Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சரத் பொன்சேகா தாக்குதல்- சுற்றுலாத்துறைக்கு பாதிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சரத் பொன்சேகா தாக்குதல்- டோரா தாக்குதலினால் சுற்றுலாத்துறைக்கு பாதிப்பு: அனுரா

சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீதான தாக்குதல் மற்றும் கடற்படையின் டோராப் படகுகள் அழிப்பு ஆகியவற்றால் சிறிலங்கா சுற்றுலாத்துறைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் அனுரா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அவசரகாலச் சட்டம் மீதான விவாதத்தின் போது அனுரா பண்டாரநாயக்க பேசியதாவது:

நாட்டின் நலன் கருதி அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நெகிழ்வுப் போக்குடன் யதார்த்த ரீதியாக செயற்பட வேண்டும். ஐக்கிய இலங்கைக்குள் மேலதிக அதிகாரப் பகிர்வு மூலம் இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதாக சர்வதேச சமூகத்திடம் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நோர்வேயை நாம் துரத்திவிட முடியாது. இந்தியாவும் அதைத்தான் இப்போது கூறுகிறது. இது விடயத்தில் இந்தியா பின்னால் இருந்து செயற்படுகிறது. நம்முடன் இராணுவ ஒப்பந்தத்தை இந்தியா செய்து கொள்ளவில்லை. மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பரப்புரையானது அவரை சிங்களப் பேரினவாதியாகவும், சிங்களவர்களுக்கு ஆதரவான- தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாடுடையவராக வெளிப்படுத்தியது.

இராணுவத் தளபதி மீதான கொலை முயற்சியின் போதும் கூட அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பொறுமை காத்திருந்தார். அத்தகைய தாக்குதல் ஒரு யுத்த நடவடிக்கையாகும்.

மாறிவரும் உலக சூழலில் நாம் நமது கருத்துகளை மாற்றிக் கொள்ளாமல் அடம்பிடித்துக் கொண்டிருக்க முடியாது. மா சேதுங்கை சீனா தொடர்ந்து பின்பற்றியிருந்தால் அந்நாடு வீழ்ந்திருக்கும். மா சேதுங்க் தான் சீனாவின் தந்தை. ஆனால் அத்தகைய தலைவர்களுக்கு மதிப்பளிக்கப்பட்டாலும் தற்போது இடதுசாரித் தன்மையிலிருந்து வலதுசாரித் தன்மைக்கு மாறி வருகிறார்கள்.

தற்போதைய சீனாவானது இடதுசாரி உலகின் ஒரு முதலாளித்துவ நாடு. வியட்நாம் மீது அமெரிக்கா பாரிய குண்டுத் தாக்குதல்களை நடத்தியிருந்த போதும் அந்நாட்டில் பாரிய அளவில் முதலீடு செய்துள்ளது அமெரிக்கா.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் வலியுறுத்தியபடியான ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வு என்ற கோட்பாட்டின் படி அதிகாரப் பகிர்வை மேற்கொண்டு போர் முடிவுக்குக் கொண்டு வரப்படவேண்டும். உலகக் கூட்டமைப்புகளை இங்கே நாம் பயன்படுத்த வேண்டும் என்று நாம் விரும்பவில்லை. இதையே ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்கவும் தங்களது உரைகளின் மூலம் வலியுறுத்தி வந்தனர்.

இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீதான தாக்குதலையடுத்து 400 பிரான்ஸ் சுற்றுலாப் பயணிகள் தங்களது பயணத்தை இரத்து செய்துவிட்டனர்.

கடற்படையின் டோராப் படகுத் தாக்குதலையடுத்து 1,000 ஜப்பானியர்கள் தங்களது சிறிலங்கா பயணத்தை இரத்து செய்துவிட்டனர். இங்கே வந்து கொல்லப்படுவதற்காக யாரும் பணம் செலுத்தி வரத் தயாராக இல்லை. இந்த நாட்டிற்கு வருமானம் ஈட்டித் தரக் கூடிய மூன்றாவது பெரிய துறை சுற்றுலாத்துறை. இந்தத் துறையினது வளர்ச்சியில்லாமல் நாட்டினது பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்துவிடமுடியாது. இந்தத் துறையை மேம்படுத்தாமலும் முதலீடு செய்யாமலும் இருந்தால் நாட்டினது பொருளாதாரம் தொடர்ந்து குழப்பமானதாகவே இருக்கும்.

மாலைதீவுகளுக்கு ஒரு இலட்சத்து 25 ஆயிரம் ஜப்பானியர்கள் சுற்றுலாப் பயணிகளாக சென்றுள்ளனர். ஆனால் சிறிலங்காவுக்கோ 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ஜப்பானியர்களே வருகை தந்துள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியானது நாட்டினது பிரதான எதிர்க்கட்சியாகும். ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் காங்கிரசு ஆகியவற்றின் நம்பிக்கையை வென்றெடுப்பது இன்று மிகவும் அவசியமானதாகும். கிழக்குப் பகுதியில் மூன்றில் ஒரு பகுதியினர் முஸ்லிம்கள் வசிப்பதால் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுக்களில் முஸ்லிம்கள் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும். அமைதி முயற்சிக்கான இறுதிச் சந்தர்ப்பம் இதுவே.

நாடாளுமன்றக் குழுக்கள் தொடர்பிலான பிரச்சனையானது சமரசத்துக்கு இடமில்லாத சூழ்நிலையில் இருந்தபோது எப்படி சமரசமாக தீர்வு காணப்பட்டதோ அதோபோல் உணர்வுப்பூர்வமான பிரச்சனைகளில் ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டியது அவசியமானது என்றார் அனுரா பண்டாரநாயக்க.

-புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.