Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீர்கொழும்புச் சிறையில் தமிழ் யுவதி மரணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீர்கொழும்புச் சிறையில் தமிழ் யுவதி மரணம்

அதிகாரிகள் அசமந்தம்; அதனால் பரிதாபம்!

குடிவரவு, குடியகல்வு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு நீர்கொழும்பு சிறைச்சாலை யில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இளம் தமிழ்ப் பெண் ஒருவர், ஆஸ்த்துமா நோயினால் அவ திப்பட்டு, பலபேர் பார்த்திருக்க துடிதுடித்து இறந்தார்.

நேற்று அதிகாலை நீர்கொழும்பு சிறைச் சாலையின் சிறைக்கூடத்திற்குள் இந்தப் பரி தாப சம்பவம் இடம் பெற்றது.

வெளிநாடுகளுக்குச் செல்ல முயன்று குடிவரவு, குடியகல்வு சட்டத்தை மீறினார்க ளென்று குற்றஞ்சாட்டப்பட்டு கைதுசெய்யப் பட்ட 35 தமிழ்ப் பெண்கள் நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக் கின்றனர்.

இவர்களில் யாழ்ப்பாணம், உரும்பிராயைச் சேர்ந்த சுகந்தினி (வயது 26) என்ற யுவதி ஆஸ்துமா நோயினால் பீடிக்கப்பட்டிருந்தார். நேற்று அதிகாலை இந்த யுவதிக்குத் திடீரென நோயின் தாக்கம் அதிகமாகியது. இதனால் பரபரப்படைந்த ஏனைய தமிழ் யுவதிகள் சிறைச்சாலை அதிகாரிகளிடம் நிலைமையைக்கூறி, இந்த யுவதிக்கு உடனடி மருத்துவ வசதிகளைச் செய்துகொடுக்குமாறு கேட்டிருக் கின்றனர்.

ஆனால், சிறைச்சாலை நிர்வாகம் இத னைக் கவனத்திற்கொள்ளவில்லை. மருத்து வர்கள் எவரும் அங்கு வராத காரணத்தால் பலபேர் பாத்திருக்க கொஞ்சம் கொஞ்சமாக யுவதியின் உயிர் பிரிந்தது.

இந்தச் சம்பவம் குறித்து நேற்றுக்காலை வேளையில் சிறைச்சாலை நிர்வாகம் நீர் கொழும்பு பொலிஸாருக்கு அறிவித்தது. இதனையடுத்து சிறைச்சாலைக்கு விரைந்த பொலீஸார் அங்கிருந்த இதர பெண்களிடம் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளனர்.

சிறைச்சாலை நிர்வாகத்தின் அசமந்தப் போக்கினால் ஏற்பட்ட இந்தச் சம்பவம் நீர் கொழும்பு சிறையிலுள்ள தமிழ்க்கைதிகளி டேயே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியை யும் ஏற்படுத்தியுள்ளது.

நேற்று உயிரிழந்த இந்த யுவதியின் உடலை அவரது உறவினரான மைத்துனர் ஒருவரிடம் ஒப்படைக்க சிறைச்சாலை நிர் வாகம் நடவடிக்கை எடுத்திருந்தது. இந்தச் சம்பவம் குறித்து நீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென்று அந்த உறவினர் நீர்கொழும்பு சிறைக்குச்சென்று அதிகாரிகளை வலியுறுத்தியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

-உதயன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்றில் இன்று

மகேஸ்வரன் பிரஸ்தாபம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் தமிழ் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளமை தொடர்பாக அரசு நீதியான விசாரணைகளை நடத்த வேண்டுமென ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப் பினர் மகேஸ்வரன் இன்று நடைபெறும் நாடாளு மன்ற அமர்வின்போது பிரஸ்தாபிப்பார் எனத் தெரிகிறது.

இந்த யுவதியின் மரணம் தொடர்பாக எந்த வித மூடிமறைப்புமின்றி நீதியான விசார ணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை இனம் காண வேண்டும் என்று மகேஸ்வரன் மன்றில் பிரஸ்தாபிப்பார் என எதிர்பார்க்கப் படுகிறது.

-உதயன்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் 5 மாதமாக தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் யுவதி மரணம்

ஏனைய கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் இளம் யுவதியொருவர் நேற்று திங்கட்கிழமை காலை அங்கு மரணமடைந்துள்ளார்.

யாழ்ப்பாணம், உரும்பிராயைச் சேர்ந்த சுகந்தினி (26 வயது) என்பவரே உயிரிழந்தவரெனத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் திகதி சுவிற்சர்லாந்திற்கு செல்ல முற்பட்டபோது, போலிக் கடவுச்சீட்டினை வைத்திருந்த குற்றச் சாட்டின் பேரில் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து இந்த யுவதி கைது செய்யப்பட்டு இங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

ஐந்து மாதங்களுக்கு மேலாக நீதிமன்ற விசா ரணைகள் எதுவுமின்றியும் பிணை வழங்கப்படாமலும் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த யுவதி உடல் நலமும் பாதிக்கப்பட்ட நிலையிலிருந்தார்.

ஞாயிற்றுக்கிழமை இவரது உடல் நிலை மோசமடைந்ததாகவும், எனினும், இவரிற்கு

உரிய சிகிச்சை வழங்கப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிகிச்சையளிக்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோள் அலட்சியம் செய்யப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

இவர் தடுப்புக் காவலில் வலிப்பு நோயினால் இறந்ததாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. திங்கட்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு, இவர் உயிரிழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும், திங்கட்கிழமை மதியம் வரை பிரேதப் பரிசோதனை எதுவும் இடம் பெறவில்லையெனவும், பொலிஸார் மிகத் தாமதமாகவே செயற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது இவ்வாறிருக்க, கடவுச்சீட்டு மோசடி குற்றச்சாட்டின் பேரிலும் வெளிநாடுகளிலிருந்து நாடு கடத்தப்பட்ட நிலையிலும் கைது செய்யப்பட்ட தமிழர்கள் பலர், நீர்கொழும்பு நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் பல மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

என்ன குற்றத்திற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என தெரியாத நிலையிலேயே இவர்கள் தொடர்ந்தும் பல மாதங்களாக நீர்கொழும்புச் சிறைச்சாலையிலுள்ளனர்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழ் கைதிகள் நேற்று திங்கட்கிழமை உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

உண்மைகளை ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும் வரை தங்களது உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

-தினக்குரல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீர்க்கொழும்பு சிறையில் தமிழ் கைதிகள் போராட்டம்

நீர்க்கொழும்பு சிறைச்சாலையில் உள்ள தமிழ் இளைஞர்களும் பெண்களும் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

சிறைச்சாலையில் உரிய மருத்துவ வசதிகள் அளிக்கப்படாததால் கடந்த திங்கட்கிழமையன்று தமிழ்ப் பெண் இறந்தார்.

இதையடுத்து நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் எதுவித விசாரணையுமின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தங்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி பிணையில் விடுவிக்க வலியுறுத்தி சிறையில் உள்ள தமிழ்ப் பெண்களும் இளைஞர்களும் சாகும்வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இரு பெண்களினது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இரு இளைஞர்களது உடல்நிலையும் மோசமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

சிறையில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வரும் கைதிகளின் பெற்றோர்கள் இன்று புதன்கிழமையன்று சிறைச்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வரும் சிறைக் கைதிகளை செவ்வாய்க்கிழமை மாலை வரை எந்த ஒரு தமிழ் அரசியல்தலைவரும் சிறைத் துறை அதிகாரிகளும் சந்திக்கவும் இல்லை.

தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை உண்னாநிலைப் போராட்டம் நடைபெறும் என்று கைதிகள் அறிவித்துள்ளனர்.

இப்போராட்டம் தொடர்பாக எதுவித தகவலையும் தெரிவிக்க கொழும்பில் உள்ள சிறிலங்கா சிறைத்துறை ஆணையாளர் மறுத்துவிட்டார்.

-புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.