpg



68690_307035336067052_1127167080_n.jpg



228252_307035469400372_1637848020_n.jpg



577820_307035952733657_885942010_n.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.