Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தொடர்பில் மத்திய அரசின் நிலைப்பாடே தமிழக அரசுடையதும்

Featured Replies

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்திய மத்திய அரசின் நிலைப்பாடே தமிழக அரசின் நிலைப்பாடாகும் என்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு. கருணாநிதி கூறியுள்ளார்.

இன்று இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி ஆகியோரைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் கருணாநிதி.

இலங்கைப் பிரச்சினையில் இந்திய மத்திய அரசு நேரடியாகத் தலையிட வேண்டும் என்று பிரதமரிடமும், காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியிடமும் பேசினீர்களா என்று கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்குப் பதிலளித்த அவர், இந்த விவகாரத்தில் மத்திய அரசு எடுக்கின்ற முடிவுதான் தமிழக அரசின் முடிவு என்று கூறினார்.

இலங்கையில் இருந்து அண்மைக்காலங்களில் 2000 இற்கும் அதிகமான அகதிகள் தமிழகம் வந்துள்ளமை குறித்தும் தான் பிரதமரிடம் பேசியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழக மக்களுக்கான பல நலத்திட்டங்களுக்கு மத்திய அரசு உதவி வழங்க வேண்டுமென்றும் தான் பிரதமரிடம் பேசியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

bbc.com

இணைப்பு : newstamilnet.com

தமிழின் தலைவரும் தமிழினத்தின் தலைவரும்!

கலைஞர் கருணாநிதி தமிழ்நாட்டின் முதல்வர் ஆகி விட்டார். ஜெயலலிதாவின் ஆட்சியில் உளவுத்துறைக்கு பொறுப்பாக இருந்தவரும், திமுக கூட்டணியை உடைப்பதற்கு அனைத்துவிதமான வேலைகளையும் செய்தவருமான சிவனாண்டி ஓடிச் சென்று கலைஞருக்கு மலர்ச்செண்டு கொடுத்து ஆசி பெற்றுத் திரும்பினார். (ஆயினும் சிவனாண்டி சிறிதும் அதிகாரமற்ற ஒரு பதவிக்கு இறக்கப்பட்டது வேறு விடயம்). ஜெயலலிதாவிற்கு ஆதரவாக இருந்த திரையுலகமும மலர்ச்செண்டுகளோடு கலைஞரை சந்திக்க ஓடியது.

இதே போன்று கலைஞர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அவரைத் திட்டிய சில ஈழத் தமிழர்களின் அமைப்புக்களும் ஊடகங்களும், அவர் ஆட்சிக்கு வந்ததும் "வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள்" என்று அசத்தி விட்டன. ஒருவர் வெற்றி பெற்றால் அவரை வாழ்த்துவதில் தவறு ஒன்றும் இல்லை. நாமும் கலைஞரை வாழ்த்துவோம். ஆனால் கலைஞர் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பார் என்று சிலர் எதிர்பார்ப்பதுதான் மிகவும் அதிகப்படியானது. கலைஞர் ஆட்சிப் பொறுப்பேற்றதும் தமிழ்நாட்டில் இருந்த வந்த முதலாவது செய்தி "5 விடுதலைப்புலிகள் கைது" என்பதுதான். அத்துடன் ஈழத் தமிழர் பிரச்சனையில் மத்திய அரசின் கொள்கைதான் தனது கொள்கையும் என்று கலைஞர் தெளிவாக அறிவித்துவிட்டார். ஆயினும் எம்மவர்கள் சிலர் "உலகத் தமிழினத்தின் தலைவர் ஈழத் தமிழர்களை ஆதரிக்க வேண்டும்" என்று ஒரு படி மேலே போய் கோரிக்கை வைக்கிறார்கள்.

கலைஞரிடம் இருந்த "உலகத் தமிழினத்தின் தலைவர்" என்ற பட்டம் பறி போய் நீண்ட நாட்களாகி விட்டது. ஆரம்ப காலங்களில் கலைஞர் உலகத் தமிழர்களின் தலைவராக பார்க்கப்பட்டார் என்பது உண்மைதான். ஆனால் அவர் எப்பொழுது ஈழத் தமிழர்களின் பிரச்சனையில் தடுமாறத் தொடங்கினாரோ, அன்றே அவர் உலகத் தமிழர்களின் தலைவர் இல்லை என்று ஆகி விட்டார். இன்று "உலகத் தமிழர்களின் தலைவர்" என்று அழைக்கப்படக் கூடிய தகுதி உள்ள ஒருவர் உண்டென்றால், அது பல தடைகளுக்கும் சவால்களுக்கும் முகம் கொடுத்து தமிழர்களுக்கு என்று ஒரு நாடு அமைப்பதற்கு போராடி வரும் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மட்டுமே ஆவார். கொள்கையில் உறுதியும், இன உரிமையை விட்டுக் கொடுக்காத பண்பும் கொண்ட வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் உலகத் தமிழர்களின் வழிகாட்டியாக விளங்கி வருகிறார் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு உண்மை. கலைஞரை குளிர்ச்சிப்படுத்துவதற்காக அவரை சிலர் உலகத் தமிழர்களின் தலைவர் என்று அழைக்கலாம். ஆனால் அவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். உலகின் எந்த மூலையில் தமிழன் வாழ்ந்தாலும், அவன் அடி வாங்குகின்ற பொழுது தலைவர் பிரபாகரனைத்தான் நினைப்பான். கலைஞரை அல்ல. அதே வேளை தமிழ் மொழிக்கு கலைஞர்தான் தலைவர் என்பதில் வேறு கருத்துக்கு இடமில்லை. இதனாலேயே கலைஞர் கருணாநிதியை ஆதரிக்காத எம்மைப் போன்றவர்கள் கூட, அன்போடு "கலைஞர்" என்று அழைக்கிறார்கள்.

இதே வேளை இன்னும் ஒன்றையும் குறிப்பிட வேண்டும். எம்மவர்களில் சிலரிடம் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. தலைவர்கள் மாறுவதன் மூலம் நாடுகளின் கொள்கைகளில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்ப்பார்கள். "சந்திரிகா வந்தால் பிரச்சனை தீரும், ரணில் வந்தால் நல்லது என்பார்கள்". "இந்தியாவில் வாஜ்பாய் வந்தால் ஈழத் தமிழர்களை ஆதரிப்பார்" என்பார்கள். "இல்லை, சொனியா வருவதே நல்லது" என்பார்கள். தமிழ்நாட்டில் கலைஞர் கருணாநிதி வந்ததும் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று பேசுவார்கள். எல்லவாற்றிற்கும் மேலாக "அமெரிக்காவில் யார் ஜனாதிபதியாக வந்தால் ஈழத் தமிழர்களுக்கு நல்லது" என்று கூட விவாதிப்பார்கள். இதே போன்று இந்தியா வந்து பிரச்சனையை தீர்த்து வைக்கும் என்பார்கள். நோர்வே தீர்த்து வைக்கும் என்பார்கள்.

இவ்வாறு மற்றவர்களை எதிர்பார்ப்தை விட்டுவிட்டு, எமது பலத்திலும் உலகத் தமிழினத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வழிகாட்டலிலுமே விடுதலையைப் பெறு முடியும் என்பதை உணர்ந்து கொள்வோம்.

செய்திகளின் பார்வை - 21.05.06

«Ð¾¡ý ¾Á¢Æ£Æõ ±ýÚ ´Õ ¿¡Î ¯ÕšŨ¾

þó¾¢Â¡ ´Õ§À¡Ðõ Å¢ÕõÀÅ¢ø¨Ä ±ýÚ

Áò¾¢ÂÃÍ ¾¢ð¼Åð¼Á¡¸ À¸¢Ãí¸Á¡¸ «È¢Å¢òÐÅ¢ðΧ¾..!

«ô§À¡ ¸Õ½¡¿¢¾¢Â¢ý ¿¢¨ÄôÀ¡Îõ «Ð¾¡É¡..?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.