Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் ஒரு புதைக்குழிக் கண்ணீர்கதைகள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கைதடியில் தொடரும் புதை குழிகள் மேலும் இரண்டு சடலங்கள் மீட்பு.

யாழ்ப்பாணம் கோப்பாய் கைதடி வெளியில் அமைந்துள்ள வெளியில் மனித புதைகுழிகள் தோண்டும் நிகழ்வு இன்று மூன்றாவது நாளாகவும் இடம் பெற்றுக் கொண்டு இருக்கின்றது இன்றைய தினம் குறிப்பிட்ட இடத்திற்கு சாவகச்சேரி மாவட்ட நீதிபதி அரியரெத்தினம் உட்பட மற்றும் யாழ்ப்பாணம் வையித்திய சாலை சட்ட வையித்திய அதிகாரி யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆனைக்குழு பொறுப்பதிகாரி உட்பட மற்றும் பலர் சென்றுள்ளர்கள்

ஏற்க்கனவே இந்தப் பகுதியில் இருந்து இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டள்ளன இதனைத் தொடர்ந்து இன்று இடம் பெறும் தேடுதல் நடவடிக்கையில் மேலும் இரண்டு சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது

நேற்றைய தினம் கண்டு பிடிக்கப்பட்ட சடலம் பிறவுன் வீதி கலட்டி எனும் இடத்தைச் சோந்தவருடையதாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது குறிப்பிட்ட சடலத்தை இன்று யாழ்ப்பாணம் போதனா வையித்திய சாலைக்கு வந்து பார்வையிட்டவர்கள் பெற்றோர்கள் தமது பிள்ளையினுடையதாக இரக்கலாம் என தெரிவித்த போதிலும் இதனை சரியாக உறுதிப்படுத்த முடியாது இருக்கின்றது

குறிப்பிட்ட பெற்றோர்கள் சாவகச்சேரி நீதிமன்றத்திற்கு கண்டெடுத்த ஏனைய கையடக்கத் தொலைபேசி அட்டை போன்றவற்றை பார்ப்பதற்காக சென்றுள்ளார்கள்

யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு சில மாதங்களில் காணாமல் போனவாகளுடைய சடலங்கள் இங்கு புதைக்கப்பட்டுஇருக்கலாம் என எதிர் பார்க்கப்படுகின்றது

இத்துடன் குறிப்பிட்ட சடலம் காணப்படும் இடம் கோப்பாய் கைதடி வெளியில் உள்ள கோப்பாய் சந்திக்கும் கைதடி வெளிக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள இரண்டு பாரிய இராணுவ முகாம்கள் மற்றும் சோதனை நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியில் இருந்தே கண்டு பிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்

-பதிவு-

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதை விட இன்று காலை நீர்வேலித் தரவைப் பகுதியில் இளைஞன் ஒருவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டிரு;ககின்றத

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். கைதடிப்பகுதியில் "செம்மணி புதைகுழியா?" மூன்றாவது சடலம் இன்று மீட்பு

யாழ். கைதடிப்பகுதியில் புதைகுழி ஒன்று தோண்டப்பட்டு வரும் நிலையில் சடலங்களும் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன.

கைதடிப் பாலத்திற்கு அண்மையப் பகுதியில் நேற்று முன்னாள் இந்து மதகுரு ஒருவருடைய சடலம் எடுக்கப்பட்டது.

அந்த இடத்துக்கு அருகில் நேற்றும் இன்றும் தோண்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதியிலிருந்து நேற்று ஒரு சடலம் இருந்து மீட்கப்பட்டது.

யாழ். நீதிபதி மற்றும் மனித உரிமைகள், போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுப் பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று வியாழக்கிழமையும் தோண்டப்பட்டதில் மேலும் ஒரு சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சடலம் சிதைவடைந்து காணப்படுவதால் அடையாளம் காணப்படமுடியாத நிலையில் உள்ளது.

செம்மணிப் புதைகுழியைப் போன்ற பல சடலங்கள் சிறிலங்காப்படையினரால் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

-புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

கோப்பாயில் நேற்றும் இரு சடலங்கள் மீட்பு!

http://www.uthayan.com/pages/news/today/02.htm

கோப்பாய் பாலத்துக்கு அண்மையில் நேற்று வியாழக்கிழமை மேலும் இரு சடலங்கள் மிகவும் சேதமடைந்த நிலையில் புதைகுழி யில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டன.

கடந்த 6ஆம் திகதி இப்பகுதியில் மணல் அகழ்வதற்காகச் சென்றவர்கள் கொடுத்த தகவலையடுத்து அங்கு ஆலய பூசகரான வைத் தீஸ்வரசர்மா வெங்கடகிருஷ்ணசர்மா (வயது 50) என்பவரது சட லம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்றுமுன்தினம் புதன் கிழமை மேலும் ஓர் ஆணின் சடலம் புதைகுழியில் மீட்கப்பட்டது.

இதன்காரணமாக, நேற்று வியாழக்கிழமை அப்பகுதியில் சந்தே கத்துக்கிடமான இடங்களைத் தோண்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட் டன.

நேற்றுக்காலை அவ்விடத்துக்கு வந்த சாவகச்சேரி நீதிவான் அ.பிரேம்சங்கர் சந்தேகத்துக்கிடமான இடங்களைப் பார்வையிட்டார்.

கோப்பாய் கைதடி வீதியில் கோப்பாய் பாலத்துக்கு அண்மையில், வீதியில் இருந்து சுமார் நூறு மீற்றர் தூரத் துக்குட்பட்ட தரவைப் பகுதியிலேயே முன் னர் இரு சடலங்களும் மீட்கப்பட்டிருந்தன. இதன் காரணமாக, அப்பகுதியில் மேலும் சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் நிலவியதை அடுத்து அங்கு புதைகுழி தோண்டுவதற்கு முடிவுசெய்யப்பட்டது.

சாவகச்சேரி நீதிவான் அ.பிரேம்சங்கர், யாழ். அரச அதிபர் கே.கணேஷ், கோப்பாய் உதவிப் பிரதேச செயலர் திருமதி அ.சாந்த சீலன், சாவகச்சேரிப் பிரதேச செயலர் செ. ஸ்ரீனிவாசன், மனித உரிமை ஆணைக்குழு வின் யாழ். பிராந்திய இணைப்பதிகாரி ரி. சுவேந்திரராசா, சட்டத்தரணி மு.றெமீடியஸ் மற்றும் கிராமசேவகர்கள், கண்காணிப்புக் குழுவினர், பொலிஸார், இராணுவத்தினர், பொதுமக்கள் ஆகியோர் முன்னிலையில் சந் தேகத்துக்கிடமான இடங்கள் முதலில் பார்வை யிடப்பட்டன. வீதியில் இருந்து சுமார் 500 மீற்றருக்கு உட்பட்ட தரவைப் பகுதியில் இக் குழுவினர் சந்தேகமான இடங்களைப் பார்வை யிட்டனர்.

இதன்போது வீதியில் இருந்து 100 மீற் றர் தூரத்தில் முன்னர் இரு சடலங்களும் கண்டுபிடிக்கப்பட்ட அதேவரிசையில் புதைகுழியொன்று இருப்பது கண்டு பிடிக்கப்பட் டது.

இந்தவேளையில், யாழ். நீதிமன்ற மேல திக நீதிவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன், பருத்தித்துறை மாவட்ட நீதிவான் அரிய நாய கம், மல்லாகம் மாவட்ட நீதிவான் திருமதி சறோஜினி இளங்கோவன் ஆகியோரும் சம் பவ இடத்துக்கு வந்து சேர்ந்தனர்.

இதனையடுத்து, சட்டவைத்திய அதிகாரி தலைமையிலான குழு சந்தேகத்துக்கிடமான குழியைத் தோண்டியது. அங்கு இரண்டு சட லங்கள் ஒன்றன் மேல் ஒன்றாகப் போடப்பட் டிருந்தன. சுமார் நான்கு அடி ஆழத்தில் இந் தச் சடலங்கள் புதைக்கப்பட்டிருந்தன. இரண் டும் ஆண்களுடைய சடலங்கள் என்பது தெரியவந்தது. இரு சடலங்களும் வெவ் வேறாகத் தோண்டி எடுக்கப்பட்டன. ஒரு சட லம் நீல நிறச் சாரம் அணிந்த நிலையில் உருக் குலைந்த நிலையில் காணப்பட்டது. மற்றைய சடலம் ஆண்களுக்கான உள்ளாடை, பெனி யன் ஆகியன அணிந்த நிலையில் காணப் பட்டது. அத்துடன், சடலம் ஒன்றின் கையில் இயங்கும் நிலையில் "றொலக்ஸ்' கடிகாரம் ஒன்று காணப்பட்டது. ஆண்கள் அணியும் கை வளையம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது. இந்த இரு சடலங்களும் சுமார் 50 நாள்கள் காலப்பகுதியில் புதைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இரு சடலங்களும் வெவ்வேறாகப் பொதி செய்யப்பட்டுப் பொலிஸாரினால் பரிசோத னைக்கென எடுத்துச் செல்லப்பட்டன.

இதன் பின்னர் அப் பகுதியில் வேறு புதை குழிகள் உள்ளனவா? என்பது குறித்து ஆரா யப்பட்டது. அதன் போது அங்கு சமுகமளித் திருந்த நீதிவான்கள், அரச அதிபர், மனித உரிமை ஆணைக்குழு அதிகாரி, கிராம சேவை யாளர்கள் ஆகியோர் சடலங்கள் மீட்கப்பட்ட கோப்பாய் தரவைப் பகுதி உவர் நீர்த் தடுப்பு அணையோரம் வேறு சடலங்கள் புதைக்கப் பட்டிருப்பதற்கான அறிகுறிகள் இல்லை யென முடிவுக்கு வந்தனர். இதனையடுத்து அங்கு தோண்டும் பணி நிறுத்தப்பட்டது. அப் பகுதியில் வழங்கப்பட்டிருந்த இராணுவப் பொலிஸாரின் காவலும் நேற்று இரவுடன் விலக்கப்பட்டது.

சடலங்கள் புதைக்கப்பட்டிருந்த இடத் திலிருந்து ஒரு புறத்தே சுமார் 200 மீற்றர் தொலைவிலும், மறுபுறத்தே சுமார் 300 மீற் றர் தொலைவிலும் இராணுவ முகாம்கள் அமைந்துள்ளன. அத்துடன் 100 மீற்றர் தூரத் தில் பாலத்தடியில் ஓர் இராணுவக் காவலர ணும் அமைந்துள்ளது. (8,12,15,75,190)

¯Åí¸û ¯ôÀ¢Ê ±ò¾¢¨É¢¼ò¾¢Ä ¾¡ðÎ ¨ÅÕì¸¢È¡í¸§Ç¡ ¬ñ¼ÅÛìÌò¾¡ý ¦¾Ã¢Ôõ......

  • கருத்துக்கள உறவுகள்

கைதடி புதைகுழி அகழும் வேலையில் ஈடுபட்டு வந்த கோப்பாய் கிராமசேவகர் அவரது வீட்டில் கொச்சைத்தமிழில் பேசியவர்களினால் சுடப்பட்டார்.

http://sankathi.com/content/view/3368/26/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.