Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சி.ஐ.ஏ.யின் இரகசிய வதை முகாம்களுக்கு ஐரோப்பிய ஒன்றியமும் உடந

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சி.ஐ.ஏ.யின் இரகசிய வதை முகாம்களுக்கு ஐரோப்பிய ஒன்றியமும் உடந்தை அம்பலம்!

அமெரிக்க புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ.யின் இரகசிய வதை முகாம்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் உடந்தையாக இருந்தது தற்போது அம்பலமாகியுள்ளது.

நீதிக்குப் புறம்பான படுகொலைகளைத் தடுப்பதையும் சட்டப்பூர்வமான முறைமைகளுக்கான ஆயுதப் போராட்டம் நடத்துவதையும் அரச பயங்கரவாதத்தைத் தடுக்க ஒடுக்குமுறைகள் நிகழ்த்தப்படுகிற முறைகளினூடே தற்காப்பினை மேற்கொள்ளுகிற செயற்பாடுகளையும் பயங்கரவாதம்- பயங்கரவாதம் என்று கூச்சல் போடுகிற அமெரிக்கா, ஐரோப்பிய உள்ளிட்ட சர்வதேச சமூகத்த்தி "சட்டவிரோத பயங்கரவாத" செயல் தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளது.

அமெரிக்க புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ.யின் இரகசிய வதை முகாம்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 14 நாடுகள் உடந்தையாக இருந்ததாக ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது.

சுவிஸ் செனட்டர் டிக் மார்ட்டி நடத்திய ஏழு மாத விசாரணையின் பின்னர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

கடந்த நவம்பர் மாதத்தில் கிழக்கு ஐரோப்பாவில் சி.ஐ.ஏ.வின் இரகசிய வதைமுகாம்கள் இருப்பதை ஊடகங்கள் அம்பலப்படுத்தியிருந்தன.

இதையடுத்து தமது விசாரணையை நடத்திய மார்ட்டி, எந்த எந்த வான்பாதையூடாக கைதிகளை இந்த வதைமுகாம்களுக்கு அமெரிக்கா விமானங்கள் ஏற்றி வந்தன என்பதையும் அதற்கான செய்திமதிப் புகைப்படங்களையும் கைதிகளின் வாக்குமூலங்களையும் பெற்றுள்ளார்.

கடந்த சனவரி மாதம் தனது இடைக்கால அறிக்கையை வெளியிட்டிருந்த மார்ட்டி, பெரும்பான்மையான ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அமெரிக்காவின் இந்த இரகசிய வதை முகாம்களை அறிந்திருந்தன என்றும் ஐரோப்பிய வான் பாதையூடாகவும் ஐரோப்பிய விமான நிலையங்கள் மூலமாகவும் இந்த கைதிகள் கொண்டு வரப்பட்டனர் என்றும் தெரிவித்திருந்தார்.

புதிய அறிக்கையில், தமது சந்தேகம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அமெரிக்காவின் இந்த சட்டவிரோத செயற்பாட்டுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் பல நாடுகள் உடந்தையாக இருந்துள்ளன என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

சில நாடுகள் இது குறித்து அறிந்திருந்தபோதும் பொருட்படுத்தவில்லை அல்லது என்ன நடக்கிறது என்பது குறித்து அறிய விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த சதியில், ஸ்பெயின், துருக்கி, ஜேர்மனி, சைப்ரஸ், இங்கிலாந்து, போர்த்துக்கல், அயர்லாந்து மற்றும் கீர்ஸ் ஆகிய நாடுகள் பாரிய பங்காற்றியிருப்பதாகவும் மார்ட்டியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவீடன், இத்தாலி, போஸ்னியா, மாசிடோனா ஆகிய நாடுகளில் தங்களது சொந்த மண்ணிலிருந்து மக்களை அமெரிக்க புலனாய்வுத்துறையினர் கடத்திச் செல்ல உடந்தையாக இருந்துள்ளன.

போலந்து மற்றும் ருமேனியாவில் அமெரிக்க புலனாய்வுத்துறையின் இரகசிய வதைமுகாம் இருப்பதையும் இந்த அமைப்பின் அறிக்கை உறுதி செய்துள்ளது. இருப்பினும் இந்த இரு நாடுகளும் இதனை மறுத்துள்ளன.

ஆனால் பயங்கரவாதச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை உலகம் முழுமைக்கும் கைது செய்து அவர்களின் நாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது.

இந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேயர், பழைய குற்றச்சாட்டுகளைத்தான் திரும்ப கூறியுள்ளனர். புதிதாக எதுவும் கூறவில்லை என்றார்.

கடந்த நவம்பர் மாதம் அமெரிக்காவின் வாசிங்டன் போஸ்ல் நாளிதழ் இந்த இரகசிய வதை முகாம்களை அம்லப்படுத்தியது. ஐரோப்பிய ஒன்றியம், ஆப்கான் மற்றும் தாய்லாந்தில் இத்தகைய முகாம்களை அமெரிக்கா அமைத்திருப்பதாக வாசிங்கடன் போஸ்ட் தெரிவித்திருந்தது.

2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர் நூற்றுக்கு மேற்பட்டோர் இத்தகைய இரகசிய வதை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.

-புதினம்

  • 2 weeks later...

ஐரோப்பிய ஒன்றியத்தினதும் அமெரிக்க உலகப் பேரரசினதும் இரட்டை வேடங்களை சர்வதேச மன்னிப்புச்சபை எனும் அவர்களின் உப குழுவே கண்டித்திருக்கிறதே...! இதில வேடிக்கை என்னவென்றால்.. சிவிஸ்லாந்து அதிகாரிகளுக்கு விடயம் தெரிய வரும் வரை சர்வதேச மன்னிப்புச்சபைக்கு... தெரியவே இல்லையாம்...! :roll: :P

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிட்டே தான் இருப்பார்கள்..! நிச்சயம் ஒரு மனிதப் புரட்சி மனிதாபிமானத்தைக் காக்க நடக்க வேண்டிய வேளை வந்தாச்சு...! :idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.