Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓஸ்லோவில் விடுதலைப் புலிகளுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

Featured Replies

இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு தொடர்பான பேச்சுக்களில் பங்கேற்பதற்காக நோர்வே தலைநகர் ஓஸ்லோவுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் சென்றடைந்தனர். ஓஸ்லோவில் விடுதலைப் புலிகளுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சுப.தமிழ்ச்செல்வன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் நேற்று திங்கட்கிழமை (05.06.06) நோர்வே நேரம் இரவு 10.30 மணிக்கு ஒஸ்லோ விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

பல நு}ற்றுக்கணக்கான நோர்வே வாழ் தமிழீழ மக்கள் விமான நிலையத்தில் ஒன்றுகூடி தமிழர் பிரதிநிதிகளுக்கு உற்சாக வரவேற்றபளித்தனர்.

ஓஸ்லோ விமான நிலையத்தில் ஒன்றுகூடிய மக்கள் தமிழீழத் தேசியக்கொடி, நோர்வே தேசியக்கொடிகளைத் தாங்கியிருந்தனர்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் குழுவினருக்கு மலர்க்கொத்துக்கள் வழங்கி மகிழ்ச்சி வரவேற்பளித்தனர்.

நோர்வேயின் வுஏ2 என்ற பிரபல தொலைக்காட்சி, விடுதலைப் புலிகளின் வருகையையும் மக்களின் வரவேற்பளிப்பபையும் பதிவு செய்ததோடு அரசியல்துறைப் பொறுப்பாளரிடம் செவ்வி கண்டது.

சமாதான முயற்சிகள் நெருக்கடியான நிலைக்குள் சென்றிருக்கின்ற சூழலிலும், விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ள நிலையிலும் ஓஸ்லோ சந்திப்பின் முக்கியத்துவம் குறித்து ஓஸ்லோ விமான நிலையத்தில் புதினத்திற்காக சு.ப.தமிழ்ச்செல்வனிடம் நாம் கேட்டபோது,

நோர்வேயின் அழைப்பை மதித்து நாங்கள் இந்தச் சந்திப்புக்களில் கலந்து கொள்ளவிருக்கின்றோம். தமிழர் தாயகத்தில் மிக மோசமான படுகொலைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. அங்குள்ள நிலைமைகளையும் எமது தலைமைப்பீடத்தின் நிலைப்பாடுகளையும் நேரடியாக நோர்வேக்கும் சர்வதேச சமூகத்திற்கும் எடுத்துச் சொல்லவுள்ளோம். அதேவேளை இந்தச் சந்திப்புகள் சிங்களப் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்தும் என்று நாங்கள் நம்பவில்லை என்றார்.

ஓஸ்லோ சந்திப்புக்கள் மூலம், மீண்டும் சமாதானப் பேச்சுக்கள் தொடங்கப்படுவதற்கான புறச்சுூழல் ஏற்படுத்தப்படும் வாய்ப்புக்கள் உள்ளனவா என்று கேட்டபோது,

தமிழர் தாயகத்தில் கொடூர வன்முறைச்சுூழலும் படுகொலைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நிலையில் அங்கு சுமூகநிலை இல்லை, மாற்றங்கள் இல்லை. எனவே இந்தச் சந்திப்புக்களால் பேச்சுவார்தைகளுக்கான புறச்சுூழல் ஏற்படுமென்றோ அதற்கான மாற்றங்கள் ஏற்படுமென்றோ நாம் நம்பவில்லை. நோர்டிக் (ஸ்கன்டிநேவிய) நாடுகளைச் சேர்ந்த கண்காணிப்பாளர்களின் செயற்பாடுகள் தொடர்பாக இச்சந்திப்புக்களில் ஆராயப்படவுள்ளது. அது விடயம் தொடர்பான எமது தலைமைப்பீடத்தின் உறுதியான நிலைப்பாட்டினை எடுத்து விளக்கவுள்ளோம் என்றார் சு.ப.தமிழ்ச்செல்வன்.

தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தலைமையில் தமிழீழ காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் ஆகியோர் நோர்வேக்கு வருகை தந்துள்ளனர்.

நோர்வேயிலிருந்து ரூபன் சிவராஜா

நன்றி: தமிழ்நாதம்

  • கருத்துக்கள உறவுகள்

யுத்த சூழலை அரசு திணிக்கின்றது

நோர்வேயிடம் புலிகள்

நேரடியாகத் தெரிவிப்புஒஸ்லோவிலிருந்து விசேட பிரதிநிதி

""இலங்கை அரசு கொலைகள், ஆள் கடத்தல், இராணுவ நெருக்கு வாரங்கள், வன்செயல்கள் ஆகியவற்றை மேற்கொண்டு அதன் மூலம் யுத்த சூழலை எம்மீது திணிக்கின்றது.''

விடுதலைப் புலிகளின் உயர்மட்டக் குழுவினர், சமாதான முயற்சியின் அனுசரணையாளர்களான நோர்வேத்தரப்பிடம் நேற்று இதனைத் தெரிவித்துள்ளனர்.

யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் செயற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு குறித்து நாளையும் நாளைமறுதினமும் ஒஸ்லோவில் இடம்பெறும் சந்திப்பில் கலந்துகொள்வதற்காக விடுதலைப் புலிகளின் உயர்மட்டக்குழுஒஸ்லோ வந்துசேர்ந்துள்ளது.

அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச் செல்வன், காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் ஆகியோர் கொண்ட உயர்மட்டக்குழு நோர்வேயின் அதிகாரிகளை நேற்றுச் சந்தித்தது.

நோர்வேயின் விசேட சமாதானப் பிரதிநிதி ஹன்ஸன் போவர், சர்வதேச விவகாரங்களுக்கான அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோரை உயர்மட்டக் குழுவினர் தனித்தனியாகச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

வடக்கு கிழக்கில் தற்போது ஏற்பட்டுள்ள கள நிலைமை குறித்து அவர்களுக்கு உயர்மட்டக் குழுவினர் விளக்கிக் கூறினர்.

இச்சந்திப்புக் குறித்து தமிழ்ச்செல்வன் கூறியதாவது:

நோர்வேயின் விசேட தூதுவர் போவர், அமைச்சர் சொல்ஹெய்ம் ஆகியோருடன் நேற்று விரிவாகப் பேச்சு நடத்தினோம்.

களநிலைமை மற்றும் நெருக்கடி நிலைமை குறித்து விவரமாக எடுத்துக்கூறினோம்.

கொலைகள், ஆள்கடத்தல்கள், வன்செயல்கள், இராணுவ நெருக்குவாரங்கள் தற்சமயம் தீவிரமாகியுள்ளன. இத்தகைய செயற்பாடுகள் மூலம் அரசு எம்மீது யுத்த சூழலைத் திணித்துவருகின்றது. இதை நோர்வேத் தரப்பிற்கு விரிவாக எடுத்துவிளக்கினோம்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையின்பின் அந்த ஒன்றியத்தில் அங்கம்வகிக்கும் நாடுகள் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடமுடியுமா என்பது குறித்து நோர்வேயுடன் நேற்று ஆராய்ந்துள்ளோம்.

இந்த விவகாரத்தில் எமது தலைமையின் நிலைப்பாட்டை விரிவாக நோர்வேத்தரப்புக்கு எடுத்துவிளக்கியுள்ளோம்.

நாளையும், நாளைமறுதினமும் நடைபெறும் சந்திப்பில் எமது தலைமையின் இறுக்கமான முடிவை நிலைப்பாட்டை தெளிவாக முன்வைக்கவிருக்கின்றோம் இப்படித் தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

ஒஸ்லோ பேச்சுக்களை முடித்துக்கொண்டு உயர்மட்டக்குழு சுவிஸ்சென்று அரச அதிகாரிகளுடன் பேச்சு நடத்தவிருக்கின்றது.

-உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.