Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓஸ்லோப் பேச்சுக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஓஸ்லோப் பேச்சுக்கள் இன்று தொடக்கம்

நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினரின் பாதுகாப்பு தொடர்பான பேச்சுக்கள் இன்று வியாழக்கிழமை தொடங்குகின்றன.

இந்தப் பேச்சுக்களில் நோர்வே அனுசரணையாளர்கள், போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர், தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் சிறிலங்கா அரசாங்கத் தரப்பினர் பங்கேற்கின்றனர்.

ஓஸ்லோ பேச்சுக்களில் விவாதிக்கப்படக் கூடியவை குறித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் குழுவில் இடம்பெற்றுள்ள சமாதான செயலகப் பணிப்பாளர் சீ. புலித்தேவன் கூறியுள்ளதாவது:

ஐரோப்பிய ஒன்றியத் தடையையடுத்து போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவில் இடம்பெற்றுள்ள ஐரோப்பிய நாடுகளின் உறுப்பினர்களின் பணி, கண்காணிப்புக் குழுவினர் பாதுகாப்பு ஆகியவை தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது.

மேலும் ஐரோப்பியத் தடையினால் அமைதி முயற்சிகளில் ஏற்படும் தாக்கம் மற்றும் இலங்கை வன்முறைகள் குறித்து நோர்வேத் தரப்பினருடன் விவாதிக்கப்படும் என்றும் புலித்தேவன் தெரிவித்தார்.

ஓஸ்லோவுக்குப் புறப்படும் முன்னதாக கிளிநொச்சியில் ஊடகவியலாளர்களிடம் பேசிய தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன்,

ஐரோப்பியத் தடை தொடர்பிலான தமிழீழத் தலைமைப்பீடத்தினது உறுதியான இறுக்கமான நிலைப்பாடு நோர்வே அனுசரணையாளர்களிடம் தெரிவிக்கப்படும் என்றும் இலங்கையில் தமிழர் தாயகப் பகுதியில் சிறிலங்கா அரசாங்கப் படைகள் மற்றும் அவற்றுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் மோசமாகக் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நோர்வே முன்னாள் பிரதமருடன் தமிழீழ விடுதலைப் புலிகள் சந்திப்பு

நோர்வேயின் முன்னாள் பிரதமரை தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் நேற்று புதன்கிழமை சந்தித்தனர்.

நோர்வேயின் பிரதமரும் ஐ.நாவின் ஆப்பிரிக்க பிராந்தியத்திற்கான சிறப்புத் தூதுவருமான செல் மக்ன வுண்டவீக்கை தமிழீழ அரசியல்துறைபு் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தலைமையிலான விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடினர்.

மரியாதை நிமித்தமான இந்தச் சந்திப்பபு, நோர்வே நேரம் பகல் 1.30 மணிக்கு ஒஸ்லோவில் நடைபெற்றது.

சிறிலங்கா அரசினால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பொதுமக்கள் மீதான படுகொலைகள் குறித்தும் சமாதான முயற்சிகள் எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலைமைகள் குறித்தும் வுண்டவீக்க்கு சு.ப.தமிழ்ச்செல்வன் எடுத்து விளக்கினார்.

ஒஸ்லோவிற்கு வெளியில் ஒஸ்லோவிலிருந்து 70 கி.மீ தொலைவிலமைந்துள்ள ஜெவ்ணாக்கர் எனும் இடத்தில் கண்காணிப்புக் குழு தொடர்பான பேச்சுக்கள் நடைபெற உள்ளன.

நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சூல்கைம் தலைமையில் இச் சந்திப்புக்கள் நடைபெற உள்ளன.

-புதினம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒஸ்லோ சந்திப்பில் அரசுபுலிகள்

இன்று நேரடிச் சந்திப்பு இல்லை

நோர்வேக்கு செவ்வாயன்று திட்டவட்டமாகவே தெரிவிப்புஒஸ்லோவிலிருந்து ந.வித்தியாதரன்

யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் செயற்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக ஒஸ்லோ வந்திருக்கும் விடுதலைப் புலிகளின் உயர்மட்டக்குழு இன்று அவ்விடயம் குறித்து நோர்வே உயர் குழுவுடன் பேச்சு நடத்துகிறது. இப்பேச்சு நாளையும் தொடரும்.

எனினும், இவ்விடயம் குறித்து ஆராய்வதற்காக ஒஸ்லோ வந்திருக்கும் இலங்கை அரசுத் தூதுக்குழுவினருடன் புலிகள் எந்தச் சந்தர்ப்பத்திலும் ஒரு மேசையிலிருந்து பேசமாட்டார்கள். இதனைத் திட்டவட்டமாகவே புலிகளின் பிரதிநிதிகள் நேற்றுமுன்தினம் நோர்வே உயர்மட்டத்தினருக்குத் தெரிவித்து விட்டனர் என நம்பகரமாக அறியவந்தது.

நேற்றுமுன்தினம் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தலைமையிலான குழுவினர் நோர்வே அரசுத்தரப்பினருடன் இரண்டுசுற்றுப் பேச்சுகளை நடத்தினர். இலங்கை சமாதான முயற்சிகளுக்குப் பொறுப்பான விசேட பிரதிநிதி ஹன்ஸன் போவருடன் முதலிலும் பின்னர் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், ஹன்ஸன் போவர் ஆகியோருடன் இரண்டாவது தடவை யுமாக சுமார் மூன்று மணிநேரம் புலிகள் உரையாடினர்.

இந்த உரையாடல்களில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளருடன் காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், புலிகளின் சமாதான செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் ஆகியோரும் பங்குபற்றினர்.

முக்கியமான மூன்று விடயங்கள் குறித் துப் புலிகள் தமது கருத்துக்களைத் தெரிவித்ததாகவும் உறுதியாகவும் திடமாகவும் இந்தச் சந்திப்பின்போது தெரிவித்தனர் என அறிய வந்தது.

* ""கண்காணிப்புக் குழுவின் நடவடிக்கை கள் குறித்துப் பேசுவதற்காக நோர்வே அழைத்ததால் ஒஸ்லோவந்துள்ளோம். அது குறித்து நோர்வேயுடனேயே பேசுவோம். அரசியல் தலைமைகள் கூட இடம்பெறாமல் வெறும் அதிகாரிகள் மட்டத்தில் வந்திருக்கும் இலங்கை அரசுக் குழுவினருடன் இவ் விவகாரம் குறித்து ஒன்றாக அமர்ந்து பேசுவ தற்கு நாம் தயாரில்லை. அப்படிப் பேசுவதற்கு எமது தலைமை எமக்கு அனுமதி வழங்கவில்லை'' இது புலிகள் தெரிவித்த முதல் விடயம்.

* ஐரோப்பிய ஒன்றியத் தடை மூலம் எங்கள் அமைப்பைத் தடைசெய்துள்ள நாடுகளின் பிரதிநிதிகள் கண்காணிப்புக் குழுவில் இடம்பெறுவது பொருத்த மற்றது. எனவே சுவீடன், டென்மார்க், பின்லாந்து ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கண்காணிப்புக் குழுவில் பங்குபற்றுவதற்கான நடுநிலைத் தகுதி பங்கப்பட்டுள்ளது. எனவே இந்த விட யத்தில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட வேண் டும்.'' இது புலிகள் வற்புறுத்திய இரண்டா வது விடயம்.

கண்காணிப்புக்குழுவின் பங்கு, பணி மற் றும் கடற்கண்காணிப்புப் பணி ஆகியவை தொடர்பான வேறு விடயங்களையும் புலி கள் நோர்வேத் தரப்பிற்குத் தெரியப்படுத் தி னர்.

இந்த விடயங்கள் குறித்து இன்றும் நாளையும் பேச்சுகளின் போது புலிகள் கடு மையான இறுக்கமான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவர் என ஒஸ்லோவில் புலிக ளின் தூதுக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதன் காரணமாகவும், இந்தச் சந்திப்பு களில் புலிகளும், இலங்கை அரசுப் பிரதிநிதி களும் ஒரு மேசையில் அமர மாட்டார்கள் என்ற நிலைப்பாடு காரணமாவும் இந்தச் சந் திப்புகளில் எதிர்பார்த்த அளவிற்குச் சாதக மான பெறுபேறுகள் எட்டப்படுவதற்கு வாய்ப்பே இல்லை என்று தெரியவருகின்றது.

யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழுவின ரின் செயற்பாடுகள் பற்றி ஆராய்ந்து முடிவு செய்வதற்கான இன்றைய சந்திப்புகளை ஒஸ்லோ நகருக்கு வெளியே ஒஸ்லோ நகர த்திலிருந்து 25 கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள ஓர் இடத்தில் நடத்துவதற்கு நோர்வே அதிகாரிகள் ஒழுங்கு செய்துள்ளனர்.

-உதயன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓஸ்லோவில் எம்மை சந்திக்க புலிகள் மறுத்துவிட்டனர்: சிறிலங்கா அரசாங்கம்

நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களைச் சந்திக்க மறுத்துவிட்டனர் என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா சமாதான செயலகம் இன்று வியாழக்கிழமை விடுத்துள்ள அறிக்கை:

நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் மாநாடு நடைபெறும் இடத்திற்கு சென்றடைந்த போது சிறிலங்கா அரசாங்கக் குழுவினரைச் சந்திக்க தமிழீழ விடுதலைப் புலிகள் மறுத்துவிட்டனர்.

போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினரது செயற்பாடுகள் குறித்து விவாதிப்பதற்காக றோயல் நோர்வே அரசாங்கம் விடுத்திருந்த அழைப்பை ஏற்று சிறிலங்கா அரசாங்கக் குழு ஓஸ்லோ சென்றது. இதே அழைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் விடுக்கப்பட்டது.

இப்பேச்சுக்கள் நடைபெறும் ஓஸ்லோ அருகே உள்ள ஜெவ்னெகர் விடுதியில் இன்று காலை 9 மணியளவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மறுத்துவிட்ட தகவல் எமது அரசாங்கக் குழுவினருக்கு நோர்வே அனுசரணையாளர்களால் தெரிவிக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் இந்த நிலைப்பாடு குறித்து நோர்வேத் தரப்பு ஆச்சரியமடைந்துள்ளது என்று அரசாங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இன்றைய சந்திப்பு தொடர்பாக நோர்வே நேரம் இரவு 9 மணிக்கு ஊடகவியலாளர்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் சந்திக்க உள்ளனர் என்று கூறப்படுகிறது.

-புதினம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பேச்சுக் குழுவை திருப்பி அழைக்க

அரச உயர்மட்டம் நேற்றிரவு முடிவு?

நேரடியாகப் பேச புலிகள் மறுத்ததால் அதிர்ச்சியாம்

இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் செயற்பாடுகள் குறித்து ஆராய் வதற்காக ஒஸ்லோவில் ஏற்பாடு செய்யப்பட் டுள்ள பேச்சுகளில் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் அரச தூதுக் குழுவுடன் நேர டிப் பேச்சுகளில் கலந்துகொள்வதற்கு தொடர்ந்து மறுப்பார்களாயின் அரச குழுவினரை உடனடியாக நாட்டுக்குத் திருப்பி அழைப்பதென்று அரச உயர் மட்டம் நேற்று இரவு தீர்மானித்த தாகத் தெரியவந்தது.

இது குறித்து தமது பேச்சுக் குழுவுக்கு அரசு அவசர பணிப்புரை ஒன்றை விடுத்திருப்பதாகவும் அறியவந்தது.

கண்காணிப்புக் குழுவின் செயற்பாடுகள் குறித்துப் பேசுவதற்காக ஒஸ்லோ வந்திருக் கும் அரச குழுவில் அதிகாரிகளே அங்கம் வகித்திருப்பதால் அவர்களுடன் நேரடிப் பேச்சுகளை நடத்த முடியாதென விடுதலைப் புலிகள் நோர்வே அனுசரணையாளர்களிடம் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தனர்.

நோர்வே அனுசரணையாளர்கள் இதனை உயர்மட்டத்திற்கு நேற்று அறிவித்தனர். இத னைக் கேட்டு கடும் அதிருப்தியடைந்த அரச உயர் மட்டம், புலிகள் தொடர்ந்தும் இது விட யத்தில் கடும்போக்கைக் கடைப்பிடித்தால், அரச தூதுக் குழு நாடு திரும்புவதே நல்லதென்று தீர்மானித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை போர் நிறுத்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் புலிகளே கூடுதலான அள வில் மீறியுள்ளதால் பேச்சுகளில் புலிகளே நெகிழ்வுப் போக்கைக் கடைப்பிடிக்க வேண்டு மெனவும் இது விடயத்தில் இறங்கிப் போகக் கூடாதென்றும் அரச உயர்மட்டம் நோர்வேயி லுள்ள அரச குழுவுக்குப் பணிப்புரை விடுத் திருப்பதாகவும் அறிய வந்தது.

இதேவேளை, ஒஸ்லோவில் நேற்று நடை பெறவிருந்த பேச்சுகளுக்காக வந்துவிட்டு கடைசி நேரத்தில் நேரடிப் பேச்சில் கலந்து கொள்ளப் போவதில்லையென்று புலிகள் அறிவித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி யுள்ளதாக அரசு நேற்று மாலை விடுத்த அறிக்கை யொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேச்சுக்கான பின்னணி குறித்து தெரிந்து கொண்ட பின்னரும் புலிகள் இப்படிச் செய் தமை நோர்வே அனுசரணையாளர்களுக் கும் பெரும் ஆச்சரியத்தைத் தந்துள்ளது. கண் காணிப்புக் குழுவின் ஐரோப்பிய ஒன்றியத் தைச் சேர்ந்த டென்மார்க், சுவீடன், பின் லாந்து ஆகிய நாடுகளின் உறுப்பினர்கள் அங்கம் வகிப்பது தொடர்பிலும் புலிகள் ஆட்சேபனை தெரிவித்ததாக நோர்வே அனு சரணையாளர்கள் அரசுக்கு அறிவித்திருக் கின்றனர்.

தூதரக அந்தஸ்து உடன்படிக்கையின் படி நோர்டிக் நாடுகளைச் சேர்ந்த உறுப் பினர்களை நியமிக்குமாறு அரசு நோர்வே யைக் கேட்டுள்ளது. மேற்படி 3 நாடுகளின் உறுப்பினர்கள் தனிப்பட்ட கோதாவிலேயே தமது பணியைச் செய்கின்றனர். தேசிய பிர ஜைகள் என்ற ரீதியில் அவர்கள் இதில் சேர்க் கப்படவில்லை என்பதையும் அரசு நோர்வே யிடம் கூறியுள்ளது.

இவ்வாறு அரசு அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

-உதயன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரச குழுவுடன் ஒரே மேசையில் அமர்ந்து பேசும் திட்டத்திற்கு புலிகளை சம்மதிக்க வைக்க நோர்வே பகீரதப் பிரயத்தனம் தமிழ்ச்செல்வன் குழுவோ இம்மியளவும் அசைந்து கொடுப்பதற்கு அடியோடு மறுப்பு

ஒஸ்லோவிலிருந்து ந. வித்தியாதரன்

யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் செயற்பாடுகள் குறித்துப் பேச்சு நடத்துவதற்காக ஒஸ்லோ வந்திருக்கும் விடுதலைப் புலிகளின் உயர்மட்டக் குழுவினரையும் அரச குழுவினரையும் ஒரே மேசையில் சந்திக்க வைப்பதற்கு நேரடியாக வைத்துப் பேச்சுகளை நடத்துவதற்கு நோர்வே அனுசரணையாளர்கள் மேற்கொண்ட பகீரதமுயற்சி நேற்று இந்தச் செய்தி எழுதப்படும்வரை (ஒஸ்லோ நேரப்படி பிற்பகல் 2 மணிவரை) இம்மியளவும் பயனளிக்கவில்லை.

நேரடிப் பேச்சுகளில் கலந்துகொள்ளுமாறு வழங்கப்பட்ட அழுத்தங்களை, ஆலோசனைகளைப் புலிகள் துளியளவும் ஏற்றுக்கொள்ளவில்லை அசைந்து கொடுக்கவில்லை.

இதன் காரணமாக நேற்றைய முதல்நாளின் போது முக்கிய கலந்துரையாடல்களில் புலிக ளால் பங்குபற்ற இயலாமற்போனது. ஆனா லும், விடுதலைப் புலிகளின் தூதுக்குழு, தற் போது நோர்வேயில் தங்கியுள்ள புலிகளின் அரசமைப்பு விவகார ஆலோசனைக் குழுவு டன் நேற்று விரிவான பேச்சுகளை நடத்தி யது.

நேற்றுமுன்னிரவுவரை நோர்வே அனு சரணைத் தரப்பில் நோர்வே விசேட பிரதிநிதி ஜோன் ஹான்ஸன் போவர் மற்றும் நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், விதார் ஹெல் கிஸன் ஆகியோர் புலிகளின் முக்கியஸ்தர் களுடன் நெடுநேரம் பேச்சு நடத்தினர். புலி களை நேரடிப் பேச்சுக்கு சம்மதிக்க வைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் இதன்போது பயன ளிக்கவில்லை.

இதனையடுத்து, புலிகளின் இந்த நிலைப்பாட்டை நோர்வே அனுசரணையாளர்கள் அரச பிரதிநிதிகளுக்கு அறிவித்தனர். அரசுக் கும் அறிவிக்கப்பட்டது. தமது முடிவில் மாற்ற மில்லையெனப் புலிகள் உறுதியாக அறிவித் ததையடுத்து நேற்றைய முதல்நாள் கலந்துரை யாடல் இடம்பெறவில்லை. இதனால், அனுசரணையாளர்கள் நேற்று மதியம்வரை புலி களுடன் பேச்சு எதனையும் நடத்தவில்லை. அவர்கள் அரச குழுவுடன் பேச்சுகளை நடத் திக் கொண்டிருந்தனர்.

இலங்கை நேரப்படி நேற்றிரவு 10 மணி யளவில் தமிழ்ச்செல்வன் தலைமையிலான புலிகளின் குழுவினருக்கும் நோர்வே அமைச் சர் எரிக்சொல்ஹெய்முக்குமிடையில

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பேச்சுக்களை உதாசீனப்படுத்தி சிறிலங்கா தூதுக்குழு வெளியேறியது எதற்காக?: சு.ப.தமிழ்ச்செல்வன் விளக்கம் பேச்சுக்களை உதாசீனப்படுத்தி சிறிலங்கா தூதுக்குழு வெளியேறியது எதற்காக என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் ஊடகவியலாளர் மாநாட்டில் விளக்கமளித்துள்ளார்.

கண்காணிப்புக் குழுவினரின் பணிகள் தொடர்பாக முதலாம் நாள் சந்திப்புக்களை முடித்துவிட்டு நேற்று வியாழக்கிழமை நோர்வே நேரம் இரவு 10.30 மணிக்கு நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளதாவது:

நோர்வேயில் இரு நாட்களுக்கு திட்டமிடப்பட்டிருந்த சந்திப்புக்களில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருந்த சிறிலங்கா அரச தூதுக்குழு, சில மணி நேரங்களிலேயே பேச்சுக்களை முறித்துக்கொண்டு வெளியேறியது. சிறிலங்கா அரச தரப்பின் இந்நடவடிக்கை, சமாதான முயற்சியில் சிங்கள அரசு அக்கறையின்றி அலட்சியப்போக்குடன் செயற்படுவதையே வெளிக்காட்டுகின்றது.

இலங்கைத்தீவின் களநிலைமைகள் தொடர்பான ஆழமான விடயங்களைக் கருத்தில் கொள்ளாது, இருதரப்பினரையும் ஒன்றாக பேச்சு மேசைக்கு அழைப்பதிலேயே அனுசரணையாளர்கள் அதிக முனைப்புக் கொண்டுள்ளமையும் கவலையளிக்கின்றது என்றார் சு.ப.தமிழ்ச்செல்வன்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் நோர்வே அனுசரணையாளர்கள் மற்றும் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இரு சந்திப்புக்கள் நடைபெற்றன.

சிறிலங்கா அரசின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் பாலித கோகன்ன தலைமையிலான தூதுக்குழுவினர் காத்திரமான முடிவுகளை எடுக்கக்கூடிய அரசியல் அதிகாரம் கொண்ட குழு அல்ல என்ற அடிப்படையில் அவர்களுடன் ஒரே மேசையில் பேசுவதற்கு விடுதலைப் புலிகள் மறுப்புத் தெரிவித்திருந்தனர்.

எனினும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் சி.புலித்தேவன் அரச குழுவுடன் பேசுவதற்கு தயாரென தெரிவிக்கப்பட்டது. ஆனால் அரச தரப்பு அதனை ஏற்க மறுத்திருந்தது என்பதை நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் நேற்றிரவு 9.30 மணிக்கு நோர்வே வெளியுறவு அமைச்சகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையின் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்புரிமை வகிக்கும் நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளால் நடுநிலை மற்றும் பக்கச்சார்பின்மையைப் பேணமுடியாது என்பதை தமிழீழ விடுதலைப் புலிகள் நோர்வேத் தரப்பிடம் வலியுறுத்திக் கூறியுள்ளனர்.

நோர்டிக் நாடுகளின் கண்காணிப்பாளர்கள் தொடர்பான விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டினை மறுபரிசீலனை செய்யுமாறு நோர்வேத் தரப்பு கேட்டுக் கொண்டுள்ளதாகவும் எரிக் சொல்ஹெய்ம் ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் தெரிவித்ததுடன் விடுதலைப் புலிகளும் அரச தரப்பினரும் ஓரே மேசையில் பேச வேண்டுமென்ற எதிர்பார்ப்பு தமக்கு இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் மற்றும் சிறிலங்கா ஆகிய தரப்புகளுக்கிடையிலான சமநிலையின் அடிப்படையிலேயே போர்நிறுத்த உடன்படிக்கை உருவாக்கப்பட்டது. சமநிலை மற்றும் நடுநிலைத் தன்மையுடனேயே நோர்டிக் நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் போர்நிறுத்தக் கண்காணிப்புப் பணிகளுக்கு அழைக்கப்பட்டனர்.

இந்தச் சூழலில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையின் பின்னர், அதன் அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகளின் நடுநிலைத்தன்மை கேள்விக்குள்ளாகியுள்ளது என்பதை நோர்வேத் தரப்பிற்கு வலியுறுத்திக் கூறியுள்ளதாக நேற்றிரவு நோர்வே நேரம் 10.30 மணிக்கு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சு.ப.தமிழ்ச்செல்வன் விளக்கினார்.

கண்காணிப்புக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பான மேலதிக சந்திப்புக்கள் இன்று வெள்ளிக்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் நோர்வே அனுசரணையாளர்களுக்கு இடையில் நடைபெறவிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

நோர்வே வெளியுறவு அமைச்சகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், சமாதான சிறப்புத்தூதுவர் ஹன்சன் பௌயர், முன்னாள் பிரதி வெளியுறவு அமைச்சர் விதார் ஹெல்கீசன், சிறிலங்காவுக்கான நோர்வேத் தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கர் மற்றும் கண்காணிப்புக்குழுத் தலைவர் உல்ப் ஹென்றிக்சன் ஆகியோர் சமூகமளித்திருந்தனர்.

ஓஸ்லோ கொன்தினெந்தல் தங்ககத்தில் நடைபெற்ற விடுதலைப் புலிகளின் ஊடகவியலாளர் மாநாட்டில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் மற்றும் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் ஆகியோர் பங்கேற்றனர்.

நோர்வேயின் பிரபல தொலைக்காட்சிகள் மற்றும் நாளேடுகளிலிருந்தும் நோர்வேஜிய ஊடகவியலாளர்கள் வருகை தந்து சுப.தமிழ்ச்செல்வனிடம் சந்திப்புக்கள் தொடர்பான பல்வேறு நிலைப்பாடுகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டனர்.

-புதினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையில் சமாதானம் எனும் கானல் நீர்

http://www.peaceinsrilanka.com/tamil/

http://www.dellka.cec.eu.int/en/index.htm

தினகரன் பதிப்பில்

http://img364.imageshack.us/img364/3907/os...karancom3pc.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.