Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊடகங்களின் தவறான வழிநடத்தல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஊடகங்களின் தவறான வழிநடத்தல்!

இலங்கை வந்திருந்த அமெரிக்காவின் மத்திய மற்றும் மேற்காசியாவிற்கான துணைராஜாங்கச் செயலாளர் றிச்சட் பௌச்சர் சில கருத்துக்களை சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். தமிழினத்தை அச்சுறுத்தும் விதமாக பௌச்சரின் கருத்துக்கள் அமைந்திருந்தன. விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் என்றும், பயங்கரவாத்தை ஒழிப்பதற்கு உலகம் ஓரணியில் திரண்டு நிற்கின்றது என்றும் அமெரிக்காவின் நிலைப்பாட்டை பௌச்சர் எவ்வித குழப்பத்திற்கும் இடமின்றி தெளிவாக கூறியிருந்தார். பௌச்சரின் கருத்துக்கள் தமிழினத்திற்கு எதிரானதாகவும், வழமையை விட மிகவும் கடுமையானதாகவும் இருந்தன. ஆயினும் எம்மவர்களின் ஊடகங்கள் பௌச்சர் சிறிலங்கா அரசிற்கு எதிராக கூறிய சில கருத்துக்களுக்கே முக்கியத்துவம் கொடுத்தன. "அமெரிக்கா சிறிலங்காவிற்கு கண்டனம்" அமெரிக்கா சிறிலங்காவின் முகத்தில் குத்து" என்றெல்லாம் செய்திகளை வெளியிட்டன. இப்படியான செய்திகள், ஆய்வுகளின் மூலம் மக்களை தவறான திசையில் வழிநடத்துகிறோம் என்பதை இந்த ஊடகங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இதற்கு முன்பும் இணைத் தலைமை நாடுகளின் அறிக்கை பற்றிய விடயத்திலும் இவ்வாறே இந்த ஊடகங்கள் நடந்து கொண்டன. அனுசரணையாளர்கள் என்ற எல்லையை மீறி ஒரு தீர்வை திணிப்பவர்களாக இந்த இணைத் தலைமை நாடுகள் நடந்து கொண்டிருந்தன. தமிழர்களின் அடிப்படைக் கோரிக்கைக்கு ஏதிராக ஐக்கிய இலங்கைக்குள்ளேயே தீர்வு காண வேண்டும் என்று இந்த நாடுகள் வலியுறுத்தி தீர்மானம் போட்டன. விடுதலைப்புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்த அடுத்த நாள் இந்தத் தீர்மானத்தை இணைத் தலைமை நாடுகள் போட்டன. இது தமிழர்களின் தலையில் பாறங்கல்லை போடுவதற்கு ஒப்பாக இருந்தும், எமது ஊடகங்கள் "இணைத் தலைமை நாடுகள் சிறிலங்காவிற்கு எச்சரிக்கை" என்றுதான் எழுதின. எத்தனை பக்கங்கள் விடுதலைப்புலிகளை கண்டித்தும், எத்தனை பக்கங்கள் சிறிலங்காவைக் கண்டித்தும் வந்திருக்கிறது என்று கூட ஆராயப்பட்டது. எமக்கு கழுத்தை மட்டும்தான் துண்டித்திருக்கிறார்கள், எதிரிக்கு உடம்பு முழுவது கீறி விட்டார்கள் என்று ஆறுதல் படுவது போன்று இது அமைந்தது.

விடுதலைப்புலிகள் கண்காணிப்புக் குழுவின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு நோர்வே செல்வதற்கு முடிவெடுத்துள்ள இந்த வேளையில், ஊடகங்கள் வழங்குகின்ற இது போன்ற செய்திகளும் ஆய்வுகளும் மக்களுக்கு தவறான செய்திகளையே வழங்கும். உலகம் நடுநிலைமையானது என்று எண்ணத் தலைப்படுவதற்கு வழி வகுக்கும். உலகம் தமிழினத்திற்கு நீதி வழங்கும் என்ற பொய்யான நம்பிக்கையை உருவாக்கும்.

மேற்குலகம் தமிழினத்தின் அபிலாசைகளுக்கு எதிராக ஒரு தீர்வுத் திட்டத்தை தயாரித்து வைத்திருக்கிறது. விடுதலைப்புலிகளை பலவீனப்படுத்திவிட்டு, அந்த திட்டத்தை தமிழ் மக்கள் மீது திணிப்பதற்கு திட்டம் போட்டிருக்கிறது. இந்த தீர்வுத் திட்டத்திற்கு சிறிலங்கா அரசை சம்மதிக்க வைக்கும் முயற்சியாக சில ராஜதந்திர அழுத்தங்கள் மேற்கொள்ளப்படுவது உண்மைதான். ஆனால் இந்த அழுத்தங்களை தமிழர் தரப்பிற்கு சாதகமானவையாக அர்த்தம் கற்பிப்பது தவறு. மேற்குலகின் தற்போதைய நிலை தமிழ் மக்களிற்கு முற்றிலும் எதிரானதே. இந்த விடயத்தை தெளிவாகப் புரிந்து கொள்வதும், சரியான முறையில் வெளிக் கொணர்வதும் மிக அவசியம்.

-வெப்பீளம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஹடித்தாவில் 15 ஈராக்கிய பொது மக்களை, மிருகங்களை சுடுவது போன்று சுட்டுப் படுகொலை செய்து, மூடி மறைத்த அமரிக்க இராணுவத்தை, பாதுகாத்த அக்கிரமக்காரரின் பேச்சாளன் தானே இவன். இவன் சொல்வதை எம் மக்கள் நம்பப்போவதில்லை. ஆனால் ஊடகங்களின் செய்தி எதிரிக்கேயொளிய மற்றப்படி எமக்கல்ல என்று, நான் எதிர்கொண்ட மக்களே கூறுகிறார்கள். ஆகவே எமது ஊடகங்கள், எதிரியின் ஊடகங்களின் எண்ணத்திற்கு பதிலடி கொடுக்கிறார்கள் என்று நாம் கருதவேண்டும். மற்றப்படி நாம் ஐரோப்பிய யூனியனை நம்பி ஏமாந்தது தான் கடைசி என்று மக்கள் புரிந்து கொண்டார்கள். ஆக, அமரிக்கன் தான் நாம் பயங்கரவாதிகள் என முத்திரை குத்த ஆரம்பத்திலேயே காரணமாகவும் முதல் ஆளாகவும் இருந்தவன் என்பதை எப்படி எம் மக்கள் மறந்து உவன் சொல்வதை நம்புவார்கள். ஆகையால், ஊடகங்கள் எதிரிக்குத்தான் இச்செய்திகளை வெளியிடுகின்றன, என்று தரம் பிரிக்கும் திறமை எம்மவரிடம் உள்ளதினால், ஊடகங்களின் நடைமுறையில் பிழை இருப்பதாக நான் கருதவில்லை.

அல்லிகா

One young Iraqi girl said the Marines killed six members of her family, including her parents. "The Americans came into the room where my father was praying," she said, "and shot him."

By Jim Miklaszewski

and Mike Viqueira

NBC News

மிகத் தெளிவாக செய்திகளை வெளியிடும் படி தான் அவர்கள் கூறியிருக்கின்றார்கள். எங்கள் செய்தியாளருக்கான வேண்டுகோளே அது.

விடுதலைப் புலிகள் கண்டிக்கப் பட்டதை விபரிக்காமல் சிங்கள அரசை கண்டிப்பதை மட்டும் போட்டு மக்களை தவறான சிந்தனைக்கு வழி நடத்துபவர்களைப் பற்றித் தான் எழுதியிருந்தார்கள்.

பூரணமான செய்திகளை வெளியிட்டால் மக்கள் குழப்பம் அடையாது அடுத்த பிரச்சனையை அணுக முற்படுவார்கள் என்பதையே அது சுட்டிக்காட்டியது என்றே நம்புகின்றேன்.

சில விளக்கங்களுடன் -எல்லாள மஹாராஜா-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.